முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தெய்வப்புலவர் திருவள்ளுவர் பிறந்த வைகாசி அனுஷ நட்சத்திர விழா

தெய்வப்புலவர் திருவள்ளுவர் பிறந்த நட்சத்திரம்:


வைகாசி மாதத்தில் வரும் அனுஷ நட்சத்திரம். முக்தியடைந்த நட்சத்திரம்: மாசி மாதத்தில் வரும் உத்திர நட்சத்திரம். ஆகும் இந்த இரண்டு நட்சத்திர நாட்களிலுமே சென்னை மயிலாப்பூரில் அமைந்துள்ள திருவள்ளுவர் கோவிலில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன.வைகாசி அனுஷ நட்சத்திரம், தெய்வப்புலவர் திருவள்ளுவர் பிறந்த நாள்.

கொண்டாடும் நோக்கில், 1935 ஆம் ஆண்டு, ஜனவரி மாதத்தில், பேராசிரியர் கா.நமச்சிவாய முதலியார் தலைமையில், பத்மஸ்ரீ வ.சுப்பையா பிள்ளையும், காழி.சிவக்கண்ணு பிள்ளையும், இன்னும் சிலருடன் சேர்ந்து, 'திருவள்ளுவர் திருநாட் கழகம்' எனும் அமைப்பைத் தோற்றுவித்தனர். 

மயிலாப்பூர் திருவள்ளுவர் கோவிலில் கொண்டாடப்படும் நாளைப் பின்பற்றி, பிறந்த நாள் கொண்டாட முடிவு செய்தனர். கோவில், அமைந்தது 400 ஆண்டுகளாக இருக்க வேண்டும் என, தொல்லியல் துறையில் வல்லுனர்கள் கூறுகினறர்.



1810  ஆம் ஆண்டு முதல் 1819 ஆம் ஆண்டு வரை சென்னை ஆட்சியராகவும், பண்டகசாலையின் {கரூவூலம்) தலைவராகவும் இருந்த, சர் பிரான்சிட் ஒயிட் எல்லிஸ், திருக்குறளை முதன்முதலில் ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்து வெளியிட்டார். தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளையும் கற்றார். எல்லிஸ் தான், திருவள்ளுவரை உலகறியச் செய்தவர்.  ஆனால் திருவள்ளூர் பிறந்த காலத்தில் மாற்று மதங்களான கிருஸ்தவம்,  இஸ்லாமியம், உள்ளிட்டவை உதயமாகவில்லை, ஹிந்து மதத்தின் எட்டு உட் பிரிவுகள் மட்டுமே இருந்தது, அதனால் தான் திருவள்ளூர் புலால் உண்ணாமை குறித்தும் பாடியுள்ளார், 

இராயப்பேட்டை, பெரிய பாளையத்தம்மன் கோவில் கிணற்றின் கைப்பிடிச் சுவரில், இவர் வெட்டி வைத்த கல்வெட்டில், மயிலாப்பூர் திருவள்ளுவர் கோவில் பற்றிய குறிப்புகள் உள்ளது.

"சென்னை பட்டணத்து எல்லீசு என்பான்பண்டார காரியம் பாரம் சுமக்கையில் புலவர்கள் பெருமான் மயிலையம் பதியான் தெய்வப் புலமைத் திருவள்ளுவனார் திருக்குறளினில் திருவுளம் பற்றி" என்ற கல்வெட்டில், மயிலாப்பூர் திருவள்ளுவர் கோவில் செய்தி காணப்படுவதை அறியலாம்.

எல்லிஸ் காலத்தை மட்டும் கொண்டால் கூட, 210 ஆண்டுகளுக்கு முன்பாகிறது. எல்லிஸ் காலத்தில் திருவள்ளுவர் கோவிலில், திருவள்ளுவர் அவதார தினமாக வைகாசி அனுஷ நட்சத்திர நாளும், அவர் முக்தி அடைந்த நாளாக, மாசி உத்திர நட்சத்திர நாளும் கடைப்பிடிக்கப் பட்டிருக்கிறது. எல்லிஸ் வருவதற்கு, 100 ஆண்டுகளுக்கு முன், திருவள்ளுவர் கோவில் கட்டப்பட்டது என வைத்துக் கொண்டால், 300 ஆண்டுகளாக அக்கோவில் உள்ளது.

திருக்கோவில் ஆவணத்தில் திருவள்ளுவராண்டு காணப்படவில்லை. 

கோவில் பூஜை முறைகளும், நடைமுறைகளுமே கோவில் ஆவணத்தில் இருக்கும். ஆண்டு முதலான கல்வெட்டு சான்றுகளை கொண்டு கணக்கிடுவர். தற்போதும் மயிலை திருவள்ளுவர் கோவிலில், திருவள்ளுவர் அவதார தினம் வைகாசி அனுஷம் என்றும், முக்தி அடைந்த  நாள், மாசி உத்திரம் என்றும் கொண்டே, பூஜா காரியங்கள் நடைபெறுகின்றன.

இந்த நடைமுறையையே திருவள்ளுவர் திருநாட் கழகத்தினர் ஏற்று, 1935 ஆம் ஆண்டு மே திங்கள், 18, 19 ஆகிய இரு நாட்களில், சென்னை பச்சையப்பன் மண்டபத்தில், தமிழ்நாட்டில் பெரும்புலவர்களை வரவழைத்து, மறைமலை அடிகள் தலைமையில் பெரும் கூட்டம் கூட்டி, திருவள்ளுவரின் பிறந்த நாளை  வைகாசி அனுஷ நாளில் கொண்டாடினர்.

மேலும், இந்த கூட்டத்தில் தலைமையேற்ற மறைமலை அடிகள், தன் பேச்சின் ஊடே, 'திருவள்ளுவர், ஏசு கிறிஸ்துவுக்கு, 31 ஆண்டுகள் முன்பே தோன்றியவர் என, ஆய்வு செய்துள்ளேன்' என்று சொல்லிச் சென்றார். தாம் கூறிய ஆண்டு பற்றி, மறைமலை அடிகள் விவாதிக்கவில்லை; வலியுறுத்தவும் இல்லை. போகிற போக்குச் செய்தியாகத் தான் சொன்னார். திருவள்ளுவர் திருநாட் கழகத்தினர் இயற்றிய தீர்மானங்களில் ஆண்டு பற்றிக் குறிப்பிடவில்லை.

மறைமலை அடிகள் வைகாசி அனுஷத்தை, திருவள்ளுவர் பிறந்த நாளாக ஏற்றுக் கொண்டவர். அதனால் தான், அந்தக் கூட்டத்திற்கு தலைமையேற்றார். மறைமலை அடிகளைத் தவிர, அக்கால தமிழ்ச் சான்றோர் அனைவரும், வைகாசி அனுஷ நட்சத்திர நாளை ஏற்றுக் கொண்டனர். அவ்வாறு ஏற்றுக் கொண்ட பெருமக்களில் சிலர்  டாக்டர் உ.வே.சாமிநாத ஐயர் ., சிவ கவிமணி சுப்பிரமணிய முதலியார், திரு.வி.கல்யாண சுந்தரம் பிள்ளை ., வையாபுரிப் பிள்ளை, ரா.பி.சேதுப்பிள்ளை, ந.மு.வேங்கடசாமி நாட்டார், கி.வா.ஜகநாதன்., அ.ச.ஞானசம்பந்தம், சி.இலக்குவனார், கா.பொ.ரத்தினம், டாக்டர் மு.வரதராஜன் ., ஆகியோர் ஆவர் .திருவள்ளுவா் போன்ற ஞானிகளுக்கு வாழ்க்கையில் ஓா் உன்னத நோக்கமிருந்தது. ஒட்டுமொத்த சமூகத்தின், அனைத்து மக்களின் நல்வாழ்வு தான் அந்த நோக்கம். ஞானிகள் ஒரு குறிப்பிட்ட காலத்துக்கோ, யுகத்துக்கோ உரியவா்கள் அல்லா். எல்லாக் காலத்துக்கும் பொருத்தமானவா்கள்.சென்னை, கிண்டியில் உள்ள லோக்பவன் ஆளுநா் மாளிகையில் சனிக்கிழமை நடைபெற்ற திருவள்ளுவா் திருநாள் விழாவில் அளுநர் பேசியதாவது: "திருக்குறளைப் படித்தால் திருவள்ளுவா் எத்தகைய மாமனிதா் என்பதை உங்களால் உணர முடியும். திருவள்ளுவா் நமக்கு கவிதை வடிவிலான பேரறிவைத் தந்துவிட்டுச் சென்றுள்ளாா்.

ஜனாதனத்தில் நம்பிக்கை இல்லாதவா்கள் கூட, திருவள்ளுவா் முன்பு வந்து தலைவணங்கித்தான் ஆக வேண்டும். அதுதான் திருவள்ளுவரின் சக்தி. இதுதான் திருவள்ளுவரின் ஆகச்சிறந்த பெருமை.ஜனாதனத்துக்கு ஆதியும் அந்தமும் இல்லை: ஜனாதனம் என்பதற்கு ‘நித்தியமானது, என்றும் புதியது’ என்று பொருள். இதற்கு ஆதியுமில்லை, அந்தமுமில்லை.  எனவே திருவள்ளுவரின் ஜனாதனிதான். அப்படியிருக்கும் போது அவரை ‘ஜனாதனப் பாரம்பரியத்தின் சீடா்’ என்று அழைப்பதில் என்ன தவறு?. அதுதான் உண்மை, அதை நம்மால் மறுக்க முடியாது. அவரது கருத்துகள் அவா் ஜனாதனப் பாரம்பரியம், மனிதநேயத்துக்காக வாழ்ந்தாா் என்பதை விளக்கும் என்றாா் ஆளுநா் ஆா்லேகா்.

விருது வழங்கல் விழாவில், சென்னை, நந்தனம் அரசு கலைக் கல்லுாரியின் தமிழ்த் துறைப் பேராசிரியா் க.பலராமனுக்கு ‘தமிழாகரா் சாமி தியாகராஜன் நினைவு விருது-2026’ என்ற விருதை ஆளுநா் வழங்கினாா். நிகழ்வில், தேனி ஸ்ரீசுவாமி சித்பவானந்தா ஆஸ்ரம நிா்வாக அறங்காவலா் சுவாமி சமானந்தா, தமிழறிஞரும், பாரதிய இதிகாச சங்கலன சமிதி அமைப்பின் அகில இந்திய நிா்வாகக் குழு உறுப்பினருமான டி.வி.ரங்கராஜன், திருவள்ளுவா் திருநாள் கழக ஆலோசகா் எஸ்.ராமச்சந்திரன் மற்றும் திருவள்ளுவா் திருநாள் கழக உறுப்பினா்கள், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த திருவள்ளுவா் சங்கங்கள், தமிழ்ச் சங்கங்களின் உறுப்பினா்கள், தமிழ் ஆா்வலா்கள், தமிழ் அறிஞா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

மீண்டும் பாரம்பரிய ஆன்மீக உடையில் திருவள்ளுவா் அருளும் புகைப்படம் 

ஆளுநா் பங்கேற்ற விழா மேடையில் வைக்கப்பட்டு இருந்த பேனரில், திருவள்ளுவா் நெற்றியில் திருநீறுடன், கழுத்தில் ருத்ராட்ச மாலை அணிந்திருக்கும் புகைப்படம் இடம்பெற்றிருந்தது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

சிறப்பாக நடைபெற்ற புதுக்கோட்டை ஸ்ரீ சிங்கமுத்து ஐயனார் ஆலயக் குடமுழுக்கு விழா

புதுக்கோட்டை நகர், அடப்பன்வயல் சார்ந்த குளத்தின் கரையில், பொது ஆண்டு 1686 க்கு முன்னர் இராமநாதபுரம்  சேதுபதி மன்னர் மேதகு கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதி சமஸ்தானத்தின் ஆட்சி அதிகாரத்தில் சிறப்பாக இருந்த ஆலயம் அதன் பின்னர் ஐந்தில் ஒரு பங்கு பிரிந்து அவரது மைத்துனர் புதுக்கோட்டை முதல் மன்னர் விஜய ரகுநாதத் தொண்டைமான் முதல் 1948 ஆம் ஆண்டு மன்னர் இராஜகோபாலத் தொண்டைமான்ஆட்சி முடிவு வரை திருப்பணிகள் கண்டு சீரும் சிறப்புமக நடந்த நிலையில் புதுக்கோட்டை சமஸ்தானம் தேவஸ்தானம் திருக்கோவில்களைச் சார்ந்த ஸ்ரீ சிங்கமுத்து அய்யனார் கோவில் மற்றும் பரிவார தெய்வங்கள் ஆலயத்தில் குடமுழுக்கு விழா 16 ஆண்டுகளுக்குப் பின்னர் கற்கோட்டமாக (கோவில்)  புணரமைப்பு செய்து உருவாக்கி இன்று (02.07.2025) சிறப்பாக நடந்தது. புனராவர்த்தன நூதன ஆலய அஷ்டபந்தன மஹாகும்பாபிஷேக விழாவானது ஸ்ரீ விசுவாவசு வருடம் ஆனி மாதம் 18-ஆம் தேதி (02.07.2025) புதன்கிழமை ஸப்தமி திதியும், உத்திரம் நட்சத்திரமும் சித்தயோகமும் கூடிய நன்னாளில் காலை 9.00 மணிக்குமேல் 10.00 மணிக்குள் சிம்ம லக்னத்தில் குரு ஹோரையில்  ஸ்ரீ பூரணை புஷ்கலா சமேத ...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

திருப்புத்தூர் வேட்பாளருக்கு விதித்த உயர் நீதிமன்றத் தடையை விலக்கிய உச்சநீதிமன்றம்

ஒரு வாக்கில் வெற்றி பெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் திருப்பத்தூர் தொகுதி சட்டமனற உறுப்பினர் சீனிவாச சேதுபதிக்கு எதிராக தோல்வியடைந்த தி.மு.க வேட்பாளர் முன்னால் அமைச்சர் கே. ஆர். பெரியகருப்பன் தொடர்ந்த சென்னை உயர் நீதிமன்ற வழக்கில் சட்டமன்றத்தில் நடக்கும் நம்பிக்கை வாக்கெடுப்பில் த.வெ.க. எம்.எல்.ஏ பங்கேற்கக் கூடாது என்று உயர்நீதிமன்ற உத்தரவுக்கு நேற்று உச்ச நீதிமன்றம் உடனடியாகத் தடை. விதித்தது,  திருப்பத்தூர் திமுக வேட்பாளர் கே. ஆர்.பெரிய கருப்பனுக்கு ஒரு உண்மை தற்போது புரிந்திருக்கும் அது கண்ணைக் கட்ட வைத்த தேர்தல் ஆணையத்தின் சிறப்பான வாதம் தான், சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதியில் வாக்கு எண்ணிக்கை மே மாதம் 4 ஆம் தேதி காரைக்குடியில் நடந்த நிலையில் ஏமாற்றி வெற்றி பெற நினைத்து மாலையில் திமுகவினர் அராஜகம் செய்ய நினைத்த நிலையில் அதே தொகுதியில் பாஜகவின் கூட்டணிக் கட்சி சார்பாக போட்டியிட்ட தென்னிந்திய பார்வேடு பிளாக் கட்சியின் வேட்பாளர் கே. சி. திருமாறன் ஜி களமிறங்கி கடைசி வரை தவெக வேட்பாளர் அருகில் இருந்து திமுகவினரின் கடைசி நேர முறைகேடுகளுக்கு எதிராக விழிப்புணர்வு ஏற்பட...