தனது படங்களில் பொதுவுடமைக் கருத்துகளையும் பாடல்களையும் எம்.ஜி.ஆர். இடம் பெறச்செய்வார். ஆரம்ப காலத்தில் எம்.ஜி.ஆரின் கொள்கைகளுக்கு ஏற்ற பாடல்களுக்கு வரிவடிவம் தந்தவர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம். எழுதிய பாடல் ‘சும்மா கிடந்த நிலத்தைக் கொத்தி..’ என்பதாகும் தனது ‘நாடோடி மன்னன்’ படத்தில் அந்தப் பாடல் வரிகளில் திரைக்கு ஏற்றவாறு பின்னர் சில மாற்றங்கள் செய்யப்பட்டன. பல ஆண்டுகளுக்குப் பின்னர் நடக்கப் போவதை தீர்க்க தரிசனமாக பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் எழுதியது போல அமைந்த அந்த வரிகள்தான்... ‘நானே போடப் போறேன் சட்டம், பொதுவில் நன்மை புரிந்திடும் திட்டம்... நாடு நலம் பெறும் திட்டம்...’ கால ஓட்டம் சட்டம் இயற்றக் கூடிய இடத்தில், 1977ஆம் ஆண்டுத் தேர்தலில் வென்று எம்.ஜி.ஆர். முதல்வரானார்.
அவரது வசீகர சக்தி எல்லோரும் அறிந்தது.
கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் பால தண்டாயுதம். திமுகவை விமர்சித்து வந்தவர். குறிப்பாக, அப்போது திமுகவில் இருந்த எம்.ஜி.ஆரை மிகக் கடுமையாக தாக்கி பேசியவர். திமுகவிலிருந்து பின் காங்கிரஸில் இணைந்த கவியரசர் கண்ண தாசன் உள்ளிட்டோறும் எம்ஜிஆரை விமர்சனம் செய்தே பேசிய காலம் . அவர்கள் சொல்லும் காரணம் ‘அறிஞர் அண்ணாவால் முகத்தை காட்டினாலே பல்லாயிரம் வாக்குகள் கிடைக்கும் என பாராட்டப்பட்ட எம்ஜிஆர்தான் திமுகவின் வாக்குகளை ஈர்க்கும் சக்தியாக விளங்கினார். எனவே, தாக்கி விமர்சனம் செய்வதன் மூலம் திமுகவை பலவீனப்படுத்தி விடலாம்’ என்பது தான்
கம்யூனிஸ்ட் மூத்த தலைவரான ஜீவா அவர்களின் மீது பேரன்பு கொண்டவர் பாலதண்டாயுதம். ஜீவாவின் மரணத்துக்குப் பின் அவருக்கு சிலை எழுப்ப பாலதண்டாயுதம் முடிவு செய்தார். நேர்மைக்கும் எளிமைக்கும் உதாரணமாகத் திகழ்ந்த, எல்லா தரப்பினரின் மதிப்பையும் பெற்றிருந்த ஜீவாவின் சிலையை நிறுவுவதற்காக கட்சி வேறுபாடு இல்லாமல் எல்லா கட்சிகளையும் சேர்ந்தவர்கள், பிரமுகர்களிடம் நிதி திரட்டினார் பாலதண்டாயுதம். ஓரளவு நிதி சேர
‘எம்.ஜி.ஆரிடமும் நிதி கேட்கலாமா?’ என்று பாலதண்டாயுதத்துக்கு ஒரு யோசனை. ஆனால், எம்.ஜி.ஆரைப் பற்றிய தனது கடுமையான விமர் சனங்கள் அவரது மனதில் நிழலாடி தயக்கத்தை ஏற்படுத்தி இருந்தால் எம்.ஜி.ஆரை சந்தித்து ஜீவாவின் சிலைக்கு நிதி கேட்பது என்று முடிவு செய்து அவரை சந்தித்தார். ‘தனக்கு வரவேற்பு எப்படி இருக்குமோ’ என்று தயங்கிபடி சென்ற பாலதண்டாயுதத்தை அகமும் முகமும் மலர மகிழ்வாக வரவேற்றார் எம்.ஜி.ஆர்.
வந்த விவரம் கேட்டதும் எம்.ஜி.ஆருக்கு மேலும் மகிழ்ச்சி. மனபூர்வமாக நன்கொடை வழங்குகிறேன் என்றார். பாலதண்டாயுதத்துக்கும் மகிழ்ச்சி ஒருபுறம். அதோடு, தான் பல சந்தர்ப் பங்களில் தாக்கி பேசியும் அதுபற்றிய விவரமே தெரியாதவர் போல தன்னுடன் எம்.ஜி.ஆர். இன்முகத்துடன் பழகியதால் வியப்பு
‘‘சிலை வைக்க உங்கள் கணக்குப்படி எவ்வளவு செலவாகிறது?’’ எம்.ஜி.ஆர். கேட்டார்.
குறிப்பிட்ட தொகையைச் சொல்கிறார்
‘‘அந்த தொகைதான் என் நன்கொடை’’என்றார் இது தான் எம்.ஜி.ஆர்.
பாலதண்டாயுதத்துக்கோ இன்ப அதிர்ச்சி. பின்னர், அவரிடம் ‘‘நான் கம்யூனிச கொள்கையில் ஈடுபாடு கொண்டவன். என் படங்களில் பாடல்கள், வசனங்கள் மூலம் கம்யூனிச கொள்கைகளையும் சொல்லி வருகிறேன். திராவிட முன்னேற்றக் கழகத்துக்கும் பொதுவுடமை கொள்கை உடன் பாடே. சிறந்த பேச்சாளரான நீங்கள் உங்கள் பேச்சால் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். உங்கள் ஆற்றலை என்னை தாக்கு வதில் வீணடிக்கிறீர்களே? பொதுவுடமைக் கொள்கையை பரப்புவதில் நீங்கள் மேலும் சிறப்பாக தொண்டாற்ற வாழ்த்துகள்’’ என்றார் எம்.ஜி.ஆர்.
அவரது உயர்ந்த குணத்தையும் பண்பையும் அறிந்து நெகிழ்ந்த பாலதண்டாயுதம், அன்று முதல் எம்.ஜி.ஆரை தாக்குவதை நிறுத்தியதோடு மட்டுமல்ல; அவரது குணநலன்களை நண்பர்களிடம் புகழ்ந்தார்.
அது மாத்திரமல்ல, திமுகவில் இருந்து நீக்கப்பட்டு எம்.ஜி.ஆர். அதிமுகவை தொடங்கிய பின் கம்யூனிஸ்ட்கள் ஆதரவு அளித்தனர். ‘‘ஊழலை எதிர்க்கிறார்; லஞ்சத்தை எதிர்க்கிறார் என்பதற்காக எம்.ஜி.ஆர். மீது ஒரு துரும்போ, கீறலோ பட்டாலும் தமிழ்நாட்டில் மோசமான விளைவுகள் ஏற்படும் என்பதை கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் எச்சரிக்கையாக பிரகடனப்படுத்துகிறேன்’’ என்று சென்னை கோடம்பாக்கத்தில் நடந்த கூட்டத்தில் பாலதண்டாயுதம் பேசும் அளவுக்கு எம்.ஜி.ஆர். மீது அவர் அன்பு கொண்டார்.
மாற்றுக் கருத்து கொண்டவர்களையும் தன்பால் ஈர்த்துக் கொள்ளும் வசீகரத்தின் பெயர் தான் எம்.ஜி.ஆர்.
அதிமுக தொடங்கிய 7 மாதங்களிலேயே திண்டுக்கல் நாடாளுமன்றத் தொகுதி இடைத் தேர்தல் 1973 மே 20-ம் தேதி நடந்தது. இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளும் அதிமுகவுக்கு ஆதரவு அளித்தன. அதிமுக வேட்பாளரான மாயத்தேவர் இரண்டு லட்சத்து அறுபதாயிரத்து தொள்ளாயிரத்து முப்பது வாக்குகள் பதிவானதில் பாதிக்கு மேல் பெற்று வெற்றி பெற்றார். ஸ்தாபன காங்கிரஸ் இரண்டாவது இடத்தையும் திமுக மூன்றாவது இடத்தையும் பெற்றன. இந்திரா காங்கிரஸ் ஜாமீன்தொகையை இழந்தது. இந்த பிரம்மாண்ட வெற்றி அகில இந்தியாவும் எம்.ஜி.ஆரைத் திரும்பிப் பார்க்க வைத்தது! அப்பேர்ப்பட்ட சக்தியானவர் தற்போது ஸ்ரீ MGR வாழ்க என ஒரு குரூப் களமிறங்கியுள்ளது
அவர்கள் தெய்வமாக வைக்கத் துவங்க பல காரணம் உண்டு
ஒவ்வொரு மனிதனும் தனக்கு மட்டும் தன்னுடைய சொந்தக்காரர்களும் நண்பர்களும் குடும்பத்தார்கள் துரோகம் செய்யக் கூடாது என்று நினைக்கிறார்கள்
அதேபோல் தான் ஒவ்வொரு எம்ஜிஆர் ரசிகனும் தனது கட்சிக்கு யாரும் துரோகம் செய்யக்கூடாது என நினைக்கிறார்கள்
மேடையேறி எம்ஜிஆர் அவர்களைப்பற்றி பெருமைபட பேச முடியாது
அண்ணா திமுக விளம்பர போஸ்டர்களில் எம்ஜிஆர் படம் கிடையாது
எம் ஜி ஆருக்கு கட்டவுட் கிடையாது
எம்ஜிஆருக்கு பிளக்ஸ் போர்டு கிடையாது
தினசரி வார மாத பத்திரிக்கைகளில் கொடுக்கின்ற கட்சி விளம்பரங்களில் எம்ஜிஆர் படம் போடுவது கிடையாது
ஜானகி ஆட்சியில் எம்ஜிஆரின் சமாதி வரைபடம் தயாரித்து வைத்திருந்தார்கள் அதன்படி கட்டவில்லை ,
தமிழ்நாடு முழுவதும் எம்ஜிஆருக்கு சிலை வைக்க அனுமதி கேட்டால் அதற்கும் கிடைக்கவில்லை,
எம்ஜிஆர் மறையும் வரை இது அண்ணாவின் அரசு என்று கூறினார்
ஜெயலலிதா மறையும்வரை இது எனது அரசு என்று கூறினார்
1980 ஆம் ஆண்டு எம்ஜிஆர் ஆட்சி டிஸ்மிஸ் செய்யப்பட்டது
மீண்டும் எம்ஜிஆர் முதலமைச்சராக பதவி ஏற்றார்
சென்னையில் கட்சி வளர்த்த தொண்டர்கள்
அப்பொழுது நடந்த ஒரு பொதுக்கூட்டத்திற்காக எம்ஜிஆரின் உருவத்தை மிகப் பெரிய வால் போஸ்டராக அடித்து ஓடினார்கள்
இதை காரில் போகும்போது கவனித்த எம்ஜிஆர்
அண்ணா பத்திரிகையில் ஒரு விளம்பரம் கொடுத்தார்
என்னுடைய படத்தை மிகப்பெரிய அளவில் வால் போஸ்டர் அடித்து ஒட்டிய
டி நகர் மூர்த்தியும், கு.கா செல்வம் ஆகியோர்
இன்று முதல் அனைத்திந்திய அண்ணா திமுக வில் இருந்து விளக்க படுகிறார்கள்
அவர்கள் இருவருடனும் கட்சித் தொண்டர்கள் யாரும் தொடர்பு வைத்துக் கொள்ளக் கூடாது
இப்படிப்பட்ட அறிவிப்பை அண்ணா பத்திரிக்கையில் கொடுத்து எம்ஜிஆர் அவர்கள் இருவரையும் கட்சியை விட்டு நீக்கினார்
ஜெயலலிதாவின் வால்போஸ்டர் ஜெயலலிதாவின் உருவத்தை மிகப் பெரிய அளவில் அச்சிடுகிறார்கள்
எம்ஜிஆரின் படத்தை ஸ்டாம்ப் சைஸ் அளவில் சிறிதாக வெளியிடுகிறார்கள்
உலகம் சுற்றும் வாலிபன் திரையிடும்போது வால் போஸ்டர் ஒட்ட விடாமல் கருணாநிதி செய்தார் என்று வானத்திற்கும் பூமிக்கும் குதித்தார்கள் எம்ஜிஆர் ரசிகர்கள்
அண்ணா திமுக பொதுக் கூட்டத்திற்காக கொடுக்கின்ற விளம்பரத்தில்வால்போஸ்டரில் ஜெயலலிதா படம் மட்டும்தான் இருந்தது எம்ஜிஆர் படம் கிடையாது
இதைப் பார்த்துக் கொண்டும் அந்த எம்ஜிஆர் ரசிகர்கள் மௌனம் சாதித்தார்கள்
எம்ஜிஆருக்கு கருணாநிதி மட்டும்தான் துரோகம் செய்யக்கூடாது
ஜெயலலிதா செய்தாலும் தப்புஇல்லை என்றுதான் அந்த எம்ஜிஆர் ரசிகர்கள் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்
இது எம்ஜிஆருக்கு செய்யப்படுகிற துரோகம் இல்லையா எம்ஜிஆர் ரசிகர்கள் என்று சொல்லப்படுகிற வர்களுக்கு நாங்கள் அப்படி இல்லை பெத்த அப்பனே
எம்ஜிஆரை குறை கூறினாலாலும் ஏற்காத தொண்டர்கள் இருந்த காலம் அது ஆனால் ரஜினி ரசிகர்களே முதுமையடைந்துவிட எம்ஜிஆர் ரசிகர்கள் 80 சதவீதம் பேர் தற்போது உயிருடன் இல்லை எனவே எம் ஜி யார் பலருக்கும் உரிமையாகிறார் அ தி மு க விலும் ஜெயலலிதாவுக்கு தரும் முக்கியத்துவம் எம்.ஜி.ஆருக்கு இல்லை
கருத்துகள்