🇮🇳 🇺🇸 அமெரிக்க அதிபர் தனி விமானம் மூலம் இந்தியா வந்து சேர்ந்தார் அது
விமானமா அல்லது மினி அதிபர் மாளிகையா என அசரவைக்கும் ட்ரம்ப் வருகை தரும் விமானத்தின் வசதிகள்
அமெரிக்க அதிபரை ஏற்றிச் செல்லும் விமானத்தின் குறியீட்டுப் பெயர் Air Force One. அமெரிக்கா அதன் உலகளாவிய செல்வாக்கு ஆகியவற்றின் மிக முக்கியமான அடையாளம் இது. அமெரிக்க விமானப் படைக்குச் சொந்தமான விமானம், சிறப்பான வடிவமைப்பும், கட்டமைப்பும் கொண்டது. அதிபர் மட்டுமே இந்த விமானத்தைப் பயன்படுத்த முடியும்.
1953-ம் ஆண்டு அதிபராக இருந்த ஐஸனாவர் சென்ற விமானத்தின் வழித்தடத்தில் லாக்ஹீட் நிறுவனத்தின் விமானம் ஒன்று பறந்து வந்ததால், விபத்து ஏற்படும் நிலை உருவானது. இந்தச் சிக்கலைத் தவிர்ப்பதற்காக அமெரிக்க அதிபரின் விமானம் மட்டும் ஏர் ஃபோர்ஸ் ஒன் என்ற குறியீட்டுடன் அழைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
அன்றிலிருந்து பல வகையான விமானங்கள் அமெரிக்க அதிபரை ஏற்றிச் செல்லும் ஏர் ஃபோர்ஸ் ஒன் சேவைக்காக வடிவமைக்கப்பட்டுள்ளன. 1990-ல் இருந்து போயிங் விசி 25 A என்ற வகையைச் சேர்ந்த இரு விமானங்கள் அதிபர்களின் பயணத்துக்காகப் பயன்பட்டு வருகின்றன. இந்த விமானங்களின் உள்வடிமைப்பு பிரமாண்டமானது.
மூன்றடுக்குகளாக சுமார் நான்காயிரம் சதுர அடி பரப்புள்ள விமானத்தில் கூட்ட அரங்கு, படுக்கையறை, சமையல் அறை, ரகசியப் பாதுகாப்பு அறை, விருந்தினர்களுக்கான பகுதி, விளையாட்டு அரங்கு என சிறிய அதிபர் மாளிகையே இருக்கும். தொலைபேசி, கணினி, இணையம் என தகவல் தொடர்பு வசதிகளும் இதில் உண்டு.
அமெரிக்காவில் ஏதாவது நெருக்கடி ஏற்பட்டால், அதிபர் விமானத்தில் பறந்து கொண்டிருந்தால்கூட இந்த வசதிகள் மூலம் உடனடியாக ஆலோசனைகளையும் கட்டளைகளையும் வழங்க முடியும். ஒருமுறை எரிபொருள் நிரப்பினால், சுமார் 10 ஆயிரம் கிலோ மீட்டர் வரை பறக்கும் அளவுக்கு திறன் கொண்டது இந்த விமானம். தேவைப்பட்டால், வானத்திலேயே எரிபொருள் நிரப்பிக் கொள்ளவும் முடியும். பொழுதுபோக்குக்காக கூடைப்பந்து போன்ற விளையாட்டுகளை ஆடவும் விமானத்தில் வசதி உள்ளது. அதிபரின் பாதுகாப்புக்காக அவருக்கான பிரத்யேக பாதுகாவலர்கள் நவீன ஆயுதங்களுடன் உடன் இருப்பார்கள்.
அமெரிக்கா மீது யாரும் தாக்குதல் நடத்தும் நிலையில், இந்த விமானம் அதிபர் கட்டளை அளிக்கும் மினி Mobile Command Center ஆகவே மாறிவிடும்.அப்படி விமானம் மூலம் இந்தியா வந்தடைந்தார் அமெரிக்க அதிபர் டிரம்ப் இரண்டு நாள் பயணமாக இந்தியாவில், 36 மணி நேரம் செலவிடுகிறார் டிரம்ப், டிரம்பின் பயண விபரம்:
காலை, 11:40 மணி: டிரம்ப், மனைவி மெலனியா, ஆமதாபாத் விமான நிலையம் வருகை. பிரதமர் மோடி வரவேற்கிறார்.
பகல், 12:15 மணி: காந்தியின் சபர்மதி ஆசிரமம் செல்கின்றனர். காந்திக்கு டிரம்ப் அஞ்சலி செலுத்துகிறார்.
1:05 மணி: கடந்தாண்டு அமெரிக்காவில் நடந்த, 'ஹவுடி மோடி' நிகழ்ச்சி போல, குஜராத் அரசு சார்பில் உலகின் பெரிய ஆமதாபாத் கிரிக்கெட் மைதானத்தில், 'நமஸ்தே டிரம்ப்' நிகழ்ச்சி நடக்கிறது.
3:30 மணி: தாஜ்மஹாலை காண டிரம்ப் - மெலனியா, ஆக்ரா செல்கின்றனர்.
இரவு, 7:30 மணி : டில்லி ஐ.டி.சி., மயூரா ஹோட்டலில் தங்குகின்றனர்.
காலை, 10:00 மணி: டில்லி ராஷ்டிரபதி பவனில், டிரம்புக்கு வரவேற்பு.
10:30 மணி: ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில், டிரம்ப் அஞ்சலி செலுத்துகிறார் ,11:00 மணி: டில்லியில் உள்ள ஐதராபாத் ஹவுசில், பாதுகாப்பு, வர்த்தகம், பயங்கரவாத தடுப்பு உட்பட பல துறைகளில், இந்திய - அமெரிக்க உறவு குறித்து, பிரதமர் மோடி - அதிபர் டிரம்ப் பேச்சுவார்த்தை நடத்துகின்றனர்.
பகல், 12:40 மணி : ஒப்பந்தங்கள் பரிமாற்றம், செய்தி வெளியீடு.
இரவு, 7:30 மணி: இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை சந்திக்கிறார் டிரம்ப்.
இரவு, 10:00 மணி: டில்லி விமான நிலையத்தில் இருந்து அமெரிக்கா புறப்படுகிறார் டிரம்ப்.
"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன், வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்; நான் விரும்பிய காளி தருவாள்". - மஹாகவி பாரதியார் சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை எடுத்தனர் அது வெட்டி எடுத்த அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“ நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன் கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...
கருத்துகள்