முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தமிழ்நாட்டின் நிதிநிலை குறித்து அரசு வெளியிட்டுள்ள வெள்ளை அறிக்கையின் முக்கிய அம்சங்கள்

தமிழ்நாட்டின் நிதிநிலை குறி


த்து அரசு வெளியிட்டுள்ள வெள்ளை அறிக்கையின் முக்கிய அம்சங்கள்!         

   தமிழ்நாட்டில் புதிய தமிழக வெற்றிக் கழக  அரசு பொறுப்பேற்ற 30 நாட்களில்  நிதி அமைச்சர் என்.மரிய வில்சன் வெளியிட்ட வெள்ளை அறிக்கை மாநிலத்தின் நிதி நிர்வாகத்தில்  திருப்புமுனையை ஏற்படுத்தியுள்ளது.



முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் தேர்தல் பிரச்சாரத்திலும் பதவியேற்பு உரையிலும் வாக்குறுதி அளித்தபடி, கடந்த தி.மு.க.  2021 ஆம் ஆண்டு முதல் 2026 ஆம் ஆண்டு ஆட்சியில் உள்ள நிதி நிலைமையைப் பகிரங்கமாக ஆவணப்படுத்துதிற அறிக்கை, வெளிப்படைத்தன்மைக்கான உறுதியை வலியுறுத்துகிறது. இது வெறும் கணக்கு அறிக்கை மட்டுமல்ல; எதிர்கால நிதித் திட்டமிடலுக்கு அடித்தளமாகும் ஆவணம்.



அறிக்கையின்  முக்கியமான தகவல், மாநிலத்தின் நேரடிக் கடன் 2021-ஆம் ஆண்டில் சுமார் 5 லட்சம் கோடி ரூபாயிலிருந்து 2026-ஆம் ஆண்டில் 10 லட்சம் கோடியைத் தாண்டியது என்பதாகும். off-budget liabilities உள்ளிட்ட உண்மையான பொறுப்புகளைச் சேர்த்தால் மொத்தக் கடன் 13.18 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. கடன்-ஜி.எஸ்.டி.பி. விகிதம் 28.3 சதவீதமாக உயர்ந்துள்ளது. ஒவ்வொரு தமிழ்நாட்டுக் குடும்பத்தின் தலையிலும் சுமார் 1,28,034 ரூபாய் கடன் சுமை இருப்பதாகக் கணக்கிடப்பட்டது. இந்த இரட்டிப்பு வளர்ச்சி, கடந்த ஐந்தாண்டு ஆட்சியின் நிதி நிர்வாகத்தின் தரத்தைப் பிரதிபலிக்கிறது. இந்திய அளவில் மொத்தக் கடன் அடிப்படையில் தமிழ்நாடு முன்னிலையில் உள்ளது.





வருவாய் பற்றாக்குறை (Revenue Deficit) இன்னும் கவலைக்குரியதாகிறது. 2021-ஆம் ஆண்டில் 46,358 கோடி ரூபாயாக இருந்தது 2026-ஆம் ஆண்டில் ரூபாய் 78,324 கோடியாக உயர்ந்துள்ளது, பதிவான உயர்வு. வருவாய் வருமானத்தை விட வருவாய் செலவுகள் அதிகமாக இருப்பதால், முதலீட்டுச் செலவுகளுக்கு கடன் பெற வேண்டிய நிலை உருவாகியுள்ளது. ஒவ்வொரு ரூபாய் முதலீட்டுக்கு சுமார் 2.26 ரூபாய் கடன் எடுக்கப்பட்டுள்ளதாக அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. வட்டிச் செலவு மட்டும் வருவாயின் 22.8 சதவீதத்தை உறிஞ்சுகிறது. இது நீண்டகால நிதி சுதந்திரத்தை பாதிக்கும் அபாயகரமான போக்காகும்.





பொதுத் துறை நிறுவனங்கள் (PSUs) மற்றும் அரசுக் கழகங்களின் நிலைமை மோசமான வெளிப்பாட்டைத் தருகிறது. மின்சாரத் துறையில் மட்டும் 2.47 லட்சம் கோடி ரூபாய் பொறுப்புகள் உள்ளன. போக்குவரத்துக் கழகங்களின் கடன் ரூபாய் 72,627 கோடியைத் தாண்டியுள்ளது. ஒரு கிலோமீட்டர் பயணத்துக்கு 70.61 ரூபாய் செலவாகும் நிலையில் வருமானம் 25.97 ரூபாய் மட்டுமே. committed expenditures  ஊதியம், ஓய்வூதியம், உதவித்தொகைகள் உள்ளிட்டவை  மொத்த ஒதுக்கீட்டில் 64.4 சதவீதத்தை எட்டியுள்ளன. புதிய திட்டங்கள் அல்லது உள்கட்டமைப்பு முதலீடுகளுக்கு இடம் குறைவாக உள்ளது.




பொருளாதார வளர்ச்சியில் உள்ள முரண்பாடுகளும் அறிக்கையில் இடம்பெற்றுள்ளன. இடைக்கால பட்ஜெட்டில் 19 சதவீதம் என்று கூறப்பட்ட உண்மையான வளர்ச்சி விகிதம் 6.8 சதவீதமாக மட்டுமே உள்ளது. மக்கள்தொகை ஜனரேகை மாற்றங்கள், வேலைவாய்ப்பு, வயது, மக்கள் விகிதம் குறைதல், வயதானோர் சார்பு விகிதம் 20-லிருந்து 32.7 ஆக உயர்வு, எதிர்கால செலவுகளை மேலும் அதிகரிக்கும். தமிழ்நாடு மகாராஷ்டிரா, கர்நாடகா, குஜராத் போன்ற மாநிலங்களுடன் ஒப்பிடும்போது நிதி செயல்திறனில் பின்தங்கியுள்ளது. உதாரணமாக, குஜராத்தின் நிதிப் பற்றாக்குறை 1.9 சதவீதம் என்ற அளவில் உள்ளது.



இந்த வெள்ளை அறிக்கை அரசியல் குற்றச்சாட்டுகளுக்கு அப்பாற்பட்டு, அமைப்பு ரீதியான பிரச்சினைகளை முன்வைக்கிறது. off-budget borrowings மூலம் கணக்குகளை மறைத்தல், வரி நிர்வாகத்தில் லீக்கேஜ், பொதுத் துறை நிறுவனங்களின் செயல்திறன் குறைவு போன்றவை நிதி மோசடிக்கு வழிவகுத்துள்ளன. தேர்தல் வாக்குறுதிகளான பெண்களுக்கு மாத உதவித் தொகை உயர்வு, இலவச பேருந்து பயணம், மின்சாரம், பயிர்க் கடன் தள்ளுபடி போன்றவை ஆண்டுக்கு ஒரு லட்சம் கோடிக்கு மேல் தேவைப்படும் என மதிப்பிடப்படுகிறது. இந்தச் சூழலில் நிதி ஒழுக்கம் இல்லாமல் முன்னேற்றம் சாத்தியமல்ல.

வெள்ளை அறிக்கை தீர்வுப் பாதையையும் சுட்டிக்காட்டுகிறது. புதிய வரிச் சுமை இல்லாமல் வணிக வரிகள், ஸ்டாம்ப் டியூட்டி, சுரங்க வருவாய் ஆகியவற்றை சிறப்பாக நிர்வகித்தல்; பொதுத் துறை நிறுவனங்களை மறுசீரமைத்தல்; போக்குவரத்துக் கழகங்களின் செயல்திறனை மேம்படுத்துதல்; CAG பரிந்துரைகளின்படி பட்ஜெட் திருத்தங்கள்; கொள்முதல் செலவுகளைக் குறைத்தல்; வருவாய் லீக்கேஜ்களைத் தடுத்தல்; செயல்படாத சொத்துகளை சிறப்பாகப் பயன்படுத்துதல் ஆகியவை முன்னுரிமை பெற வேண்டும். தனியார் முதலீடுகளை ஈர்க்கும் கொள்கைகள், மத்திய அரசுடன் ஒத்துழைப்பு, தகவல் தொழில்நுட்பம், உற்பத்தி, விவசாயத் துறைகளின் வலிமையைப் பயன்படுத்துதல் ஆகியவை அவசியம்.

வெள்ளை அறிக்கை தமிழ்நாட்டு அரசியலில் புதிய பொறுப்புணர்வை அறிமுகப்படுத்துகிறது. கடந்த காலத் தவறுகளிலிருந்து பாடம் கற்று, எதிர்கால தலைமுறைகளுக்கு சுமையை ஏற்றாமல் நிதி ஒழுக்கத்துடன் வளர்ச்சியை நோக்கி நகர வேண்டும். அடுத்த முழு பட்ஜெட்டில் இந்த அறிக்கையின் பரிந்துரைகள் எந்த அளவு அமல்படுத்தப்படுகின்றன என்பதை மக்கள் உன்னிப்பாகக் கவனிப்பார்கள். நிதி நிர்வாகம், சமூக நீதி, பொருளாதார வளர்ச்சி ஆகியவை ஒருங்கிணைந்தால் மட்டுமே தமிழ்நாடு மீண்டும் முன்னணி மாநிலமாக உயர முடியும். இந்த வெள்ளை அறிக்கை அந்தப் பயணத்தின் முதல் தெளிவான அடியாகவே அமைந்துள்ளது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

சிறப்பாக நடைபெற்ற புதுக்கோட்டை ஸ்ரீ சிங்கமுத்து ஐயனார் ஆலயக் குடமுழுக்கு விழா

புதுக்கோட்டை நகர், அடப்பன்வயல் சார்ந்த குளத்தின் கரையில், பொது ஆண்டு 1686 க்கு முன்னர் இராமநாதபுரம்  சேதுபதி மன்னர் மேதகு கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதி சமஸ்தானத்தின் ஆட்சி அதிகாரத்தில் சிறப்பாக இருந்த ஆலயம் அதன் பின்னர் ஐந்தில் ஒரு பங்கு பிரிந்து அவரது மைத்துனர் புதுக்கோட்டை முதல் மன்னர் விஜய ரகுநாதத் தொண்டைமான் முதல் 1948 ஆம் ஆண்டு மன்னர் இராஜகோபாலத் தொண்டைமான்ஆட்சி முடிவு வரை திருப்பணிகள் கண்டு சீரும் சிறப்புமக நடந்த நிலையில் புதுக்கோட்டை சமஸ்தானம் தேவஸ்தானம் திருக்கோவில்களைச் சார்ந்த ஸ்ரீ சிங்கமுத்து அய்யனார் கோவில் மற்றும் பரிவார தெய்வங்கள் ஆலயத்தில் குடமுழுக்கு விழா 16 ஆண்டுகளுக்குப் பின்னர் கற்கோட்டமாக (கோவில்)  புணரமைப்பு செய்து உருவாக்கி இன்று (02.07.2025) சிறப்பாக நடந்தது. புனராவர்த்தன நூதன ஆலய அஷ்டபந்தன மஹாகும்பாபிஷேக விழாவானது ஸ்ரீ விசுவாவசு வருடம் ஆனி மாதம் 18-ஆம் தேதி (02.07.2025) புதன்கிழமை ஸப்தமி திதியும், உத்திரம் நட்சத்திரமும் சித்தயோகமும் கூடிய நன்னாளில் காலை 9.00 மணிக்குமேல் 10.00 மணிக்குள் சிம்ம லக்னத்தில் குரு ஹோரையில்  ஸ்ரீ பூரணை புஷ்கலா சமேத ...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

திருப்புத்தூர் வேட்பாளருக்கு விதித்த உயர் நீதிமன்றத் தடையை விலக்கிய உச்சநீதிமன்றம்

ஒரு வாக்கில் வெற்றி பெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் திருப்பத்தூர் தொகுதி சட்டமனற உறுப்பினர் சீனிவாச சேதுபதிக்கு எதிராக தோல்வியடைந்த தி.மு.க வேட்பாளர் முன்னால் அமைச்சர் கே. ஆர். பெரியகருப்பன் தொடர்ந்த சென்னை உயர் நீதிமன்ற வழக்கில் சட்டமன்றத்தில் நடக்கும் நம்பிக்கை வாக்கெடுப்பில் த.வெ.க. எம்.எல்.ஏ பங்கேற்கக் கூடாது என்று உயர்நீதிமன்ற உத்தரவுக்கு நேற்று உச்ச நீதிமன்றம் உடனடியாகத் தடை. விதித்தது,  திருப்பத்தூர் திமுக வேட்பாளர் கே. ஆர்.பெரிய கருப்பனுக்கு ஒரு உண்மை தற்போது புரிந்திருக்கும் அது கண்ணைக் கட்ட வைத்த தேர்தல் ஆணையத்தின் சிறப்பான வாதம் தான், சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதியில் வாக்கு எண்ணிக்கை மே மாதம் 4 ஆம் தேதி காரைக்குடியில் நடந்த நிலையில் ஏமாற்றி வெற்றி பெற நினைத்து மாலையில் திமுகவினர் அராஜகம் செய்ய நினைத்த நிலையில் அதே தொகுதியில் பாஜகவின் கூட்டணிக் கட்சி சார்பாக போட்டியிட்ட தென்னிந்திய பார்வேடு பிளாக் கட்சியின் வேட்பாளர் கே. சி. திருமாறன் ஜி களமிறங்கி கடைசி வரை தவெக வேட்பாளர் அருகில் இருந்து திமுகவினரின் கடைசி நேர முறைகேடுகளுக்கு எதிராக விழிப்புணர்வு ஏற்பட...