சென்னை தலைமைச் செயலக நாமக்கல் கவிஞர் வெ. ராமலிங்கம் பிள்ளை மாளிகையில்,
மாவட்ட ஆட்சித் தலைவர்கள், மற்றும் காவல்துறை வனத்துறை உயர் அதிகாரிகள் மாநாடு தமிழ்நாடு முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் தலைமையில் 29.6.2026 பிற்பகல் நடைபெற்றதில் முதலமைச்சர் பேசுகையில், “வெளிப்படையான, நேர்மையான, லஞ்சம்-ஊழலற்ற, சமூக நீதியை நிலைநாட்டும் அரசைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற உறுதியான முடிவின் அடிப்படையில் தான் மக்கள் நமது அரசைத் தேர்ந்தெடுத்துள்ளனர். எனவே, ரேஷன், கல்வி, குடிநீர், சுகாதாரம், மின்சாரம், சாலை வசதி, பேருந்து வசதி உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்து தர நாம் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும். சட்டம்-ஒழுங்குப் பிரச்சினைகளைப் பொறுத்தவரை, சட்டத்தின் அடிப்படையில் காவல்துறை சுதந்திரமாக முடிவெடுக்கலாம். தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் எவ்வளவு உயர்ந்த பதவியில் இருப்பவர்களாக இருந்தாலும், பாரபட்சமின்றி சட்டப்படி உடனடியாகவும் துரிதமாகவும் நடவடிக்கை எடுத்து, உரிய தண்டனை பெற்றுத் தர வேண்டும். அதே நேரத்தில், நிரபராதிகள் யாரும் பாதிக்கப்படக் கூடாது. மக்கள் குறைதீர்ப்புக் கூட்டத்தை நடத்துவதற்கு முன்பாக மாவட்ட அளவிலான அலுவலர்கள் கூட்டத்தை ஆன்லைனில் நடத்த வேண்டும். விவசாயிகள், மீனவர்கள், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்டோரின் கூட்டங்களை முறையாகவும், கனிவுடனும் நடத்த வேண்டும். மனு அளிக்க வருகிற மக்களிடம் அன்போடு குறைகளை கேட்டறிந்து, அவர்களின் பிரச்சினைகளை முழுமையாகப் புரிந்துகொண்டு, உடனடியாக அதற்கான நடவடிக்கைகளை எடுத்து தீர்வு வழங்க வேண்டும் பெரும்பாலான மக்கள் பட்டா உள்ளிட்ட அடிப்படைஅ தேவைகளுக்கான சான்றிதழ்களைப் பெறவே அரசு அலுவலகங்களுக்கு வருகிறார்கள். அவர்களை நம் வீட்டில் உள்ளவர்களைப் போல மரியாதையுடனும் மனிதநேயத்துடனும் நடத்தினாலே அவர்கள் மகிழ்ச்சி அடைவார்கள். மக்களுக்கு வங்கிச் சேவைகள் ஒழுங்காகக் கிடைக்கிறதா என்பதை வங்கியாளர்களுடன் கூட்டம் நடத்தி ஆய்வு செய்ய வேண்டும். மாவட்ட ஆட்சியர்களைப் பொறுத்தவரை, திங்கட்கிழமையைத் தவிர மற்ற அனைத்து நாட்களிலும் காலை நேரங்களில் கள ஆய்வுக்குச் செல்ல வேண்டும். மனுக்களைப் பெறுவது மட்டுமே மாவட்ட ஆட்சியரின் பணி அல்ல. தொடர் கண்காணிப்பும் நிர்வாகமும் மிகவும் முக்கியமானது. அதற்காக ஒரு அலுவலரை நியமித்து தொடர்ந்து கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். மக்களிடம் குறைகளைக் கேட்பதைவிட, அவற்றைத் தீர்ப்பதே மிகவும் முக்கியம். மாவட்ட ஆட்சியர்கள் அனைவரும் ஒவ்வொரு மாதமும் சட்டம்-ஒழுங்கு தொடர்பான கூட்டங்களை நடத்தி, சம்பந்தப்பட்ட அனைத்துத் துறைகளையும் ஒருங்கிணைத்து செயல்பட வேண்டும். முக்கியமான ஒவ்வொரு வழக்கிலும் சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனை நடத்தி, குற்றவாளிகள் தப்பித்து விடாத வகையில் சட்ட நடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டும். மேலும், மாவட்ட ஆட்சியர்கள், வருவாய்த் துறையினர் மற்றும் காவல்துறையினருடன் இணைந்து ஆலோசித்து, எந்த ஒரு சம்பவமும் நடைபெறுவதற்கு முன்பே அதன் மூலக் காரணங்களை கண்டறிந்து, குற்றச் சம்பவங்களைத் தடுக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும், தமிழ்நாடு சிவில் சப்ளைஸ் கார்ப்பரேஷன்
போக்குவரத்து இழப்பு காரணமாக ஆண்டுக்கு ரூபாய் .200 கோடி இழப்பு ஏற்படுகிறது. வேர் ஹவுசிங் கார்ப்பரேஷன்
TNCSC குடோன்களில் அறிவியல் ரீதியான எடை பொறிமுறை இல்லாததால், அரிசி மற்றும் இதர அத்தியாவசியப் பொருட்கள் நியாய விலைக் கடைகளுக்கு அனுப்பப்படுவதால், பல லட்சம் டன் அரிசி மற்றும் பிற பொருட்கள் உட்பட பொது விநியோகத் திட்டப் பொருட்களில் கணிசமான கசிவு ஏற்பட்டுள்ளது. ஆதாரங்களின் படி, TNCSC குடோன்களில் ஏற்றப்படும் கன்னி பைகளின் எடை மின்னணு அமைப்பு மூலம் பதிவு செய்யப்படாமல், பணியாளர்களால் கைமுறையாக உள்ளிடப்படுகிறது, இதுவே பிரச்சனைக்கு மூல காரணம். இதனால், 50.65 கிலோ எடையுள்ள அரிசி மூட்டை, ரேஷன் கடைகளுக்கு வரும் போது, 47 கிலோ முதல் 48 கிலோ வரை மட்டுமே உள்ளது. ரேஷன் கடைகளில் வரும் மூட்டைகளை, இருப்பு வைக்கும் முன், எடை போடாததால், பைகளை திறந்து, நுகர்வோருக்கு அரிசி வினியோகிக்கப்படுவது தெரிய வந்தது. மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் காவல்துறை கண்காணிப்பாளர்கள் மற்றும் வனத்துறை உயர் அதிகாரிகள் அரசு விதிகளுக்கு உட்பட்டு சுதந்திரமாகச் செயல்படலாம். தனிநபர்களின் தலையீடு நமது அரசில் இருக்காது,
சட்டம் ஒழுங்கு பாதிப்பை ஏற்படுத்துபவர்களின் நடத்தையில் மாற்றத்தை கொண்டு வர வேண்டும். பெண்கள் பாதுகாப்பை 100 சதவீதம் உறுதிப்படுத்த வேண்டும். அதில் சமரசம் கூடாது. சிறப்பு ஏற்பாடுகளை செய்தே ஆக வேண்டும்.
மாணவர்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பில் முக்கிய கவனம் செலுத்துவதுடன், ஒவ்வொரு பள்ளிக்கும் அருகில் உள்ள கடைகளை தொடர்ச்சியாக கண்காணிக்க வேண்டும். தேவைப்படும் நேரங்களில் அங்கு சோதனை ந டத்த வேண்டும். போதைப்பொருள் தொடர்பான குற்றங்களில் ஈடுபடுவோரை உடனடியாக கைது செய்து நீதிமன்றத்தின் மு
ன் நிறுத்தி தண்டனை பெற்றுத்தருவதை உறுதிப்படுத்த வேண்டும் "என மாநாட்டில் முதல்வர் பேசினார்







கருத்துகள்