8,500 பிஎஸ்என்எல் ஊழியர்கள் ஒரே நாளில் விருப்ப ஓய்வு. காரணம் பல
தாமதமாக வழங்கப்பட்டு வந்த மாத ஊதியம்,வேலை இனி இருக்குமா, இருக்காதா என்ற அச்சம்,அரசு சொல்லும் போது அனைத்து பணப் பலன்களையும் வாங்கிக் கொள்ளாவிட்டால் அதை வாங்குவது கூட பின் கடினமாக இருக்கும் என்ற நினைப்பு இத்தனையும் இன்ன பிற காரணங்களால் பெறும் ஓய்வு,.உண்மையிலேயே ஊழியர்களின் விருப்பமா? இல்லை யாரோ ஒருவரின் விருப்பமா?..பொதுத்துறை நிறுவனமான பி.எஸ்.என்.எல்., நஷ்டத்தில்இயங்கி வருகிறது. பொருளாதார சிக்கலில் இருந்து விடுபடுவதற்கு ஊழியர்களுக்கு விருப்ப ஓய்வு (வி.ஆர்.எஸ்.) திட்டத்தை அறிவித்தது. 50 வயதைத் தாண்டிய எந்த ஊழியரும் விருப்ப ஓய்வுக்கு விண்ணப்பிக்கலாம் என்பதால் சுமார் 78 ஆயிரத்து 500 ஊழியர்கள் விண்ணப்பித்தனர். நிர்வாகம் அதற்கு ஒப்புதல் அளித்தது. இந்நிலையில், 78 ஆயிரத்து 500 பேரும் நேற்று விருப்ப ஓய்வில் சென்றனர். இதனால், பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் எண்ணிக்கை பாதியாகக் குறைந்துள்ளது. இவர்களுடன் 6 ஆயிரம் ஊழியர்கள் பணிக்காலம் முடிந்து ஓய்வு பெற்றுள்ளனர்.இதனால் BSNL பயனாளிகள் கவலை கொண்டுள்ளது ஒருபக்கம் ஊழியர்களுக்கான சம்பள செலவாக பி.எஸ்.என்.எல்.லுக்கு ஆண்டுக்கு ரூ.2 ஆயிரத்து 272 கோடி செலவாகி வந்தது. இந்த செலவு, இனிமேல் ரூ.500 கோடியாக குறையும். விருப்ப ஓய்வில் சென்றவர்களுக்கு 40 மாத மொத்த சம்பளத்தில் 125 சதவீதம் கணக்கிடப்பட்டு, இழப்பீடாக வழங்கப்படும். இதற்காக ரூ.70 ஆயிரம் கோடிக்கு மேல் அளிக்கப்படுகிறது. ஓய்வூதியர்களுக்கான பணிக்கொடையாக ரூ.17 ஆயிரத்து 169 கோடி ஒதுக்கப்படும். ஓய்வூதியத்துக்கு ரூ.12 ஆயிரத்து 678 கோடி வழங்கப்படும்.தகுதியான ஊழியருக்கு அவர் பணி முடித்த ஒவ்வொரு ஆண்டுக்கும் 35 நாள் சம்பளத்துக்கு சமமான தொகையும், மீதம் இருக்கும் பணிக்காலத்துக்கு ஆண்டொன்றுக்கு 25 நாள் சம்பளத்துக்கு சமமான தொகையும் கணக்கிடப்பட்டு, பணிக்கொடையாக வழங்கப்படும் என்று பி.எஸ்.என்.எல். வட்டாரங்கள் தெரிவித்தன. விருப்ப ஓய்வுக்கு பிறகு, தற்போது பி.எஸ்.என்.எல்.லில் சுமார் 85 ஆயிரம் ஊழியர்கள் இருப்பதாக தெரிகிறது. பெருமளவிலான என்ஜினீயர்கள் விருப்ப ஓய்வு பெற்றுவிட்டபோதிலும், சேவையின் தரம் பாதிக்கப்படாது என்று பி.எஸ்.என்.எல். கூறுகிறது. மற்றொரு பொதுத்துறை தொலைத்தொடர்பு நிறுவனமான எம்.டி.என்.எல். ஊழியர்களில் 14 ஆயிரத்து 378 பேர் நேற்று விருப்ப ஓய்வு பெற்றனர். மீதி 4 ஆயிரத்து 430 ஊழியர்களுடன் எம்.டி.என்.எல். இயங்க உள்ளது.
"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன், வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்; நான் விரும்பிய காளி தருவாள்". - மஹாகவி பாரதியார் சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை எடுத்தனர் அது வெட்டி எடுத்த அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“ நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன் கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...
கருத்துகள்