1801 ஆம் ஆண்டில்
ஆங்கிலக் கிழக்கிந்தியக் கும்பெனி அரசுக்கு எதிராக திருப்பத்தூர் கோட்டையில்
மருதுபாண்டியர்களை மீட்கப் படைதிரட்டி புறப்பட்டு கத்தப்பட்டில் வாளுக்கு வேலி அம்பலம் சூழ்ச்சியால் கொல்லப்பட்ட இடத்தில் அவரது தம்பி கருத்த ஆதப்பனால் வீரநடுகல் பிரதிர்ஷ்டை செய்யப்பட்டுள்ளது, அதில் வாளுக்குவேலி அம்பலத்தின் ஒரு கையில் ஈட்டியும் மறு கையில் வளரியும் உள்ளது.
ஆறூர் வட்டகை நாட்டு தலைவர் நன்னி அம்பலம், கிழக்கு நாட்டு தலைவர்களான சேதுபதி அம்பலமும் - சண்முகபதி அம்பலமும், பாகனேரி நாட்டுத் தலைவரான வாளுக்கு வேலி அம்பலமும் சுதந்திரப் போராட்டத்தில், சிவகங்கை சமஸ்தானத்தில் உள்ள தன்னாட்சிக் கள்ளர் நாட்டு அம்பலங்களில் முக்கியமானவர்கள். இதில் நன்னி அம்பலம், சேதுபதி அம்பலம், சோலைமலை அம்பலக்காரர், கருப்பண்ண அம்பலக்காரர் பற்றிய குறிப்புகள் நேரடியாகவே உள்ளன. ஆனால் வாளுக்கு வேலி அம்பலம் நடுகல் வழிபாடு தவிர, அவரை பற்றிய நேரடிக் குறிப்புக்கள் இல்லை, சிறுகதை மன்னன் திருக்கோஷ்டியூர் எஸ். எஸ். தொன்னரசு எழுதிய கதையில் மற்றும் முன்னால் முதல்வர் கலைஞர் மு. கருணாநிதி எழுதிய தென்பாண்டிச் சிங்கம் மூலம் தான் மக்கள் ஆறு தலைமுறை கடந்து அறிந்த நிலை உள்ளது என்பதால், அந்தத் தியாக சீலரை கற்பனை என்று இழிபிறவிகள் சில பேசுவதை நாம் காணமுடிகிறது.
தென்பாண்டி சிங்கம் மாவீரன் வாளுக்குவேலி அம்பலம் அவர்களின் நேரடி வாரிசான மணிமாறன் உள்ளிட்ட பலர் நமது அண்பைப் பெற்ற அண்ணன்கள் உண்டு வீரதீர செயல் அழியாப் புகழ் கண்டு, ஒரு மாவீரனை ஒரு கற்பனை வீரன் என்று அற்பர்கள் ஆர்ப்பரிக்கிறார்கள், ஆனால் அம்பலகாரரின் புகழ் நாளுக்கு நாள் எட்டுதிக்கும் பரவிக் கொண்டிருக்கிறது. மாவீரன் வாளுக்குவேலி அம்பலம், மாவீரன் பண்டார வன்னியன் பற்றிய வீர வரலாறு ஆங்கிலேய குறிப்புகளில் இல்லை என்றாலும், அந்தப் பகுதி மக்கள் கருணதந்திர கதையாக அல்லது வாய்மொழி மூலம் பரம்பரை பரம்பரையாக சொல்லப்பட்டு வந்தது. மேலும் வீரச்சாவு அடைந்தவர்களுடைய நடுகற்களுக்கே பெருமதிப்பு கொடுக்கப்பட்டு வந்தது. வீரர்களுக்காக எடுக்கப்படும் நினைவுக் கற்களை மக்கள் வணங்கி வந்தமை பற்றியும் பண்டைக்கால இலக்கியங்களில் சிறப்பித்துக் கூறப்பட்டுள்ளன. அதுபற்றி ஆய்வுகள் நடந்துள்ளது, அப்படிப் பட்ட நினைவுக்கல் வைத்து வணங்கப்பட்டவர்கள்
மாவீரன் வாளுக்குவேலி அம்பலம், மாவீரன் பண்டார வன்னியன். இதனால் நாம் அறியக் கூடியது என்னவெனில் இவர்களது வரலாறு உண்மையான தென்பதே.வாளுக்கு வேலி என்றசொல்லின் சிறப்பிற்கு ஏற்றார் போல வாழ்ந்து மறைந்த மாவீரர் நம் பாகனேரி நாட்டு அம்பலக்காரர் ஒரு உயிரை , உடமையை , மக்களை, காத்து நிற்பது வாள் என்றால், அந்த வாளுக்கே வேலிபோல காப்பவன் என்பதே அச்சொல்லின் பொருள். அப்பொருளுக்கேற்ற அப்பழுக்கற்ற சுத்தவீரர் தென்பாண்டி சிங்கம் மாவீரன் வாளுக்குவேலி அம்பலத்தேவர் தன்னாட்சிக் கள்ளர் நாடுகளில் பாகனேரி நாடு ,தனித் தன்மை கொண்டது தமிழ்நாடு மாநிலத்தின் சிவகங்கை சமஸ்தானம் அடங்கிய மாவட்டத்திற்குட்பட்ட,
சிவகங்கை வட்டம், காளையார்கோயில் ஊராட்சி ஒன்றியத்திலுள்ள ஊர் "பாகனேரி நாடு" தற்போதைய சிவகங்கை மாவட்டத்தில் காளையார் கோவில், கல்லல், திருப்பத்தூர், சிவகங்கை ஊராட்சி ஒன்றியங்களின் பகுதிகளை உள்ளடக்கியது. பாகனேரி எனும் ஊர் 13 ஆம் நூற்றாண்டில் போகனேரிப் பற்று எனவும், கத்தப்பட்டு எனும் ஊர் கற்றைப்பட்டு எனவும் வீரபாண்டியனின் வரிச்சியூர் எனும் பெரிச்சிகோயில் கல்வெட்டு மூலம் தெரிகிறது. இந்த இரண்டு ஊர் நாட்டார்களாக முறையே இரும்பாழி உடையான் மற்றும் சுந்தர பாண்டிய காலிங்கராயர் ஆகியோர் இருந்துள்ளனர். "வறியோரின் சொந்தமடா.
படை நடுங்கும் தோள்களடா எந்த பகைவரின் மனதும் பதைக்குமடா…
வைரம் பாய்ந்த நெஞ்சமடா அவன் வாளெடுத்தால் வரும் வாகையடா…
தென்பாண்டிச் சிங்கமடா தேன் தமிழ் பாடும் தங்கமடா…வரிப்புலியின் வர்க்கமடா "
வாளுக்கு வேலி அம்பலத்தார் தியாக வரலாறு! சுதந்திர போராட்ட வீரர் வாளுக்கு வேலி அம்பலம் பிறந்த நாளில் அரசு விழாவாக சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் வட்டம் சொக்கநாதபுரம் அருகே நகரம்பட்டியில் நடந்தது. மாவட்ட ஆட்சியர் பொற்கொடி தலைமையில் சிவகங்கை கோட்டாட்சியர் ஜெபி கிரேசியா முன்னிலையில் கனிமவளத்துறை அமைச்சர் டாக்டர் டி. கே.பிரபு, எம்.எல்.ஏ.,க்கள் குழந்தைராணி, சீனிவாச சேதுபதி, இளங்கோவன், கல்லாணை, சிவகங்கை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சிவபிரசாத் ஆகியோர் அவரது சிலைக்கு மாலை அணிவித்தனர். தென் இந்திய பார்வேர்ட் பிளாக் சார்பாக அதன் தலைவர் கே. சி. திருமாறன் ஜி. தலைமையில் பலரும் அ.தி.மு.க.,
தி.மு.க.,மற்றும் அனைத்துக் கட்சி, அமைப்பினர் சார்பில் பலரும் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர். அவரது நினைவு நாளில் கத்தப்பட்டில் பப்ளிக் ஜஸ்டிஸ் சார்பில் அக்டோபர் மாதம் நினைவு அஞ்சலி செலுத்தி வருவது குறிப்பிடத் தக்கது.

















கருத்துகள்