ஸ்ரீ ஆத்மலிங்க வடிவில் இறைவன் இப்பெருந்துறையில் எழுந்தருளியுள்ள சிறப்பை - அருவ நிலையை - ஆத்மசொரூபமாக உள்ள நிலையை
"பார்த்து நாம் குருவாய் வந்தனுக்கிரம்
பதனமாய் வைத்து மனத்துள்ளே - நிதம்
பத்திசெய் வேறொன்றுமில்லை யில்லை - இது
பரம ரகசியம் என்று கொள்ளே"
- என மாணிக்கவாசகர் விலாசம் எனும் நூல் புகழ்கிறது.பாணடிய நட்டின் மந்திரி பிரதானி குதிரை வாங்கச் சென்ற மாணிக்கவாசகர் எழுப்பி திருவாசகம் பாடிய திருப்பெருந்துறை, தான் ஆவுடையார் கோவில், திருவிளையாடல் புராண ஸ்தலம் ஆவுடையார் கோவில் ஸ்ரீ ஆத்மநாதசுவாமி கோயிலின் திருத்தேர், தமிழ்நாட்டில் மிகப்பெரிய தேர்களில் ஒன்று. இங்கு ஆனித் திருமஞ்சன விழாவின் போது, அவர் அவதரித்த தினமான இன்று மாணிக்கவாசகப் பெருமானுக்காக இந்தத் தேர் வீதி உலா ஆண்டு தோரும் நடந்து வருகிறதன் அந்தப் பிரம்மாண்டமான தேர்ச் சக்கரத்தின் குறுக்களவு 90 அங்குலமும், அகலம் 36 அங்குலமும் உள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் - பிரசித்தி பெற்ற ஆவுடையார்கோவில் ஸ்ரீ ஆத்மநாதர் சுவாமி திருக்கோவிலில் ஆனி திருமஞ்சனம் தேரோட்டத் திருவிழா இன்று வெகு விமர்சையாக நடைபெற்றதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்களும் சிவனடியார்களும் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்து சுவாமி தரிசனம் செய்தனர்.
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே - ஆவுடையார்கோவில் -லில் திருவாடுதுறை ஆதினத்தின் நிர்வாகத்திற்கு சொந்தமான ஸ்ரீ ஆத்மநாதர் சுவாமி திருக்கோயில் மாணிக்கவாசகரால் பாடப்பட்டு புகழ் பெற்ற ஆலயத்தில் - ஆனித் திருமஞ்சனத் தேரோட்டம் , மற்றும் மார்கழி திருவாதிரை திருவிழா தேரோட்டம், என ஆண்டுக்கு இருமுறை மாணிக்கவாசகருக்கான தேரோட்ட வீதியுலா திருவிழா நடைபெறும்.
இந்த ஆண்டு ஆணித் திருமஞ்சனத் திருவிழா 9 நாட்களுக்கு முன் காப்புக்கட்டி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
அதன் பின்பு நாள்தோறும் சுவாமி வீதி உலாக் காட்சிகளும் சிறப்பு அபிஷேக ஆராதனை பூஜைகளும் நடைபெற்ற நிலையில் இன்று விழாவில் முக்கிய நிகழ்வான திருவிழாத் தேரோட்டம் நடைபெற்றது,
அலங்கரிக்கப்பட்ட திருத்தேரில் மாணிக்கவாசகர் வீட்றிருக்க, சிவனடியார்களும் சிவாச்சாரியார்களும் தேவாரம் திருவாசகம் உள்ளிட்ட முற்றோதல் திருமந்திரங்களைப் பாட பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுக்க தேரோட்டத் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது ,
கோயிலைச் சுற்றி நான்கு வீதிகளிலும் ஆடி அசைந்து தேர் பவனி வர சிவ சிவா கோசங்களோடு தேரை வடம் பிடித்திழுத்தனர்.
மார்கழித் திருவாதிரை தேரோட்ட திருவிழாவில் தமிழ்நாடு பல்வேறு பகுதியில் இருந்து வந்திருந்த சிவனடியார்கள் சிவ பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் என பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்,
இந்த தேரோட்டத்தில் தமிழ்நாடு தொழிலாளர் நலத்துறை அமைச்சர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தார்
ஆவுடையார் கோவில் காவல்துறை பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். அதேபோல் மதுரை மாவட்டம் திருவாதவூர், சிவகங்கை மாவட்டம் கோவிலூர் மடாலய நிர்வாகததால் அமையப்பெற்ற நடராஜர் ஆலயத்தில் மாணிக்கவாசகர் அவதாரதினம் நடந்தது
அதில் சிவனடியார்கள் மற்றும் ஆன்மீக அன்பர்கள், முற்றோதல் நிகழ்வு மற்றும் அபிஷேக ஆராதனைகளும் சிறப்பாக நடந்தது.













கருத்துகள்