கொரோனா வைரஸ் நோய் (COVID-19) பாதிப்பு புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கியைச் சேர்ந்த உணவகம் நடத்தும் சக்திகுமார். கடந்த 4-ம் தேதி சீனாவிலிருந்து சொந்த ஊருக்கு திரும்பினார். வந்த சில நாளில் உடல்நலக்குறைவு ஏற்பட்டு மதுரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றவர் கடந்த 14 ஆம் தேதி உயிரிழந்தார். அவருக்கு நுரையீரல் பாதிப்பு மற்றும் மஞ்சள் காமாலை இருந்ததாக கூறப்படுகிறது.
சக்திகுமார் இறந்தது குறித்து சுகாதாரத்துறையிடம் கேட்டபோது அவர் சீனாவில் இருந்து திரும்பியவர் என்பதே இப்போது தான் அதிகாரிகளுக்கு தெரியவந்துள்ளது. சீனாவில் இருந்து திரும்பியவர்களை கண்காணித்து வருவதாக கூறும் நபர்களின் பட்டியலில் சக்திகுமார் பெயர் இல்லை. உயிரிழந்த நிகழ்வு அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சக்திகுமார் உண்மையிலேயே மஞ்சள் காமாலை நோயால் இறந்தாரா? அல்லது கொரோனா வைரஸ் பாதிப்பால் இறந்தாரா? என சுகாதாரத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.கொரோனா கோரத் தாண்டவம்.. சிகிச்சையளித்தவர்களையும் காவு கேட்கிறது.. வுஹான் மருத்துவமனை இயக்குநர் சீனாவின் கொரோனா வைரஸ் தொற்றுநோயால் இறந்தவர்களின் எண்ணிக்கை இன்று 1,868 ஆக உயர்ந்தது, கடந்த 24 மணி நேரத்தில், 98 பேர் அந்த நோய்க்கு பலியாகியுள்ளனர்.
உறுதிப்படுத்தப்பட்ட மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 72,436 ஆக உயர்ந்துள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர். சமீபத்தில் பலியானவர்களில், 93 பேர் வைரஸ் பரவத் தொடங்கிய மையப்பகுதியான ஹூபே மாகாணத்தை சேர்ந்தவர்கள், ஹெனானை சேர்ந்த மூன்று பேரும், ஹெபீ மற்றும் ஹுனானில் இருந்து தலா ஒருவரும் உயிரிழந்துள்ளனர் என்று தேசிய சுகாதார ஆணையம் தெரிவித்துள்ளது.
ஹூபேயில், 1,807 புதிய உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகள் கண்டறியப்பட்டுள்ளனர். கொடுமையின் உச்சமாக, வுஹான் பகுதியிலுள்ள ஒரு மருத்துமனையின் இயக்குநரும், கொரோனா வைரஸ் தாக்கி பலியாகியுள்ளார்.
வுஹானில் உள்ள வுச்சாங் மருத்துவமனையின் இயக்குனர் லியு ஜிமிங் செவ்வாய்க்கிழமை காலை பலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது சிகிச்சை முயற்சிகள் தோல்வியடைந்த நிலையில் லியு ஜிமிங் இறந்தார் என்று சீன அரசின் ஊடகம் சி.சி.டி.வி தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸால் இறந்த முதல் மருத்துவமனை இயக்குனர் இவர் என்பது பெரும் சோகம்.
இதனிடையே, மார்ச் 2 முதல் அமெரிக்க மருத்துவ உபகரணங்களை இறக்குமதி செய்வதற்கான வரியை ரத்து செய்வதாக சீனா அறிவித்துள்ளது. அமெரிக்கா-சீனா இடையே வர்த்தக போர் நடந்து வந்தது. இரு நாடுகளும் பரஸ்பரம் இறக்குமதி வரிகளை தாறுமாறாக கூட்டிக் கொண்டன. ஆனால் மனிதாபிமான அடிப்படையில் அமெரிக்கா, இந்த மருத்துவ உபகரணங்களை, சீனா அனுப்பி வைத்துள்ளது. அவற்றுக்கான வரியை சீனா ரத்து செய்ய முன்வந்துள்ளது.
- சீனாவில் ‘கொவைட்-19’ வைரஸுக்கு (கரோனா வைரஸ்) பலியானவா்களின் எண்ணிக்கை 1,868ஆக உயா்ந்துள்ளது.
சீனாவின் ஹூபே மாகாணத்தில் மட்டும் கொவைட்-19 வைரஸ் காய்ச்சலுக்கு கடந்த 24 மணி நேரத்தில் 93 போ் உயிரிழந்தனா். இதையடுத்து, கொவைட்-19 வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 1,868ஆகவும்
இதுதவிர, கடந்த ஒருநாளில் சீனா முழுவதும் கொவைட்-19 வைரஸ் கூடுதலாக 1,886 பேரைத் தொற்றியிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், கொவைட்-19 வைரஸால் பாதிக்கப்பட்டவா்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 72,436க்கும் அதிகமாக உயா்ந்துள்ளது. இது நம் நாட்டில் அதிகம் பாதிக்காது அதற்குக் காரணம் பல உலகின் முதல் எயிட்ஸ் நோயாளி-காங்கோ.
உலகின் முதல் நிபா வைரஸ் நோயாளி-மலேஷியா.
உலகின் முதல் கொரோனா நோயாளி-சீனா.
உலகின் முதல் எபோலா நோயாளி-தெற்கு சூடான்.
உலகின் முதல் பறவைகாய்ச்சல் நோயாளி-ஹாங்காங்.
உலகின் முதல் டெங்கு நோயாளி-மணிலா.
ஆனால் வருடம்தோறும் புஷ்கரம்,கும்பமேளா, தேர் திருவிழா என லட்ச கணக்கில் கூட்டம் கூட்டமாக நதிகளில் முங்கி எழும் நம் நாட்டில் இவை தோன்றவில்லை. ப்ளேக், பெரியம்மை, காலராவும் கூட நமக்கு ஐரோப்பியக் கொடை என்பதே உண்மை நமது வாழ்வியல் உணவு முறை மருத்துவம் சார்ந்தே சீனாவின்
இரண்டு நகரத்தை நரகமாக்கிய கொல்லை நோய் (கொரோணா) வூகான்,ஹூவே இந்த நகரகளை சீனாஅரசு கைவிட முடிவு கடந்த பத்து வருடங்களில் உலகமே வியக்கும் அளவு கட்டுமானம் உற்பத்தி ராணுவம் என சகல துறையிரும் அபார வளர்ச்சி பெற்றது சீனா. ஆனால் உணவு பழக்கவழக்கங்கள் வாழ்வியல் நெறிமுறைகள் என எதையும் சரியாக கடைபிடிக்காத காரணத்தால் கொரானா வைரஸ் என்ற கொடிய நோயால் ஆயிரக்கணக்கான மக்களை பலிகொடுத்து கொண்டிருக்கிற
எண்ணிக்கை மிகக்குறைவே ஆனால் இறந்தவர்கள் மற்றும் பாதிக்கபட்டவர்கள் பல மடங்கு அதிகம் என வெளிநாட்டு செய்தி நிறுவனங்கள் தெரிவிக்கின்றன. கொரானா வைரஸால் பாதிக்கபட்ட வூகான் மற்றும் ஹூவே மாகாணங்களை இழந்தாலும் பரவாயில்லை நாட்டை காப்பாற்ற வேண்டும் என்ற நிலைக்கு சீன அரசு வந்துவிட்டது.
அந்த குறிப்பிட்ட மகாணங்களில் இருந்து வரும் வீடியோக்கள் அதிர வைக்கின்றன. அங்கு நிலவி வரும் 4-5 டிகிரி கடும் குளிர் நோயை வேகமாக பரப்பி வருகிறது. சீதோஷண நிலை மாறினால் மட்டுமே நோயின் தாக்கம் குறையும் என்பதே இன்றைய நிலை வருடம் முழுவதும் வெப்பமாக இருக்கும் நம் நாட்டிலே நம் முன்னோர்கள் எந்த மாதத்தில் அசைவம் தவிர்க்க வேண்டும் எதை உண்ண வேண்டும் என சொல்லி வைத்தனர் ஒவ்வொரு கடவுளின் பெயரால் மக்களை கட்டுபடுத்தி வைத்தனர். எந்தந்த நாட்களில் அசைவம் உண்ணகூடாது என்பதும் எந்த நாட்களில் விரதம் இருக்க சொல்லியதும் ஆன்மீகமே.பிற உயிர்களை புசிககும் விலங்குகள் போல வாழ்ந்த மனிதனை மனிதனாக மாற்றியது ஆன்மீகமே. மேலும் எந்த ஒரு நாடும் ஒரு நல்ல கலாச்சாரத்தின் மீதும் பண்பாட்டின் மீதும் கட்டமைக்க பட்டிருக்க வேண்டும் இல்லாவிட்டால் அந்த வளர்ச்சியால் பயனில்லை என்பதே சீனா நமக்கு உணர்த்தும் பாடம். ஆனால் இங்கே கலாச்சாரம் பண்பாடு என்பது மதம் சார்ந்தே இருக்கிறது.
சீனாவில் கொரோனா வைரஸ் காரணமாக இந்திய மருந்து உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது._ தலைவலி, காய்ச்சல், நீரிழிவு, நோய் எதிர்ப்பு மருந்துகள் உட்பட, அத்தியாவசிய மருந்துகள் இந்த மாதம் வரைதான் இருப்பு உள்ளன.
எனவே, அடுத்த மாதம் இவற்றுக்கு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது என பிக்கி தெரிவித்துள்ளது.சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பல்வேறு தொழில்துறை நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. இந்த சூழ்நிலையில், கொரோனா வைரசால் தொழில்துறைக்கு ஏற்பட்ட பாதிப்பு குறித்து இந்திய தொழில் வர்த்தக கூட்டமைப்பு (பிக்கி) ஆய்வறிக்கை வெளியிட்டுள்ளது. தொழில்துறையினரிடம் இருந்து பெறப்பட்ட தகவல்களின்படி, கொரோனா வைரசால் மருந்து பொருட்கள் உற்பத்தி கடுமையாக பாதிப்பு அடைந்து வருகிறது.
இந்தியாவில் மருந்து உற்பத்திக்கு தேவையான மருந்துகள் மற்றும் மருந்து மூலப்பொருட்கள் தேவைக்கு 70 சதவீதம் சீனாவையே நம்பியிருக்க வேண்டியுள்ளது.
சில மருந்துகளுக்கான மூலப்பொருட்கள் இருப்பு 2 முதல் 3 மாதங்கள் வரை உள்ளது. ஆனால், சில அத்தியாவசிய மருந்துகளுக்கு கூட தட்டுப்பாடு ஏற்படும் நிலை உருவாகியுள்ளது.
கருத்துகள்