மறைந்த முதல்வர் செல்வி.ஜெ.ஜெயலலிதா பிறந்த நாளான 24-பிப்ரவரியை "மாநில பெண் குழந்தைகள் பாதுகாப்பு நாள்" என்று அறிவித்திருக்கிறார் முதலமைச்சர் பழனிச்சாமி.
அதோடு பெற்றோர் இல்லாத பெண் குழந்தைகளுக்கு 21 வயது நிரம்பும் போது அவர்களுக்கு ₹2 லட்சம் நிதி வங்கி கணக்கில் செலுத்தப்படும் என்றும் அறிவித்திருக்கிறார்.
அதோடு இல்லை
குடியுரிமை திருத்த சட்டம் தொடர்பான விவாதத்தில், சட்டசபையில், நேற்று ஆவேசமாகப் பதிலளித்த முதல்வர், தி.மு.க.,வை உரித்தெடுத்தார். 'குடியுரிமை திருத்த சட்டத்தால், யாராவது ஒருத்தருக்காவது பாதிப்பு ஏற்பட்டதா எனச் சொல்லுங்கள், என, சவால் விட்டதுடன், 'இந்த விவகாரத்தில், உங்களை போல நாங்கள் நடிக்கவில்லை; நாடகமாடவில்லை, என தி.மு.க.,வை கடுமையாக சாடினார். விவாதம்:
தி.மு.க.வின் மனோ தங்கராஜ்:
தமிழக அரசின் கடன், 4.56 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஆனால், கட்டுக்குள் உள்ளதாக, துணை முதல்வர் கூறுகிறார். சர்க்கரை நோய் இருப்பதாக தெரிந்தால், உச்ச வரம்புக்குள் தான் உள்ளது என அமைதியாக இருக்காமல், சர்க்கரை அளவை குறைக்க, சிகிச்சை மேற்கொள்வோம். அதேபோல, கடன் சுமையை குறைக்க, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மாநில வருவாயில், 13 சதவீதம் மட்டுமே, முதலீட்டிற்கு செலவிடப்பட்டுள்ளது. மத்திய அரசு, நம்மை வஞ்சிக்கிறது என்பதை, தொடர்ந்து கூறி வருகிறோம். அது, பட்ஜெட்டிலும் தெரிவிக்கப் பட்டு உள்ளது. மத்திய அரசு, 30 ஆயிரம் கோடி ரூபாய், நிலுவைத்தொகை தர வேண்டியுள்ளது. அதேபோல, மத்திய அரசு பல்வேறு திட்டங்களுக்காக வழங்கிய, 28 ஆயிரத்து, 179 கோடி ரூபாய், திருப்பி அனுப்பப்பட்டு உள்ளது. மத்திய அரசு என்ன தவறு செய்தாலும், அமைதியாக இருக்கிறீர்கள்.
அமைச்சர் ஓ.எஸ்.மணியன்:
மத்திய அரசில், தி.மு.க., இடம் பெற்றிருந்த போதும், காவிரி நடுவர் மன்ற தீர்ப்பை, அரசிதழில் வெளியிட, நீங்கள் நடவடிக்கை எடுக்கவில்லை. ஜெ., சட்டப் போராட்டம் நடத்தி, வெளியிடச் செய்தார். மத்திய அரசில், 16 ஆண்டுகள் இடம் பெற்றிருந்தும், தமிழகத்திற்கு எதை கேட்டு பெற்றீர்கள்?
தி.மு.க., கூட்டணி அரசு, மத்தியில் இருந்த போது தான், மாநில பட்டியலில் இருந்த கல்வி, மத்திய பட்டியலுக்கு மாற்றப்பட்டது.நாங்கள், தமிழகத்திற்கு எதிரான திட்டங்களை எதிர்க்கிறோம். மத்திய அரசுக்கு எதிராக, நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தோம்.
தி.மு.க. சக்கரபாணி:
மாநில பட்டியலில் இருந்து, மத்திய பட்டியலுக்கு, கல்வி மாற்றப்பட்ட போது, தி.மு.க., ஆட்சியில் இல்லை. 'நீட்' தேர்வுக்காக, இரண்டு முறை தீர்மானம் நிறைவேற்றினீர்கள்; உச்ச நீதிமன்றம் சென்றுள்ளீர்கள்; ஆனால், 'நீட்' தேர்வை எதிர்க்கவில்லை. தேசிய வங்கிகளில், விவசாய கடனுக்கான வட்டியை, மத்திய அரசு, 3 சதவீதத்தில் இருந்து, 8 சதவீதமாக உயர்த்தி உள்ளது. அதை, தட்டி கேட்க முடியவில்லை.
முதல்வர்:
உங்கள் எம்.பி.,க்களை, குரல் கொடுக்க சொல்லுங்கள்; இங்கு பேசி பிரயோஜனமில்லை. இங்கு பேசினால், நாங்கள் கேட்கத் தான் முடியும்; அங்கு பேசுங்கள்.
சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர்:
நீங்கள் மத்திய அரசில் இடம் பெற்றிருந்த போது தான், 'நீட்' தேர்வு கொண்டு வரப்பட்டது. இது குறித்து பேச, உங்களுக்கு உரிமை இல்லை. அதேபோல், 'ஹைட்ரோ கார்பன்' திட்டத்தை கொண்டு வந்ததும் தி.மு.க., ஆட்சியில் தான். இது தொடர்பாக, டி.ஆர்.பாலு அளித்த பேட்டி, சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
முதல்வர்:
ஐந்து ஆண்டுகள், மத்திய அமைச்சரவையில், பதவி சுகத்தை அனுபவித்தது நீங்கள். நாங்கள், அமைச்சரவையில் இடம்பெறவில்லை. ஒருவர் உடல்நிலை சரியில்லாமல் இருந்தபோதும், இலாகா இல்லாத மத்திய அமைச்சராக இருந்தார்.
மனோதங்கராஜ்:
மத்திய அரசை பகைத்துக் கொள்ள விரும்பாததால் தான், இந்திய குடியுரிமை திருத்த சட்டத் திற்கு எதிராக, தீர்மானம் கொண்டு வர மறுக்கிறீர்கள்.
முதல்வர்:
இந்திய குடியுரிமை திருத்த சட்டத்தால், யார் பாதிக்கப்பட்டுள்ளார்; பாதிக்கப்பட்டவர் யாராவது ஒருவர் இருந்தால் கூறுங்கள். தவறான தகவல்களை கூறி, அமைதியாக வாழும் மக்களிடம், பிரச்னைகளை ஏற்படுத்துகிறீர்கள்.
மனோதங்கராஜ்:
பாதிப்பு இருப்பதால் தான், பல மாநிலங்களில், அதற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றி உள்ளனர்.
முதல்வர்:
அதுபற்றி, மத்திய அரசு முடிவு செய்யும். நாங்கள், உங்களைப் போல நடிக்கவில்லை; நாடகமாடவும் இல்லை. இவ்வாறு, விவாதம் நடந்தது.
என்னா அடி.. எடப்பாடியார்னா பொட்டு வச்சிகிட்டு, பொங்கல் சாப்டுறவர்னு நினைச்சியா.. மிரண்ட சட்டசபை!
என்னா அடி..எப்பா "கலக்கறாரே முதல்வர்" என்று பாராட்டுக்கள் குவியத் தொடங்கி உள்ளன.. நேற்று சட்டசபையில் குடியுரிமை சட்டம் குறித்து முதல்வர் பேசிய ஆவேச பேச்சுக்களைதான் சோஷியல் மீடியாவில் இப்போது நெட்டிசன்கள் வைரலாக்கி வருகின்றனர்!
வெள்ளை வேட்டி சட்டை, விபூதி என சாந்தமாக காணப்படுபவர் முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி.. எப்போதுமே மென்மை போக்கை கடைப்பிடிப்பவர்.. யாராக இருந்தாலும் இந்த முதல்வரை எளிதில் அணுகி பேசும் அளவுக்கு இயல்பானவர்.. கெடுபிடியோ, கடுகடு பேச்சோ என்றுமே கிடையாது.. இப்படித்தான் இந்த 3 வருஷமாக முதல்வரை நாம் பார்த்து வந்துள்ளோம்.
நேற்றுதான் முதல்முறையாக எடப்பாடியாரின் கோபத்தை பார்க்க நேர்ந்தது.. "எங்களை 37 எம்பிக்கள் இருக்கீங்களே... என்ன செய்யறீங்கன்னு கேள்வி கேட்டீங்களே.. இப்ப நீங்க 38 பேர் இருக்கிறீர்களே என்ன செய்யறீங்க? வேளாண் மண்டலத்தை நீங்களே பேசி வாங்க வேண்டியதுதானே" என்று முதல்வர் பேசியதும் கப்சிப் ஆனது சபை!!
தொடர்ந்து பேசிய முதல்வர், "இதனால் யார் பாதிக்கப்பட்டிருக்காங்க சொல்லுங்க நாங்க தீர்வு காணவேண்டும்... தமிழ்நாட்டில் வாழுகின்ற தமிழ் மண்ணில் பிறந்திருக்கின்ற எந்த சிறுபான்மை மக்கள் பாதிச்சிருக்காங்க என்று சுட்டிக்காடுங்க... நாங்க அதுக்கு பதில் சொல்றோம்.. அதை விட்டுவிட்டு மக்களை ஏமாற்றி நாடகமாடி, தவறான அவதூறான செய்தியையே சொல்லி... இன்றைக்கு நல்லா அமைதியாக நல்லபடியாக இருக்கும் தமிழ்நாட்டில் குந்தகம் ஏற்படும் நிலைக்கு ஆளாக்கியிருக்கிறீர்களே.
என்ன சொல்லுங்க, யார் பாதிச்சிருக்கிறது சொல்லுங்க நான் விளக்கம் சொல்கிறேன்" என்று முதல்வர் இப்படி ஆவேசமாக பேசுவார்என்று யாருமே எதிர்பார்க்கவில்லை.. ஆனால், முதல்வர் இதை கேட்டபோது, ஸ்டாலின் அவையில் இல்லை.. அதேபோல, மூத்த தலைவர்கள் துரைமுருகன் உள்ளிட்டோரும் எந்த பதிலும் இதற்கு சொல்லவில்லை. இந்தச் செயல்படுகள் அவர் மீது மக்கள் பாராட்டும் படி உள்ளன
"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன், வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்; நான் விரும்பிய காளி தருவாள்". - மஹாகவி பாரதியார் சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை எடுத்தனர் அது வெட்டி எடுத்த அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“ நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன் கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...
கருத்துகள்