மகா சிவராத்திரி
மாசி மாதத்தில் தேய்ப் பிறையில் வரும் சதுர்த்தசி நாள் மகா சிவராத்திரியாகும் ஒவ்வொரு மாதமும் தேய்ப் பிறையில் வரும் சதுர்த்தசி நாள் சிவராத்திரி என்றும், அதுவே மாசி மாதத்தில் வரும் சதுர்த்தசி நாள் மகா சிவராத்திரியாகவும் அணுசரிக்கப்படுகிறது. அகோரிகள் முதல் அந்தணர் வரை சகலரும் சிவவழிபாடு செய்கின்றனர்..சிவனுக்கு காளகஷ்தியில் வேட்டை மாமிசம் படைத்த திண்ணப்பன் கண்ணப்பன் ஆனது போல பல அடியவர்கள் கதை உண்டு
அன்று விரதமிருந்து சிவ ஆலயத்திற்குச் சென்று ஈசனை வழிப்பட்டால் அவரின் முழு ஆசியைப் பெறலாம் என்று பெரியவர்கள் சொல்ல நாம் கேள்வி பட்டிருப்போம்.
ஏன் சிவராத்திரி அணுசரிக்கப்படுகின்றது என்று அறிந்து கொள்வோம்
பிரளய காலம், பிரம்மனும், அவரால் சிருஷ்டிக்கப்பட்ட அனைத்து ஜீவராசிகளும் அழிந்து விட்டனர். உயிர்கள் எல்லாம் சிவனிடத்தே ஒடுங்கின.
இந்த நிலையை சீர் செய்ய அம்பிகை சிவப்பெருமானை இடைவிடாது தியானம் செய்தார். அவரின் தியானத்தை ஏற்று தன்னுள் ஒடுங்கி இருந்த அனைத்து உயிர்களையும் படைத்தருளினார்.அப்பொழுது உமையவள் தான் ஈசனை மனதில் தியானித்துப் போற்றிய காலம் “சிவராத்திரி” என்று பெயர் பெற வேண்டும் என்றும், அதனைச் சிவராத்திரி விரதம் என்று அனைவரும் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் அதை கடைப்பிடிப்பவர்கள் எல்லா நலன்களும் பெற்று முக்தியடையவேண்டும் என்று சிவப்பெருமானைக் கேட்டுக் கொள்ள அவரும் அவ்வாரே அருள் புரிந்தார் இது புராணக்கருத்து இதை இப்போது வர்த்தக ரீதியில் ஜக்கி வாசுதேவ் நடத்தி வரும் ஈசா யோகாமையம்
கங்கா 50,000 ரூபாய், காவிரி 500 ரூபாய்
ஈஷாவில் ஈசனுடன் ஓர் இரவு எப்படி இருக்கும் வாங்கோ வாங்கோ
நிறைய கேட்டகிரி இருக்கு. “கங்கா 50,000 ரூபாய், யமுனா 20,000 ரூபாய், நர்மதா 5,000 ரூபாய், கோதாவரி 1,000 ரூபாய், கடைசியாக காவிரி 500 ரூபாய்!’’ என்று நதிகளின் பெயரில் பேக்கேஜ். ’50,000 ரூபாய்க்கும் 500 ரூபாய்க்கும் என்ன வித்தியாசம்?’
’’50,000 ரூபாய்க்கு ஆதியோகிக்கு அருகில் உட்கார்ந்து பார்க்கலாம்,
20,000 ரூபாய் கொடுத்தால் கொஞ்சம் பின்னால். 10,000 ரூபாய்க்கு அதற்கும் பின்னால். 5,000 ரூபாய் கொடுத்தால் எல்.சி.டி. ஸ்க்ரீனுக்கு முன்னால்!’’ என்று சினிமா தியேட்டர் விதவித க்ளாஸ் போல ஏற்பாடு!.
’’ஆதியோகி சிவராத்திரியில் தரிசிக்க வேண்டுமென்று கிளம்பி வந்துவிட்டோமே...ஃப்ரீ என்ட்ரி இல்லீங்களா?’’ என்று கேட்டோம். ’’ஓ... எஸ் இருக்கே... தடுப்புக் கட்டைகளுக்கு வெளியே அமர வேண்டும்.
சேர் கிடையாது. தரையில் அமர வேண்டும்!
சிவன் வழிபாடு என்பது நம் பகுதியில் பாரம்பரியம் கொண்ட வழிபாடு பாரிவேட்டை குலதெய்வ வழிபாடு என பல ஆன்மீக நிலை கொண்ட மக்கள் யாரும் ஈசா மையத்தை ஒரு கார்பரேட் பொழுதுபோக்கு வர்த்தகமையமாகவே பார்க்கும் நிலை வியாபாரம் ஏன்பது வந்தால் ஆன்மீகம் அங்கு ஏது...இதுவே இந்துக்கள் என அனைவரும் ஒன்று சேராதிருக்க காரணம் ஆகிறதுபாரிவேட்டை இன்னும் கிராமத்தில் நடக்கும் நிலை வனத்துறை கட்டுப்பாடு வந்தபின் சற்று மாற்றம் அதற்கு முன் நடந்த வேட்டைகள் தெய்வ வழிபாடு சார்ந்தது
பாரி என்றால் கொட்டு முழக்கத்துடன் செய்யும் இராக்காவலைக் குறிப்பதாக உள்ளது. பாரி வேட்டையிலும் கொட்டு முழக்கத்துடன் இரவில் வேட்டைக்குச் செல்லும் பழக்கமிருக்கிறது.வனவிலங்குகளின் தொல்லைகளிலிருந்து பயிர்களைப் பாதுகாப்பதற்காக இரவில் காவலிருக்கும் பண்டைய பழக்கமே பாரி வேட்டையாக நிலவுகிறது. பாரி வேட்டை தற்போது தமிழகத்தில் சிவகங்கை மாவட்டம் பிரான் மலையில் ஒவ்வொரு ஆண்டும் ஒரு விழாவாக நடைபெறுகிறது. மாசி மாதத்தில் சிவராத்திரிக்கு மறுநாள் பாரி வேட்டைக்குச் செல்வது வழக்கம்.
இவ்வேட்டை வினை கருப்பணசாமி, அய்யனார்சாமி போன்ற வேட்டைக்காரச் சாமிகளின் வழிபாட்டுடன் தொடர்பு டையதாகவும் இருக்கிறது.
விழா நாளன்று வேட்டைக் கொம்பினால் ஒலி எழுப்பப்படும். அப்போது வேட்டைக்குச் செல்வோரெல்லாம் ஒருங்கே கூடிவிடுவர். கலந்து கொள்பவர்கள் பூசைப் பொருட்களையும் சமையல் பொருட்களையும் உடன் கொண்டு வருவர். வேட்டைக்காரசாமியினை வழிபட்ட பின் மலைப் பகுதிக்குச் செல்வர். உடன் கம்பு, ஈட்டி, அரிவாள் போன்ற ஆயுதங்களையும் எடுத்து வருவர். வேட்டைநாயும் உடன் வருவதுண்டு. முதல் வேட்டையில் முயல் சாய்ந்ததாகக்
கொள்ளலாம். அதன் தலையினைத் திருப்பி ஒரு புல்லினை எடுத்து அதன் வாயில் வைப்பர். இப்புல்தான் முயலின் வாழ்வில் கடைசிப் புல் என்பதைச் சுட்டுவதற்காகவே இச்செய்கை மேற்கொள்ளப் படுகிறது.
முயலினை வேட்டையாடியவர் முயலின் காதளவுவைத்துக் தலையினை வெட்டிக் கொடுப்பார். இதற்கு 'தரம்' என்று பெயர். இவ்வாறே வேட்டையாடிய மற்றவற்றிலிருந்தும் தலையை மட்டும் வெட்டி எடுப்பர். முயலின் வயிற்றினைக் கிழித்து, ஈரலை மட்டும் வெளியே எடுத்துக் கம்பியில் கோர்த்துத் தீயில் வாட்டுவர். பின் அதனைப் பூசைப் பொருளாக வைத்து வேட்டைக்காரச் சாமியை வழிபடுவர். வேட்டை கிடைத்தமைக்கு நன்றி சொல்வர். இன்னும் அதிக வேட்டை கிடைக்க வேண்டும் என்று விரும்பி ஈரலைப் பிய்த்து நான்கு திசைகளிலும் நான்கு துண்டுகளை எறிந்து விடுவர்.
வேட்டையாடிய விலங்குகளின் தலைக்கறியினையெல்லாம் ஒன்று சேர்த்து, எடுத்துச் சென்ற சமையல் பொருட்களை வைத்து உணவு தயாரிப்பர். வேட்டையாடிய விலங்குகளின் உடல் கறியைக் கொண்டு வந்து கிராமத்து மக்களுக்கும் பகிர்ந்தளிப்பர். வேட்டையின் போது புலி, சிறுத்தை, கரடி போன்ற கொடிய விலங்கினைக் கொன்றிருந்தால், கிராமத்திற்கு வந்து வண்டியில் அவ்விலங்கினைத் துக்கி நிறுத்தி தாரை, தம்பட்டை முழங்க ஊரெல்லாம் சுற்றி வருவர். தங்கள் வீரத்தினைக் காட்டுவதற்காக இப்படிச் செய்கின்றனர். பழங்காலத்தில் அரசர்கள், குறுநில மன்னர்கள், ஆங்கிலேய ஆட்சிகாலத்தில் ஜமீன்தார்கள் பாரி வேட்டையினைத் தலைமையேற்று நடத்தினார்கள்சைவ உணவு வழக்கம் இந்தியாவில் மிக பிற்காலத்தில் தோன்றியது. வள்ளலார் மாதிரி பிற்கால ஞானியர் அதை பரவலாக்கினார்கள். ஆனால் சைவ உணவு கொள்கை தொன்மையான இந்துமதத்தின் கொள்கை அல்ல. திருமுருகாற்றுபடையில் முருகனுக்கு ஆட்டுகுருதி கலந்த அரிசிசோறு படைக்கபடுவதை காணலாம். சீதை, இராமன், இலக்குவன் அனைவரும் மாமிசம் உண்டதை வால்மிகி எழுதுகிறார். அதுவும் காட்டில் அல்ல, நாட்டில் இருக்கையிலேயே சீதை கங்கை ஆற்றுக்கு மாமிசம் படைப்பதாக வேண்டிகொள்கிறார் வேத நெறிப்படி யாகங்களில் உயிர்ப்பலி கொடுத்தே ஆகவேண்டும். பவுத்தத்தின் தாக்கத்தால் உயிர்ப்பலி கொடுப்பது நின்று யாகங்கள் அவற்றின் உண்மையான தன்மையை இழந்து பவுத்தமயாகின. உலகில் வேறூ எந்த மதத்திலும் இப்படி பிற மதத்தின் தாக்கத்தால் தம் கொள்கையை விட்டுகொடுக்க மாட்டார்கள். இந்து மதத்தில் இப்படி பவுத்தம், சமணத்தின் மிக தவறான உணவு வழக்கத்தை கடைபிடித்தது மட்டும் அல்லாமல், மாமிச உணவு தீண்டதகாதது, கெடுதாலனது என கூறி அவ்வுணவை உண்பவர்களை தீண்டதகாதவர்களாக மாற்றியும் தள்ளி வைத்து விட்டார்கள். இன்றும் மாமிசம் உண்பவர்களை பூசாரிகளாக ஏற்க மேட்டுகுடி இந்து கோயில்கள் முன்வரபோவது கிடையாது. மாமிசம் உண்ணும் சாமியார்களை மேட்டுகுடி இந்துக்கள் புறக்கணிப்பார்கள்.இந்த மனோபாவம் மாறவேண்டும். தாவர உணவு எந்த விதத்திலும், எந்த தொன்மையான இந்து நூலிலும் நன்னெறீயாக முன்மொழியபட்டதே கிடையாது. இன்று அதுதான் இந்து மதம் என்ற அளவுக்கு இந்து மதம் ஹைஜாக் செய்யபட்டு விட்டது
"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன், வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்; நான் விரும்பிய காளி தருவாள்". - மஹாகவி பாரதியார் சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை எடுத்தனர் அது வெட்டி எடுத்த அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“ நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன் கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...
கருத்துகள்