முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

2012 ல் டெல்லி நிர்பயா பாலியல் கொலைக் குற்றவாளிகளுக்கு 01.02.2020ம் தேதி காலை 6 மணிக்கு தூக்கு நீதிமன்றம் இறுதி மரணவாரண்ட் உத்தரவு

அணைவரும் எதிர்நோக்கும் கருணையில்லாத கொடும்  குற்றவாளிகளின் தண்டனை விரைவில் நிறைவேற்றப்பட வேண்டும் என்றும், மரண தண்டனை நிறைவேற்றுவதற்கான வாரண்ட் வழங்கப்பட வேண்டும் எனவும் 'நிர்பயா' என்ற பெயரால் அறியப்படும் பெண்ணின் பெற்றோர் தொடர்ந்த வழக்கில் இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
மிகக் கொடூரமான குற்றங்களில் ஈடுபட்டவர்களுக்கு நம்நாட்டில்  நீதிமன்றங்கள் மரண தண்டனை விதித்தாலும், 2015க்குப் பிறகு யாருக்கும் மரண தண்டனை நிறைவேற்றப்படவில்லை. 1990 ல் நடந்த மும்பை வெடிகுண்டுத் தாக்குதல் சம்பவத்தில் குற்றவாளி யாகூப் மேமனுக்கு  நிறைவேற்றப்பட்டது                  தூக்குத்தண்டனை விதிப்பதில் இந்தியாவை விட மற்ற நாடுகள் முன்னணியில் உள்ளன. 2018ல் நான்கு நாடுகளில் அதிகம் உலக அளவில், நிறைவேற்றப்படும் மரண தண்டனைகளின் எண்ணிக்கை குறைவு. கடந்த பத்து ஆண்டுகளில் பா இந்த எண்ணிக்கை மிகவும் குறைவாக இருந்தது என்று சர்வதேச பொது மன்னிப்பு அமைப்பின் மனித உரிமைகள் பிரிவு தெரிவித்துள்ளது.
 கொலைகள் மற்றும் பாலியல் வன்முறைக் கொலைகளுக்கு மரண தண்டனை விதிக்கப்படுகிறது. 2018ல் இவற்றின் எண்ணிக்கை முறையே 45 மற்றும் 58 என இருந்தது. இந்தத் தண்டனைகள் இந்திய குற்றவியல் சட்ட விதிகளின் (1860)ன் கீழ் நிறைவேற்றப் படுகின்றன.
மத்திய  மாநில அரசுகளின் வேறு 24 சட்டங்களின் கீழ் மரண தண்டனை விதிக்க வழி வகை உள்ளன சுதந்திரம் பெற்றதில் இருந்து, அதிகபட்ச எண்ணிக்கையில் மரண தண்டனைகள் உத்தரப் பிரதேசத்தில்  என டெல்லி தேசிய சட்டப் பல்கலைக்கழகம் தொகுப்புத் தகவலில் அறியலாம் 
சுதந்திரத்திற்குப் பிறகு, அந்த மாநிலத்தில் 354 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. அதற்கடுத்த இடத்தில் ஹரியானாவில் 90, மத்தியப் பிரதேசத்தில் 73 ம் மற்ற மாநிலங்களில்‌ 
2018 ஆம் ஆண்டில் புதிதாக 162 பேருக்கு மரண தண்டனைகள் விதிக்கப் பட்டுள்ளதாக தேசிய சட்டப் பல்கலைக்கழகத்தின் தகவல் தொகுப்பு தெரிவிக்கிறது. முந்தைய ஆண்டைவிட அது 50 சதவீதம் அதிகம். சுமார் 20 ஆண்டுகளில் அதுதான் அதிகபட்ச எண்ணிக்கை. ஆந்திராவின் புதிய சட்டப்படி
பாலியல் வன்முறைக் கொலைக் குற்றங்களுக்கு நல்ல சட்ட தீர்வு வந்தது  நம் நாட்டு  நீதிமன்றங்கள் மூலம் 2018ல் மரண தண்டனை விதிக்கப்பட்ட எண்ணிக்கை, முந்தைய ஆண்டைவிட 35 சதவீதம் அதிகம். சட்டத்தில் திருத்தங்கள் செய்யப்பட்டதால் நிறைய பேருக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தானில் கடந்த ஆண்டில் 250ம் வங்கதேசத்தில் 229ம்  உலக அளவில், 2017 ஆம் ஆண்டைவிட 2018 ஆம் ஆண்டில் நிறைவேற்றப்பட்ட மரண தண்டனைகளின் எண்ணிக்கை சற்று குறைவு 2017ல் இந்த எண்ணிக்கை 2,591 ஆக இருந்த நிலையில், 2018ல் அது 2,531 ஆகக் குறைந்திருந்தது.
கடந்த ஆண்டுகளில் 690 மரண தண்டனைகள் நிறைவேற்றப்பட்டிருப்பதாக மரண தண்டனைக்கு எதிரான பிரச்சாரம் செய்யும் சர்வதேச பொது மன்னிப்பு சபை தெரிவித்துள்ளது. அதற்கு முந்தைய ஆண்டைவிட இது 30 சதவீதம் குறைவு.
2018ல் பதிவு செய்யப்பட்ட மரண தண்டனை நிறைவேற்றங்களில் 80 சதவீதம், நான்கு நாடுகளில் நடந்துள்ளது:


அரிதாக கடந்த நவம்பர் மாதம் வியட்நாம் வெளியிட்ட அதிகாரப்பூர்வ தகவலில், கடந்த ஆண்டு 85 மரண தண்டனைகளை நிறைவேற்றியுள்ளதாகத் தெரிவித்துள்ளது. இருந்தபோதிலும், மரண தண்டனைகள் நிறைவேற்றப்படும் தகவல்கள் அரசு ரகசியமாகக் கருதப்படுவதால், முந்தைய ஆண்டுகளில் எவ்வளவு பேருக்கு தண்டனைகள் நிறைவேற்றப்பட்டன என்பது பற்றி நம்பகமான தகவல்கள் எதுவும் இல்லை.


நிர்பயா வழக்குக் குற்றவாளிகளுக்கு  நமது குடியரசுத்தலைவர் கருணையற்றவர்களின் கருணை மனுவை நிராகரித்ததால் இவர்கள்  தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட மரண வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது 


ஏறத்தாழ 7 ஆண்டுகள் கடந்தும், அந்தச் சம்பவத்தின் கோரம் இன்னும் மறையவில்லை. இந்தியாவின் தலைநகரம் டெல்லியில் நிகழ்ந்த அந்தச் சம்பவம், இந்தியாவில் வாழும் பெண்களின் அவலநிலையை உலகத்திற்குக் காட்டியது. வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட டெல்லி மருத்துவக் கல்லூரி மாணவிக்கு ஆதரவாகப் பல்லாயிரக் கணக்கானோர் தங்கள் எதிர்ப்பைப் பதிவுசெய்ய வீதியில் இறங்கினர். தொடர்ந்து அடக்குமுறை, ஆணாதிக்கம், வன்கொடுமை, பாலியல் துன்புறுத்தல், முதலானவற்றுக்கு உள்ளாகும் இந்தியப் பெண் சமூகம், வன்கொடுமை செய்து தாக்குதலுக்கு உள்ளான அந்தப் பெண்ணுக்கு சூட்டிய பெயர், 'நிர்பயா'. 'நிர்பயா' என்றால் 'பயமற்றவள்' என்று பொருள்.
வழக்கில் கைதான 6 பேரில், ஒருவர் சிறார். ராம் சிங் என்ற குற்றவாளி, 2013-ம் ஆண்டு திகார் சிறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். காவல்துறை தரப்பில் தற்கொலை என்று சொல்லப்பட்டாலும், ராம் சிங்கின் வழக்கறிஞரும் குடும்பத்தினரும் அதைக் கொலை என்றே கருதுகின்றனர். குற்றவாளிகளோடு இருந்த சிறாருக்கு 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்பட்டது. மற்ற நால்வருக்கும் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது. மேல்முறையீடு, நிராகரிப்பு ஆகியவற்றைக் கடந்து, தற்போது நால்வருக்கும் ஜனவரி 22-ம் தேதியன்று தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட உள்ளது.


திகார் சிறை தூக்குத் தண்டனைக்கு ஆயத்தமாகிக் கொண்டிருக்கிறது. வரும் ஜனவரி 22-ம் தேதியன்று காலை 7 மணிக்கு, நிர்பயா வழக்கின் குற்றவாளிகள் வினய் ஷர்மா, பவன் குப்தா, அக்‌ஷய் தாகூர், முகேஷ் ஆகிய நால்வருக்கும் தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட உள்ளது. வன்கொடுமை வழக்கு ஒன்றில், நாட்டிலேயே முதல்முறையாக தூக்குத் தண்டனை நிறைவேற்றப்படுவதால், திகார் சிறையில் பரபரப்பு நிலவுகிறது.


'டெல்லி சிறை விதிகள் 2018' என்ற விதிமுறைகளின்படி, தூக்குத் தண்டனை நிறைவேற்றுவதற்கு என்னென்ன விதிகள் பின்பற்றப்படுகின்றன என்று கூறப்பட்டிருக்கிறது. சிறைக் கண்காணிப்பாளருக்குத் தண்டனையை நிறைவேற்றும் நேரத்தைத் தீர்மானிக்கும் அதிகாரம் வழங்கப்படுகிறது. தண்டனை நிறைவேற்றும் நேரம் குறித்த அறிக்கையை அவர் காவல்துறை உயரதிகாரி, குற்றவியல் நீதிமன்ற நீதிபதி, அரசு ஆகியோருக்கு அனுப்புவார். பொதுவாக, அதிகாலை வெளிச்சம் வருவதற்கு முன்பே தூக்குத் தண்டனை நிறைவேற்றப்படும்; அதற்கான நேரத்தை ஒவ்வொரு காலத்துக்கும் ஏற்றவாறு அரசு வெளியிடும். சிறைவாசிகள் யாருக்கும் தூக்குத் தண்டனையைப் பார்வையிட அனுமதி கிடையாது.


முதலில், பொதுப்பணித்துறையைச் சேர்ந்த தலைமைப் பொறியாளர் ஒருவர், தண்டனை நிறைவேற்றப்படும் தூக்குமேடையை 4 நாள்களுக்கு ஒரு முறை பார்வையிடுவார். தண்டனை நிறைவேற்றப்படும் நாளுக்கு முந்தைய நாள் மாலை, சிறைக் கண்காணிப்பாளர் முன்னிலையில் தலைமைப் பொறியாளர் தூக்கு மேடையை நேரில் பார்வையிட வேண்டும். தூக்குத் தண்டனைக்குப் புதிய கயிற்றை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று விதிகளில் குறிப்பிடப்படவில்லை. எனினும் தூக்குக்கயிறு பலமுறை சோதனை செய்யப்பட்டிருக்க வேண்டும்.
கைதியைவிட, ஒன்றரை மடங்கு அதிக எடையுள்ள மணல் மூட்டையை, ஏறத்தாழ 1.83 மீட்டர் முதல் 2.44 மீட்டர் வரையிலான நீளம் கொண்ட கயிற்றில் கட்டித் தொங்கவிட்டு, கயிற்றின் பலம் பரிசோதிக்கப்படும். ஒவ்வொரு கைதிக்கும் 2 கயிறுகள் கூடுதலாக வைக்கப்பட்டிருக்கும். தண்டனையின்போது, கயிற்றில் பிரச்னை ஏற்பட்டால், அதற்கு மாற்று ஏற்பாடாக இந்தக் கயிறுகள் பயன்படும்.
அடுத்ததாக, தண்டனை நிறைவேற்றப்படும் நாளுக்கு 4 நாள்களுக்கு முன்பு, மருத்துவ அதிகாரி ஒருவர் கைதியின் எடைக்கு ஏற்ப, எவ்வளவு நீளத்தில் அவரது உடல் தொங்கவிடப்பட வேண்டும் என்பதைக் கணக்கிடுவார். எடை அதிகமாவதற்கேற்ப நீளம் குறைக்கப்படும்.
கைதியின் எடை 45.36 கிலோவுக்குக் கீழ் இருந்தால், தூக்குமேடையிலிருந்து தரைக்கு 2.44 மீட்டர் நீளத்தில் தொங்கவிடப்படுவார்; 45.33 கிலோ முதல் 60.33 கிலோ வரை எடையுள்ள கைதிக்கு, 2.29 மீட்டர் தூரமும், 60.33 கிலோ முதல் 75.33 கிலோ வரை எடையுள்ள கைதிக்கு 2.13 மீட்டர் தூரமும், 75.33 கிலோ முதல் 90.72 கிலோ வரை எடையுள்ள கைதிக்கு, 1.98 மீட்டர் தூரமும் உடலைத் தொங்கவிடுவதற்கான நீளமாக நிர்ணிக்கப்பட்டிருக்கின்றன. 90.72 கிலோ எடைக்கும் அதிகமாக உள்ள கைதிக்கு, 1.83 மீட்டர் நீளம் எனத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கைதிகளின் உயரம், எடை ஆகியவற்றின் விவரங்கள் ஏற்கெனவே சிறைத்துறையின் பதிவுகளில் இருந்தாலும், தண்டனை நிறைவேற்றப்படுவதற்கு 4 நாள்களுக்கு முன்பு, அவை மீண்டும் அளவிடப்படும். தூக்குக் கயிற்றின் நீளம், உடல் தொங்கவிடப்படும் உயரம் ஆகியவற்றைத் தீர்மானிக்கும் பொறுப்பு, மருத்துவ அதிகாரிக்கு வழங்கப்படும். தூக்குக் கயிறு, பருத்தி அல்லது மணிலாவால் தயாரிக்கப்படும். அதன் சுற்றுவட்டம் 2.59 முதல் 3.81 சென்டிமீட்டர் வரை இருக்கும்.
சிறை
கைதியின் இடது காதுக்குக் கீழ் தாடைப் பகுதியிலிருந்து, கைதியின் உயரம் துல்லியமாக அளவிடப்படும். கயிறு தொங்கவிடப்பட்டுள்ள இடத்திலிருந்து, கீழே கட்டப்பட்டிருக்கும் இடம் வரையிலான நீளம் கணக்கிடப்படும். கைதியின் கழுத்தின் சுற்றளவு கணக்கிடப்படும். இந்தக் கணக்குகளை வைத்து, தூக்குத் தண்டனை ஒத்திகை நடைபெறும். ஒத்திகை சரியாக நடந்து முடிந்த பிறகு, கயிற்றின் சுருக்குப் பகுதியில் மெழுகு அல்லது வெண்ணெய் தடவப்பட்டு, இரும்புப் பெட்டி ஒன்றில் வைத்து பூட்டி வைக்கப்படும். அது, சிறையின் துணை கண்காணிப்பாளரின் பொறுப்பில் அளிக்கப்படும்.


சிறையின் கண்காணிப்பாளர், துணை கண்காணிப்பாளர், மருத்துவ அதிகாரி, சிறையின் மருத்துவர் ஆகியோர் தண்டனை நிறைவேற்றப்படும் வரை இருக்க வேண்டும். மாவட்ட மாஜிஸ்ட்ரேட் அல்லது துணை மாஜிஸ்ட்ரேட் தண்டனை நிறைவேற்றுவதற்கு முன்பு, கையெழுத்திட வேண்டும். தண்டனை பெறும் கைதி விரும்பினால், அவரின் மத நம்பிக்கைக்கு ஏற்ப மத குரு ஒருவர், பாதுகாப்பு மற்றும் சிறை விதிமுறைகள் ஆகியவற்றை மீறாமல் அனுமதிக்கப்படுவார். அரசு சிறப்பு ஆணை பெற்ற ஆய்வாளர்கள், மனநல நிபுணர்கள் ஆகியோருக்கு சிறப்பு அனுமதி உண்டு.


திகார் சிறை
ஆயுதம் தாங்கிய சிறைக் காவலர்கள் பாதுகாப்பில் ஈடுபடலாம். தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்டு, கைதியின் உடல் சிறை வளாகத்தை விட்டு வெளியேற்றப்படும் வரை, எந்தச் சிறையும் திறக்கப்படாது. கைதிகள், தங்கள் சிறையிலேயே இருக்க வேண்டும் என்று விதிமுறைகள் கூறுகின்றன.
தூக்குத் தண்டனை எப்படி நிறைவேற்றப்படும்?
தண்டனை நிறைவேற்றப்படுவதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன்பு சிறைக் கண்காணிப்பாளர், துணை கண்காணிப்பாளர், மாவட்ட மேஜிஸ்திரேட், மருத்துவ அதிகாரி ஆகியோர் கைதியின் சிறைக்குச் சென்று அவரை சந்திப்பார்கள். கைதியின் கையெழுத்து தேவைப்படும் ஆவணங்கள், அவரது உயில், முதலானவை சிறைக் கண்காணிப்பாளர், மாவட்ட மேஜிஸ்திரேட் ஆகியோரின் பார்வையில் கைதியால் கையெழுத்திடப்படும்.
அதன்பிறகு, சிறைக் கண்காணிப்பாளர், மாவட்ட மேஜிஸ்திரேட், மருத்துவ அதிகாரி ஆகியோர் தூக்குமேடைக்குச் சென்றுவிடுவர். கைதியுடன் துணை கண்காணிப்பாளர் இருக்கலாம். தூக்குமேடை தயார்செய்யப்பட்டதும், துணை கண்காணிப்பாளர் காவலர்களுடன், கைதியின் கையைப் பின்னால் கட்டி அழைத்து வருவார்கள். முன்னால் இரு காவலர்கள், பின்னால் இரு காவலர்கள், ஒவ்வொரு கையையும் பிடித்துக்கொள்ள, இரு காவலர்கள் என மொத்தம் 6 காவலர்கள் கைதியைத் தூக்குமேடைக்கு அழைத்து வருவார்கள்.
சிறைக் கண்காணிப்பாளர், மாவட்ட மேஜிஸ்திரேட்டிடம் கைதியை நேரில் அடையாளம் கண்டதாகவும், கைதிக்குப் புரியும் மொழியில் அவருடைய தண்டனை வாரண்ட் படித்துக் காட்டப்பட்டதாகவும் கைதி முன்னிலையில் உறுதியளிப்பார். பருத்தியால் செய்யப்பட்ட முகமூடியால் கைதியின் முகம் மூடப்படும். தூக்கு மேடையைப் பார்வையிடுவதற்கு, கைதிக்கு அனுமதியில்லை. தூக்கு மேடையில் ஏற்றப்பட்டு, கைதியின் கழுத்தில் சுருக்கு மாட்டப்படும் வரை, கைதியின் இரு கைகளையும் பிடித்தவாறு பாதுகாப்புக் காவலர்கள் இருக்க வேண்டும். சிறைக் கண்காணிப்பாளர் சிக்னல் தந்ததும், தண்டனையை நிறைவேற்றுபவர் லீவரைப் பிடித்து இழுக்க, தூக்கு மேடையில் தரைத்தளம் திறக்கும்.


தூக்கு மேடை
தண்டனை நிறைவேற்றப்பட்ட பிறகு, 30 நிமிடங்களுக்கு கைதியின் உடல் தூக்குக்கயிற்றில் தொங்கவிடப்படும். அதன்பிறகு, சிறை மருத்துவர் கைதி இறந்துவிட்டதை உறுதி செய்வார். தூக்குத் தண்டனையை நிறைவேற்றுபவருக்கு, டெல்லி மாநில அரசு ஒவ்வொரு கைதிக்கும் ஏற்ப தனித்தனியாக சம்பளம் வழங்கும்.


தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்டு இறந்த கைதியின் உடலை, அவரது மத நம்பிக்கைக்கு ஏற்ப இறுதிச் சடங்குகள் செய்து நல்லடக்கம் செய்யப்படும். கைதியின் உறவினர்கள் உடலை வாங்கும் பட்சத்தில், காவல்துறையின் பாதுகாப்போடு, கைதியின் இறப்பு, பொது நிகழ்வுகள் எதுவும் இல்லாமல், அஞ்சலி செலுத்துவதற்காக அளிக்கப்படும். சிறையிலிருந்து கைதியின் உடல் தகனம் செய்வதற்காக ஆம்புலன்ஸில் எடுத்துச் செல்லப்படும். அதற்கான வாடகையை சிறைக் கண்காணிப்பாளர் அளிக்க வேண்டும். தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்டது என்பதை வாரண்ட்டில் பூர்த்திசெய்து, காவல்துறை தலைமைக்கும் நீதிமன்றத்திற்கும் அனுப்ப வேண்டியது சிறைக் கண்காணிப்பாளரின் பொறுப்பு.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

திருவோணம் திருநாளில் பிள்ளையார்பட்டி ஆலயத்தில் கோலமிட்ட நகரத்தார் குலப் பெண்கள்

இராஜநாராயணபுரம் எனும் மருதங்குடி தற்காலம் பிள்ளையார்பட்டியாகும். இங்கு தேசி வினாயகர் எனும் ஸ்ரீ கற்பக விநாயகர் அருள் தரும் ஆலயம் முதல் நூற்றாண்டு காஞ்சிபுரம் முற்காலப் பல்லவ மன்னர்கள் அமைத்த குடவரைக் கோவில் பிற்காலப் பாண்டிய மனனர்களின் திருப்பணிக்குப் பின் நான்காம் திருப்பணி முதல் நகரத்தார் எனும் சோழநாட்டு மகுட வைசியர் பண்டிய நாட்டில் செட்டிலான செட்டியார் சமூகத்தில் உள்ள ஒரு பிரிவு நிர்வாகத்தில் உள்ள திருத்தலம் பிள்ளையாபடடி ஆகும் இங்கு வினாயகர் சதுர்த்திப் பெருவிழா செப்டம்பர் மாதத்தில்  ஐந்தாம் தேதியில் துவக்கம். ஆலயத்தில் ஸ்ரீ கற்பகவிநாயகர், ஸ்ரீ மருதீசர் உடனாகிய வாடாமலர் மங்கை, வழிபாடு இங்கு ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்திப் பெருவிழா 10 நாட்கள் வெகு விமர்சியாக நடைபெறும். இந்தாண்டு செப்டம்பர் மாதம் .14 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. இதன்படி ஸ்ரீ கற்பகவிநாயகர் கோயிலில் இந்தாண்டிற்கான விழா வரும் செப்டம்பர் மாதம் .5ஆம் தேதி சனிக்கிழமை காலையில் கொடியேற்றத்துடன் சதுர்த்திப் பெருவிழாவின் முதல் நாள் விழா துவங்குகிறது. அன்று இரவு தங்க மூஷிக வாகனத்தில் கற்பக விநாயகர் எ...

அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி நடத்திய சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினவிழா

1992-ஆம் ஆண்டு முதல்   ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 3 ஆம் தேதி ஐக்கிய நாடுகள் சபையால் அங்கீகரித்த சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் IDPD ஆகும், இது சமூகம் மற்றும் வளர்ச்சியின் அனைத்து நிலைகளிலும் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள், நல்வாழ்வு மற்றும் பங்கேற்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது. சமூகத்தில் மாற்றுத்திறனாளிகளின் பங்களிப்பை அங்கீகரித்தல். அவர்களின் உரிமைகளை வலியுறுத்துதல். அவர்களின் நல்வாழ்வு மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சியை ஊக்குவித்தல்.  இந்த நாளில் உலகெங்கிலும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள் மற்றும் உதவிகள் வழங்கும் விழாக்கள் நடத்தப்படுகின்றன. அதை இந்த ஆண்டு காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் சிறப்புக் கல்வி மற்றும் மறுவாழ்வு அறிவியல் துறை,  மற்றும்  டாக்டர் அழகப்பா கல்வி அறிவியல் நிறுவனம் ,  மற்றும் காரைக்குடி ஹெரிடேஜ் ரோட்டரி கிளப், மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான மல்டிமோடல் மெட்டீரியல் உற்பத்திக்கான மையம், மற்றும்  ஐடி மற்றும் ஆட்டிசத்திற்கான அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி சார்பில் இந்த ஆணடு விழா சர்வதேச மாற்று...