முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

விபி ஜி ராம் ஜி திட்டத்தை செயல்படுத்த மாநில ஊரக வளர்ச்சி அமைச்சர்களுடன் மத்திய அமைச்சர் காணொலி மூலம் ஆலோசனை

ஊரக வளர்ச்சி அமைச்சகம்  விபி ஜி ராம் ஜி திட்டத்தை செயல்படுத்துவது குறித்து மாநில ஊரக வளர்ச்சி அமைச்சர்களுடன் மத்திய அமைச்சர் திரு சிவராஜ் சிங் சௌகான் காணொலி மூலம் ஆலோசனை

₹1.25 லட்சம் கோடி ஒதுக்கீட்டிலான திட்டம் ஜூலை 1 முதல் அமல்படுத்தப்படுகிறது - தமிழ்நாட்டுக்கு ₹7,957.57 இடைக்கால ஒதுக்கீடு

மத்திய ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் திரு சிவராஜ் சிங் சௌகான், விபி ஜி ராம் ஜி எனப்படும் வளர்ச்சியடைந்த இந்தியாவுக்கான ஊரக வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதார உத்தரவாதச் சட்டத்தை செயல்படுத்துவது தொடர்பாக மாநில ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர்களின் கூட்டத்திற்கு இன்று (09.06.2026) தலைமை வகித்தார். மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் அமைச்சர்களுடன் காணொலிக் காட்சி மூலம் நடைபெற்ற உயர்மட்டக் கூட்டத்தில் உரையாற்றிய திரு சௌகான், 2026 ஜூலை 01 முதல் அமலுக்கு வரும் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க புதிய சட்டம், எந்தவித இடையூறும் இன்றி, தொழிலாளர்களை மையமாகக் கொண்ட முழுமையான சுமூகமான மாற்றத்தை உறுதி செய்ய வேண்டும் என்று கூறினார்.

இது பழைய திட்டத்தை மாற்றுவது மட்டுமல்ல எனவும், கோடிக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்க்கை, வாழ்வாதாரங்களுடன் தொடர்புடைய ஒரு விஷயம் என்றும் கூறினார்.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் மத்திய அரசு ஏற்கெனவே ₹30,000 கோடியை ஒதுக்கியுள்ளது என்று அவர் தெரிவித்தார். மேலும், மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கு இன்று ₹95,692 கோடி


இடைக்கால ஒதுக்கீடு விடுவிக்கப்பட்டுள்ளது எனவும் மொத்த ஒதுக்கீடு ₹1.25 லட்சம் கோடியைத் தாண்டும் என்றும் அவர் கூறினார்.

இந்தத் தொகையானது நாடு முழுவதும் உள்ள சுமார் 2.80 லட்சம் கிராம ஊராட்சிகளைச் சென்றடையும் என்றும், இதன் மூலம் ஒவ்வொரு ஊராட்சியும் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான நிதியைப் பெறும் என்றும் திரு சௌகான் கூறினார். வேலைவாய்ப்பு உருவாக்கம், கிராமப்புறச் சொத்துக்களின் உருவாக்கம் ஆகிய இரண்டும் உறுதிசெய்யப்படும் வகையில், சட்டத்தின் விதிகளின் கீழ், வளர்ச்சிப் பணிகளுக்காக நிதி பயன்படுத்தப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

மத்திய அரசு, நிதி வழங்குவதோடு மட்டுமல்லாமல், உரிய நேரத்தில் ஊதியம் வழங்குவதையும், தொழிலாளர் உரிமைகளைப் பாதுகாப்பதையும், தடையற்ற முறையில் வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்வதையும் உறுதிசெய்ய விரும்புவதாக அவர் கூறினார். முதல் நாளான 2026 ஜூலை 01 முதலே பணிகளை விரைவாகத் தொடங்கும் வகையில், போதுமான எண்ணிக்கையிலான பணிகளுக்கு மாநிலங்கள் முன் அனுமதி வழங்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

இந்த திட்டத்தின் நோக்கத்தைக் கருத்தில் கொண்டு 26 மாநிலங்கள் ஏற்கெனவே அவற்றின் பங்கிற்கு நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாகவும், அதே சமயம் ஜார்க்கண்ட், கர்நாடகா, தெலங்கானா, மிசோரம் ஆகிய மாநிலங்கள் நிதி ஒதுக்கீட்டு செயல்முறையை விரைவில் முடிக்குமாறு வலியுறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இந்த மாநிலங்களின் முதலமைச்சர்களுக்குத் தனிப்பட்ட முறையில் தாம் கடிதம் எழுதவிருப்பதாகவும் அவர் கூறினார்.

இந்தக் கூட்டத்தின் போது, மத்திய அமைச்சர் திரு சிவராஜ் சிங் சௌகான் பல்வேறு மாநிலங்களுக்கான இடைக்கால ஒதுக்கீடுகளை அறிவித்தார். ஒதுக்கீடுகள் பின்வருமாறு – ஆந்திரப் பிரதேசம் ₹7,707.21 கோடி, அருணாச்சலப் பிரதேசம் ₹560.70 கோடி, அசாம் ₹1,929.24 கோடி, பீகார் ₹6,715.83 கோடி, சத்தீஸ்கர் ₹3,354.85 கோடி, கோவா ₹3.70 கோடி, குஜராத் ₹1,540.54 கோடி, ஹரியானா ₹590.23 கோடி, இமாச்சலப் பிரதேசம் ₹1,201.78 கோடி, ஜார்கண்ட் ₹2,705.64 கோடி, கர்நாடகா ₹5,709.09 கோடி, கேரளா ₹3,136.44 கோடி, மத்தியப் பிரதேசம் ₹6,252.03 கோடி, மகாராஷ்டிரா ₹4,420.32 கோடி, மணிப்பூர் ₹581.99 கோடி, மேகாலயா ₹1,155.09 கோடி, மிசோரம் ₹611.65 கோடி, நாகாலாந்து ₹287.85 கோடி, ஒடிசா ₹3,763.80 கோடி, பஞ்சாப் ₹1,331.61 கோடி.

இதேபோல், ராஜஸ்தானுக்கு ₹7,581.87 கோடி, சிக்கிமுக்கு ₹97.57 கோடி, தமிழ்நாட்டிற்கு ₹7,957.57 கோடி, தெலங்கானாவிற்கு ₹4,229.74 கோடி, திரிபுராவிற்கு ₹1,041.07 கோடி, உத்தரப் பிரதேசத்திற்கு ₹12,221.48 கோடி, உத்தரகாண்டிற்கு ₹626.43 கோடி, மேற்கு வங்கத்திற்கு ₹8,508.00 கோடி என நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் கூறினார். இதன்மூலம் மாநிலங்களுக்கான மொத்த நிதி ஒதுக்கீடு ₹92,550.17 கோடியாக உயர்ந்துள்ளது என்று அவர் தெரிவித்தார். யூனியன் பிரதேசங்களில், புதுச்சேரிக்கு ₹40.56 கோடியும், ஜம்மு காஷ்மீருக்கு ₹1,151.02 கோடியும், அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளுக்கு ₹4.44 கோடியும், லடாக்கிற்கு ₹85.98 கோடியும், தாத்ரா - நகர் ஹவேலி டாமன் - டையூவிற்கு ₹9.02 கோடியும், லட்சத்தீவிற்கு ₹0.32 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறினார். இதன் மூலம் யூனியன் பிரதேசங்களுக்கான மொத்த ஒதுக்கீடு ₹1,291.32 கோடியாக உள்ளது என அவர் தெரிவித்தார். மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கான இந்த ஒதுக்கீட்டிற்கு கூடுதலாக, மத்திய நிர்வாக, சமூக தணிக்கைக்காக ₹1,850.62 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது எனவும், இதன் மூலம் மொத்த இடைக்கால ஒதுக்கீடு ₹95,692.31 கோடியாகிறது என்றும் அவர் கூறினார். இது பிராந்திய வளர்ச்சியை விரைவுபடுத்தும் என்று அவர் தெரிவித்தார்.

இதைத் திறம்படச் செயல்படுத்துவது குறித்து, புதுதில்லியில் உள்ள பூசா நிறுவனத்தில் ஜூன் 28, 29 ஆகிய தேதிகளில் நடைபெறவிருக்கும் தேசிய ஊரக வளர்ச்சி மாநாட்டில் விரிவாக விவாதிக்கப்பட உள்ளதாகவும் இதில் பங்கேற்குமாறும் அவர் அனைத்து மாநிலங்களுக்கும் அழைப்பு விடுத்தார்.

அனைத்து மாநிலங்களின் ஒத்துழைப்புடன், இந்தத் திட்டம் முன்னெடுப்பானது கிராமப்புற இந்தியாவைச் சிறப்பாக மாற்றி அமைக்கும் என்று மத்திய ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் திரு சிவராஜ் சிங் சௌஹான் நம்பிக்கை தெரிவித்தார். இக்கூட்டத்தில் மத்திய இணையமைச்சர் திரு சந்திரசேகர் பெம்மசானியும் பங்கேற்றார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

சிறப்பாக நடைபெற்ற புதுக்கோட்டை ஸ்ரீ சிங்கமுத்து ஐயனார் ஆலயக் குடமுழுக்கு விழா

புதுக்கோட்டை நகர், அடப்பன்வயல் சார்ந்த குளத்தின் கரையில், பொது ஆண்டு 1686 க்கு முன்னர் இராமநாதபுரம்  சேதுபதி மன்னர் மேதகு கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதி சமஸ்தானத்தின் ஆட்சி அதிகாரத்தில் சிறப்பாக இருந்த ஆலயம் அதன் பின்னர் ஐந்தில் ஒரு பங்கு பிரிந்து அவரது மைத்துனர் புதுக்கோட்டை முதல் மன்னர் விஜய ரகுநாதத் தொண்டைமான் முதல் 1948 ஆம் ஆண்டு மன்னர் இராஜகோபாலத் தொண்டைமான்ஆட்சி முடிவு வரை திருப்பணிகள் கண்டு சீரும் சிறப்புமக நடந்த நிலையில் புதுக்கோட்டை சமஸ்தானம் தேவஸ்தானம் திருக்கோவில்களைச் சார்ந்த ஸ்ரீ சிங்கமுத்து அய்யனார் கோவில் மற்றும் பரிவார தெய்வங்கள் ஆலயத்தில் குடமுழுக்கு விழா 16 ஆண்டுகளுக்குப் பின்னர் கற்கோட்டமாக (கோவில்)  புணரமைப்பு செய்து உருவாக்கி இன்று (02.07.2025) சிறப்பாக நடந்தது. புனராவர்த்தன நூதன ஆலய அஷ்டபந்தன மஹாகும்பாபிஷேக விழாவானது ஸ்ரீ விசுவாவசு வருடம் ஆனி மாதம் 18-ஆம் தேதி (02.07.2025) புதன்கிழமை ஸப்தமி திதியும், உத்திரம் நட்சத்திரமும் சித்தயோகமும் கூடிய நன்னாளில் காலை 9.00 மணிக்குமேல் 10.00 மணிக்குள் சிம்ம லக்னத்தில் குரு ஹோரையில்  ஸ்ரீ பூரணை புஷ்கலா சமேத ...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

திருப்புத்தூர் வேட்பாளருக்கு விதித்த உயர் நீதிமன்றத் தடையை விலக்கிய உச்சநீதிமன்றம்

ஒரு வாக்கில் வெற்றி பெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் திருப்பத்தூர் தொகுதி சட்டமனற உறுப்பினர் சீனிவாச சேதுபதிக்கு எதிராக தோல்வியடைந்த தி.மு.க வேட்பாளர் முன்னால் அமைச்சர் கே. ஆர். பெரியகருப்பன் தொடர்ந்த சென்னை உயர் நீதிமன்ற வழக்கில் சட்டமன்றத்தில் நடக்கும் நம்பிக்கை வாக்கெடுப்பில் த.வெ.க. எம்.எல்.ஏ பங்கேற்கக் கூடாது என்று உயர்நீதிமன்ற உத்தரவுக்கு நேற்று உச்ச நீதிமன்றம் உடனடியாகத் தடை. விதித்தது,  திருப்பத்தூர் திமுக வேட்பாளர் கே. ஆர்.பெரிய கருப்பனுக்கு ஒரு உண்மை தற்போது புரிந்திருக்கும் அது கண்ணைக் கட்ட வைத்த தேர்தல் ஆணையத்தின் சிறப்பான வாதம் தான், சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதியில் வாக்கு எண்ணிக்கை மே மாதம் 4 ஆம் தேதி காரைக்குடியில் நடந்த நிலையில் ஏமாற்றி வெற்றி பெற நினைத்து மாலையில் திமுகவினர் அராஜகம் செய்ய நினைத்த நிலையில் அதே தொகுதியில் பாஜகவின் கூட்டணிக் கட்சி சார்பாக போட்டியிட்ட தென்னிந்திய பார்வேடு பிளாக் கட்சியின் வேட்பாளர் கே. சி. திருமாறன் ஜி களமிறங்கி கடைசி வரை தவெக வேட்பாளர் அருகில் இருந்து திமுகவினரின் கடைசி நேர முறைகேடுகளுக்கு எதிராக விழிப்புணர்வு ஏற்பட...