''நீயெல்லாம் ஒரு பொண்ணா.. வெளில சொல்லிராதே''. என்னா பேச்சு இது.. நடக்கிறதே வேற... வெளுத்த காளியம்மாள்... பதில் கொடுத்த விஜயலட்சுமி
"நீயெல்லாம் ஒரு பெண்ணுன்னு சொல்லிட்டு திரியாதே.. யாராவது காசு கொடுத்தா, வீட்டு கஷ்டத்துக்காக விலைமாதுவாக போகக்கூடிய பெண்களை கூட நான் பார்த்திருக்கிறேன்.ஆனால் கருத்தியலை களவாடி காசுக்கு வாங்கிட்டு விற்கக்கூடிய பச்சை துரோகியை இங்கதான் பார்க்கிறேன். இனி எந்த உறவையாவது சொல்லி பேசுனே.. நடக்கிறது வேற.. எல்லா பெண்களும் கொந்தளிச்சுடுவோம்.என்னா பேச்சு இது?" என்று நாம் தமிழர் கட்சி காளியம்மாள் நடிகை விஜயலட்சுமியை எச்சரித்துள்ளார்.
கடந்த சில நாட்களாகவே நடிகை விஜயலட்சுமி, சீமான் மீதான குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறார்.
இந்நிலையில், நாம் தமிழர் கட்சியின் பேச்சாளர் காளியம்மாள், பொதுக்கூட்டத்தில் பேசி நடிகை விஜயலட்சுமிக்கு எச்சரிக்கை விடுக்க. அந்த கூட்டத்தில் மேலும் காளியம்மாள்
"நான் ஒரு மீம் பார்த்தேன்... "முந்தானை முடிச்சு"ன்னு ஒரு படம்.அந்த படத்துல ஒரு பையனுக்கு ட்டிரவுசர் கழண்டுடும்.. குத்திவிட பின் இருக்காது.. அவரே வந்து போட்டுவிடுவாரு.. உடனே அந்த பையன் சார் சார்.. நானே போட்டுக்கறேன் சார்அப்படீன்னு.. அந்த பையனுக்கு நேரே ஸ்டாலின்னு போட்டோ வெச்சிருக்காங்க. பாக்கியராஜ் படத்துக்கு நேரே பிரசாந்த் கிஷோர்னு வெச்சிருக்காங்க.. ரொம்ப நேரமா விழுந்து விழுந்து சிரிச்சிட்டேன்.. ஏன்டா ட்டிரவுசர் கூட போட தெரியாதவனுங்களாடா நீங்க
தங்கள் வீடுகளை அவ்வளவு திறம்பட, சிறப்பாக, நிர்வகிப்பவர்கள் பெண்கள்.. வீட்டை முன்னெடுத்து செல்லும் வீரமிக்க ஒரு பெண்ணால் அரசியல் நிர்வாகத்தை சரியாக செய்யும் என்ற நம்பிக்கையில், 50 சதவீத இட ஒதுக்கீட்டை தந்து, பெண்களை களத்தில் நிற்க வைத்து வருகின்ற 2021 தேர்தலில், 117 இடங்கள் ஆண்கள், 117 இடங்களை பெண்களுக்கு தந்து நிற்க வைக்கும் ஒரே கட்சி நாம் தமிழர் கட்சி .
ஆனால், எந்த மனிதரை பெண்களை வன்மைப்படுத்துவதாக ஒப்பிடுவது? அந்தம்மா சொல்லிட்டு கிடக்கு.. ஒரு தாய்க்கு ஒரு பிள்ளையின் அருமை தெரியுமா? அன்பு தெரியுமா? உணர்வு தெரியுமா? அந்த இணக்கம்தான் எங்கள் அண்ணனுக்கும் எங்களுக்கும் இருக்கக்கூடிய உணர்வு.. இனி ஒரு நாக்கு, எங்க அண்ணனையும், மத்த பெண்களையும் ஒன்றுபடுத்தி பேசினே
அண்ணன்-தங்கையா பேசு, தகப்பன்-மகளா பேசு, வேற எந்த உறவையாவது சொல்லி பேசுனே.. நடக்கிறதே வேற.. எல்லா பெண்களும் கொந்தளிச்சுடுவோம்.. என்னா பேச்சு இது? நீயெல்லாம் ஒரு பெண்ணுன்னு சொல்லிட்டு திரியாதே.. யாராவது காசு கொடுத்தா, வீட்டு கஷ்டத்துக்காக விலைமாதுவாக போகக்கூடிய பெண்களை கூட நான் பார்த்திருக்கிறேன்... ஆனால் கருத்தியலை களவாடி காசுக்கு விற்கக்கூடிய பச்சை துரோகியை இங்கதான் பார்க்கிறேன்.
ஒரு மனிதன் இந்த மண்ணையும் மக்களையும் நேசித்து, இயற்கை வளங்களை நேசித்து.. எல்லா வகை அரசியலையும் பேசுகிறார்.. ஆனால் எந்த அரசியல் கட்சியாவது எங்காவது ஒரு குளத்தை தூர்வாருதா? ஆனால் சாக்கடை அள்ளுகிறார்கள் எங்க பிள்ளைங்க.. இதெல்லாம் அரசியலுக்காக? இல்லை,.. உங்கள் வருங்கால தலைமுறைக்காக.. எங்களுக்கு ஒரு பேர் வெச்சிருக்காங்க, சீமான் தம்பி தங்கைகள் கத்தி கத்தி பேசுறாங்கன்னு.. யாருக்காக கத்துறோம்.. புரிந்துகொள்ளுங்கள், நம் அடுத்த தலைமுறை எதை நோக்கி போய் கொண்டிருக்கிறது என்பதை புரிந்து கொள்ளுங்கள்" என்றார். அதுசரி இவரைத் தலைவரா ஏற்று காளியம்மா அரசியலுக்கு வரும்முன்பே நடிகை விஜயலட்சுமியை நடிகர் சீமான் அறிவார் என்பது அறிவாரா.பாவம் ஒவ்வொரு அரசியல் வாதியின் வாழ்வியல் முறை வேறு அரசியல் முறை வேறு இதை காளியம்மாள் மாதிரி பேச்சாளர் அறிந்து பேசவில்லை என்பது தான் இது விவாதமாக.விஜயலட்சுமி அவரது அரசியல் அங்கீகாரம் கேட்டு வரவில்லை அது அவரது அந்தரங்கம் அதில் அறிஞர் அண்ணா போல சீமான் இருந்தால் வெற்றி ..புலி வேட்டைக்குப் போகும் போது சுள்ளி ஒடிக்கும் சத்தத்திற்கு எல்லாம் தோட்டாவை இழப்பது போல உண்மையான புலி வரும்போது காளியம்மள் மாதிரி தேட்டாக்கள் மீதமிருக்குமா? விஜயலட்சுமி சீமான் விவகாரங்களில் காளியம்மள் மூன்றாம் நபர் அவ்வளவு தான் இதுவே பொது நீதி அதாவது பள்ளிக் ஜஸ்டிஸ்
"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன், வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்; நான் விரும்பிய காளி தருவாள்". - மஹாகவி பாரதியார் சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை எடுத்தனர் அது வெட்டி எடுத்த அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“ நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன் கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...
கருத்துகள்