முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கானாப்பேரின் கோபுரமும் காணற்கறிய தேரும் மருது மன்னர் செய்த சிறப்பு


            மருதுமன்னர்கள் வெள்ளோட்டம் கண்ட தேர்  ஜமீன்தார் குடும்பக் கைங்கர்யத்தால்   புதுப்பித்து  தேரோட்ட விழாபாண்டிய நாட்டின் பாடல் பெற்ற பதினான்கு திருத்தலங்களில் முக்கியமான தலம் திருக்கானப்பேர் என்று அழைக்கப்படும் காளையார் கோவில்.
சிவகங்கையில் இருந்து 18 கி.மீ தொலைவிலும் காரைக்குடியில் இருந்து 36 கி.மீ தொலைவிலும் உள்ளது.
இதன் பண்டைய பெயர் கானப்பேரெயில் எனவும், திருக்கானப்பேர் எனவும்,தலையிலங்கானம் என்றும் சங்க காலங்களில் வழங்கப்பட்டுள்ளது.கிபி பதினாறாம் நூற்றாண்டில் இருந்து சோமநாதமங்கலம் என அழைக்கப்பட்டுள்ளது.
சங்க காலத்தில் பாண்டிய நாட்டில் கானப்பேரெயில் என்ற அரண் அமைத்து சிங்கள படைகளை வென்று ஆண்ட தலைவன் வேங்கை மார்பன். இன்று, காளையார் கோவில் என வழங்குமிடத்தே, ஆழ்ந்த, அகழியினையும், வானளாவிய கெடிய மதில்களையும அடர்ந்த காவற் காட்டினையும் அமைத்து அவன் உருவாக்கிய கானப் பேரெயில் பகைவர் பற்றற்கரிய பேரரணாய் அமைந்தது.
வேங்கை மார்பனின சிறப்பினைக் கண்டு மனம் பொறாத கடைச்சங்க கால பாண்டிய மன்னன் உக்கிரப் பெருவழுதி பெரும் படையுடன் கானப் பேரெயிலை முற்றிகை யிட்டான். வேங்கை மார்பனை வென்றான். பற்றற்கரிய கானப் பேரெயிலைக் கைப்பற்றினான். கொல்லன் உலைக்களத்தே சிவக்கக் காய்ந்த இரும்பு உண்ட நீரை மீண்டும் பெறல் இயலாது என வேங்கை மார்பன் மனம் வருந்தினான்.கானப் பேரெயில் கடந்த உக்கிரப் பெருவழுதி எனும் சிறப்பினையும் பெற்றான். அதன் பின் திருப்பணியாகஒன்பது நிலை பெரிய கோபுரம், மருது பாண்டியர்களால் எடுக்கப் பெற்றதாகும். கிழக்கு கோபுர நிலையில் மருதுபாண்டியர்களின் திருவுருவங்கள் காணப்பெறுவதோடு அழகிய அன்னப்பறவைகளால் உருவான கொடிக்கருக்கு வேலைப்பாடு காணப்பெறுகின்றது. ஒன்பது நிலை கிழக்குக் கோபுரத்தின் மேலேறிப் பார்த்தால் மதுரைக் கோபுரம் தெரியும் என்பர். ‘‘மதுரைக் கோபுரம் தெரியக் கட்டிய மருதுபாண்டியன் வாராண்டி’’ எனும் கும்மிப் பாட்டு இவ்வட்டாரத்தில் வழங்கி வருகின்றது.
மேலும்,
‘‘கருமலையிலே கல்லெடுத்து
காளையார் கோயில் உண்டு பண்ணி
மதுரைக் கோபுரம் தெரியக் கட்டிய
மருது வாரதைப் பாருங்கடி’’
- போன்ற குறிப்புகளும் பழம் பாடல்களில் காணப்பெறுகின்றன. கோயில் முன் மண்டபத்தை இவர்கள் எடுப்பித்ததோடு பெரியதொரு திருத்தேரினையும் செய்தளித்தனர். கோயில் பராமரிப்புக்காக நாற்பது கிராமங்களையும், இரண்டு லட்சம் ரூபாய் மதிப்புடைய நகைகளையும் இக்கோயிலுக்கென அளித்துள்ளனர். கி.பி. 1789லிருந்து 1794ம் ஆண்டுக்குள் அவர்கள் தம் காளையார் கோயில் திருப்பணிகள் நிறைவடைந்துள்ளன அதன் பின் தேர் வெள்ளோட்டமே சிறப்பு அதை கோவி மணிசேகரன் காளையார்கோவில் ரதம் என கதையாகவே வடித்துள்ளார் காளையார்கோவில் சொர்ணகாளீஸ்வரர் கோயிலில் தைப்பூச விழாவை முன்னிட்டு தேரோட்டம் நடந்தது.
இக்கோயிலில் ஜன.,30 அன்று காலை 8:30 முதல் 9:00 மணிக்குள் கொடியேற்றத்துடன் தைப்பூச விழா துவங்கியது. தினமும் சுவாமி அம்பாளுடன் பல்வேறு வாகனங்களில் வீதி உலா வந்தார். ஒன்பதாம் நாள் விழாவான நேற்று காலை 9:00 மணிக்கு தேரோட்டம் துவங்கியது. சொர்ணகாளீஸ்வரர் உடனாய அம்பாள் பெரிய தேரிலும், சொர்ணவள்ளி மற்றொரு தேரிலும், விநாயகர் சிறு தேரில் எழுந்தருளினர்.
பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க, நான்கு ரத வீதிகளை சுற்றி வந்து இரவு 7:00 மணிக்கு நிலையை அடைந்தது. அதனை தொடர்ந்து சுவாமி புறப்பாடு நடந்தது. இன்று தீர்த்தவாரி, சிறப்பு அபிேஷக ஆராதனை நடைபெறுகிறது. இரவு சுவாமி புறப்பாடுடன் தைப்பூச விழா நிறைவு பெறும். சிவகங்கை தேவஸ்தான மேலாளர் இளங்கோ, கண்காணிப்பாளர் பாலசரவணன்,கோயில் ஸ்தானிகம் காளீஸ்வர குருக்கள் ஆகியோர் விழா ஏற்பாடுகளை செய்திருந்தனர்.மருதுசோதர்கள் காலத்திற்குப் பின் மன்னர் துரைசிங்கம் ராஜா அவர்கள் காலத்திற்குப் பின் தேவகோட்டை ஜமீன்தார் அரு குடும்பத்தார்கள் திருப்பணிகள் பல சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தான ஒத்துழைப்புடன் சிறப்பாகச் செய்து வரும் நிலையில் காளையார்கோவில் சொர்ணகாளீஸ்வரர் கோயிலில் தைப்பூச விழாவை முன்னிட்டு தேரோட்டம் நடந்தது.
இக்கோயிலில் ஜன.,30 அன்று காலை 8:30 முதல் 9:00 மணிக்குள் கொடியேற்றத்துடன் தைப்பூச விழா துவங்கியது. தினமும் சுவாமி அம்பாளுடன் பல்வேறு வாகனங்களில் வீதி உலா வந்தார். ஒன்பதாம் நாள் விழாவான நேற்று காலை 9:00 மணிக்கு தேரோட்டம் துவங்கியது. சொர்ணகாளீஸ்வரர் உடனாய அம்பாள் பெரிய தேரிலும், சொர்ணவள்ளி மற்றொரு தேரிலும், விநாயகர் சிறு தேரில் எழுந்தருளினர்.
பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க, நான்கு ரத வீதிகளை சுற்றி வந்து இரவு 7:00 மணிக்கு நிலையை அடைந்தது. அதனை தொடர்ந்து சுவாமி புறப்பாடு நடந்தது. இன்று தீர்த்தவாரி, சிறப்பு அபிேஷக ஆராதனை நடைபெறுகிறது. இரவு சுவாமி புறப்பாடுடன் தைப்பூச விழா நிறைவு பெறும். சிவகங்கை தேவஸ்தான மேலாளர் இளங்கோ, கண்காணிப்பாளர் பாலசரவணன்,கோயில் ஸ்தானிகம் காளீஸ்வர குருக்கள் ஆகியோர் விழா ஏற்பாடுகளை செய்திருந்தனர்.


 


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி நடத்திய சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினவிழா

1992-ஆம் ஆண்டு முதல்   ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 3 ஆம் தேதி ஐக்கிய நாடுகள் சபையால் அங்கீகரித்த சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் IDPD ஆகும், இது சமூகம் மற்றும் வளர்ச்சியின் அனைத்து நிலைகளிலும் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள், நல்வாழ்வு மற்றும் பங்கேற்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது. சமூகத்தில் மாற்றுத்திறனாளிகளின் பங்களிப்பை அங்கீகரித்தல். அவர்களின் உரிமைகளை வலியுறுத்துதல். அவர்களின் நல்வாழ்வு மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சியை ஊக்குவித்தல்.  இந்த நாளில் உலகெங்கிலும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள் மற்றும் உதவிகள் வழங்கும் விழாக்கள் நடத்தப்படுகின்றன. அதை இந்த ஆண்டு காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் சிறப்புக் கல்வி மற்றும் மறுவாழ்வு அறிவியல் துறை,  மற்றும்  டாக்டர் அழகப்பா கல்வி அறிவியல் நிறுவனம் ,  மற்றும் காரைக்குடி ஹெரிடேஜ் ரோட்டரி கிளப், மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான மல்டிமோடல் மெட்டீரியல் உற்பத்திக்கான மையம், மற்றும்  ஐடி மற்றும் ஆட்டிசத்திற்கான அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி சார்பில் இந்த ஆணடு விழா சர்வதேச மாற்று...

சோழப் பேரரசி வானதி எழுப்பிய மூவர் கோவில்

முதலாம் இராஜேந்திர சோழரின் தாய்  வானவன் மாதேவி எனும் அரசி வானதி, சோழர்களின் வரலாற்றில் பெரும் புகழ் மாமன்னர் அருள்மொழித் தேவன் எனும் இராஜராஜசோழச் சக்கரவர்த்தி மீது இணையில்லாத காதல் மங்கை கொடும்பாளூர் இளவரசி வானதியை "பொன்னியின் செல்வன்" கதை படித்த யாரும் மறக்க முடியாது. சோழர் கடற்படையின் பரப்பை இலங்கை வரை  சென்று வென்று வந்த வரலாற்று நிகழ்வுகளின் மூலம் குறுநில மன்னர்கள் அல்லது வேளிர்  துணை நின்றார்கள் அதில் ஈழத்துப் பட்டம்  வென்ற கொடும்பாளூர் வேளிர் மகளான வானதி இளம் வயதிலேயே தாய் தந்தையை இழந்தவர். கொடும்பாளூர் சிற்றரசன் அதாவது வேளிர் சோழ சாம்ராஜ்யத்தின் சேனாதிபதி யாகவும் இருந்த சிறிய தந்தை குறுநில மன்னர் பூதி விக்ரமகேசரியால் வளர்க்கப்பட்டவர் தான் வானவன் மாதேவி எனும் அரசி வானதி. கொடும்பாளூர் பிறந்து திருக்கோவிலூரை பின்னர் ஆண்ட மலையமானின் மகள்  “மேலும் வானவன்மாதேவி மன்னர் ராஜராஜ சோழர் மறைந்த உடன் பிரிவாற்றாமல் உடன்கட்டை ஏறி தன் உயிரை மாய்த்துக் கொண்டாள். இதை திருவாலங்காட்டுச் செப்பேடுகள் மூலம் அறியலாம் ஈழத்தில் நடைபெற்ற யுத்தத்திற்காக கொடும்பாளூர்  வேளிர் கடல...