முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஆந்திர சட்டக்கல்லூரி முறைகேடுகள்

 


         போலி வக்கீல்கள் பட்டியல் ரெடி: 
தாமாக முன்வந்து சான்றிதழை ஒப்படைத்தால் தப்பித்தீர்கள்: 
இல்லையேல் கைது , பார்கவுன்சில் எச்சரிக்கை
ஆந்திராவில் வக்கீல் பட்டத்தை பணம் கொடுத்து பெற்றவர்கள் குறித்த புகாரில் ஆந்திர சட்டக்கல்லூரி முதல்வர் கைது செய்யப்பட்டார், போலி வக்கீல்கள் சான்றிதழை சரண்டர் செய்தால் கைது நடவடிக்கையிலிருந்து தப்பலாம் மீறினால் கடும் நடவடிக்கை என பார்கவுன்சில் எச்சரித்துள்ளது.
கல்லூரிக்குச் செல்லாமலேயே வக்கீல் பட்டம் பெறவும், ரெகுலராக கல்லூரிக்கு வந்ததாக போலி சான்றிதழ் வழங்கி பல போலி வக்கீல்களை உருவாக்கிய ஆந்திரா கல்லூரி முதல்வரை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். போலி வக்கீல்களை இனங்காணும் வேலையும் தொடங்கப்பட்டுள்ளது.
இதையடுத்து இன்று செய்தியாளர்களைச் சந்தித்த தமிழ்நாடு புதுச்சேரி பார்கவுன்சில் தலைவர் அமல்ராஜ் கூறியதாவது:
“சென்னை வில்லிவாக்கம் ராஜாஜி நகர் வேகவதி தெருவை சேர்ந்த விபின்(59). தென்னக இரயில்வே துறையில் கார்டாக வேலை பார்த்து வந்தார். 
பணியிலிருக்கும் போதே துறையின் அனுமதியின்றி ஆந்திர மாநிலம் கடப்பாவில் உள்ள சட்ட கல்லூரியில் கடந்த 2015 முதல் 2018 வரை மூன்று ஆண்டு எல்.எல்.பி சட்டப்படிப்பு படித்ததாக பார் கவுன்சிலில் பதிவு செய்ய முயற்சித்தார். 
சட்டக்கல்லூரி தேர்வு எழுதுவதற்கு குறைந்த பட்சம் 70 சதவிகித வருகைப் பதிவேடு கட்டாயம் இருக்க வேண்டும். 
விபின், இரயில்வே துறையில் பணியிலிருந்த காரணத்தினால் கல்லூரிக்கு செல்லாமலே, சென்றதாக போலியான வருகை பதிவு பெற்று, சட்டப் படிப்பை முடித்துள்ளார். 
இவர் தமிழ்நாடு வழக்குரைஞர்கள் கழகத்தில் (bar council) செய்ய விண்ணப்பித்தார்.
இது சம்மந்தமாக நடந்த விசாரணையில் ஆந்திர கல்லூரியின் முதல்வர் .ஹிமவந்த குமார் கைது செய்யப்பட்டார் 
இது சம்பந்தமான விசாரணையில் இதுபோன்று பணியில் இருந்துக்கொண்டே போலி வருகைப்பதிவேடு சமர்பித்ததாக 300 பேர் மீது சந்தேகம் இருப்பதாக ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. 
விசாரணை முடிவில் இவ்வாறு பார்கவுன்சிலில் தனியார் நிறுவனங்களிலோ, அரசுப்பணியில் இருந்துக்கொண்டு படித்தார்கள் என்பதை விசாரணை நடத்தி அந்த பட்டியலை எங்களிடம் அளிப்பார்கள். 
தமிழக பாண்டிச்சேரி பார்கவுன்சிலில் இவ்வாறு யாரேனும் போலியாக வருகைச் சான்று கொடுத்து வழக்கறிஞராக பதிவு செய்திருந்தால் அவர்களுக்கு ஒரு கடைசி வாய்ப்பாக பார்கவுன்சிலி கொடுக்கிறது. 
அவ்வாறு போலியாக பதிவு செய்தவர்கள் தாமாக முன்வந்து சான்றிதழையும், ஐடி கார்டையும், என்ரோல்மெண்ட் சர்டிபிகேட்டையும் சம்ர்பித்தால் அது ஏற்றுக்கொள்ளப்பட்டு கைது நடவடிக்கையில் இருந்து விடுவிக்கப்படும்.
அவ்வாறு செய்யாமல் மறைத்தால் விசாரணையில் தெரியவந்தால் சம்பந்தப்பட்டவர்கள்மீது குற்ற நடவடிக்கை எடுத்து, கைது செய்யப்படுவார்கள். 
அதுவுமல்லாமல் அவர்கள் அந்தநேரத்தில் பணியில் இருந்த பயன்பாடுகள் அனைத்தும் ரத்துச் செய்யப்படும்.
 அவர்களாக இந்த தகவலைக் கேள்விப்பட்டவுடன் உடனடியாக சரண்டர் செய்யாமல் தகவல் தெரிந்தாலே கைது செய்யப்படுவார்கள். 
போலி வக்கீல் என்றால் சான்றிதழ் சரியாக இருக்கும்.ஆனால் கல்லூரிக்கு போகாமலே போனதாக வருகைப்பதிவேட்டை தயாரித்து அளித்துள்ளார்கள். 
ஆகையால் உடனடியாக சரண்டர் செய்யாவிட்டால் கைது செய்யப்படுவோம். 
ஒரு கமிட்டி அமைத்துள்ளோம். அவர்கள் இதுபோன்று மற்ற மாநிலங்களில் போலியாக வருகைப்பதிவேடு அளித்து வழக்கறிஞர் பட்டம் பெற்றவர்கள் குறித்து ஆய்வு செய்து எங்களுக்கு அந்தப்பட்டியலை அளிக்கும் 
அதன் மீது நடவடிக்கை எடுப்போம்.”
இவ்வாறு பார்கவுன்சில் தலைவர் அமல்ராஜ் தெரிவித்தார்.ஒழுங்காக கல்லூரிக்கும் போகவில்லை.. அதே சமயத்தில் கை நிறைய சம்பளத்தில் ரெயில்வேயில் வேலை.. இப்படியே ஒருத்தர் சட்டக்கல்லூரியில் படித்து பட்டம் வாங்கிவிட்டார், இவரைப்படிக்க வைத்து போலிச் சான்றிதழ் தந்தது  ஆந்திர மாநில சட்டக்கல்லூரி முதல்வர்தான் என போலீசார் அவரை கைது செய்துள்ளனர்.. இப்படி போலி சான்றிதழ் வாங்கிய கிட்டத்தட்ட ஆயிரத்துக்கும் மேல் போலி வக்கீல்களை இந்த முதல்வர் உருவாக்கியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை வில்லிவாக்கத்தை சேர்ந்தவர் விபின்.. 59 வயதாகிறது.. தெற்கு ரெயில்வேயில் 'கார்டு' ஆக வேலை பார்த்து வந்தவர். இப்படி ஒரு கவுரமான வேலை, கை நிறைய சம்பளத்தில் இருந்து கொண்டே, சைட் பிசினஸ் வேலையில் இறங்கி உள்ளார்.
இவர், ஆந்திர மாநிலம் கடப்பாவில் உள்ள எஸ்பிடிஆர்எம் சட்டக் கல்லூரியில் எல்எல்பி படித்துள்ளார்.. 2015 - 2018-ம் ஆண்டு வரை படித்திருக்கிறார்.. அப்படியானால், அரசு வேலை பார்த்து கொண்டே, உரிய அனுமதியும் வாங்காமல் இந்தபடிப்பை படித்து முடித்துள்ளார்.
போதி தர்மர் மீண்டும் வருவாரா?.. உயிர்க் கொல்லி வைரஸ்.. கரோனோவின் பிடியில் சிக்கி தவிக்கும் சீனா
இதுஎப்படி சாத்தியமானது என்று தெரியவில்லை.. ஏனென்றால் குறைந்தபட்சம் 70 சதவீதம் அட்டன்டன்ஸ் சட்டக்கல்லூரியில் இருக்கவேண்டும். ஆனால், ரெயில்வேயில் வேலை செய்துகொண்டே, காலேஜுக்கும் போகாமல், போலியான வருகை சான்றிதழை வாங்கி சமர்ப்பித்து.. பிறகு வக்கீல் படிப்பையே படித்து முடித்துவிட்டார்.
பின்னர் தமிழ்நாடு பார் கவுன்சிலில் வக்கீலாக பதிவு செய்ய அப்ளை செய்திருக்கிறார்.. ஆனால் அந்த மனுவை ரிஜக்ட செய்துவிட்டனர்.. அதனால், மோகன்தாஸ், உலகநாதன் ஆகிய வக்கீல்களை துணைக்கு வைத்து கொண்டு திரும்பவும் தமிழக பார் கவுன்சிலில் பதிவு விபின் தொடர்ந்து முயற்சியில் ஈடுபட்டார்.
விஷயம் வெளியே தெரிந்து, தமிழ்நாடு, புதுச்சேரி பார் கவுன்சில் செயலாளர் சி.ராஜாகுமார் என்பவர் சென்னை ஐகோர்ட்டு போலீஸ் ஸ்டேஷனில் இதை பற்றி புகார் தந்தார்.. அதன்பேரில், ஐகோர்ட்டு போலீசார் வழக்குப்பதிவு இந்த போலி வக்கீல் + ரெயில்வே ‘கார்டு' விபினை கைது செய்தனர்.. இவருக்கு உதவியாக இருந்த வக்கீல்கள் மோகன்தாஸ், உலகநாதனையும் போலீசார் கைது செய்தனர்.
இந்த வழக்கு மேல் விசாரணைக்காக மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு மாற்றப்பட்டது. கமிஷனர் விஸ்வநாதனின் உத்தரவின்பேரில் தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணையும் நடத்தப்பட்டது.. அப்போதுதான், விபின் படித்த அந்த சட்ட கல்லூரி சார்பில் போலியான வருகை பதிவேடு சான்றிதழ் வழங்கப்பட்டது தெரியவந்தது. விபினுக்கு வழங்கப்பட்டது போலவே அந்த காலேஜில் படித்த ஆயிரக்கணக்கான மாணவர்களுக்கு போலியான வருகை பதிவேடு சான்றிதழ்களும் வழங்கப்பட்டுள்ளன.
இதை வழங்கியது அந்த சட்டக் கல்லூரி முதல்வர் ஹிமவந்தகுமார் என்ற 54 வயது நபர்.. கடப்பாவை சேர்ந்தவராம்.. இவரையும் தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர். இப்படி போலியான சான்றிதழை படித்த ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தமிழ்நாடு & புதுச்சேரி பார் கவுன்சிலில் வக்கீல்களாக பதிவு செய்துள்ளனர்.. இது சம்பந்தமான நடவடிக்கையில் குற்றப்பிரிவு போலீசார் இறங்கி உள்ளனர்.. அந்த ஆயிரம் போலி வக்கீல்கள் நம் மாநிலத்தில் எங்கு நடமாடி கொண்டிருக்கிறார்களோ தெரியாது.. அவர்களை நம் போலீசார் விரைவில் பிடித்துவிடுவார்கள் என்று மட்டும் தெரிகிறது!இங்கே ஒரு விஷயத்தை அழுத்தமாகக் குறிப்பிட்டாக வேண்டும். தமிழகத்தில் நேர்மையான ஒழுக்கமான, திறமையான வழக்கறிஞர்கள் பலர் இந்தத் துறைக்கென கிடைத்து மின்னியதற்குக் காரணம் இங்கே தனியார் சட்டக் கல்லூரிகள் இல்லாததுதான். அதேநேரம் பக்கத்து மாநிலங்களில் இருக்கும் தனியார் சட்டக் கல்லூரிகள்தான் கடந்த பத்து, பதினைந்து வருடங்களில் வழக்கறிஞர் என்ற தொழிலின் மாண்பு மாசுபட்டதற்குக் காரணம்.தமிழகத்துக்கு என்று வழக்கறிஞர்களை வருடா வருடம் அள்ளித் தரும் அந்த தனியார் சட்டக் கல்லூரிகள் எப்படி இயங்குகின்றன தெரியுமா?
குடிசைத் தொழில் போன்று ஒரு டெண்ட்டுக்குள், 100க்கு 100 அடி இடத்தில் போர்டு மட்டுமே வைத்துக்கொண்டு வேறு எந்தவித உள்கட்டமைப்பும் இல்லாமல் ‘பெயருக்கு’ இயங்கிக் கொண்டிருப்பவைதான் தனியார் சட்டக் கல்லூரிகள். ஆனால், இந்த தனியார் சட்டக் கல்லூரிகள்தான் தமிழகத்துக்கு எண்ணற்ற வழக்கறிஞர்களை உற்பத்தி செய்கின்றன.
தனியார் சட்டக் கல்லூரிகளைக் குற்றம் சுமத்துக்குவதற்குக் காரணம் இருக்கிறது. அங்கே சட்டம் பயிற்றுவிக்கப்பட்டால் பரவாயில்லை. அங்கே போய் சட்டம் படிக்காதீர்கள் என்று யாரும் சொல்லவில்லை. ஆனால், சட்டத்தைப் படித்துவிட்டு வாருங்கள், திறமையான சட்டப் பேராசிரியர்களிடம் பாடம் பயின்று வாருங்கள் என்றுதான் சொல்கிறோம்.ஆனால், நமது அண்டை மாநிலங்களில் இருக்கும் சட்டக் கல்லூரிகளில் சட்டம் கற்பிக்கப்படுகிறதா என்ன?
வருடம் முழுவதும் தமிழகத்தில் இருந்துவிட்டு குறிப்பிட்ட தொகையைக் கொடுத்தால் சட்டத்தில் பட்டப் படிப்பு முடித்தார்கள் என்று சான்றிதழ்கள் கொடுக்கிற தனியார் சட்டக் கல்லூரிகளைக் கண்கூடாகப் பலருக்குத் தெரியும்.
தினம் தினம் கல்லூரி சென்று திறமையான சட்டப் பேராசிரியர்களிடம் சட்டம் பயின்று... அதன்பின் திறமையான வழக்கறிஞர்களிடம் நீதிமன்ற நடவடிக்கைகள் பழகி ஒருவர் வழக்கறிஞராகப் பதிவு செய்தால் அந்த வழக்கறிஞரை வரவேற்கலாம்.
ஆனால், தமிழ்நாட்டில் ஒரு தொழில் செய்துகொண்டு அது சட்ட விரோதத் தொழிலாகக்கூட இருக்கும்... அப்படி ஒரு தொழில் செய்துகொண்டு தன்னை சட்டத்திடம் இருந்து பாதுகாத்துக் கொள்வதற்காக, அதே சட்டத்தைத் தானும் படித்திருக்கிறேன் என்று காட்டிக் கொள்பவர்களுக்கான கருவியாகவே இருக்கின்றன அண்டை மாநிலங்களில் இருக்கும் தனியார் சட்டக் கல்லூரிகள். சட்டம் என்ற புனிதமான, ஒழுக்க நெறி சார்ந்த, அறிவு சார்ந்த பட்டப் படிப்பை மலினமான பார்சல் பண்டங்களாக மாற்றியது அவைதான்.
தமிழகத்தில் வண்டு முருகன் என்ற பிம்பம் குடிகொண்டதற்குக் காரணமே இந்த முறையற்ற தனியார் சட்டக் கல்லூரிகள்தான்.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

முருகப்பெருமான் அன்னையிடம் ஞானவேல் பெற்ற தினமே தைப்பூசம் ..அதில் பாலபிஷேகம் சிறப்பு

  தைப்பூசமும், பாலபிஷேகமும். (இந்து அல்லாதவர்கள் உட்பட நம்மில் பலர் அறிய)     தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம்.  ஆண்டுதோறும்  பஞ்சாங்கப்படி பத்தாம்மாதம்.  பூசநட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகப்பெருமானுக்கு எடுக்கப்படும் விழா. நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரம்.விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. தைப்பூசத் திருவிழாவில் முருகன் தேரில் பவனி வரும் காட்சி பழனியிலும், வடலூரிலும்,  இலங்கையிலும், மலேசியாவிலும் தைப்பூசம் சிறப்பு  மலேசியா பத்து மலை முருகன் கோவில் உலகத் தமிழர்களிடையே புகழ் பெற்ற ஆலயமாகும். இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிக முக்கியமானதாகும். பத்து மலை கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ள மலைக்கோவில் சுண்ணாம்புப் பாறைகளாலான மலை . வரிசையாக அமைந்த பத்து குகை  கோவில்களை இங்கு காணலாம். மலையை ஒட்டி சுங்கபத்து ஆறு ஓடுகிறது. பத்து கோவில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்த