ஆஸ்கர் விருது வென்ற குறும்படங்கள் மும்பை திரைப்பட விழாவில் பார்வையாளர்களை ஈர்த்தன
குறும்படங்கள், ஆவணப்படங்கள், அனிமேஷன் ஆகியவை மூலம் உலகத் தரம் வாய்ந்த கதைசொல்லலின் மாபெரும் கொண்டாட்டமாக அமைந்துள்ள 19-வது மும்பை சர்வதேச திரைப்பட விழா- 2026, இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது.
விழாவின் மிகவும் பிரபலமான அம்சங்களில் ஒன்றான 'ஆஸ்கார் வெற்றியாளர்கள்' பிரிவில், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அகாடமி விருது வென்ற குறும்படங்கள் இடம்பெற்றுள்ளன. இந்தச் சிறப்புப் பிரிவு, தற்கால உலகளாவிய சினிமாவின் மிகச்சிறந்த சில படைப்புகளை இந்தியப் பார்வையாளர்களுக்குக் கொண்டுவந்து, அதன் சிறப்பான படைப்பாற்றல், புதுமை, உணர்வுப்பூர்வமான கதைசொல்லல் ஆகியவற்றை வெளிப்படுத்துகிறது.
மும்பை சர்வதேச திரைப்பட விழாவில், நான்கு தலைசிறந்த ஆஸ்கர் விருது வென்ற படங்கள் திரையிடப்பட்டன.
ஐஎம் நாட் எ ரோபோ (பெல்ஜியம், நெதர்லாந்து)
இன் தி ஷேடோ ஆஃப் தி சைப்ரஸ் (ஈரான்)
தி கேர்ள் ஹூ க்ரைட் பியர்ள்ஸ் (கனடா)
டூ பியூப்பிள் எக்ஸ்சேஞ்சிங் சலைவா (பிரான்ஸ், அமெரிக்கா)
இந்தத் திரையிடல்கள், மாணவர்கள், வளரும் திரைப்பட இயக்குநர்கள், சினிமா ஆர்வலர்கள் ஆகியோருக்கு, மும்பையிலேயே சர்வதேச குறும்படத் தயாரிப்பின் மிக உயர்ந்த தரத்தை அனுபவிப்பதற்கான ஒரு மதிப்புமிக்க வாய்ப்பை வழங்கின. பார்வையாளர்கள் இப்படங்களுக்கு அமோக வரவேற்பு அளித்தனர். திரையிடல்களுக்குப் பிறகு உற்சாகமாகக் கைதட்டியதோடு, படங்களில் வெளிப்பட்டிருந்த பல்வேறு கதை சொல்லும் பாணிகள், கலைச் சிறப்பு, உணர்வு ஆழம் ஆகியவற்றையும் பாராட்டினர்.தொழில்நுட்ப மாற்றங்கள் ஏற்பட்டு வரும் நிலையிலும் திரைப்பட விழாக்களின் ஆன்மா எவ்வித மாற்றமுமின்றி இருக்கும்: மும்பை சர்வதேசத் திரைப்பட விழாவில் நிபுணர்கள் கருத்து
ஸ்ட்ரீமிங் தளங்கள், டிஜிட்டல் தொழில்நுட்பங்கள், பார்வையாளர்களின் மாறிவரும் ரசனைகள் ஆகியவை திரைப்படத் துறையின் சூழலை மாற்றியமைத்து வருகிறது.
புதியவற்றைக் கண்டறிதல், கற்றல், கூட்டு அனுபவத்தைப் பெறுதல் ஆகியவற்றுக்கான இடங்களாகத் திரைப்பட விழாக்கள் தொடர்ந்து முக்கியத்துவத்தைத் தக்கவைத்துக் கொண்டுள்ளன என்று நிபுணர்கள் தெரிவித்தனர்.
இந்திய ஆவணப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட அமர்வில், தொழில்நுட்பம் பார்வையாளர்களின் ஈடுபாட்டை எவ்வாறு மாற்றியமைக்கிறது என்பதையும், அதே வேளையில் திரைப்பட விழாக்களின் நிலையான மதிப்பைச் சோதிப்பது குறித்தும் விவாதிக்கத் திரைப்பட விழாத் துறை சார்ந்த அனுபவமிக்க நிபுணர்களை ஒன்றிணைத்துள்ளது.
இந்த விவாதத்தில் பெங்களூரு சர்வதேசத் திரைப்பட விழாவின் நிறுவனர், முன்னாள் கலை இயக்குநரான வித்யாசங்கர், இந்திய ஹேபிடேட் மைய இயக்குநர் பேராசிரியர் (டாக்டர்) கே.ஜி. சுரேஷ், திரைப்பட விமர்சகரும் விழா ஆலோசகருமான பிரமேந்திர மஜும்தார், புனே சர்வதேசத் திரைப்பட விழாவின் முக்கியப் பொறுப்பாளரான அதிதி அக்கல்கோட்கர் ஆகியோர் பங்கேற்றனர்.




K.G.Suresh,VidyashankarN.,PremendraMajumdar,AditiAkkalkotkaralongwithModeratorSanskarDesaiparticipatingintheOpenForumSessionon'ChangingTechnologiesChangingAud68TY.jpeg)

கருத்துகள்