தண்ணீரை தாத்தா ஆற்றில் பார்த்தார்! அப்பா கிணற்றில் பார்த்தார்! நாம் குழாயில்
பார்க்கிறோம்! மகன் பாட்டிலில் பார்க்கிறான்! பேரன் எங்கு பார்ப்பான்? நீர்இன்றி அமையாது உலகெனின் யார்யார்க்கும் வான்இன்று அமையாது ஒழுக்கு.என்பது வள்ளுவன் வாக்கு. பெயர், புகழ், பணம் என எவ்வளவு உயர்ந்தவராயினும், நீர் இல்லாமல் இவ்வுலகில் வாழ
முடியாது. நிலம், நீர் இவை இரண்டும் சேரும்போது தான் மனிதனுக்கு உணவு கிடைக்கிறது.
இந்த நீரை முறையாக பயன்படுத்துவதற்குத்தான் அக்காலத்தில் நம் முன்னோர்கள் ஏரி, குளம், குட்டை போன்ற நீர் நிலைகளை திட்டமிட்டு அமைத்தார்கள். ஆனால் தற்போது இந்த நீர்நிலைகள் ஆக்கிரமிக்கப்பட்டு மழைநீர் சேமிப்பு என்ற தொட்டிவடிவில் மாறியுள்ளது வருத்தத்திற்குரியது. உலக பரப்பளவில் நான்கில் மூன்று பகுதி நீரால் ஆனது. மூன்றாம் உலகப்போர்
வருமானால் அது தண்ணீருக்காகத்தான் வரும் என பரவலாக பேசப்படுகிறது. மிகப்பெரிய தொழில்நுட்ப வளர்ச்சி ஒரு புறம் இருந்தாலும், தண்ணீரே நம் வாழ்வின் ஆதாரம்.
தண்ணீரை பயன்படுத்துவோரிடையே, தேவைகள் அதிகரிப்பதால், இன்று தண்ணீர் போட்டி பொருளாகவும, அதிக விலை கொடுத்து வாங்கும் சந்தை பொருளாகவும் மாறிவிட்டது. பூமியெனும் உயிரின வாழ்விடத்தைத் தவிர வேறு எந்தக் கோளிலும் நீரில்லை என விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.தண்ணீர் இல்லாது போய்விட்டால், அதனை எந்த ஒரு சக்தியாலும் உற்பத்தி செய்யவே முடியாது. பிறப்பிலும், வாழ்விலும், இறப்பிலும் கூட இணை பிரியாத இன்றியமையாத பொருளாக விளங்குவது தண்ணீர்.நாட்டில் குடிநீர் பஞ்சமும்
தண்ணீரின் தேவையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.
சரியான திட்டமிடல் இல்லாத காரணத்தால் 2025ல் கடுமையான தண்ணீர் பஞ்சம் ஏற்படும் என்று எச்சரிக்கின்றனர் நிபுணர்கள். பருவநிலை மாற்றம், புவி வெப்பமடைதல், அதிகரித்து வரும் மக்கள் தொகை போன்ற காரணங்களால், உலகின் பல்வேறு நாடுகளில் நீர் பற்றாக்குறை
ஏற்பட்டுள்ளது. உலகில் 19 நாடுகள் 50 சதவீதத்திற்கும் மேலான தண்ணீர் தேவைக்கு, அண்டை நாடுகளையே நம்பியுள்ளன. தொழில்நுட்ப வளர்ச்சி இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சிக்கேற்ப தண்ணீரின் பயன்பாடும் உபயோகமும் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. முன்னோர்கள் காலத்தில் ஏற்றம் கட்டி நீரிறைத்து, யானைக்கட்டி போரடித்து விவசாயத்தில் தன்னிறைவு கொண்டிருந்த தமிழகம், இன்று கொஞ்சம் கொஞ்சமாக பாலைவனமாக மாறி வருகிறது. விளை நிலங்கள் வீடுகளாகவும் தொழிற்சாலைகளாகவும் சொகுசு மாளிகைகளாகவும் மாறிவிட்டன.
விவசாயிகளின் தற்கொலை நிகழ்வுகள் அதிகரித்து கொண்டே இருக்கிறது. துார்ந்து போன ஏரிகளையும், குளங்களையும் துார்வாரி நதிகளை சீரமைத்து கடலில் வீணாக கலக்கும் நீரை சேமிக்க முனைப்பு காட்ட வேண்டும்.பெரும்பாலான இந்தியப் பெண்களின் வாழ்க்கை
தண்ணீரை தேடிச்செல்வதிலேயே கழிகிறது. தண்ணீரின் உபயோகம் 82 சதவிகிதம் விவசாயத்திற்கும், 8 சதவிகிதம் தொழிற்சாலைகளுக்கும், மீதி 10 சதவிகிதம் நம் அன்றாட தேவைகளுக்கும் செல்கிறது. விவசாயத்திற்கான நதி நீர் பயன்பாடு இந்தியாவில் 20 சதவீதத்திற்கும் குறைவாகத்தான் உள்ளது.
மழைநீரை முறையாக சேமிக்காமல் இருப்பதும், நீர் நிலைகளை பாதுகாக்காமல் இருப்பதும், மழைக்காலங்களில் நதிகளில் ஓடும் தண்ணீர் கடலில் கலந்து வீணாவதை தடுக்காமல் வேடிக்கை பார்ப்பதுமே இன்றைய குடிநீர் பஞ்சத்துக்கு முக்கிய காரணம். மழை பெய்யும் காலங்களில் மழை நீரை ஒவ்வொரு கிராமத்திலும் குளங்களில் சேமிக்க வழி
செய்தாலே பெரும்பாலான இடங்களில் நிலத்தடி நீர்மட்டம் அதலபாதாளத்துக்கு போய் இருக்காது.அனைத்து மாநிலங்களும் ஒற்றுமையுடன் நதி நீரை பங்கிட்டுக்கொள்வதற்கு நதிகள் இணைப்பு தொடர்ந்து வலியுறுத்தப்படுகிறது. சில மாநிலங்களில் மழை காலங்களில் அதிகமான உபரி நீர் கடலுக்கு செல்கிறது. வேறு சில மாநிலங்களில் ஏரிகள், குளங்கள், குட்டைகளை ஆக்கிரமித்துஉள்ளதால், வெள்ளம் ஊருக்குள் வந்து கடலுக்கு வீணாக செல்லும் நிலை நிகழ்கிறது. இதனை தடுக்க நதிகளை இணைக்க வேண்டும். முதலில் நதிகளை இணைப்பதில் பல்வேறு
சிரமங்களும், செலவுகளும் இருக்கத்தான் செய்யும். இதில் செலவாகும் பணம், ஒருமுறை நாம் செலவிட்டால் போதும் நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் பயன்பெறும். இதனால் நாட்டில் விவசாயம், வேலைவாய்ப்பு, தொழில்நுட்பம் மற்றும் பொருளாதார வளர்ச்சி அடையும்.
முக்கியமாக எதிர்காலத்தில் தண்ணீர் பற்றாக்குறையே வராது.தமிழகத்தில் அனுமதியின்றி செயல்படும் கேன் குடிநீர் உற்பத்தி ஆலைகளை மூட உத்தரவு-நீதிமன்றம் அதிரடி
தமிழ்நாட்டில், அனுமதியின்றி செயல்படும் குடிநீர் உற்பத்தி ஆலைகளை மூட வேண்டும் என, மாநில அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.
சென்னையை அடுத்த புழல் பகுதியைச் சேர்ந்த சிவமுத்து என்பவர் தொடர்ந்த வழக்கில், இந்த உத்தரவை பிறப்பித்திருக்கிறது.
தமிழ்நாடு முழுவதும் குடிநீர் ஆலைகளுக்கு வழங்கப்பட்டுள்ள அனுமதி குறித்த அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் பொதுப்பணித்துறை உயர்நீதிமன்றம் ஆணையிட்டிருக்கிறது.
வருகிற பிப்ரவரி மாதம் 6ஆம் தேதி நேரில் ஆஜராகி அறிக்கை அளிக்க நிலம் மற்றும் நிலத்தடி நீர்வள புள்ளிவிவர மைய தலைமைப் பொறியாளர் பிரபாகரனுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.
மூடப்பட்ட ஆலைகள் அனுமதி பெற்றாலும் நீதிமன்ற அனுமதியில்லாமல் மீண்டும் இயக்க அனுமதிக்க கூடாது என்றும் உயர்நீதிமன்றம் ஆணையிட்டிருக்கிறது.
"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன், வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்; நான் விரும்பிய காளி தருவாள்". - மஹாகவி பாரதியார் சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை எடுத்தனர் அது வெட்டி எடுத்த அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“ நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன் கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...
கருத்துகள்