முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பங்காரு அடிகளார் ஷஸ்டியப்தபூர்த்தி விழா

     கோபால் நாயக்கர் மகன் பங்காரு அடிகளார் 80 ஷஸ்டியப்த பூர்த்தி விழா மேல்மருவத்தூர்
பங்காரு அடிகள் 80 ம் ஆண்டு  சதாபிஷேக நலத் திட்ட உதவி வழங்கும் விழாவில் ஆன்மீக, அரசியல்  தலைவர்கள் பங்கேற்பு அடிகளாரின் 80வது அவதாரத் திருநாள், பெருமங்கல முத்து விழா மார்ச் 3ம் தேதி மேல்மருவத்தூரில் சிறப்பாக நடைபெறவுள்ளது. இதை முன்னிட்டு நாட்டின் பல்வேறு பகுதிகளில் சிறப்பு பூஜைகளும், நலத்திட்ட உதவிகளும் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு அங்கமாக கலவையில் ஆதிபராசக்தி கல்விக் குழுமத்தின் வளாகத்தில் ஆன்மிககுரு அடிகளார் மற்றும் லட்சுமி பங்காரு அடிகள் பெரு மங்கல முத்து விழா சிறப்பாக நடைபெற்றது.
பாத பூஜையுடன் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. ஆதிபராசக்தி கலையரங்கத்தை அடிகளார் திறந்து வைத்தார். மேடை நிகழ்ச்சிகள் மூலமந்திரம் மற்றும் தமிழ்த்தாய் வாழ்த்துடன் துவங்கியது. பின்னர் ஆதிபராசக்தி குழுமக் கல்வி செயலர் ஆர்.கருணாநிதி நன்றியுரை ஆற்றினார்.
விழாவிற்கு ஆதிபராசக்தி கல்வி, மருத்துவ மற்றும் பண்பாட்டு அறநிலையத்தின் அறங்காவலர்கள் கோ.ப.செந்தில்குமார், ப.ஸ்ரீதேவி ரமேஷ், ப.உமாதேவி ஜெய்கணேஷ், ஆஷா அன்பழகன் மற்றும் பல் மருத்துவ கல்லூரியின் தாளாளரும், மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி மருத்துவமனையின் இயக்குனருமான த.ரமேஷ், சேலம் தொழிலதிபர் ப. ஜெய்கணேஷ், ஆதிபராசக்தி பாராமெடிக்கல் கல்லூரிகளின் தாளாளர் இ. ஸ்ரீலேகா செந்தில்குமார் ஆகியோர்கள் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு விருந்தினர்களாக ரத்தினகிரி பாலமுருகடிமை சுவாமிகள், வேலூர் நாராயணிபீடம் ஸ்ரீசக்தி அம்மா, வேலூர் ஜலகண்டேஸ்வரர் தரும ஸ்தாபனத்தலைவர் கலவை சச்சிதானந்த சுவாமிகள், பத்திரப்பதிவு அரக்கோணம் பாராளுமன்ற உறுப்பினர்கள் சா. ஜெகத்ரட்சகன், ஆரணி பாராளுமன்ற உறுப்பினர் கி. விஷ்ணு பிரசாத், இராணிப்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் ஆர். காந்தி, ஆற்காடு சட்டமன்ற உறுப்பினர் ஜா.ல.ஈஸ்வரப்பன் மற்றும் திருக்கைலாய திருப்பணி நிறுவனர் சிவஸ்ரீ செ.ராஜேந்திரன், வேலூர் வி.ஐ.டி. பல்கலைக்கழக துணைத்தலைவர் கோ.வி.செல்வம், ஆற்காடு மகாத்மா காந்தி அறக்கட்டளையின் தலைவர் ஜா.லஷ்மணன், வாணியம்பாடி பேராசிரியர் தி.மு.அப்துல்காதர், வேலூர் திருமண்டிலம் அருட்தந்தை டி.எஸ்.சி.மேனன், ஆற்காடு தொழிலதிபர் மு.சௌகத் அலி ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர்.
விழாவில் ஆதிபராசக்தி கல்வி, மருத்துவ மற்றும் பண்பாட்டு அறநிலையத்தின் அறங்காவலர் கோ. ப.அன்பழகன் சிறப்புரை ஆற்றினார்.
இதனை தொடர்ந்து ஆதிபராசக்தி குழுமக் கல்வி நிறுவனங்களின் துணைத்தலைவர் லட்சுமி பங்காரு அடிகளார் ஏற்புரை ஆற்றினார்.
விழாவில் நலத்திட்ட உதவியாக பயனாளிகளுக்கு ரூபாய் 80 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் அடிகளார் வழங்கினார். இத்திட்டத்தில் அடிப்படையில் ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் உள்ள அரசு ஆண்கள், பெண்கள் பள்ளிகளுக்கு 80 நவீனக் கழிப்பிடங்கள் கட்டிதரப்படும். தற்போது பத்து கழிப்பிடங்கள் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் 80 ஆயிரம் மரக்கன்றுகள் அரசாங்க இடம் மற்றும் பொது இடங்களில் நட்டு பராமரிக்கப்படும். அரசு மேல்நிலைப் பள்ளிகளுக்கு உலக வரைபடம் பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 மாணவர்களுக்கு உயர்கல்வி தகுதி பெற 1000 எண்ணிக்கையிலான கேள்வி பதில்கள் அடங்கிய கையேடுகள் மாணவர்களுக்கு வழங்கப்பட்டது. அரசு பள்ளிகளுக்கு கம்ப்யுட்டர், பிரிண்டர், பேன், மேஜை, நாற்காலி, இரும்பு பீரோ மற்றும் கரும்பலகை வழங்கப்பட்டது. கலவை, ஆற்காடு தாலூக்காவிற்கு கம்ப்யூட்டர் மேஜை, குடிநீர் சுத்திகரிப்பு கருவி வழங்கப்பட்டது. கலவை அரசு மருத்துவ மனைக்கு இன்வெட்டர் பேட்டரி போன்றவை வழங்கப்பட்டது.
தொடர்ந்து கலவை ஆதிபராசக்தி குழுமக் கல்லூரி மாணவ – மாணவியர்களின் கலை நிகழ்ச்சி நடந்தன


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

முருகப்பெருமான் அன்னையிடம் ஞானவேல் பெற்ற தினமே தைப்பூசம் ..அதில் பாலபிஷேகம் சிறப்பு

  தைப்பூசமும், பாலபிஷேகமும். (இந்து அல்லாதவர்கள் உட்பட நம்மில் பலர் அறிய)     தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம்.  ஆண்டுதோறும்  பஞ்சாங்கப்படி பத்தாம்மாதம்.  பூசநட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகப்பெருமானுக்கு எடுக்கப்படும் விழா. நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரம்.விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. தைப்பூசத் திருவிழாவில் முருகன் தேரில் பவனி வரும் காட்சி பழனியிலும், வடலூரிலும்,  இலங்கையிலும், மலேசியாவிலும் தைப்பூசம் சிறப்பு  மலேசியா பத்து மலை முருகன் கோவில் உலகத் தமிழர்களிடையே புகழ் பெற்ற ஆலயமாகும். இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிக முக்கியமானதாகும். பத்து மலை கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ள மலைக்கோவில் சுண்ணாம்புப் பாறைகளாலான மலை . வரிசையாக அமைந்த பத்து குகை  கோவில்களை இங்கு காணலாம். மலையை ஒட்டி சுங்கபத்து ஆறு ஓடுகிறது. பத்து கோவில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்த

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான விழாவாக தமிழ் சம

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு