அந்த்யோதயா: நலிவடைந்த மக்களின் கண்ணியம், வளர்ச்சியை உறுதி செய்துள்ள மத்திய அரசு
நாட்டின் நலிவடைந்த சமூகங்களின் முன்னேற்றத்திற்காக கடந்த 12 ஆண்டுகளில் மத்திய அரசு அந்த்யோதயா கொள்கையை தாரக மந்திரமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. உள்ளடக்கிய, தரமான கல்வி, திறன் மேம்பாடு,அந்த்யோதயா: நலிவடைந்த மக்களின் கண்ணியம், வளர்ச்சியை உறுதி செய்துள்ள மத்திய அரசு வாழ்வாதார முன்னேற்றம், உள்கட்டமைப்பு மேம்பாடு ஆகியவற்றின் மூலம் விளிம்புநிலை மக்கள் முன்னேறி வருகின்றனர்.
மத்திய அரசு பழங்குடியின மக்களின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதில் தீவிர கவனம் செலுத்தி வருகிறது. பழங்குடியின மக்களுக்கான வீட்டுவசதி, சாலை இணைப்பு, குடிநீர், மின்சாரம், கல்வி போன்ற அடிப்படைத் தேவைகளை நிறைவேற்ற 24,104 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் பிரதமரின் ஜன்மன் திட்டம் தொடங்கப்பட்டது. இதன் கீழ் தொடங்கப்பட்ட பழங்குடியினர் மேம்பாட்டு மையங்கள் மூலம் பழங்குடியின மக்கள் வனம் சார்ந்த பொருட்களைச் சேகரித்து, பதப்படுத்தி விற்பனை செய்து தங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி வருகின்றனர். ஜார்கண்ட் மாநிலத்தில் பழங்குடியினப் பெண்கள் ஆயுர்வேத மருந்துகள் தயாரித்து விற்பனை செய்து பெரும் வருவாய் ஈட்டி சாதனை படைத்துள்ளனர். பழங்குடியினர் வசிக்கும் கிராமங்களில் நீண்டகாலமாக உள்ள குறைபாடுகளைக் களைவதற்குப் பிரதமரின் பழங்குடியின கிராம மேம்பாட்டு இயக்கம் கூட்டு முயற்சியுடன் செயல்பட்டு வருகிறது. பழங்குடியின மாணவர்களுக்குத் தரமான கல்வி வழங்க 2014-ம் ஆண்டில் 129 ஆக இருந்த ஏகலைவா மாதிரி உண்டு உறைவிடப் பள்ளிகளின் எண்ணிக்கை 2026-ல் 499 ஆக உயர்ந்துள்ளது.
பட்டியல் இன மக்களின் பொருளாதார, கல்வி வளர்ச்சியை உறுதி செய்ய மத்திய அரசால் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. பட்டியல் இன மக்கள் அதிகம் வாழும் கிராமங்களின் ஒருங்கிணைந்த வளர்ச்சிக்காகப் பிரதமரின் அஜய் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதன் கீழ் 14,782 கிராமங்கள் மாதிரி கிராமங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. உயர் கல்வி பயிலும் பட்டியல் இன, இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த மாணவர்களுக்கு ஷ்ரேயாஸ் திட்டம் மூலம் நிதியுதவி, இலவசப் பயிற்சி வழங்கப்படுகிறது. ஏழை பட்டியல் இன மாணவர்கள் தனியார் உண்டு உறைவிடப் பள்ளிகளில் தங்கிப் பயில ஷ்ரேஸ்தா திட்டம் வழிவகை செய்கிறது.
இதர பிற்படுத்தப்பட்ட, பொருளாதார ரீதியாகப் பின்தங்கிய விளிம்புநிலை மாணவர்களுக்குப் பிரதமரின் யஷஸ்வி திட்டம் மூலம் கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. பிரதமரின் தக்ஷ் திட்டம் விளிம்புநிலை மக்களுக்கு இலவசத் திறன் பயிற்சி வழங்கி வேலைவாய்ப்புகளை உருவாக்குகிறது. விஸ்வாஸ் திட்டம் பட்டியல் இனத்தவர், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், தூய்மைப் பணியாளர்களுக்குக் குறைந்த வட்டியில் கடன் உதவி வழங்குகிறது. தூய்மைப் பணியாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், மனிதக் கழிவுகளை மனிதர்களே அகற்றும்
முறையை ஒழித்து இயந்திரமயமாக்கவும் நமஸ்தே திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
வளர்ச்சியில் பின்தங்கிய 112 மாவட்டங்களை மேம்படுத்த 2018-ல் தொடங்கப்பட்ட முன்னேறும் மாவட்டங்கள் திட்டம், தற்போது 500 வட்டங்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் விருதுநகர் மாவட்டத்தில் கர்ப்பிணிப் பெண்களைக் கண்காணிக்க 'விருகேர்' என்ற செயலி உருவாக்கப்பட்டு, பிரசவ கால மரணங்கள் இல்லாத நிலை உருவாக்கப்பட்டுள்ளது. இத்தகைய ஒருங்கிணைந்த திட்டங்களால் நலிவடைந்த பிரிவினரும் நாட்டின் வளர்ச்சிப் பயணத்தில் இணைந்துள்ளன
கருத்துகள்