சென்னை மாநகராட்சி நிர்வாகத்தால் நடத்தப்படும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது ‘அட்சய பாத்ரா’ என்ற தனியார் தொண்டு நிறுவனம் செயல்படுத்துகிறார்கள். அட்சய பாத்ரா என்பது இஸ்கான் (ISKCON) என்ற அமைப்பின் துணை நிறுவனம். இந்தியாவின் பல பகுதிகளிலும் இந்த அமைப்பின் சார்பில் இத்திட்டம் அரசு உதவியுடன் செயல்படுத்தப்படுகிறது.
சென்னையில் அட்சய பாத்திரத்துக்கு க்ரீம்ஸ் சாலையில் 20ஆயிரம் சதுர அடி இடம் ஒதுக்கித் தரப்பட்டு. பெரம்பூர் பேரக்ஸ் ரோடு பகுதியில் மேலும் 35 ஆயிரம் சதுர அடியை முதலமைச்சர் ஒதுக்கியும். துவக்க விழாவில், ஆளுநர் தனது நிதியிலிருந்து 5 கோடி ரூ வழங்கியதுடன்.துவங்கியது காலை உணவு திட்டம்
அரசு பள்ளிகளில் உணவு வழங்குவது என்பதில் தமிழ்நாடு முன்னோடி மாநிலம். 1920 ஆம் ஆண்டு நீதிக்கட்சி ஆட்சியில் சென்னை மாநகராட்சிப் பள்ளியில் மதிய உணவும். காங்கிரஸ் முதல்வர் கு. காமராஜர் தலைமையிலான ஆட்சியில் தமிழகம் முழுவதும் அரசுப்பள்ளி மற்றும் உதவி பெறும் பள்ளிகளில் மதிய உணவுத் திட்டம் கொண்டு வரப்பட்டது.அ இ அ தி மு க வின் எம்.ஜி.ராமச்சந்திரன்.முதல்வரான காலத்தில் சத்துணவுத் திட்டமாக மாற்றி விரிவாக்கம் செய்யப்பட்டது. தி மு க வின் மு.கருணாநிதி முதல்வரான ஆட்சியில் சத்துணவில் முட்டையும் வழங்கியதுடன் அ இ அ தி மு க முதல்வர் ஜெ. ஜெயலலிதா ஆட்சியில் கலவைச் சோறு திட்டம் கொண்டு வரப்பட்டது.
இப்படியாக ஒவ்வொரு ஆட்சிக்காலத்திலும் தமிழக உணவுப்பழக்கத்தை அடிப்படையாகக் கொண்டு தமிழக ஆட்சியாளர்கள், அரசின் பொறுப்பில் இத்திட்டத்தை செயல்படுத்தி, அதற்கான சமையல் கூடம், பாத்திரங்கள், பணியாளர்களை நியமித்து வேலைவாய்ப்பையும் உருவாக்கியுள்ளனர். தற்போது அ இ அ தி மு க வில் எடப்பாடி கே. பழனிச்சாமி தலைமையிலான ஆட்சியில், மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் புதிய திட்டத்தை அரசாங்கம் உதவியுடன் தனியொருறொ அமைப்பிடம் வழங்கியிருப்பது பல கேள்விகளை எழுப்பியுள்ளதாக விமர்சனம் வருகிறது
இஸ்கான் அமைப்பு அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் அமைப்பாகும். இதன் உணவுப் பழக்கத்தில் சைவ உணவுக்கு மட்டுமே இடம் உண்டு. சைவ உணவிலும் வெங்காயம், பூண்டு தவிர்த்து அவை உணர்வுகளைத் தூண்டக்கூடியவை என்றும் அதனால் மாணவர்களின் கவனம் சிதறும் என்றும் காரணம் உண்டு அது மாணவர்கள் நோய் எதிர்ப்பு நம் தட்பவெப்ப நிலைக்கு உகந்ததா என்ற வினாவும் உண்டு
தமிழர்களின் உணவுப் பழக்கத்தில் பூண்டு, மிளகு, வெங்காயம் உள்ளிட்டவை தவிர்க்க முடியாதவையாக இருக்கின்றன. அவை உணவின் சுவையுடன், மருத்துவ முறையிலும் நலன் விளைவிக்கின்றன. ஆனால், இஸ்கான் அமைப்பின் அட்சயப் பாத்திரம் திட்டத்தில் அவை முற்றிலுமாகத் தவிர்க்கப்படுகின்றன.
கர்நாடக மாநிலத்தில் இந்த அமைப்பினர் இதே வகையில் உணவு தயாரித்து மாணவர்களுக்கு வழங்கி வருகின்றனர். அங்குள்ள பிள்ளைகள், சுவை பிடிக்காத காரணத்தால் இந்த உணைவ சாப்பிடாமல் கீழே வீணாவதும் சாப்பிடாமல் வகுப்புக்குச் செல்வதும், வகுப்பறையில் சோர்வாகி மயங்கிவிடுவதும் அண்மையில் பெரும் சிக்கலை உண்டாக்கியது. அந்த மாநிலத்தில் பல தொண்டு நிறுவனங்கள் இத்திட்டத்தில் பங்கேற்றுள்ளன. மாநில அரசு சொல்லும் உணவுப்பொருட்களை அவை தனது சமையலில் சேர்க்கின்றன. ஆனால், அட்சய பாத்ரா மட்டும் சேர்ப்பதில்லை. அதனால், இத்திட்டத்தை மாற்றி வேறு அமைப்பினரிடம் இதனை வழங்க வேண்டும் என அம்மாநிலத்தில் கோரிக்கைகள் வலுவடைந்தன. ஆனால், இஸ்கான் அமைப்பு, வெங்காயம்-பூண்டு இல்லாத சமையலைத் தொடர்ந்து கொண்டிருக்கிறது.
தமிழ்நாட்டில் பள்ளிகளில் உணவு சமைப்பதற்கான அத்தனை கட்டமைப்புகளும் உள்ள நிலையில், தமிழ்நாட்டு உணவுமுறைக்கு மாறான திட்டத்தை தனியார் நிறுவனம் மூலம் நிறைவேற்றுவது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது. வருங்காலத்தில் மதியத்தில் நடக்கும் சத்துணவுத் திட்டத்தையும் அரசு தன் பொறுப்பிலிருந்து கைவிட்டு, இதுபோன்ற தனியார் அமைப்பிடம் ஒப்படைத்து, முட்டை உள்ளிட்ட சத்தான உணவுகளைத் தவிர்த்துவிடுமோ என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. அது குறித்த விளக்க வேண்டிய நிலை அரசுக்கே உள்ளன பிராந்திய உணவுக் கலாச்சாரம் தான் இந்த விவாதம் வரக் காரணமாகிறது.
"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன், வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்; நான் விரும்பிய காளி தருவாள்". - மஹாகவி பாரதியார் சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை எடுத்தனர் அது வெட்டி எடுத்த அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“ நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன் கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...
கருத்துகள்