முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தொடர்ச்சியாகப் பிடிபடும் தேர்வு மோசடிக்கும்பலின் முகமூடிகள்

           அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்திய குரூப்-4 தேர்வில் பெருமளவில் முறைகேடு நடந்தது தற்போது வெளிச்சத்துக்கு வந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பாக தேர்வாணைய செயலாளர் நந்தகுமார் தலைமையிலான குழுவினர் ராமநாதபுரம் வந்து விசாரித்ததில் மோசடி உறுதி செய்யப்பட்டு, அதன் அறிக்கை டி.ஜி.பி.யிடம் வழங் கப்பட்டது. பின்னர் இந்த விவகாரத்தை சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரித்து நேற்று முன்தினம் 3 பேரும்,  அதிரடியாக கைது செய்யப்பட்டனர். மேலும் சிலரை விசாரணைக்காக அழைத்து விசாரிக்க  ராமநாதபுரம், கீழக்கரை ஆகிய தேர்வு மையங்களில்தான் இந்த முறைகேடு நடந்திருப்பது தெரியவந்ததால், அதன் பெறுப்பாளர்களான 2 தாசில்தார்களிடம் சென்னையில் தீவிரமாக விசாரிக்க இந்த மோசடி பற்றி நீண்ட நாட்களுக்கு முன்னதாகவே திட்டமிட்டு அதற்கேற்ப செயல்பட்டு, கச்சிதமாக அரங்கேற்றி உள்ளதும் அம்பலமாகி உள்ளது.புரோக்கர்கள் மற்றும் ஒரு பிரபல பயிற்சி மையத்தின் ஆலோசனையின்படியே ராமநாதபுரம் மாவட்டத்தில் கீழக்கரை, ராமேஸ்வரம் மையங்களை மோசடிக்கு பயன்படுத்தியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதன்படி அவர்களை அணுகிய தேர்வர்களுக்கு ஆலோசனை அளித்து அந்த மையங்களை தேர்வு செய்ய வைத்துள்ளனர். இவர்களில் அந்த பயிற்சி மையத்தில் பயின்றவர்களா? என்று அதிகாரிகள் விசாரிக்கமேலும் பல விபரம்  இந்த மோசடிக்காக பணம் கொடுத்த தேர்வர்களுக்கு, அரசு வேலை உத்தரவாதம் அளித்தது அதன் அடிப்படையில் தகவல் கசியாமல் பார்த்துக்கொள்ளுமாறு உறுதிபடுத்தி, அதன்பின்னரே தேர்வு எழுத அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். அரசு வேலை உறுதி என்பதால் தேர்வர்களும் தகவல்களை வெளியாகாமல் பார்த்துக்கொண்டனர். இதுபோன்ற நபர்கள்தான் தற்போது குரூப்-4 தேர்வில் சர்ச்சைக்குரிய வெற்றியாளர்களாக வலம் வந்து வழக்கிலும் சிக்கி உள்ளனர். இந்த முறைகேடு அம்பலமாக தொடங்கியதும் புரோக்கர்களும், இதில் தொடர்புடைய அதிகாரிகளும் உஷாரானார்கள். பணம் கொடுத்து வெற்றி பெற்ற தேர்வர்களை அவசரமாக அழைத்து, யாராவது உங்களிடம் விசாரணைக்கு வந்தால், வெளி மாவட்டங்களை சேர்ந்த நீங்கள் ராமேஸ்வரம், கீழக்கரையை ஏன் தேர்வு செய்தீர்கள்? என்ற கேள்வியைத்தான் முதலில் எழுப்புவார்கள். அப்போது, ராமேசுவரத்தை காரணம் காட்டி திதி கொடுக்க வந்ததாக தேர்வர்களை ஒட்டுமொத்தமாக கூற வைத்துள்ளனர்.அதிகாரிகள் விசாரித்தபோது அனைவரும் திதி என்ற காரணத்தை ஒரு சேர தெரிவித்ததும் சிக்குவதற்கு ஒரு காரணமாகிவிட்டது. இதுதவிர பணம் கொடுத்து வெற்றி பெற்றவர்கள் என சந்தேகம் எழுந்த தேர்வர்களின் திறமையை பரிசோதிக்க நடந்த மறுதேர்வில், யாரும் சிறிதளவு கூட சரியான விடைகளை எழுதவில்லை என்றும் கூறப்படுகிறது.தேர்வு அறிவிப்புக்கு சில மாதங்களுக்கு முன்னதாகவே இந்த மோசடிக்காக அதிகாரிகள், பணியாளர்கள், புரோக்கர்கள் பணியாற்றி பெருந்தொகையை பேசி தேர்வர்களிடமும் முன்பணம் பெற்றுள்ளனர். இதற்காக அவர்கள் செல்போன், வாட்ஸ்அப் போன்ற தகவல் தொழில்நுட்பங்களை பயன்படுத்தாமல் மீண்டும் தொடர்பு கொள்ள முடியாதவாறு தரைவழி தொலைபேசி வழியாகவே அனைத்து ஆலோசனைகள், உத்தரவுகளை பிறப்பித்து வந்துள்ளதாக கூறப்படுகிறது. ஆதாரங்களுடன் சிக்கமாட்டோம் என்ற எண்ணத்தில் முன்ஏற்படாக இருந்து இவ்வாறு செயல்பட்டுள்ளனர்.தேர்வு முடிந்ததும் விடைத்தாள்கள் அனைத்தும் சென்ற விதம், வழித்தடம், நேர வித்தியாசம் போன்றவை குறித்து தேர்வாணைய அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணையில் ராமநாதபுரம் கருவூலத்தில் இருந்து வினாத்தாள் மற்றும் ஓ.எம்.ஆர். விடைத்தாள்கள் போலீஸ் பாதுகாப்புடன் சார்கருவூலம் கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து தேர்வு மையங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன. அதே போன்று தேர்வு முடிந்ததும் விடைத்தாள்கள் போலீஸ் பாதுகாப்புடன் சார்கருவூலத்திற்கு வந்து அங்கிருந்து ஒரே நேரத்தில் சென்னை நோக்கி சென்றுள்ளன இதற்காக 6 வேன்கள் ஒப்பந்தம் செய்யப்பட்டு அதில் விடைத்தாள்கள் பத்திரமாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. மோசடி வெளிச்சத்திற்கு வந்தபின்னர் நடந்த விசாரணையின்போது, இதுபற்றிய விவரங்களை வழித்தட சோதனை சாவடி, கண்காணிப்பு கேமரா காட்சிகளின் அடிப்படையில் விசாரித்தபோது 6 வேன்களில் ஒரு வேன் மட்டும் காலதாமதமாக சென்னைக்குச் சென்றதாக விசாரணை அதிகாரிகளுக்கு அதிர்ச்சி தகவல் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது. வழக்கமாக சென்றடையும் நேரத்தை விட அதிக தாமதமாக சென்ற அந்த ஒரு வேன் குறித்து அதிகாரிகளுக்கு பலத்த சந்தேகம் எழுந்தது. அந்த வேன் குறித்து விசாரித்தபோது அது கோவையை சேர்ந்த ஒரு நிறுவனத்திற்கு உரியது என தெரியவந்துள்ளது.இந்த வேன் ராமநாதபுரத்தில் இருந்து சரியாக சென்றுகொண்டிருந்த நிலையில் சென்னைக்கு முன்பாக ஒரு இடத்தில் திசைமாறி ஒதுக்குபுறமாக சென்றிருப்பதாக தெரியவந்துள்ளது. யாருடைய உத்தரவின் அடிப்படையில் இந்த வாகனம் திசைமாறி சென்றது என்று தகவல் தொழில்நுட்ப அடிப்படையில் அதிகாரிகள் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.இதன்மூலம் சிலர் குறித்த ரகசிய தகவல்கள் கிடைத்துள்ளதாகவும், அவர்களிடம் விரைவில் விசாரணை தொடங்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும், இந்த வாகனம்தான் மேற்கண்ட சர்ச்சைக்குரிய மையங்களின் விடைத்தாள்களை எடுத்து சென்றிருக்கலாம் என்று கருதப்படுகிறது.இதன்படி பார்த்தால் மேற்கண்ட தேர்வு மையங்களில் ஏற்கனவே திட்டமிட்டவாறு தேர்வர்கள் சிறிது நேரத்தில் அழியும் மையினால் கொண்ட மேஜிக் பேனாவால் விடைத்தாள்களில் தங்களுக்கு தெரிந்த விடைகளை குறித்து கொடுத்துள்ளனர். இந்த விடைத்தாள்களை ஏற்றிக்கொண்டு வந்த வேன் சென்னைக்கு முன்பாக நடுவழியில் ஒரு இடத்தில் நிறுத்தி, அங்கு வைத்து விடைத்தாள்களை திருத்தி மீண்டும் கட்டுகளுக்குள் வைத்து அனுப்பி இருக்கிறார்கள். சினிமா காட்சிகளையே மிஞ்சும் வகையில் செயல்படுத்தி கூட்டு முயற்சியுடன் இந்த பெரும் முறைகேட்டை செய்துள்ளனர். இதில் பயிற்சி மையத்தினர், புரோக்கர்கள், சில உயர் அதிகாரிகள், பணியாளர்கள் என பலரும் சம்பந்தப்பட்டிருக்கலாம் என தெரியவந்துள்ளதால் இந்த மோசடியில் மேலும் பலர் சிக்குவார்கள் என்று கூறப்படுகிறது.இந்த மோசடி புகாரில் சிக்கி உள்ள 2 தாசில்தார்கள் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா என்று ராமநாதபுரம் கலெக்டர் வீரராகவராவிடம் கேட்டபோது, “2 தாசில்தார்களையும் விசாரணைக்காக அழைத்து செல்வது குறித்து மாவட்ட நிர்வாகத்திடம் எந்த தகவலும் தெரிவிக்கவில்லை” என்று கூறினார்.தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., நடத்திய, 'குரூப் - 4' தேர்வில், மெகா மோசடி நடந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, தேர்வு எழுதிய, 99 பேர், தகுதி நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர். மேலும், சி.பி.சி.ஐ.டி., போலீசார் நடத்திய விசாரணையில், கீழக்கரை, ராமேஸ்வரம் தாசில்தார்கள் சிக்கியுள்ளதாக தெரிகிறது.தமிழக அரசு துறைகளில் காலியாக உள்ள, 9,398 பணியிடங்களை நிரப்ப நடந்த, குரூப் - 4 தேர்வில், பெரும் முறைகேடு நடந்ததாக புகார்கள் எழுந்தன. இது குறித்து, நம் நாளிதழ் உள்ளிட்ட பத்திரிகைகளில், செய்திகள் வெளியாகின. முறைகேடுஉடன், டி.என்.பி.எஸ்.சி., செயலர் நந்தகுமார் மற்றும் தேர்வு கட்டுப்பாடு அதிகாரி சுதன், டி.என்.பி.எஸ்.சி., தலைவர் அருள்மொழி ஆகியோர் தலைமையிலான குழு, நேரடி விசாரணை நடத்தியது. போலீஸ் அதிகாரிகள் முன்னிலையில், இந்த விசாரணை நடத்தப்பட்டது.தேர்ச்சி பட்டியலில் முதல், 100 இடங்களை பிடித்த தேர்வர்களுக்கு, 'சம்மன்' அனுப்பப்பட்டு, சென்னை அலுவலகத்தில் விசாரணை நடத்தப்பட்டது. அதில், முறைகேடு நடந்தது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, டி.என்.பி.எஸ்.சி., தரப்பில், போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகார், சி.பி.சி.ஐ.டி., போலீஸ் விசாரணைக்கு மாற்றப்பட்டது. அவர்களின் விசாரணையில், மெகா மோசடி நடந்தது உறுதியாகியுள்ளது. தேர்வு எழுதியோரில், 99 பேர், முறைகேட்டில் ஈடுபட்டதும் தெரிய வந்தது. அதன் அடிப்படையில், அவர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்; அரசு பணிக்கான தேர்வு எழுத, வாழ்நாள் தடையும் விதிக்கப்பட்டுள்ளது. முறைகேட்டில் ஈடுபட்ட, 99 பேரையும், அவர்களுக்கு உதவிய இடைத்தரகர்களையும், வருவாய் துறை மற்றும் அரசு துறைகளைச் சேர்ந்த ஊழியர்களையும் கைது செய்ய, சி.பி.சி.ஐ.டி., போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.டி.என்.பி.எஸ்.சி., செயலர் நந்தகுமார் வெளியிட்ட செய்திக்குறிப்பு:கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர் உள்ளிட்ட, 9,398 பணியிடங்களுக்கு, 2018 செப்., 1ல், குரூப் - 4 தேர்வு நடந்தது. தேர்வில், 16 லட்சத்து, 29 ஆயிரத்து, 865 பேர் பங்கேற்றனர். தேர்வு முடிவுகள், நவம்பர், 12ல் வெளியிடப்பட்டன. இதில், 24 ஆயிரத்து, 260 பேர், சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப் பட்டனர். இந்நிலையில், தேர்வில் முறைகேடு நடந்துள்ளதும், இடைத்தரகர்கள் தலையீடு இருந்ததும் தெரிய வந்தது.ஜன., 5ல், சமூக வலைதளங்களிலும், ஊடகங்களிலும், செய்திகள் வெளியாகின.  ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரம் மற்றும் கீழக்கரை மையங்களில் தேர்வு எழுதியவர்கள், குரூப் - 4 தேர்வு தேர்ச்சி பட்டியலில், முதல், 100 இடங்களை பிடித்தது தெரிய வந்தது.இதையடுத்து, டி.என்.பி.எஸ்.சி., நடத்திய துவக்க விசாரணையில், 99 தேர்வர்கள், இடைத்தரகர்களின் ஆலோசனையில், கீழக்கரை மற்றும் ராமேஸ்வரம் தேர்வு மையங்களை தேர்வு செய்ததாக தெரிவித்தனர். மேலும், சில மணி நேரங்களில் மறையக்கூடிய, சிறப்பு மையால் ஆன பேனாக்களை, தேர்வில் பயன்படுத்தியதாகவும், அந்த பேனாக்களை, இடைத்தரகர்களிடமிருந்து பெற்றதாகவும், அவர்கள் கூறினர். இதையடுத்து, தேர்வு பணியில் ஈடுபட்டிருந்த, அரசு ஊழியர்கள் சிலரின் துணையுடன், 52 தேர்வர்களின் விடைத்தாள்களில் சரியான விடைகள் எழுதப்பட்டன. இதன் காரணமாக, 39 பேர், தேர்ச்சி பட்டியலில், முதல், 100 இடங்களுக்குள் வந்துள்ளனர்.இத்தேர்வு குறித்து தேர்வாணையம் சார்பில், சம்பந்தப்பட்ட அனைத்து ஆவணங்களும் தீவிர ஆய்வு செய்யப்பட்டன. சம்பந்தப்பட்ட தேர்வுக்கூடங்கள் மற்றும் கருவூலங்களில், கள ஆய்வு செய்து, நேரடி விசாரணை நடத்தப்பட்டது.தேர்வு பணியில் ஈடுபட்டிருந்த, அரசு அலுவலர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட தேர்வர்களிடம், நேரடி விசாரணை செய்ததன் அடிப்படையில், இந்த முறைகேடுகள், ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை மற்றும் ராமேஸ்வரம் மையங்களில் நடந்தது, உறுதி செய்யப்பட்டுள்ளது.மேற்கூறிய மையங்களைத் தவிர, வேறு எந்த இடத்திலும் தவறு நடைபெறவில்லை என்றும் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில், தேர்வாணையம் கீழ்கண்ட முடிவுகளை எடுத்துள்ளது:முறைகேட்டில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும், சம்பந்தப்பட்ட, 99 பேரை தகுதி நீக்கம் செய்து, வாழ்நாள் முழுவதும் தேர்வு எழுத தடை விதிக்கப்பட்டுள்ளதுதர வரிசை பட்டியலில் வந்துள்ள, 39 தேர்வர்களுக்கு பதில், தகுதியான வேறு, 39 நபர்களை தேர்வு செய்து, சான்றிதழ் சரிபார்ப்புக்கு அனுமதிக்கப்பட்டுள்ளதுசம்பந்தப்பட்ட, 99 தேர்வர்கள் மற்றும் இடைத்தரகர்களாக செயல்பட்ட சந்தேகத்திற்குரிய நபர்கள் மீது, கிரிமினல் நடவடிக்கை மேற்கொள்ள, சி.பி.சி.ஐ.டி., போலீசில் புகார் அளிக்கப்பட்டு, முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது சான்றிதழ் சரிபார்த்தல் அடிப்படையில், தகுதியான தேர்வர்களுக்கு, உடனடியாக பணி வாய்ப்புக்கான கலந்தாய்வு நடத்தப்படும் இனிவரும் காலங்களில், எவ்விதமான தவறுகளும் நிகழாவண்ணம், தேர்வு நடைபெறும் முறையில், தகுந்த சீர்திருத்தங்கள் விரைந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன தேர்வாணையத்தின் ஒவ்வொரு நடவடிக்கையும், வெளிப்படையாக, ஒளிவு மறைவின்றி நடக்கிறது. எனவே, தேர்வர்கள், தேர்வாணையத்தின் மீது நம்பிக்கை வைத்து, நேர்மையான முறையில், தேர்வு எழுதுமாறு கேட்டு கொள்ளப்படுகின்றனர். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.அரசு பணிகளுக்கு ஆள் எடுக்கும், அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., தமிழக அரசு பணியாளர் நிர்வாகம் மற்றும் சீர்திருத்த துறையின் கீழ் இயங்குகிறது. தேர்வாணையத்துக்கு தலைவர் மற்றும் உறுப்பினர்கள் அடங்கிய குழு செயல்படுகிறது. ஆனால், தேர்வாணைய உறுப்பினர்கள் பணியிடம், ஆண்டுக்கணக்கில் காலியாக உள்ளது. இந்நிலையில், அரசு துறை ஊழியர்கள் மற்றும் தேர்வாணையத்தில் பணியாற்றும், சில கறுப்பு ஆடுகள் உதவியுடன் முறைகேடு நடந்துள்ளதாக, டி.என்.பி.எஸ்.சி., வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.இது குறித்து, பணியாளர் நிர்வாகம் மற்றும் சீர்திருத்த துறை அமைச்சர் ஜெயகுமார் தலைமையில், செயலர் ஸ்வர்ணா மற்றும் பணியாளர் நிர்வாக துறை அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டுள்ளது. முறைகேடுகள் குறித்து, விரைவில், அரசு தரப்பில் அறிக்கை வெளியாகும் என தெரிகிறது. அதில், சம்பந்தப்பட்ட அரசு ஊழியர்களை கைது செய்யவும், அவர்களை பணியில் இருந்து, 'டிஸ்மிஸ்' செய்யவும் உத்தரவிடப்படலாம்.தாசில்தார்கள் உள்ளிட்ட 12 பேரிடம் கிடுக்கிப்பிடி! டி.என்.பி.எஸ்.சி., குரூப் -- 4 தேர்வு முறைகேடு தொடர்பாக, இரண்டு தாசில்தார்கள் உட்பட, இடைத்தரகர்கள், 12 பேரிடம், சி.பி.சி.ஐ.டி., போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தி வருகின்றனர். குரூப் - 4 தேர்வு முறைகேடு தொடர்பாக, சி.பி.சி.ஐ.டி., போலீசார், மூன்று தனிப்படைகள் அமைத்து, விசாரித்து வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில், ராமேஸ்வரம் மற்றும் கீழக்கரை தேர்வு மையத்தில், முறைகேடு நடந்திருப்பது தெரிய வந்துள்ளது. இதையடுத்து, இந்த தேர்வு மையங்களின் முதன்மை அதிகாரிகளாக பணியாற்றிய, ராமேஸ்வரம் தாசில்தார் பார்த்தசாரதி மற்றும் கீழக்கரை தாசில்தார் வீரராஜ் ஆகியோரை பிடித்து விசாரித்தனர். அப்போது, இவர்கள் தலைமையில் செயல்பட்ட இடைத்தரகர்கள் பற்றிய முழு விபரங்களையும், டி.என்.பி.எஸ்.சி., அதிகாரிகள், நேற்று சி.பி.சி.ஐ.டி., போலீசாரிடம் ஒப்படைத்தனர்.இவர்களுக்கு, ஓய்வுபெற்ற ஐ.பி.எஸ்., அதிகாரி ஒருவரின், கார் ஓட்டுனர், அரசு ஒப்பந்ததாரர், வினா - விடைத்தாள்கள் அச்சடித்தோர், டி.என்.பி.எஸ்.சி., ஊழியர்கள் உள்ளிட்டோர் உடந்தையாக இருந்துள்ளனர்.இவர்கள் மீது, கூட்டு சதி, மோசடி, போலி ஆவணங்கள் தயாரிப்பு, அரசு ஆவணங்களை போலியாக தயாரித்தல், அரசு நிறுவனத்திற்கு களங்கம் ஏற்படுத்துதல், உண்மையான ஆவணம் போல பிறரை நம்பவித்தல் உள்ளிட்ட, 14 சட்டப் பிரிவுகளின் கீழ், வழக்குப் பதிவு செய்துள்ளனர்.இக்குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால், ஏழாண்டு சிறையும், அபராதமும் கிடைக்கும்.மேலும், இவர்களில், பார்த்தசாரதி, வீரராஜ் மற்றும் அரசு ஒப்பந்ததாரர் உட்பட, 12 பேரிடம், நேற்று சென்னை, எழும்பூரில் உள்ள, சி.பி.சி.ஐ.டி., அலுவலகத்தில், டி.ஜி.பி., ஜாபர் சேட் மற்றும் ஐ.ஜி., சங்கர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள், பல மணி நேரம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். இந்த மோசடி தொடர்பாக, பள்ளிக் கல்வித்துறை அலுவலக உதவியாளர் ரமேஷ், 39, எரிசக்தி துறை உதவியாளர் திருக்குமரன், 35, மற்றும் தேர்வு எழுதிய நிதிஷ்குமார், 21, ஆகியோர் கைது செய்யப்பட்டு உள்ளனர். பெருமளவில் முறைகேடு நடந்தது தற்போது வெளிச்சத்துக்கு வந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பாக தேர்வாணைய செயலாளர் நந்தகுமார் தலைமையிலான குழுவினர் ராமநாதபுரம் வந்து விசாரித்ததில் மோசடி உறுதி செய்யப்பட்டு, அதன் அறிக்கை டி.ஜி.பி.யிடம் வழங் கப்பட்டது. பின்னர் இந்த விவகாரத்தை சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரித்து நேற்று முன்தினம் 3 பேரும், நேற்று ஒருவரும் அதிரடியாக கைது செய்யப்பட்டனர். மேலும் சிலரை விசாரணைக்காக அழைத்து சென்றுள்ளனர்.இதுதவிர ராமநாதபுரம், கீழக்கரை ஆகிய தேர்வு மையங்களில்தான் இந்த முறைகேடு நடந்திருப்பது தெரியவந்ததால், அதன் பெறுப்பாளர்களான 2 தாசில்தார்களிடம் சென்னையில் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இந்த மோசடி பற்றி நீண்ட நாட்களுக்கு முன்னதாகவே திட்டமிட்டு அதற்கேற்ப செயல்பட்டு, கச்சிதமாக அரங்கேற்றி உள்ளதும் அம்பலமாகி உள்ளது.புரோக்கர்கள் மற்றும் ஒரு பிரபல பயிற்சி மையத்தின் ஆலோசனையின்படியே ராமநாதபுரம் மாவட்டத்தில் கீழக்கரை, ராமேசுவரம் மையங்களை மோசடிக்கு பயன்படுத்தியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதன்படி அவர்களை அணுகிய தேர்வர்களுக்கு ஆலோசனை அளித்து அந்த மையங்களை தேர்வு செய்ய வைத்துள்ளனர். இவர்களில் அந்த பயிற்சி மையத்தில் பயின்றவர்களா? என்று அதிகாரிகள் விசாரணை நடத்த உள்ளதாக கூறப்படுகிறது. தேர்வர்களும் இந்த முறைகேடு அம்பலமாக தொடங்கியதும் புரோக்கர்களும், இதில் தொடர்புடைய அதிகாரிகளும் உஷாரானார்கள். பணம் கொடுத்து வெற்றி பெற்ற தேர்வர்களை அவசரமாக அழைத்து,தேர்வு அறிவிப்புக்கு சில மாதங்களுக்கு முன்னதாகவே இந்த மோசடிக்காக அதிகாரிகள், பணியாளர்கள், புரோக்கர்கள் பணியாற்றி பெருந்தொகையை பேசி தேர்வர்களிடம் முன்பணமும் பெற்றுள்ளனர். இதற்காக அவர்கள் செல்போன், வாட்ஸ்அப் போன்ற தகவல் தொழில்நுட்பங்களை பயன்படுத்தாமல் மீண்டும் தொடர்பு கொள்ள முடியாதவாறு தரைவழி தொலைபேசி வழியாகவே அனைத்து ஆலோசனைகள், உத்தரவுகளை பிறப்பித்து வந்துள்ளதாக கூறப்படுகிறது. ஆதாரங்களுடன் சிக்கமாட்டோம் என்ற எண்ணத்தில் முன்ஏற்படாக இருந்து இவ்வாறு செயல்பட்டுள்ளனர். தாமதமாக சென்ற வேன்தேர்வு முடிந்ததும் விடைத்தாள்கள் அனைத்தும் சென்ற விதம், வழித்தடம், நேர வித்தியாசம் போன்றவை குறித்து தேர்வாணைய அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணையில்தேர்வு முடிந்ததும் விடைத்தாள்கள் போலீஸ் பாதுகாப்புடன் சார்கருவூலத்திற்கு வந்து அங்கிருந்து ஒரே நேரத்தில் சென்னை நோக்கி சென்றுள்ளன இதற்காக 6 வேன்கள் ஒப்பந்தம் செய்யப்பட்டு அதில் விடைத்தாள்கள் பத்திரமாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. மோசடி வெளிச்சத்திற்கு வந்தபின்னர் நடந்த விசாரணையின்போது, இதுபற்றிய விவரங்களை வழித்தட சோதனை சாவடி, கண்காணிப்பு கேமரா காட்சிகளின் அடிப்படையில் விசாரித்தபோது 6 வேன்களில் ஒரு வேன் மட்டும் காலதாமதமாக சென்னைக்கு சென்றதாக விசாரணை அதிகாரிகளுக்கு அதிர்ச்சி தகவல் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது. வழக்கமாக சென்றடையும் நேரத்தை விட அதிக தாமதமாக சென்ற அந்த ஒரு வேன் குறித்து அதிகாரிகளுக்கு பலத்த சந்தேகம் எழுந்தது. அந்த வேன் குறித்து விசாரித்தபோது அது கோவையை சேர்ந்த ஒரு நிறுவனத்திற்கு உரியது என தெரியவந்துள்ளது. இந்த வேன் ராமநாதபுரத்தில் இருந்து சரியாக சென்றுகொண்டிருந்த நிலையில் சென்னைக்கு முன்பாக ஒரு இடத்தில் திசைமாறி ஒதுக்குபுறமாக சென்றிருப்பதாக தெரியவந்துள்ளது. யாருடைய உத்தரவின் அடிப்படையில் இந்த வாகனம் திசைமாறி சென்றது என்று தகவல் தொழில்நுட்ப அடிப்படையில் அதிகாரிகள் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.இதன்மூலம் சிலர் குறித்த ரகசிய தகவல்கள் கிடைத்துள்ளதாகவும், அவர்களிடம் விரைவில் விசாரணை தொடங்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும், இந்த வாகனம்தான் மேற்கண்ட சர்ச்சைக்குரிய மையங்களின் விடைத்தாள்களை எடுத்து சென்றிருக்கலாம் என்று கருதப்படுகிறது இதன்படி பார்த்தால் மேற்கண்ட தேர்வு மையங்களில் ஏற்கனவே திட்டமிட்டவாறு தேர்வர்கள் சிறிது நேரத்தில் அழியும் மையினால் கொண்ட மேஜிக்  பேனாவால் விடைத்தாள்களில் தங்களுக்கு தெரிந்த விடைகளை குறித்து கொடுத்துள்ளனர். இந்த விடைத்தாள்களை ஏற்றிக்கொண்டு வந்த வேன் சென்னைக்கு முன்பாக நடுவழியில் ஒரு இடத்தில் நிறுத்தி, அங்கு வைத்து விடைத்தாள்களை திருத்தி மீண்டும் கட்டுகளுக்குள் வைத்து அனுப்பி இருக்கிறார்கள். சினிமா காட்சிகளையே மிஞ்சும் வகையில் செயல்படுத்தி கூட்டு முயற்சியுடன் இந்த பெரும் முறைகேட்டை செய்துள்ளனர். இதில் பயிற்சி மையத்தினர், புரோக்கர்கள், சில உயர் அதிகாரிகள், பணியாளர்கள் என பலரும் சம்பந்தப்பட்டிருக்கலாம் என தெரியவந்துள்ளதால் இந்த மோசடியில் மேலும் பலர் சிக்குவார்கள் என்று கூறப்படுகிறது. இந்த மோசடி புகாரில் சிக்கி உள்ள 2 தாசில்தார்கள் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா என்று ராமநாதபுரம் கலெக்டர் வீரராகவராவிடம் கேட்டபோது, “2 தாசில்தார்களையும் விசாரணைக்காக அழைத்து செல்வது குறித்து மாவட்ட நிர்வாகத்திடம் எந்த தகவலும் தெரிவிக்கவில்லை” என்று கூறினார்.தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., நடத்திய, 'குரூப் - 4' தேர்வில், மெகா மோசடி நடந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, தேர்வு எழுதிய, 99 பேர், தகுதி நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர். மேலும், சி.பி.சி.ஐ.டி., போலீசார் நடத்திய விசாரணையில், கீழக்கரை, ராமேஸ்வரம் தாசில்தார்கள் சிக்கியுள்ளதாக தெரிகிறது.தமிழக அரசு துறைகளில் காலியாக உள்ள, 9,398 பணியிடங்களை நிரப்ப நடந்த, குரூப் - 4 தேர்வில், பெரும் முறைகேடு நடந்ததாக புகார்கள் எழுந்தன. இது குறித்து, நம் நாளிதழ் உள்ளிட்ட பத்திரிகைகளில், செய்திகள் வெளியாகின. முறைகேடு உடன், டி.என்.பி.எஸ்.சி., செயலர் நந்தகுமார் மற்றும் தேர்வு கட்டுப்பாடு அதிகாரி சுதன், டி.என்.பி.எஸ்.சி., தலைவர் அருள்மொழி ஆகியோர் தலைமையிலான குழு, நேரடி விசாரணை நடத்தியது. போலீஸ் அதிகாரிகள் முன்னிலையில், இந்த விசாரணை நடத்தப்பட்டது.தேர்ச்சி பட்டியலில் முதல், 100 இடங்களை பிடித்த தேர்வர்களுக்கு, 'சம்மன்' அனுப்பப்பட்டு, சென்னை அலுவலகத்தில் விசாரணை நடத்தப்பட்டது. அதில், முறைகேடு நடந்தது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, டி.என்.பி.எஸ்.சி., தரப்பில், போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகார், சி.பி.சி.ஐ.டி., போலீஸ் விசாரணைக்கு மாற்றப்பட்டது. அவர்களின் விசாரணையில், மெகா மோசடி நடந்தது உறுதியாகியுள்ளது. தேர்வு எழுதியோரில், 99 பேர், முறைகேட்டில் ஈடுபட்டதும் தெரிய வந்தது. அதன் அடிப்படையில், அவர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்; அரசு பணிக்கான தேர்வு எழுத, வாழ்நாள் தடையும் விதிக்கப்பட்டுள்ளது. முறைகேட்டில் ஈடுபட்ட, 99 பேரையும், அவர்களுக்கு உதவிய இடைத்தரகர்களையும், வருவாய் துறை மற்றும் அரசு துறைகளைச் சேர்ந்த ஊழியர்களையும் கைது செய்ய, சி.பி.சி.ஐ.டி., போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.இடைத்தரகர் ஆதிக்கம் டி.என்.பி.எஸ்.சி., செயலர் நந்தகுமார் வெளியிட்ட செய்திக்குறிப்பு:கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர் உள்ளிட்ட, 9,398 பணியிடங்களுக்கு, 2018 செப்., 1ல், குரூப் - 4 தேர்வு நடந்தது. தேர்வில், 16 லட்சத்து, 29 ஆயிரத்து, 865 பேர் பங்கேற்றனர். தேர்வு முடிவுகள், நவம்பர், 12ல் வெளியிடப்பட்டன. இதில், 24 ஆயிரத்து, 260 பேர், சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப் பட்டனர். இந்நிலையில், தேர்வில் முறைகேடு நடந்துள்ளதும், இடைத்தரகர்கள் தலையீடு இருந்ததும் தெரிய வந்தது.ஜன., 5ல், சமூக வலைதளங்களிலும், ஊடகங்களிலும், செய்திகள் வெளியாகின. ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரம் மற்றும் கீழக்கரை மையங்களில் தேர்வு எழுதியவர்கள், குரூப் - 4 தேர்வு தேர்ச்சி பட்டியலில், முதல், 100 இடங்களை பிடித்தது தெரிய வந்தது. சிறப்பு மைஇதையடுத்து, டி.என்.பி.எஸ்.சி., நடத்திய துவக்க விசாரணையில், 99 தேர்வர்கள், இடைத்தரகர்களின் ஆலோசனையில், கீழக்கரை மற்றும் ராமேஸ்வரம் தேர்வு மையங்களை தேர்வு செய்ததாக தெரிவித்தனர். மேலும், சில மணி நேரங்களில் மறையக்கூடிய, சிறப்பு மையால் ஆன பேனாக்களை, தேர்வில் பயன்படுத்தியதாகவும், அந்த பேனாக்களை, இடைத்தரகர்களிடமிருந்து பெற்றதாகவும், அவர்கள் கூறினர். இதையடுத்து, தேர்வு பணியில் ஈடுபட்டிருந்தசம்பந்தப்பட்ட தேர்வுக்கூடங்கள் மற்றும் கருவூலங்களில், கள ஆய்வு செய்து, நேரடி விசாரணை நடத்தப்பட்டது.தேர்வு பணியில் ஈடுபட்டிருந்த, அரசு அலுவலர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட தேர்வர்களிடம், நேரடி விசாரணை செய்ததன் அடிப்படையில், இந்த முறைகேடுகள், ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை மற்றும் ராமேஸ்வரம் மையங்களில் நடந்தது, உறுதி செய்யப்பட்டுள்ளது. 99 பேருக்கு வாழ்நாள் தடை மேற்கூறிய மையங்களைத் தவிர, வேறு எந்த இடத்திலும் தவறு நடைபெறவில்லை என்றும் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில், தேர்வாணையம் கீழ்கண்ட முடிவுகளை எடுத்துள்ளது: முறைகேட்டில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும், சம்பந்தப்பட்ட, 99 பேரை தகுதி நீக்கம் செய்து, வாழ்நாள் முழுவதும் தேர்வு எழுத தடை விதிக்கப்பட்டுள்ளது தர வரிசை பட்டியலில் வந்துள்ள, 39 தேர்வர்களுக்கு பதில், தகுதியான வேறு, 39 நபர்களை தேர்வு செய்து, சான்றிதழ் சரிபார்ப்புக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது சம்பந்தப்பட்ட, 99 தேர்வர்கள் மற்றும் இடைத்தரகர்களாக செயல்பட்ட சந்தேகத்திற்குரிய நபர்கள் மீது, கிரிமினல் நடவடிக்கை மேற்கொள்ள, சி.பி.சி.ஐ.டி., போலீசில் புகார் அளிக்கப்பட்டு, முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது சான்றிதழ் சரிபார்த்தல் அடிப்படையில், தகுதியான தேர்வர்களுக்கு, உடனடியாக பணி வாய்ப்புக்கான கலந்தாய்வு நடத்தப்படும்   இனிவரும் காலங்களில், எவ்விதமான தவறுகளும் நிகழாவண்ணம், தேர்வு நடைபெறும் முறையில், தகுந்த சீர்திருத்தங்கள் விரைந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன தேர்வாணையத்தின் ஒவ்வொரு நடவடிக்கையும், வெளிப்படையாக, ஒளிவு மறைவின்றி நடக்கிறது. எனவே, தேர்வர்கள், தேர்வாணையத்தின் மீது நம்பிக்கை வைத்து, நேர்மையான முறையில், தேர்வு எழுதுமாறு கேட்டு கொள்ளப்படுகின்றனர். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது. அரசு பணிகளுக்கு ஆள் எடுக்கும், அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., தமிழக அரசு பணியாளர் நிர்வாகம் மற்றும் சீர்திருத்த துறையின் கீழ் இயங்குகிறது. தேர்வாணையத்துக்கு தலைவர் மற்றும் உறுப்பினர்கள் அடங்கிய குழு செயல்படுகிறது. ஆனால், தேர்வாணைய உறுப்பினர்கள் பணியிடம், ஆண்டுக்கணக்கில் காலியாக உள்ளது.  குரூப் - 4 தேர்வு முறைகேடு தொடர்பாக, சி.பி.சி.ஐ.டி., போலீசார், மூன்று தனிப்படைகள் அமைத்து, விசாரித்து வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில், ராமேஸ்வரம் மற்றும் கீழக்கரை தேர்வு மையத்தில், முறைகேடு நடந்திருப்பது தெரிய வந்துள்ளது. இதையடுத்து, இந்த தேர்வு மையங்களின் முதன்மை அதிகாரிகளாக பணியாற்றிய, ராமேஸ்வரம் தாசில்தார் பார்த்தசாரதி மற்றும் கீழக்கரை தாசில்தார் வீரராஜ் ஆகியோரை பிடித்து விசாரித்தனர். அப்போது, இவர்கள் தலைமையில் செயல்பட்ட இடைத்தரகர்கள் பற்றிய முழு விபரங்களையும், டி.என்.பி.எஸ்.சி., அதிகாரிகள், நேற்று சி.பி.சி.ஐ.டி., போலீசாரிடம் ஒப்படைத்தனர். இவர்களுக்கு, ஓய்வுபெற்ற ஐ.பி.எஸ்., அதிகாரி ஒருவரின், கார் ஓட்டுனர், அரசு ஒப்பந்ததாரர், வினா - விடைத்தாள்கள் அச்சடித்தோர், டி.என்.பி.எஸ்.சி., ஊழியர்கள் உள்ளிட்டோர் உடந்தையாக இருந்துள்ளனர்.இவர்கள் மீது, கூட்டு சதி, மோசடி, போலி ஆவணங்கள் தயாரிப்பு, அரசு ஆவணங்களை போலியாக தயாரித்தல், அரசு நிறுவனத்திற்கு களங்கம் ஏற்படுத்துதல், உண்மையான ஆவணம் போல பிறரை நம்பவித்தல் உள்ளிட்ட, 14 சட்டப் பிரிவுகளின் கீழ், வழக்குப் பதிவு செய்துள்ளனர். இக்குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால், ஏழாண்டு சிறையும், அபராதமும் கிடைக்கும்.மேலும், இவர்களில், பார்த்தசாரதி, வீரராஜ் மற்றும் அரசு ஒப்பந்ததாரர் உட்பட, 12 பேரிடம், நேற்று சென்னை, எழும்பூரில் உள்ள, சி.பி.சி.ஐ.டி., அலுவலகத்தில், டி.ஜி.பி., ஜாபர் சேட் மற்றும் ஐ.ஜி., சங்கர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள், பல மணி நேரம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். இந்த மோசடி தொடர்பாக, பள்ளிக் கல்வித்துறை அலுவலக உதவியாளர் ரமேஷ், 39, எரிசக்தி துறை உதவியாளர் திருக்குமரன், 35, மற்றும் தேர்வு எழுதிய நிதிஷ்குமார், 21, ஆகியோர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

முருகப்பெருமான் அன்னையிடம் ஞானவேல் பெற்ற தினமே தைப்பூசம் ..அதில் பாலபிஷேகம் சிறப்பு

  தைப்பூசமும், பாலபிஷேகமும். (இந்து அல்லாதவர்கள் உட்பட நம்மில் பலர் அறிய)     தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம்.  ஆண்டுதோறும்  பஞ்சாங்கப்படி பத்தாம்மாதம்.  பூசநட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகப்பெருமானுக்கு எடுக்கப்படும் விழா. நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரம்.விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. தைப்பூசத் திருவிழாவில் முருகன் தேரில் பவனி வரும் காட்சி பழனியிலும், வடலூரிலும்,  இலங்கையிலும், மலேசியாவிலும் தைப்பூசம் சிறப்பு  மலேசியா பத்து மலை முருகன் கோவில் உலகத் தமிழர்களிடையே புகழ் பெற்ற ஆலயமாகும். இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிக முக்கியமானதாகும். பத்து மலை கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ள மலைக்கோவில் சுண்ணாம்புப் பாறைகளாலான மலை . வரிசையாக அமைந்த பத்து குகை  கோவில்களை இங்கு காணலாம். மலையை ஒட்டி சுங்கபத்து ஆறு ஓடுகிறது. பத்து கோவில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்த