முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

'நிலம் பூத்து மலர்ந்த நாள்' விருது பெற்ற கே.வி.ஜெயஸ்ரீ


  •       நாவல் மொழிபெயர்ப்பில் உள்ள தாக்கம் இது இதுவே அவருக்கு சாஹித்ய அகாடமி விருதுக்குத் தேர்வானது 'சங்க கால தமிழ் நிலத்தின் பின்னணியில் வைத்துநாவல் மொழிபெயர்ப்பில் உள்ள தாக்கம் இது இதுவே அவருக்கு சாஹித்ய அகாடமி விருதுக்குத் தேர்வானது 'சங்க கால தமிழ் நிலத்தின் பின்னணியில் வைத்து சொல்லப்பட்ட, சொல்லப்படாத மனிதர்களின் உலராக்குருதியும் ஆறாக் கண்ணீரும்கொண்டு அறம் வேண்டி நிற்கும் அணையாஅழல் குறித்த கதை.
    குட்ட நாட்டிலிருந்து அந்த அரசனைத் தொடர்ந்து தமிழ் நிலம் வந்த முன்னோர்களைக் கொண்ட பாணர் குடி ஒன்றின் முதன்மைக் குடும்பம் கொலும்பன் குடும்பம். வறுமை தாளாமல் சிறு வயதிலேயே செல்வம் தேடி குடி நீங்கிய மூத்த மகன் மயிலன், இளமை துவங்கும் மூத்த மகள் சித்திரை, இளைய மகன் உலகன், மகள் சீரை, மனைவி நெல்லக்கிளி. குடும்பம் மீது பாசம் கொண்ட சராசரித் தகப்பன் கொலும்பன். சித்திரை மேல் காதல் போலும் பிரியம் கொண்ட கூத்தன் சந்தன். சந்தனின் சொல் கேட்டு, ஏழிமலை நன்னன் நாட்டில் கண்டதாக சொல்லப்பட்ட மயிலனைத் தேடியும், மக்கள் மத்தியில் மட்டுமே பாடி ஆடும் குடி, முதன் முறையாக ஒரு அரசனைக் ‘’நேரில்’’ கண்டு பாடி ஆடி, பரிசில் பெற்று தனது வறுமையை நீக்கிக் கொள்ளவும் ஏழி மலை நோக்கி பெரும்பாணன் தலைமையில் ஊர்நீங்குகிறது.
    வேல்கெழுகுட்டுவன் பரிசாக அளித்த ஆழியாற்றின் கரையில் அமைந்த உம்பர்க்காட்டில் வசிக்கும் புகழ் வாய்ந்த பெரும் புலவர் பரணரை பாணர் குடி வழியில் சந்திக்க, பரணர் அவர்களுக்கு ஏழி மலை நன்னன் சேரர்களால் வீழத்தப்பட்தை சொல்லி, ஏழ்மை நீங்க பறம்புமலை பாரியை அணுகச் சொல்லி அதற்க்கு பாரியின் அணுக்கத் தோழர் பெரும்புலவர் கபிலரின் துணையை நல்கி, ஆற்றுப் படுத்துகிறார். பாணர் குடி பறம்புமலை நோக்கி நகர, சந்தன் தனது பால்ய நண்பனை தேடி தனியே ஏழி மலை செல்கிறான்.பாரியின் அவையில் ஆடல் பாடல் முடிந்ததும், பாரியைக் கொல்ல அரண்மைனைக்குள்ளேயே அவ்வமையம் நிகழ்ந்த சதியில், பாணர் குடி சிக்கிக் கொள்ள, சதிகாரர்களால் அரசன் பாரியும், கொலும்பனும் கொல்லப் படுகிறார்கள்.
    கபிலர் துணையுடன் பறம்புமலை விட்டு தப்பிக்கும் பாணர் குழு, போக்கிடம் அறியாமல் பயணித்து, ஒரு ஆயர் புறச் சேரியில் அடைக்கலம் பெறுகின்றனர். சீரையின் நடத்தையில் விசித்திரம் கூடுகிறது. ஆயர் குடியில் சித்திரைக்கு கிளியோலம் தோழியாகக் கிடைக்கிறாள். குதிரைமலை அதியமானின், படைத் தளபதி தகடூரை சேர்ந்த மகீரன் காதலனாகக் கிடைக்கிறான். கபிலர் முசிறியில் சேர மன்னனுடன் இருப்பதை அறிந்து, பாணர் குடி முசிறி நோக்கி நகர, சித்திரை குடும்பத்திடம் விடை பெற்று மகீரனுடன் தகடூர் செல்கிறாள். அங்கே சித்திரைக்கு அதியமானுடன் நெருங்கிய நட்பு கொண்ட அவ்வையின் துணை கிடைக்கிறது. சித்திரைக்கு தெரியாமல் வேறு ஒரு பெண்ணுடனும் தொடர்பில் இருக்கும் மகீரன், சித்திரையுடன் ஊடல் கொண்டு பிரிகிறான். தொலைந்த அண்ணன் மயிலன் மகீரனின் நெருங்கிய நண்பன், தான் மயிலனின் தங்கை என மகீரன் அறிந்தே இருக்கிறான், என அவ்வை வழியே அறிகிறாள். தான் அறியாத விளையாட்டு ஒன்றினில் யாராலோ தனது குடும்பமும் காதலும், வாழ்வும் வெறும் பொம்மைகளாக வைத்து ஆடப்படுவதை சித்திரை அறிய வருகிறாள். முசிறியில் அரசனையோ, கபிலரையோ காண இயலாத பாணர் குடியும், ஏழி மலையில் மயிலனை காண இயலாத சந்தனும் மீண்டும் சொந்த ஊர் திரும்ப முடிவு செய்து, சித்திரையின் தனிமை அறிந்து அவளையும் உடன் அழைக்கிறார்கள். சித்திரை வர மறுத்து அவ்வை வசம் அடைக்கலம் அடைகிறாள்.
    சிறு வயதில் குடும்பம் விட்டு வெளியேறிய மயிலன், கள்வர் கூட்டத்துடன் இணைகிறான், நன்னன் படையால் கைது செய்யப் படுகிறான். பரணர் பார்வையில் பட்டு, அவன் பாணர் குடி ஒன்றினை சேர்ந்தவன் என அறியப்பட்டு, பரணரால் மீட்கப்படுகிறான். பரணர் வசம் கல்வியும் அரசியலும் கற்கிறான். நன்னனின் மெய்க் காப்பாளன் எனும் நிலை வரை உயர்கிறான். பெண் கொலை செய்த நன்னன் என புலவர் பழிக்கும் நன்னனின் செயலுக்கு மறைமுக ஊக்கியாக, முதன்மைக் காரணமாக ஆகிறான். நன்னன் ஆட்சியை விட்டு புலவர்கள் நீங்க, சேரர்கள் வசம் சமாதான தூதுவர்களாக செல்ல பரணரோ, பிறரோ இன்றி சேரனுடனான போரில் நன்னன் வீழ்கிறான். நாடிழந்து நாடோடியாக ஓடும் மயிலன், மகீரனை சந்திக்கிறான். சேரனுக்கு உளவாக செயல்படும் மகீரன் மயிலனை துணைக்கு சேர்த்துக் கொள்கிறான், சேரனுக்கு ஆதரவாக உளவு செய்ய மயிலன் சாமி என்ற பெயரில் பறம்புமலை நுழைகிறான்.  தனது கல்வியையும் பரணரின் நட்பையும் குறிப்பிட்டு கபிலரின் நட்பை பெறுகிறான். தருணம் வருகையில் ஒரு இக்கட்டு ஒன்றினில் நிறுத்தி கபிலரை தனது ஒற்று வேலைக்கு துணை சேர்க்கிறான். நாள் வருகிறது. சதி அரங்கேறுகிறது. மயிலன் பாரியைக் கொன்று தப்பிக்கிறான். சதியில் சிக்கி கொலும்பன் குடும்பம் சிதறுகிறது. சதியில் சிக்கியது தனது குடும்பம் என்பதை அறிந்து தவிக்கும் மயிலன், மகீரனின் துணையை நாடுகிறான், மகீரன் அவர்களை பாதுகாப்பதாக சொல்லி விட்டு அப் பணியில், சித்திரையின் மனம் மயக்கி அவளை ஏமாற்றுகிறான். மகீரனின் அனைத்து செயல்களும் சந்தன் வழியே மயிலனுக்கு தெரிய வருகிறது. நெடிய காலம்.எங்கோ துவங்கிய மயிலன் வாழ்வு எங்கோ, சென்று எங்கோ திரும்பி , பாலைப் பாறையில் விழுந்த துளி நீர் போல ஆகிறது. மயிலன் மீண்டும் குடும்பம் சேர்கிறான். பாணர் குடி சொந்த ஊர் திரும்பும் வழியில் உம்பர்க்காட்டில் பரணரை சந்திக்கிறார்கள். பரணர் தனக்கு பரிசாகக் கிடைத்த உம்பர்க் காட்டையும் பெரும் செல்வத்தையும் அந்த பாணர் குடிக்கு பரிசளித்து விட்டு சென்று மறைகிறார். ஆழியாற்றின் கரையில் சிறு குன்று. அதன் உச்சியில் சிறு கோவில். மயிலன் அங்கு செல்கிறான். அதிர்கிறான். நன்னன் கொலை செய்த பெண் அங்கே தெய்வமாக அமர்ந்திருக்கிறாள்'....
    சாகித்திய அகாதமி விருது (Sahitya Akademi Award), சிறந்த இந்திய இலக்கிய படைப்பாளிகளுக்கு, இந்திய அரசால் ஒவ்வோர் ஆண்டும் தேசிய அளவிலும் மாநில அளவிலும் வழங்கப்படும் மதிப்பிற்குரிய விருதாகும். பரிசுத்தொகையாக 1,00,000 ரூபாயும், ஒரு பட்டயமும் வழங்கப்படுகின்றன. இருபத்து நான்கு இந்திய மொழிகளில் சிறுகதை, நாவல், இலக்கிய விமர்சனம் போன்ற பலவகையான எழுத்தாக்கங்களிற்கு இவ்விருது வழங்கப்படுகிறது. சாகித்ய அகாதமி இந்திய அரசினால், மார்ச் 12, 1954 இல் துவக்கப்பட்ட ஓர் அமைப்பு. இந்திய மொழிகளில் இலக்கியமும் இலக்கியம் சார்ந்த நடவடிக்கைகளை ஒருங்கிணைக்கும் எண்ணத்தோடு துவக்கப்பட்ட அமைப்பு, சாகித்ய அகாதமி. இதுவரை ஆறாயிரத்திற்கும் மேற்பட்ட இலக்கிய கூட்டங்களும், பயிற்சி முகாம்களும் மற்ற பிற இலக்கியம் சார்ந்த நடவடிக்கைகளை நடத்தியுள்ளது சாகித்ய அகாதமி.
    இந்திய மொழிகளில் வெளிவரும் சிறந்த படைப்புகளை பிற மொழிகளில் மொழிபெயர்த்து வெளியிடுவது, சிறந்த படைப்புகளை விருது அளித்து ஊக்கப்படுத்துவது போன்ற பல பணிகளை செய்வது
    விருதுக்குத் தேர்ந்தெடுக்க
    இது, நீண்ட, ஒராண்டு கால விவாதம் மற்றும் தேர்வுகளைக் கொண்டது. இந்த விருது இந்திய எழுத்தாளர்களை அங்கீகரிக்கவும், அவர்களை உலகிற்கு அறிமுகப்படுத்தவும் ஒர் ஊடகமாகத் திகழ்கிறது. அதுமட்டுமன்றி தற்கால மாறுதல்களையும், புதிய நிகழ்வுகளையும் ஏற்றுக்கொண்டு இந்திய இலக்கியங்களை விரிவுபடுத்துவது இதன் நோக்கமாகும்.
    முதற்கட்டமாக தகுதியான புத்தகங்கள் அகாதமித் தலைவரால் நியமிக்கப்பட்ட ஒரிரண்டு வல்லுனர்களால் தேர்வு செய்யப்பட்டு, 10 மொழி வல்லுனர்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. ஒவ்வொரு மொழி வல்லுனரும் இரண்டு புத்தகங்களை விருதுக்குப் பரிந்துரைப்பார்கள். இவ்வாறு பரிந்துரைக்கப்பட்ட பட்டியல் மூன்று நீதிபதிகளின் பார்வைக்கு அனுப்பப்படுகிறது. அதிக வாக்குகளை அல்லது அனைவராலும் ஏகமனதாக தேர்வு செய்யப்பட்ட ஒரே ஒரு புத்தகமே விருதுக்கு தேர்வுக்கு செய்யப்படுகிறது. பின்னர் அகாதமியின் செயற்குழு அங்கீகாரம் மற்றும் அறிவித்தலுக்கு அனுப்பப்படுகிறது.
    தமிழில் சிறந்த மொழிபெயர்ப்பாளருக்கான சாகித்திய அகாதமி விருதானது நிலம் பூத்து மலர்ந்த நாள் என்ற நாவலின் சிறந்த மொழிபெயர்ப்புக்கான சாகித்திய அகாதமி விருது கே.வி ஜெயஸ்ரீக்கு வழங்கப்பட்டுள்ளது. 
    மலையாளத்தில் மனோஜ் குரூர் எழுதிய நாவலை தமிழில் மொழி பெயர்த்தார் ஜெயஸ்ரீக்கு மொழி பெயர்ப்புக்கான சாகித்ய அகாடமி விருது பெற்ற கே.வி.ஜெயஸ்ரீ க்கு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தொலைபேசி வாயிலாகவும் அ இ அ  தி மு க செய்தித் தொடர்பாளர் வைகைச் செல்வனும் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர் .பலதரப்பட்ட மக்களின் வாழ்த்து மழையில் எழுத்தாளர் சொல்லப்பட்ட, சொல்லப்படாத மனிதர்களின் உலராக்குருதியும் ஆறாக் கண்ணீரும்கொண்டு அறம் வேண்டி நிற்கும் அணையாஅழல் குறித்த கதை.
    குட்ட நாட்டிலிருந்து அந்த அரசனைத் தொடர்ந்து தமிழ் நிலம் வந்த முன்னோர்களைக் கொண்ட பாணர் குடி ஒன்றின் முதன்மைக் குடும்பம் கொலும்பன் குடும்பம். வறுமை தாளாமல் சிறு வயதிலேயே செல்வம் தேடி குடி நீங்கிய மூத்த மகன் மயிலன், இளமை துவங்கும் மூத்த மகள் சித்திரை, இளைய மகன் உலகன், மகள் சீரை, மனைவி நெல்லக்கிளி. குடும்பம் மீது பாசம் கொண்ட சராசரித் தகப்பன் கொலும்பன். சித்திரை மேல் காதல் போலும் பிரியம் கொண்ட கூத்தன் சந்தன். சந்தனின் சொல் கேட்டு, ஏழிமலை நன்னன் நாட்டில் கண்டதாக சொல்லப்பட்ட மயிலனைத் தேடியும், மக்கள் மத்தியில் மட்டுமே பாடி ஆடும் குடி, முதன் முறையாக ஒரு அரசனைக் ‘’நேரில்’’ கண்டு பாடி ஆடி, பரிசில் பெற்று தனது வறுமையை நீக்கிக் கொள்ளவும் ஏழி மலை நோக்கி பெரும்பாணன் தலைமையில் ஊர்நீங்குகிறது.
    வேல்கெழுகுட்டுவன் பரிசாக அளித்த ஆழியாற்றின் கரையில் அமைந்த உம்பர்க்காட்டில் வசிக்கும் புகழ் வாய்ந்த பெரும் புலவர் பரணரை பாணர் குடி வழியில் சந்திக்க, பரணர் அவர்களுக்கு ஏழி மலை நன்னன் சேரர்களால் வீழத்தப்பட்தை சொல்லி, ஏழ்மை நீங்க பறம்புமலை பாரியை அணுகச் சொல்லி அதற்க்கு பாரியின் அணுக்கத் தோழர் பெரும்புலவர் கபிலரின் துணையை நல்கி, ஆற்றுப் படுத்துகிறார். பாணர் குடி பறம்புமலை நோக்கி நகர, சந்தன் தனது பால்ய நண்பனை தேடி தனியே ஏழி மலை செல்கிறான்.பாரியின் அவையில் ஆடல் பாடல் முடிந்ததும், பாரியைக் கொல்ல அரண்மைனைக்குள்ளேயே அவ்வமையம் நிகழ்ந்த சதியில், பாணர் குடி சிக்கிக் கொள்ள, சதிகாரர்களால் அரசன் பாரியும், கொலும்பனும் கொல்லப் படுகிறார்கள்.
    கபிலர் துணையுடன் பறம்புமலை விட்டு தப்பிக்கும் பாணர் குழு, போக்கிடம் அறியாமல் பயணித்து, ஒரு ஆயர் புறச் சேரியில் அடைக்கலம் பெறுகின்றனர். சீரையின் நடத்தையில் விசித்திரம் கூடுகிறது. ஆயர் குடியில் சித்திரைக்கு கிளியோலம் தோழியாகக் கிடைக்கிறாள். குதிரைமலை அதியமானின், படைத் தளபதி தகடூரை சேர்ந்த மகீரன் காதலனாகக் கிடைக்கிறான். கபிலர் முசிறியில் சேர மன்னனுடன் இருப்பதை அறிந்து, பாணர் குடி முசிறி நோக்கி நகர, சித்திரை குடும்பத்திடம் விடை பெற்று மகீரனுடன் தகடூர் செல்கிறாள். அங்கே சித்திரைக்கு அதியமானுடன் நெருங்கிய நட்பு கொண்ட அவ்வையின் துணை கிடைக்கிறது. சித்திரைக்கு தெரியாமல் வேறு ஒரு பெண்ணுடனும் தொடர்பில் இருக்கும் மகீரன், சித்திரையுடன் ஊடல் கொண்டு பிரிகிறான். தொலைந்த அண்ணன் மயிலன் மகீரனின் நெருங்கிய நண்பன், தான் மயிலனின் தங்கை என மகீரன் அறிந்தே இருக்கிறான், என அவ்வை வழியே அறிகிறாள். தான் அறியாத விளையாட்டு ஒன்றினில் யாராலோ தனது குடும்பமும் காதலும், வாழ்வும் வெறும் பொம்மைகளாக வைத்து ஆடப்படுவதை சித்திரை அறிய வருகிறாள். முசிறியில் அரசனையோ, கபிலரையோ காண இயலாத பாணர் குடியும், ஏழி மலையில் மயிலனை காண இயலாத சந்தனும் மீண்டும் சொந்த ஊர் திரும்ப முடிவு செய்து, சித்திரையின் தனிமை அறிந்து அவளையும் உடன் அழைக்கிறார்கள். சித்திரை வர மறுத்து அவ்வை வசம் அடைக்கலம் அடைகிறாள்.
    சிறு வயதில் குடும்பம் விட்டு வெளியேறிய மயிலன், கள்வர் கூட்டத்துடன் இணைகிறான், நன்னன் படையால் கைது செய்யப் படுகிறான். பரணர் பார்வையில் பட்டு, அவன் பாணர் குடி ஒன்றினை சேர்ந்தவன் என அறியப்பட்டு, பரணரால் மீட்கப்படுகிறான். பரணர் வசம் கல்வியும் அரசியலும் கற்கிறான். நன்னனின் மெய்க் காப்பாளன் எனும் நிலை வரை உயர்கிறான். பெண் கொலை செய்த நன்னன் என புலவர் பழிக்கும் நன்னனின் செயலுக்கு மறைமுக ஊக்கியாக, முதன்மைக் காரணமாக ஆகிறான். நன்னன் ஆட்சியை விட்டு புலவர்கள் நீங்க, சேரர்கள் வசம் சமாதான தூதுவர்களாக செல்ல பரணரோ, பிறரோ இன்றி சேரனுடனான போரில் நன்னன் வீழ்கிறான். நாடிழந்து நாடோடியாக ஓடும் மயிலன், மகீரனை சந்திக்கிறான். சேரனுக்கு உளவாக செயல்படும் மகீரன் மயிலனை துணைக்கு சேர்த்துக் கொள்கிறான், சேரனுக்கு ஆதரவாக உளவு செய்ய மயிலன் சாமி என்ற பெயரில் பறம்புமலை நுழைகிறான்.  தனது கல்வியையும் பரணரின் நட்பையும் குறிப்பிட்டு கபிலரின் நட்பை பெறுகிறான். தருணம் வருகையில் ஒரு இக்கட்டு ஒன்றினில் நிறுத்தி கபிலரை தனது ஒற்று வேலைக்கு துணை சேர்க்கிறான். நாள் வருகிறது. சதி அரங்கேறுகிறது. மயிலன் பாரியைக் கொன்று தப்பிக்கிறான். சதியில் சிக்கி கொலும்பன் குடும்பம் சிதறுகிறது. சதியில் சிக்கியது தனது குடும்பம் என்பதை அறிந்து தவிக்கும் மயிலன், மகீரனின் துணையை நாடுகிறான், மகீரன் அவர்களை பாதுகாப்பதாக சொல்லி விட்டு அப் பணியில், சித்திரையின் மனம் மயக்கி அவளை ஏமாற்றுகிறான். மகீரனின் அனைத்து செயல்களும் சந்தன் வழியே மயிலனுக்கு தெரிய வருகிறது. நெடிய காலம்.எங்கோ துவங்கிய மயிலன் வாழ்வு எங்கோ, சென்று எங்கோ திரும்பி , பாலைப் பாறையில் விழுந்த துளி நீர் போல ஆகிறது. மயிலன் மீண்டும் குடும்பம் சேர்கிறான். பாணர் குடி சொந்த ஊர் திரும்பும் வழியில் உம்பர்க்காட்டில் பரணரை சந்திக்கிறார்கள். பரணர் தனக்கு பரிசாகக் கிடைத்த உம்பர்க் காட்டையும் பெரும் செல்வத்தையும் அந்த பாணர் குடிக்கு பரிசளித்து விட்டு சென்று மறைகிறார். ஆழியாற்றின் கரையில் சிறு குன்று. அதன் உச்சியில் சிறு கோவில். மயிலன் அங்கு செல்கிறான். அதிர்கிறான். நன்னன் கொலை செய்த பெண் அங்கே தெய்வமாக அமர்ந்திருக்கிறாள்'....
    சாகித்திய அகாதமி விருது (Sahitya Akademi Award), சிறந்த இந்திய இலக்கிய படைப்பாளிகளுக்கு, இந்திய அரசால் ஒவ்வோர் ஆண்டும் தேசிய அளவிலும் மாநில அளவிலும் வழங்கப்படும் மதிப்பிற்குரிய விருதாகும். பரிசுத்தொகையாக 1,00,000 ரூபாயும், ஒரு பட்டயமும் வழங்கப்படுகின்றன. இருபத்து நான்கு இந்திய மொழிகளில் சிறுகதை, நாவல், இலக்கிய விமர்சனம் போன்ற பலவகையான எழுத்தாக்கங்களிற்கு இவ்விருது வழங்கப்படுகிறது. சாகித்ய அகாதமி இந்திய அரசினால், மார்ச் 12, 1954 இல் துவக்கப்பட்ட ஓர் அமைப்பு. இந்திய மொழிகளில் இலக்கியமும் இலக்கியம் சார்ந்த நடவடிக்கைகளை ஒருங்கிணைக்கும் எண்ணத்தோடு துவக்கப்பட்ட அமைப்பு, சாகித்ய அகாதமி. இதுவரை ஆறாயிரத்திற்கும் மேற்பட்ட இலக்கிய கூட்டங்களும், பயிற்சி முகாம்களும் மற்ற பிற இலக்கியம் சார்ந்த நடவடிக்கைகளை நடத்தியுள்ளது சாகித்ய அகாதமி.
    இந்திய மொழிகளில் வெளிவரும் சிறந்த படைப்புகளை பிற மொழிகளில் மொழிபெயர்த்து வெளியிடுவது, சிறந்த படைப்புகளை விருது அளித்து ஊக்கப்படுத்துவது போன்ற பல பணிகளை செய்வது
    விருதுக்குத் தேர்ந்தெடுக்க
    இது, நீண்ட, ஒராண்டு கால விவாதம் மற்றும் தேர்வுகளைக் கொண்டது. இந்த விருது இந்திய எழுத்தாளர்களை அங்கீகரிக்கவும், அவர்களை உலகிற்கு அறிமுகப்படுத்தவும் ஒர் ஊடகமாகத் திகழ்கிறது. அதுமட்டுமன்றி தற்கால மாறுதல்களையும், புதிய நிகழ்வுகளையும் ஏற்றுக்கொண்டு இந்திய இலக்கியங்களை விரிவுபடுத்துவது இதன் நோக்கமாகும்.
    முதற்கட்டமாக தகுதியான புத்தகங்கள் அகாதமித் தலைவரால் நியமிக்கப்பட்ட ஒரிரண்டு வல்லுனர்களால் தேர்வு செய்யப்பட்டு, 10 மொழி வல்லுனர்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. ஒவ்வொரு மொழி வல்லுனரும் இரண்டு புத்தகங்களை விருதுக்குப் பரிந்துரைப்பார்கள். இவ்வாறு பரிந்துரைக்கப்பட்ட பட்டியல் மூன்று நீதிபதிகளின் பார்வைக்கு அனுப்பப்படுகிறது. அதிக வாக்குகளை அல்லது அனைவராலும் ஏகமனதாக தேர்வு செய்யப்பட்ட ஒரே ஒரு புத்தகமே விருதுக்கு தேர்வுக்கு செய்யப்படுகிறது. பின்னர் அகாதமியின் செயற்குழு அங்கீகாரம் மற்றும் அறிவித்தலுக்கு அனுப்பப்படுகிறது.
    தமிழில் சிறந்த மொழிபெயர்ப்பாளருக்கான சாகித்திய அகாதமி விருதானது நிலம் பூத்து மலர்ந்த நாள் என்ற நாவலின் சிறந்த மொழிபெயர்ப்புக்கான சாகித்திய அகாதமி விருது கே.வி ஜெயஸ்ரீக்கு வழங்கப்பட்டுள்ளது. 
    மலையாளத்தில் மனோஜ் குரூர் எழுதிய நாவலை தமிழில் மொழி பெயர்த்தார் ஜெயஸ்ரீக்கு மொழி பெயர்ப்புக்கான சாகித்ய அகாடமி விருது பெற்ற கே.வி.ஜெயஸ்ரீ க்கு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தொலைபேசி வாயிலாகவும் அ இ அ  தி மு க செய்தித் தொடர்பாளர் வைகைச் செல்வனும் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர் .பலதரப்பட்ட மக்களின் வாழ்த்து மழையில் எழுத்தாளர்.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி நடத்திய சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினவிழா

1992-ஆம் ஆண்டு முதல்   ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 3 ஆம் தேதி ஐக்கிய நாடுகள் சபையால் அங்கீகரித்த சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் IDPD ஆகும், இது சமூகம் மற்றும் வளர்ச்சியின் அனைத்து நிலைகளிலும் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள், நல்வாழ்வு மற்றும் பங்கேற்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது. சமூகத்தில் மாற்றுத்திறனாளிகளின் பங்களிப்பை அங்கீகரித்தல். அவர்களின் உரிமைகளை வலியுறுத்துதல். அவர்களின் நல்வாழ்வு மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சியை ஊக்குவித்தல்.  இந்த நாளில் உலகெங்கிலும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள் மற்றும் உதவிகள் வழங்கும் விழாக்கள் நடத்தப்படுகின்றன. அதை இந்த ஆண்டு காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் சிறப்புக் கல்வி மற்றும் மறுவாழ்வு அறிவியல் துறை,  மற்றும்  டாக்டர் அழகப்பா கல்வி அறிவியல் நிறுவனம் ,  மற்றும் காரைக்குடி ஹெரிடேஜ் ரோட்டரி கிளப், மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான மல்டிமோடல் மெட்டீரியல் உற்பத்திக்கான மையம், மற்றும்  ஐடி மற்றும் ஆட்டிசத்திற்கான அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி சார்பில் இந்த ஆணடு விழா சர்வதேச மாற்று...

சோழப் பேரரசி வானதி எழுப்பிய மூவர் கோவில்

முதலாம் இராஜேந்திர சோழரின் தாய்  வானவன் மாதேவி எனும் அரசி வானதி, சோழர்களின் வரலாற்றில் பெரும் புகழ் மாமன்னர் அருள்மொழித் தேவன் எனும் இராஜராஜசோழச் சக்கரவர்த்தி மீது இணையில்லாத காதல் மங்கை கொடும்பாளூர் இளவரசி வானதியை "பொன்னியின் செல்வன்" கதை படித்த யாரும் மறக்க முடியாது. சோழர் கடற்படையின் பரப்பை இலங்கை வரை  சென்று வென்று வந்த வரலாற்று நிகழ்வுகளின் மூலம் குறுநில மன்னர்கள் அல்லது வேளிர்  துணை நின்றார்கள் அதில் ஈழத்துப் பட்டம்  வென்ற கொடும்பாளூர் வேளிர் மகளான வானதி இளம் வயதிலேயே தாய் தந்தையை இழந்தவர். கொடும்பாளூர் சிற்றரசன் அதாவது வேளிர் சோழ சாம்ராஜ்யத்தின் சேனாதிபதி யாகவும் இருந்த சிறிய தந்தை குறுநில மன்னர் பூதி விக்ரமகேசரியால் வளர்க்கப்பட்டவர் தான் வானவன் மாதேவி எனும் அரசி வானதி. கொடும்பாளூர் பிறந்து திருக்கோவிலூரை பின்னர் ஆண்ட மலையமானின் மகள்  “மேலும் வானவன்மாதேவி மன்னர் ராஜராஜ சோழர் மறைந்த உடன் பிரிவாற்றாமல் உடன்கட்டை ஏறி தன் உயிரை மாய்த்துக் கொண்டாள். இதை திருவாலங்காட்டுச் செப்பேடுகள் மூலம் அறியலாம் ஈழத்தில் நடைபெற்ற யுத்தத்திற்காக கொடும்பாளூர்  வேளிர் கடல...