தட்கல் டிக்கெட் முன்பதிவில் சட்டவிரோத மென்பொருளை பயன்படுத்தி ரயில் டிக்கெட்களை வேகமாக முன்பதிவு செய்து வந்த, 60 முகவர்களை, ரயில்வே போலீசார் கைது செய்துள்ளனர். ரயில் பயணத்துக்கான தட்கல் டிக்கெட் முன்பதிவு திறக்கப்பட்ட சில நிமிடங்களில், அனைத்து டிக்கெட்களும் விற்று தீர்ந்துவிடுவதை, ரயில்வே போலீசார் கண்காணித்து வந்தனர். இதில், முகவர்கள் சிலர், சட்ட விரோத மென்பொருளை பயன்படுத்தி, டிக்கெட் முன்பதிவில் ஈடுபடுவது தெரியவந்தது. இது குறித்து, ரயில்வே போலீஸ் படையின் இயக்குனர் அருண் குமார் கூறியதாவது:
'ஆன்லைன்' முறையில் தட்கல் முன்பதிவின் போது, ஒருவர் டிக்கெட் முன்பதிவு செய்ய, குறைந்தபட்சம் 2.55 நிமிடங்கள் ஆகும்.
ஆனால், 'ஏ.என்.எம்.எஸ்.,' 'மாக்', 'ஜாகுவார்' போன்ற சில சட்டவிரோத மென்பொருளை பயன்படுத்தி, சிலர் டிக்கெட் முன்பதிவு செய்வது தெரியவந்தது.
இந்த தட்கல் ரெயில் டிக்கெட் முன்பதிவு செய்யும் ஐ.ஆர்.சி.டி.சி. இணையதளத்தை முடக்கும் ‘ஏ.என்.எம்.எஸ்., எம்.ஏ.சி., ஜாக்குவார் ஆகிய சட்டவிரோத மென்பொருளை ஏஜெண்டுகள் பயன்படுத்தி IRCTC இணையதளத்தில் இருக்கும் லாகின் கேப்சா, புக்கிங்க் கேப்சா, வங்கி ஓடிபி ஆகியவற்றை எளிதாகக் கடந்து சென்று முறைகேடாக தட்கல் டிக்கெட் பதிவு செய்தது தெரியவந்தது. மென்பொருளை பயன்படுத்தினால், 1.48 நிமிடங்களில் டிக்கெட் முன்பதிவு செய்துவிட முடியும். இதையடுத்து, தட்கலில் டிக்கெட் முன்பதிவு செய்ய, முகவர்களுக்கு கடந்த இரண்டு மாதங்களாக தடை விதிக்கப்பட்டது. அந்த காலகட்டத்தில் நடத்தப்பட்ட தீவிர கண்காணிப்பின் மூலம், சட்டவிரோத மென்பொருள் பயன்படுத்திய, 60 முகவர்கள் சிக்கினர்.
இதையடுத்து, முன்பதிவில் பயன்படுத்தப்பட்டு வந்த அனைத்து சட்ட விரோத மென்பொருள்களும் முடக்கப்பட்டன. அதன் பிறகு நடந்த கண்காணிப்பில், தட்கல் டிக்கெட் முன்பதிவு துவங்கி சில மணி நேரங்கள் வரை, டிக்கெட்கள் கிடைக்கும் நிலை தொடர்கிறது. இனி, பயணியர் முழுமையாக பயன்பெற முடியும்.இவ்வாறு, அவர் கூறினார்.
"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன், வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்; நான் விரும்பிய காளி தருவாள்". - மஹாகவி பாரதியார் சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை எடுத்தனர் அது வெட்டி எடுத்த அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“ நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன் கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...
கருத்துகள்