முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

மதம் மாறிய பின் ஜாதிச் சலுகை தமிழ்நாடு அரசாணை (G.O. No. 31) அரசியலமைப்பிற்கு முரணானதென ரத்து செய்த உயர் நீதிமன்றம்

தூத்துக்குடி என்.சமீர் அகமது பழைய பெயர் என்.பரமசிவம். ஹிந்துப் பெற்றோருக்குப் பிறந்தவர்,



இஸ்லாமிய மதத்தைத் தழுவி தனது பெயரையும் கயத்தாறில் சுன்னத் ஜமாஅத் மூலம் 2015-ஆம் ஆண்டு வழங்கப்பட்ட சான்றிதழில், மாற்றிய மனுதாரர் இஸ்லாம் மதத்தைத் தழுவியதாகக் குறிப்பிடப்பட்டுள்ள நிலையில் அவர் தான் பின்பற்றுவதாகக் குறிப்பிட்ட ‘முஸ்லிம் மதம் லெப்பை’ உட்பிரிவின் கீழ் தனக்கு ஜாதிச் சான்றிதழ் வழங்கக் கோரி விண்ணப்பித்திருந்த நிலையில் கயத்தாறு வட்டாட்சியருக்கு விண்ணப்பம் அளித்ததை நிராகரித்தார். 


அதனால் அவர் சென்னை உயர் நீதிமன்றம் மதுரைக் கிளையில் 2022 ஆம் ஆண்டில் மனு தாக்கல் செய்தார். ‘முஸ்லிம் மதம் ஜாதி லெப்பை’ எனக் குறிப்பிட்டு ஜாதிச் சான்றிதழ் வழங்க வட்டாச்சியருக்கு உத்தரவிடுமாறு தனது மனுவில் கேட்டுக்கொண்டிருந்த சூழலில் 2024-ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு வெளியிட்ட அரசாணையில் . பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (BC), மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (MBC), சீர்மரபினர் (DNC) அல்லது அட்டவணைப் பட்டியலினத்தவர் (SC) ஆகிய பிரிவுகளிலிருந்து இஸ்லாமிய மதத்திற்கு மாறும் ஒருவர், இடஒதுக்கீட்டுப் பலன்களைப் பெறுவதற்காகப் பிற்படுத்தப்பட்ட வகுப்பு முஸ்லிமாகக் கருதப்படலாம் என்றும்; அவ்வாறு மதம் மாறும் போது, அவருக்கு அறிவிக்கப்பட்டுள்ள ஏழு பிரிவுகளில் ஏதேனும் ஒன்றைச் சேர்ந்தவராகக் குறிப்பிட்டு ஜாதிச் சான்றிதழ் வழங்கலாம் என்றும் அது BC (M) என அழைக்க உத்தரவிடப்பட்டிருந்தது.

இந்த அரசாணையின் அடிப்படையில், தனக்கு பிற்படுத்தப்பட்டோர் (முஸ்லீம்) ஜாதிச் சான்றிதழ் வட்டாச்சியர் வழங்க வேண்டும் என்றும் கேட்டிருந்தார். உயர் நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு 2024-ஆம் ஆண்டு பிறப்பித்த அரசாணையை (G.O. No. 31) சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளை இது அரசியலமைப்பிற்கு முரணானது என அறிவித்து ஜூன் 26, 2026 அன்று ரத்து செய்துள்ளது. இந்த அரசாணை, பிற்படுத்தப்பட்ட (BC), மிகவும் பிற்படுத்தப்பட்ட (MBC) மற்றும் பட்டியல் சமூகத்தில் (SC) இருந்து இஸ்லாம் மதத்திற்கு மாறியவர்களுக்கு 'BC முஸ்லிம்' என ஜாதிச் சான்றிதழ் வழங்கி இடஒதுக்கீடு பெற வழிவகை செய்திருந்தது. இந்து மதம் உள்ளிட்ட பிற மதங்களிலிருந்து இஸ்லாமிய மத்திற்கு மாறுபவர்களை 'BC முஸ்லிம்' என்று வகைப்படுத்த முடியாதென நீதிமன்றம் திட்டவட்டமாகத் தீர்ப்பளித்துள்ளது. இஸ்லாம் மத்திற்கு மதம் மாறுபவர்கள் 'வெறும் முஸ்லிம்' மட்டுமே என்றும், ஜாதி அல்லது சமூக அடிப்படையிலான பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீட்டிற்கு அவர்கள் உரிமை கோர முடியாதென்றும் நீதிமன்றம் தற்போது தெளிவுபடுத்தியுள்ளது இஸ்லாம் மதத்திற்குள் காலகாலமாகப் பிறப்பால் அடையாளப்படுத்தப்படும் லெப்பை, மரைக்காயர், ராவுத்தர் மற்றும் தக்காணி முஸ்லிம்கள் போன்ற மரபுவழிப்பட்ட 7 குறிப்பிட்ட இஸ்லாமிய உட்பிரிவினருக்கு மட்டுமே தொடர்ந்து BC முஸ்லிம் இடஒதுக்கீடு பொருந்தும். தமிழ்நாட்டில் முஸ்லிம்களுக்கான 3.5 சதவீத உள் இடஒதுக்கீடு தொடர்ந்து நடைமுறையில் உள்ளதை தற்போது மதம் மாறியவருக்கு 'பிசி-முஸ்லிம்' என ஜாதிச் சான்றிதழ் வழங்கும் அரசாணை ரத்து

வேறு மதத்திலிருந்து இஸ்லாமிய மதத்துக்கு மாறியவருக்கு பிற்படுத்தப்பட்ட முஸ்லிம் என ஜாதிச் சான்றிதழ் வழங்கும் அரசாணையை ரத்து செய்து உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது. மனுவை விசா ரித்து நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமி நாதன், பி.பி.பாலாஜி அமர்வு பிறப்பித்த உத்தரவு:

தமிழ்நாடு அரசு 2024 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 9-ஆம் தேதி பிறப்பித்த அரசாணை அடிப்படையில், மனுதாரர் தனக்கு பிற்படுத்தப்பட்டோர் முஸ்லிம் என ஜாதிச் சான்றிதழ் கோரி மனு அளித்துள்ளார். அரசாணை யில், பிற்படுத்தப்பட்ட வருப் பினர், மிகவும் பிற்படுத்தப் பட்ட வகுப்பினர், சீர்மரபினர் அல்லது பட்டியல் ஜாதி பிரிவுகளைச் சேர்ந்தவர்கள் முஸ்லிம் மதத்தைச் சேர்ந்த 7 பிரிவுகளில் ஏதேனும் ஒன்றுக்கு மாறும் போது அவர்களுக்கு 'பிற்படுத் தப்பட்ட வகுப்பு முஸ்லிம்கள்' என சான்றிதழ் வழங்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.

மதம், இளம், ஜாதி, பிரிவு, பிறந்த இடம் அடிப்படையில் பாகுபாடு காட்டுவதை இந்திய அரசியலமைப்புச் சட்டம் தடை செய்கிறது. அதேநேரம், சமூக மற்றும் கல்வி ரீதியாகப் பிள தங்கிய குடிமக்கள் அல்லது பட்டியல் ஜாதியினர் அல்லது பட்டியல் பழங்குடியினரின்

முன்னேற்றத்துக்காக சிறப்புச் சலுகைகள் வழங்க அரசுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

இந்த இடஒதுக்கீடு விஷயத் நில் தமிழ்நாடு அரசு கவனமாகச் செயல்பட்டுள்ளது. முஸ்லிம் மதத்தைப் பின்பற்றும் அனைவரையும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் பிரிவில் சேர்க்காமல், குறிப்பிட்ட சில பிரிவுகளை மட்டுமே பிற்படுத்தப்பட்ட வகுப்பிளர் பிரிவில் சேர்த்துள்ளது.

அரசாணையில், பிற்படுத் தப்பட்ட வகுப்பினர். மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், சீர் மரபினர் அல்லது பட்டியல் ஜாதியினர் பிரிவில் இருந்து அதன் முலம் பிற மதத்துக்கு மாறிய ஒருவர் இட ஒதுக்கீட்டுச் சலுகையைப் பெற 'பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (முஸ்லிம்)' எனக் கருதலாம். மதம் மாறிய பிறகு லெப்பை உள்ளிட்ட 7பிரிவுகளில் ஒன்றைச் சேர்ந்தவர் என்பதற்கான ஜாதிச் சான்றிதழ் வழங்கலாம் என்றும் சுறப்பட்டுள்ளது. இது சட்டப்படி செல்லுமா என்ற கேள்வி எழுந்துள்ளது,

மதமாற்றத்தை இந்து மதம் போல அல்லாமல் தங்களது மதங்கள் சமூக சமத்துவத்தை அளிப்பதாக கிறிஸ்தவ மிஷனரிகளும், முன்லிம் பிரச்சாரகர்களும் கூறி வரும் இத்தகைய நிலைப் பாடு இருக்கும் போது முஸ்லிம் மதத்தில் சில பிரிவுகளை 'பிற்படுத்தப்பட்டவை என்றும், மற்றவற்றை'முன் னேறியவை' என்றும் வகைப்படுத்துவது குர்ஆனின் கட்டளை களுக்கு முரணானது. இஸ்லாம் ஒரு சமத்துவ சமுதாயத்தை உரு வாக்கவே விழைகிறது இறைவனின் பார்மையில் அனைவரும் சமம். அங்கு சமூகப் படி நிலைகள் ஏதும் இல்லை.

இருப்பினும், வரலாற்று ரீதி யான காரணங்களால், முஸ்லிம் சமூகமும் பல்வேறு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இது இந்து மதத்தில் உள்ள

ஜாதி அமைப்புக்கு இணை யானவை என்று கூட துணிந்து கூறலாம். ஜாதி எவ்வாறு பிறப் பால் தீர்மானிக்கப்படுகிறதோ. அதே போல ஒருவர் பிறப் பாலேயே லெப்பை, ராவுத்தர். மரைக்காயர் அல்லது தக்காணி முஸ்லிமாக அறியப்படுகிறார்.

சென்னை உயர்நீதிமன்றம் 75 ஆண்டுகளுக்கு முன்பு பிறப்பித்த உத்தரவில், 'முஸ்லிம் மதத்துக்கு மாறியவுடன் ஒருவர் முஸ்லிம் ஆகிறார்' என்று கூறப்பட்டுள்ளது. அவரை ஒரு குறிப்பிட்ட பிரிவுக்குள் அடக்க முடியாது. இந்த உத்தரவு அமலில் இருக்கும்போது வெறும் அரசாணையால் நீதிமன்ற உத்தரவை மாற்றியமைக்க முடியாது.

சட்டம் நிறைவேற்ற சட்டப் பேரவைக்கு அதிகாரம், தகுதி இருந்தாலும் அரசு நிர்வாகத்துக்கு அத்தகைய உரிமை இல்லை. அரசு நிறுவனம் ஒரு போதும் நீதி மன்றத்தின் இறுதித் தீர்ப்புக்கு எதிராகச் செயல்பட முடியாது. அரசுக்கு எதிரான முடிவாக இருப் பதாகக் கூறி அதை மீறுவதற்கு நினைத்தால், அது சட்ட ஆட்சியின் முடிவுக்கு வழிவகுக்கும்.

முஸ்லிம் மதத்துக்கு மாறிய வர்கள் ஏதேனும் ஒரு வகையான இட ஒதுக்கீட்டுப் பலனை தொடர்ந்து பெறுவதை உறுதி செய்ய மட்டுமே மாநில அரசு இத்தகைய அணுகுமுறையை மேற்கொண்டுள்ளது. எனவே, தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர், மிக வும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத் துறை கடந்த 2024 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 9-ஆம் தேதி பிறப்பித்த அரசாணை அரசியல் அமைப்புச் சட்டத்துக்கு முரண்பாடு என . அந்த அரசாணை ரத்துசெய்யப்படுகிறது.

இதனால், முஸ்லிமாக மதம் மாறிய ஒருவர் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த முஸ்லிம் என்ற அந்தஸ்தை கோர முடியாது. அவர் ஒரு முஸ்லிம் மட்டுமே. அதைத் தவிர வேறு எதுவும் இல்லை என நிதிபதிகள் கூறியுள்ளனர். BC முஸ்லீம்கள் இடஒதுக்கீடு.7 பிரிவினர் இதைப் பெறுவார்கள். மற்ற மதங்களில் இருந்து இஸ்லாமியத்திற்கு மாறுபவர்கள் பொதுப் பிரிவாகக் கருதப்படுவார்கள். இந்து BC/MBC/DNC/SC யில் இருந்து இஸ்லாமிற்கு மாறும் போது BC முஸ்லீம்கள் அரசியலமைப்பிற்கு முரணானதாகக் கருதப்படும் 2024 ஆம் ஆண்டின் GO ஐ மட்டுமே தீர்ப்பு ரத்து செய்கிறது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

சிறப்பாக நடைபெற்ற புதுக்கோட்டை ஸ்ரீ சிங்கமுத்து ஐயனார் ஆலயக் குடமுழுக்கு விழா

புதுக்கோட்டை நகர், அடப்பன்வயல் சார்ந்த குளத்தின் கரையில், பொது ஆண்டு 1686 க்கு முன்னர் இராமநாதபுரம்  சேதுபதி மன்னர் மேதகு கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதி சமஸ்தானத்தின் ஆட்சி அதிகாரத்தில் சிறப்பாக இருந்த ஆலயம் அதன் பின்னர் ஐந்தில் ஒரு பங்கு பிரிந்து அவரது மைத்துனர் புதுக்கோட்டை முதல் மன்னர் விஜய ரகுநாதத் தொண்டைமான் முதல் 1948 ஆம் ஆண்டு மன்னர் இராஜகோபாலத் தொண்டைமான்ஆட்சி முடிவு வரை திருப்பணிகள் கண்டு சீரும் சிறப்புமக நடந்த நிலையில் புதுக்கோட்டை சமஸ்தானம் தேவஸ்தானம் திருக்கோவில்களைச் சார்ந்த ஸ்ரீ சிங்கமுத்து அய்யனார் கோவில் மற்றும் பரிவார தெய்வங்கள் ஆலயத்தில் குடமுழுக்கு விழா 16 ஆண்டுகளுக்குப் பின்னர் கற்கோட்டமாக (கோவில்)  புணரமைப்பு செய்து உருவாக்கி இன்று (02.07.2025) சிறப்பாக நடந்தது. புனராவர்த்தன நூதன ஆலய அஷ்டபந்தன மஹாகும்பாபிஷேக விழாவானது ஸ்ரீ விசுவாவசு வருடம் ஆனி மாதம் 18-ஆம் தேதி (02.07.2025) புதன்கிழமை ஸப்தமி திதியும், உத்திரம் நட்சத்திரமும் சித்தயோகமும் கூடிய நன்னாளில் காலை 9.00 மணிக்குமேல் 10.00 மணிக்குள் சிம்ம லக்னத்தில் குரு ஹோரையில்  ஸ்ரீ பூரணை புஷ்கலா சமேத ...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

திருப்புத்தூர் வேட்பாளருக்கு விதித்த உயர் நீதிமன்றத் தடையை விலக்கிய உச்சநீதிமன்றம்

ஒரு வாக்கில் வெற்றி பெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் திருப்பத்தூர் தொகுதி சட்டமனற உறுப்பினர் சீனிவாச சேதுபதிக்கு எதிராக தோல்வியடைந்த தி.மு.க வேட்பாளர் முன்னால் அமைச்சர் கே. ஆர். பெரியகருப்பன் தொடர்ந்த சென்னை உயர் நீதிமன்ற வழக்கில் சட்டமன்றத்தில் நடக்கும் நம்பிக்கை வாக்கெடுப்பில் த.வெ.க. எம்.எல்.ஏ பங்கேற்கக் கூடாது என்று உயர்நீதிமன்ற உத்தரவுக்கு நேற்று உச்ச நீதிமன்றம் உடனடியாகத் தடை. விதித்தது,  திருப்பத்தூர் திமுக வேட்பாளர் கே. ஆர்.பெரிய கருப்பனுக்கு ஒரு உண்மை தற்போது புரிந்திருக்கும் அது கண்ணைக் கட்ட வைத்த தேர்தல் ஆணையத்தின் சிறப்பான வாதம் தான், சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதியில் வாக்கு எண்ணிக்கை மே மாதம் 4 ஆம் தேதி காரைக்குடியில் நடந்த நிலையில் ஏமாற்றி வெற்றி பெற நினைத்து மாலையில் திமுகவினர் அராஜகம் செய்ய நினைத்த நிலையில் அதே தொகுதியில் பாஜகவின் கூட்டணிக் கட்சி சார்பாக போட்டியிட்ட தென்னிந்திய பார்வேடு பிளாக் கட்சியின் வேட்பாளர் கே. சி. திருமாறன் ஜி களமிறங்கி கடைசி வரை தவெக வேட்பாளர் அருகில் இருந்து திமுகவினரின் கடைசி நேர முறைகேடுகளுக்கு எதிராக விழிப்புணர்வு ஏற்பட...