குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெறும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் உடனான விருந்தில் பங்கேற்க தமிழக முதல்வருக்கு குடியரசுத் தலைவர் அழைப்பு விடுத்துள்ளார் இந்தியா வரும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் உடன் விருந்தில் கலந்து கொள்கிறார் தமிழக முதல்வர் எடப்பாடி கே பழனிசாமி
பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஆண்டு அமெரிக்கா சென்ற போது, அந்நாட்டு அதிபரை இந்தியா வருமாறு அழைத்து அதனையேற்று, அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் அவரது மணைவி மெலானியா ட்ரம்ப் ஆகிய இருவரும் இரண்டு நாட்கள் அரசு முறைப்பயணமாக இன்று இந்தியா வந்துள்ளனர். அவர்களது பயணத்தில் முக்கியமாக குஜராத் மாநிலம் இடம்பெற்றுள்ளது.
அமெரிக்க அதிபர் வருகையையொட்டி குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் அவரை வரவேற்கும் பொருட்டு 'கெம்ச்சோ ட்ரம்ப்,' குஜராத்தில் மொழியில் கெம்ச்சோ என்றால் எப்படி இருக்கிறீர்கள் என அர்த்தம் என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டாக்கப்பட்டு வருகிறது.
கடந்த ஆண்டு அமெரிக்காவின் ஹூஸ்டன் நகரில் 50 ஆயிரம் அமெரிக்க வாழ் இந்திய வம்சாவளியினர் மத்தியில் ட்ரம்ப்பும், மோடியும் இணைந்து ஹவுடி மோடி எனும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினர். அதேபோல், நமஸ்தே ட்ரம்ப் எனும் நிகழ்ச்சியில் மோடியும் ட்ரம்ப்பும் கலந்து கொண்டு பேசியஇந்த நிகழ்வானது குஜராத் மாநிலம் அகமதாபாத்தின் மொதேரா பகுதியில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் புதிய கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றுள்ளது.
இந்த மைதானத்தை பிரதமர் மோடியுடன் இணைந்து ட்ரம்ப் திறந்து வைத்தார் அதுதவிர, சாலை ஊர்வலம் ஒன்றை மேற்கொண்டு ட்ரம்ப், காந்தியின் சபர்மதி ஆசிரமத்துக்கும் சென்று பார்வையிட்டார். அத்துடன், குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி உள்ளிட்ட முக்கிய தலைவர்களையும் ட்ரம்ப் மற்றும் அவருடன் வரும் அமெரிக்க பிரதிநிதிகள் குழு சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர். இந்த சந்திப்பின் போது முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியா வரும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் உடன் விருந்தில் கலந்து கொள்கிறார் தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. நாளை குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெறும் விருந்தில் பங்கேற்க முதல்வருக்கு குடியரசுத் தலைவர் அழைப்பு விடுத்துள்ளார். இதனையேற்று, நாளை மாலை முதல்வர் டெல்லி செல்ல உள்ளார்.
"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன், வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்; நான் விரும்பிய காளி தருவாள்". - மஹாகவி பாரதியார் சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை எடுத்தனர் அது வெட்டி எடுத்த அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“ நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன் கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...
கருத்துகள்