முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

திருவோணம் திருநாளில் பிள்ளையார்பட்டி ஆலயத்தில் கோலமிட்ட நகரத்தார் குலப் பெண்கள்

இராஜநாராயணபுரம் எனும் மருதங்குடி தற்காலம் பிள்ளையார்பட்டியாகும்.


இங்கு தேசி வினாயகர் எனும் ஸ்ரீ கற்பக விநாயகர் அருள் தரும் ஆலயம் முதல் நூற்றாண்டு காஞ்சிபுரம் முற்காலப் பல்லவ மன்னர்கள் அமைத்த குடவரைக் கோவில் பிற்காலப் பாண்டிய மனனர்களின் திருப்பணிக்குப் பின் நான்காம் திருப்பணி முதல் நகரத்தார் எனும் சோழநாட்டு மகுட வைசியர் பண்டிய நாட்டில் செட்டிலான செட்டியார் சமூகத்தில் உள்ள ஒரு பிரிவு நிர்வாகத்தில் உள்ள திருத்தலம் பிள்ளையாபடடி ஆகும் இங்கு வினாயகர் சதுர்த்திப் பெருவிழா செப்டம்பர் மாதத்தில்  ஐந்தாம் தேதியில் துவக்கம்.




ஆலயத்தில் ஸ்ரீ கற்பகவிநாயகர், ஸ்ரீ மருதீசர் உடனாகிய வாடாமலர் மங்கை, வழிபாடு இங்கு ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்திப் பெருவிழா 10 நாட்கள் வெகு விமர்சியாக நடைபெறும். இந்தாண்டு செப்டம்பர் மாதம் .14 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. இதன்படி ஸ்ரீ கற்பகவிநாயகர் கோயிலில் இந்தாண்டிற்கான விழா வரும் செப்டம்பர் மாதம் .5ஆம் தேதி சனிக்கிழமை காலையில் கொடியேற்றத்துடன் சதுர்த்திப் பெருவிழாவின் முதல் நாள் விழா துவங்குகிறது. அன்று இரவு தங்க மூஷிக வாகனத்தில் கற்பக விநாயகர் எழுந்தருளி திருவீதி உலா நடைபெறும். 2ஆம் நாள் முதல் 8ஆம் திருநாள் வரை தினந்தோறும் காலையில் சுவாமி வெள்ளி கேடகத்தில் எழுந்தருளி திருவீதி உலா வருவார். 2ஆம் திருநாளான செப்டம்பர் .6 ஆம் தேதியில் இரவு சிம்ம வாகனத்தில் சுவாமி எழுந்தருளி திருவீதி உலா நடைபெறும். 3 ஆம் திருநாளான செப்டம்பர் .7 ஆம் தேதியில் இரவு பூதகண வாகனத்தில் சுவாமி எழுந்தருளி திருவீதி உலா நடைபெறும்.


4ஆம் திருநாளான செப்டம்பர் .8ஆம் தேதியில் இரவு கமல (தாமரை) வாகனத்தில் சுவாமி எழுந்தருளி திருவீதி உலா நடைபெறும். 5 ஆம் திருநாளான செப்டம்பர் .9 ஆம் தேதியில் இரவு ரிஷப வாகனத்தில் சுவாமி எழுந்தருளி திருவீதி உலா நடைபெறும். 6ஆம் திருநாளான செப்டம்பர் .10 ஆம் தேதியில் மாலை 5.00 மணியளவில் கஜமுக சூரசம்காரம் நடைபெறும். 7ஆம் திருநாளான செப்டம்பர் .11 ஆம் தேதியில் இரவு மயில் வாகனத்தில் சுவாமி எழுந்தருளி திருவீதி உலா நடைபெறும். 8ஆம் திருநாளான செப்டம்பர் .12 ஆம் தேதியில் இரவு குதிரை வாகனத்தில் சுவாமி எழுந்தருளி திருவீதி உலா நடைபெறும். 9ஆம் திருநாளான செப்டம்பர் .13ஆம் தேதி தேரோட்டத்தை முன்னிட்டு காலையில் திருத்தேருக்கு கற்பக விநாயகர் சுவாமி எழுந்தருளல் நடைபெறும். அன்று மாலை 4.30 மணி முதல் இரவு 10.00 மணி வரை வருடம் ஒருமுறை மட்டும் நடைபெறும் சந்தனக்காப்பு சிறப்பு அலங்காரத்தில் மூலவர் விநாயகர் பக்தர்களுக¢கு தரிசனம் தருவார். பெண்கள் மட்டுமே வடம்பிடித்து தேர் உள்ளிட்ட தேர்கள் மாலையில் பக¢தர்கள் வடம் பிடிக்க தேரோட்டம் நடைபெறும். அன்று இரவு சுவாமி யானை வாகனத்தில் எழுந்தருளி திருவீதி உலா நடைபெறும். 10 ஆம் திருநாளான செப்டம்பர் .14ஆம் தேதி திங்கட்கிழமை காலையில்  கோயில் குளத்தில் விநாயகர் சதுர்த்தி விழா தீர்த்தவாரி உற்சவம் நடைபெறும். மதியம் உச்சிக்கால பூஜையில் மூலவருக்கு ராட்ஷத கொழுக்கட்டை படைக்கப்பட்டு சிறப்பு தீபாரதனை நடைபெறும். அன்று இரவு பஞ்ச மூர்த்திகள் திருவீதி உலா நடைபெறும்.

விழாவிற்கான ஏற்பாடுகளை 16 குடும்பம் சார்ந்த ஆண்டுக்கு முறை மாறுதல் ஆகும் இரண்டு கோயில் பரம்பரை நிர்வாக அறங்காவலர்களான கோனாபட்டு அரு.ராமசாமி செட்டியார், அரிமளம் நா.கண்ணன் செட்டியார் ஆகியோர் செய்து வருகின்றனர் அதற்கு முன்னோட்டமாக நகரத்தார் மகளிர் அமைப்பு சார்ந்த நபர்கள் இணைத்து கோவிலில் கிழக்கு கோபுர வாசல் அருகில் .கலர் பெயிண்ட் மூலம் அழியாத கோலமிடுவது வெறும் அழகுக்காக மட்டுமல்லாமல், ஆன்மீகம், ஆரோக்கியம் மற்றும் அறிவியல் ரீதியாக பல நன்மைகளைக் கொண்டுள்ளது. அதன் முக்கிய நன்மைகள் இதோ அறிவியல் மற்றும் உடற்பயிற்சி: அதிகாலையில் குனிந்து, நிமிர்ந்து கோலமிடுவது சிறந்த யோகாசனம் போன்ற உடற்பயிற்சியாகும். புள்ளிகளை இணைத்து கோலம் போடும் போது கவனம் குவிந்து, மன அழுத்தம் குறைகிறது. சிக்கலான கோலங்கள் போடுவது மூளையின் செயல்பாட்டையும், நினைவாற்றலையும் தூண்டுகிறது. அதிகாலையில் குனிந்து கோலமிடும்போது வயிற்றுப் பகுதிகள் அழுத்தப்பட்டு செரிமானம் சீராகிறது. அரிசி மாவால் கோலமிடுவதால் எறும்பு, பறவைகள் போன்ற சிறு உயிரினங்களுக்கு உணவாகிறது. தூய்மையான, கோலமிட்ட இடங்களில் லட்சுமி தேவி வாசம் செய்வாள் என்பது நம்பிக்கை.கோவிலின் பிரகாரத்தில் போடப்படும் கோலங்கள் அங்குள்ள நேர்மறை அதிர்வுகளை  ஈர்க்கின்றன. வண்ணக் கோலங்கள் மற்றும் பச்சரிசி மாவு கோலங்கள் எதிர்மறை ஆற்றலை தடுத்து நிறுத்தும். விசேஷ நாட்களில் பச்சரிசி மாவை நனைத்து போடும் மாக்கோலம் கோவிலுக்கு மங்களகரமான தோற்றத்தைத் தரும். பண்டிகை காலங்களில் மலர்களால் இடப்படும் கோலங்கள் நறுமணத்தையும், அமைதியையும் தரும் பூக்கள் மூலம்.


பெயிண்ட் கோலம் மழையிலோ, பக்தர்கள் மிதிப்பதாலோ எளிதில் அழியாது.  தினமும் புதிதாகக் கோலம் போடும் வேலை மற்றும் நேரம் மிச்சமாகிறது. வண்ணமயமான பெயிண்ட்கள் பார்ப்பதற்கு பளிச்சென்று, அழகாகத் தோன்றும்   

 மீனாட்சி சுந்தரேஷ்வரர் கோலக் குழு எனும் நகரத்தார் பண்பாடு கலாச்சாரம் கலந்த இந்தக் குழு பத்தாண்டுகாலமாக செயல்படுகிறது 
அவர்களுடைய கோலக்குழுவின் குருவழி 80 வயதாகும் லீலா வெங்கடராமன்  இவர்கள் மதுரையில் பி டி. ஆர் பழனிவேல் தியாகராஜன் தாயாருடன் சோர்த்து 40 வருடங்களுக்கு மேல் மதுரை ஸ்ரீ மீனாட்சி அம்மன் கோயிலில் கோலமிட்டு வருகிறார்கள்.

இந்தக் கோலக் குழவின் தலைவியான மீனா சிதம்பரம் நகரத்தார் கோயில்களிலும் இப்பணியை செய்ய வேண்டும் என்ற நல்லெண்ணத்தில் 10 வருடங்களுக்கு மேலாக இத்திருபணியை செய்து வருகிறார். இவர்கள் இரணிக்கோயில் பிரிவைச் சார்ந்ததவர் புதுவயல் கைலாச விநாயகர் கோயிலிைல் தொடங்கி தொடர்ந்து மதுரை மீனாட்சி அம்மன் கோயில் உட்பட இன்று பிள்ளையார்பட்டி வரை இந்தத்தொண்டை மிக நேர்த்தியாக, முழு உபய தாரர் ஆக செய்யும் குடும்பம் பிறரிடம் எந்த ஒரு உதவியையும் எதிர் பார்க்காமல் 30 முதல் 50 நபர்கள் வரை வைத்து கோயில் முழுவதும் கோலம் போட்டு சிறப்பாக இத்திருப்பணியைத் தொடர்ந்து செய்து வருகிறார்கள்  என்ற தகவலை அதில் பங்கு பெற்ற காரைக்குடி மெ. சோலையாச்சி தெரிவிதார்கள்.   

இன்று ..மகர ராசியின் 10 டிகிரி முதல் 23 டிகிரி 20 நிமிடங்கள் வரை பரவி இருக்கும் நட்சத்திரம் திருவோணம் நாள் இன்று இறைவன் வாமனராக வந்த அவதார தினம் வேத வானவியலில் 22வது நட்சத்திரம் நவீன வானவியலில், திருவோணம் என்பது a Altair, B மற்றும் y Aquilae ஆகியவற்றைப் போல் உள்ளது.   மலையாளத்தில்  கொல்லவருஷம் சிங்கம் மாதம் , அத்தம் நட்சத்திரத்தில் துங்கி திருவோணம் நட்சத்திரம் வரை 10 நாட்கள் ஓணம் பண்டிகை கொண்டாடப்படுகிறது. கேரளாவின் முக்கிய அறுவடைத் திருவிழாவாகும் மகாபலி மன்னர் தன் மக்களைக் காண பூமிக்கு வரும் நாளாக நம்பப்படுகிறது. பூக்கோளம் அமைத்தல், ஓணம் சத்யா (100 வகையான உணவுகள் கொண்ட விருந்துணவு), புலிப்பளி மற்றும் வல்லம்கலி (படகுக் போட்டி) ஆகியவை இதன் முக்கிய அம்சங்களாகும். திருவோண நட்சத்திரம் மகாவிஷ்ணுவுக்கு உரிய நாளாகும். வாமனர் அவதரித்த நாளாகவும் இதைக் கருதுகின்றனர்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி நடத்திய சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினவிழா

1992-ஆம் ஆண்டு முதல்   ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 3 ஆம் தேதி ஐக்கிய நாடுகள் சபையால் அங்கீகரித்த சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் IDPD ஆகும், இது சமூகம் மற்றும் வளர்ச்சியின் அனைத்து நிலைகளிலும் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள், நல்வாழ்வு மற்றும் பங்கேற்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது. சமூகத்தில் மாற்றுத்திறனாளிகளின் பங்களிப்பை அங்கீகரித்தல். அவர்களின் உரிமைகளை வலியுறுத்துதல். அவர்களின் நல்வாழ்வு மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சியை ஊக்குவித்தல்.  இந்த நாளில் உலகெங்கிலும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள் மற்றும் உதவிகள் வழங்கும் விழாக்கள் நடத்தப்படுகின்றன. அதை இந்த ஆண்டு காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் சிறப்புக் கல்வி மற்றும் மறுவாழ்வு அறிவியல் துறை,  மற்றும்  டாக்டர் அழகப்பா கல்வி அறிவியல் நிறுவனம் ,  மற்றும் காரைக்குடி ஹெரிடேஜ் ரோட்டரி கிளப், மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான மல்டிமோடல் மெட்டீரியல் உற்பத்திக்கான மையம், மற்றும்  ஐடி மற்றும் ஆட்டிசத்திற்கான அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி சார்பில் இந்த ஆணடு விழா சர்வதேச மாற்று...

சோழப் பேரரசி வானதி எழுப்பிய மூவர் கோவில்

முதலாம் இராஜேந்திர சோழரின் தாய்  வானவன் மாதேவி எனும் அரசி வானதி, சோழர்களின் வரலாற்றில் பெரும் புகழ் மாமன்னர் அருள்மொழித் தேவன் எனும் இராஜராஜசோழச் சக்கரவர்த்தி மீது இணையில்லாத காதல் மங்கை கொடும்பாளூர் இளவரசி வானதியை "பொன்னியின் செல்வன்" கதை படித்த யாரும் மறக்க முடியாது. சோழர் கடற்படையின் பரப்பை இலங்கை வரை  சென்று வென்று வந்த வரலாற்று நிகழ்வுகளின் மூலம் குறுநில மன்னர்கள் அல்லது வேளிர்  துணை நின்றார்கள் அதில் ஈழத்துப் பட்டம்  வென்ற கொடும்பாளூர் வேளிர் மகளான வானதி இளம் வயதிலேயே தாய் தந்தையை இழந்தவர். கொடும்பாளூர் சிற்றரசன் அதாவது வேளிர் சோழ சாம்ராஜ்யத்தின் சேனாதிபதி யாகவும் இருந்த சிறிய தந்தை குறுநில மன்னர் பூதி விக்ரமகேசரியால் வளர்க்கப்பட்டவர் தான் வானவன் மாதேவி எனும் அரசி வானதி. கொடும்பாளூர் பிறந்து திருக்கோவிலூரை பின்னர் ஆண்ட மலையமானின் மகள்  “மேலும் வானவன்மாதேவி மன்னர் ராஜராஜ சோழர் மறைந்த உடன் பிரிவாற்றாமல் உடன்கட்டை ஏறி தன் உயிரை மாய்த்துக் கொண்டாள். இதை திருவாலங்காட்டுச் செப்பேடுகள் மூலம் அறியலாம் ஈழத்தில் நடைபெற்ற யுத்தத்திற்காக கொடும்பாளூர்  வேளிர் கடல...