முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நாக்பூர் நீதிமன்றத்தின் தீர்ப்பு நாடெங்கும் பொருந்தும்

     லகிலேயே சாலை விபத்துக்கள் காரணமாக அதிகஉயிர்களைப் பறிகொடுத்து வரும் நாடுகளில் ஒன்றாக இந்தியா உள்ளது. இந்தியாவில் ஒரு ஆண்டில் மட்டும் சாலை விபத்துக்களில் சிக்கி உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை சுமார் 1.50 லட்சம் பேர். மேலும் பல லட்சக்கணக்கானோர் படுகாயம் அடையவும் சாலை விபத்துக்கள் காரணமாக உள்ளன.
எனவே சாலை விபத்துக்களால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையைக் குறைக்க மத்திய, மாநில அரசுகள் தரப்பில் தீவிரமான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வாகன ஓட்டிகள் போக்குவரத்து விதிகளை மீறுவதே சாலை விபத்துக்களுக்கு முக்கியமான காரணமாக உள்ளது. எனவே வாகன ஓட்டிகள் அனைவரையும் விதிகளை பின்பற்ற வைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதன் ஒரு பகுதியாக போக்குவரத்து விதிமுறை மீறல்களுக்கான அபராத தொகைகளை மத்திய அரசு சமீபத்தில் பல மடங்கு உயர்த்தியது. கடந்த 2019 ஆம் ஆண்டு செப்டம்பர் 1ஆம் தேதி முதல் இந்திய அரசால், புதிய மோட்டார் வாகனச் சட்டம் விதிகள்  அமலுக்கு கொண்டு வரப்பட்டது. இதில், போக்குவரத்து விதிமுறை மீறல்களுக்கான அபராத தொகைகள் மிக கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளன.
இந்தியாவை பொறுத்தவரை, இரு சக்கர வாகனங்களில் பயணம் செய்பவர்கள்தான் சாலை விபத்துக்களால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். அவர்களுக்கு இருக்கும் அதிகபட்ச பாதுகாப்பு தலக்கவசமே  எனவே இரு சக்கர வாகனங்களில் பயணம் செய்யும் இருவரும்  அணிய வேண்டும் என்ற விதிமுறை அமலில்    உள்ளதுபாம்பே (மும்பை) உயர்நீதிமன்றத்தின் நாக்பூர் கிளை அமர்வில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டு.  சமீபத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது விதிமுறைகளின்படி வாடிக்கையாளர்களுக்கு முறையாக தலைக்கவசம் வழங்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டுடன் விதிமுறைகளைப் பின்பற்றாவிட்டால் வாகனங்கள் பதிவு செய்வதை நிறுத்தி விடுவோம் எனவும் நீதிபதிகள் எச்சரிக்கை விடுத்தனர். நீதிபதிகளின் இந்த உத்தரவையடுத்து வாகன விற்பனை  முகவர்களிடம் நாக்பூர் போக்குவரத்துத்துறை அதிகாரிகள்  கடுமை காட்டத் தொடங்கியுள்ளனர். இதன்படி டீலர்கள் இரண்டு தலைக்கவசங்களை வாடிக்கையாளர்களுக்கு வழங்கியிருந்தால் மட்டுமே வாகனங்கள் பதிவு செய்யப்படுகின்றன.
நாக்பூர் நகர்  மற்றும் நாக்பூர் கிழக்கு என இரண்டு போக்குவரத்துத்துறை அலுவலகங்களிலும் தற்போது இந்த நடைமுறை பின்பற்றப்படுகிறது. இரண்டு தலைக்கவசங்கள் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்டு விட்டதா? என்பதை அதிகாரிகள் தீவிரமாகச் சோதனை செய்கின்றனர்.  வழங்கப்பட்டது உறுதி செய்யப்பட்டால் மட்டுமே வாகனங்கள் பதிவு செய்யப்படுகின்றன.
இதுகுறித்து போக்குவரத்து  அலுவலக அதிகாரிகள் கூறுகையில், ''புதிய இரு சக்கர வாகனங்களை ஒப்படை செய்யும்போது, வாடிக்கையாளர்களுக்கு இரண்டு தலைக்கவசம் வழங்க வேண்டும் என அனைத்து வாகன முகவர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. எங்களது மோட்டார் வாகன ஆய்வாளர்களும், உதவி மோட்டார் வாகன ஆய்வாளர்களும் அனைத்து வாடிக்கையாளர்களின் ரசிதுகளையும் சரிபார்க்கின்றனர்.
இரண்டு தலைக்கவசம் வாடிக்கையாளர்கள் பெற்றதை உறுதி செய்வதற்காக ரசீதுகள் சோதனை  செய்யப்படுகிறது'என்றனர். இதுகுறித்து வாகன விற்பனை நிறுவனத்தில்  சிலர் கூறுகையில், ''நீதிமன்றத்தின் அறிவுறுத்தலுக்கேற்ப, நாக்பூரில் உள்ள அனைத்து முகவர்களும் தற்போது இரண்டு ஹெல்மெட்களை வாடிக்கையாளர்களுக்கு கட்டாயமாக வழங்கி வருகின்றனர்.
ஆனால் ஒரு சில வாடிக்கையாளர்கள் ஏற்கனவே தங்களிடம் தலைக்கவசம் இருப்பதாகவும், எனவே அதற்குப் பதிலாக விலையை குறைத்துக் கொள்ளும்படியும் கேட்கின்றனர். ஆனால் அதுபோன்ற வாதங்களை நாங்கள் நிராகரித்து விடுகிறோம்'' என்றனர். நீதிமன்றம் மற்றும் போக்குவரத்து அலுவலர்களின் அதிரடியால் புதிதாக இருசக்கர வாகனம்  வாங்குபவர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.மத்திய மோட்டார் வாகன விதிகள், 138 (4)(f)-ன்படி, இரு சக்கர வாகனங்களை வாங்குபவர்களுக்கு, வாகன உற்பத்தியாளர்கள் ஹெல்மெட்களையும் சப்ளை செய்ய வேண்டும். அதுவும் இந்திய தர நிர்ணய சட்டம் (Bureau of Indian Standards Act), 1986 (63)-ன் கீழ், இந்திய தரநிலைகள் பணியகம் (Bureau of Indian Standards) பரிந்துரைக்கு ஏற்ப அந்த ஹெல்மெட்கள் இருக்க வேண்டும


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

முருகப்பெருமான் அன்னையிடம் ஞானவேல் பெற்ற தினமே தைப்பூசம் ..அதில் பாலபிஷேகம் சிறப்பு

  தைப்பூசமும், பாலபிஷேகமும். (இந்து அல்லாதவர்கள் உட்பட நம்மில் பலர் அறிய)     தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம்.  ஆண்டுதோறும்  பஞ்சாங்கப்படி பத்தாம்மாதம்.  பூசநட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகப்பெருமானுக்கு எடுக்கப்படும் விழா. நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரம்.விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. தைப்பூசத் திருவிழாவில் முருகன் தேரில் பவனி வரும் காட்சி பழனியிலும், வடலூரிலும்,  இலங்கையிலும், மலேசியாவிலும் தைப்பூசம் சிறப்பு  மலேசியா பத்து மலை முருகன் கோவில் உலகத் தமிழர்களிடையே புகழ் பெற்ற ஆலயமாகும். இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிக முக்கியமானதாகும். பத்து மலை கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ள மலைக்கோவில் சுண்ணாம்புப் பாறைகளாலான மலை . வரிசையாக அமைந்த பத்து குகை  கோவில்களை இங்கு காணலாம். மலையை ஒட்டி சுங்கபத்து ஆறு ஓடுகிறது. பத்து கோவில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்த