முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

அமெரிக்க அதிபர் இந்தியா வந்தடைந்தார்

 🇮🇳 🇺🇸 அமெரிக்க அதிபர் தனி விமானம் மூலம் இந்தியா வந்து சேர்ந்தார் அது
விமானமா அல்லது மினி அதிபர் மாளிகையா என  அசரவைக்கும் ட்ரம்ப் வருகை தரும் விமானத்தின் வசதிகள்
அமெரிக்க அதிபரை ஏற்றிச் செல்லும் விமானத்தின் குறியீட்டுப் பெயர் Air Force One. அமெரிக்கா அதன் உலகளாவிய செல்வாக்கு ஆகியவற்றின் மிக முக்கியமான அடையாளம் இது. அமெரிக்க விமானப் படைக்குச் சொந்தமான  விமானம், சிறப்பான வடிவமைப்பும், கட்டமைப்பும் கொண்டது. அதிபர் மட்டுமே இந்த விமானத்தைப் பயன்படுத்த முடியும்.
1953-ம் ஆண்டு அதிபராக இருந்த ஐஸனாவர் சென்ற விமானத்தின் வழித்தடத்தில் லாக்ஹீட் நிறுவனத்தின் விமானம் ஒன்று பறந்து வந்ததால், விபத்து ஏற்படும் நிலை உருவானது. இந்தச் சிக்கலைத் தவிர்ப்பதற்காக அமெரிக்க அதிபரின் விமானம் மட்டும் ஏர் ஃபோர்ஸ் ஒன் என்ற குறியீட்டுடன் அழைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
அன்றிலிருந்து பல வகையான விமானங்கள் அமெரிக்க அதிபரை ஏற்றிச் செல்லும் ஏர் ஃபோர்ஸ் ஒன் சேவைக்காக வடிவமைக்கப்பட்டுள்ளன. 1990-ல் இருந்து போயிங் விசி 25 A என்ற வகையைச் சேர்ந்த இரு விமானங்கள் அதிபர்களின் பயணத்துக்காகப் பயன்பட்டு வருகின்றன. இந்த விமானங்களின் உள்வடிமைப்பு பிரமாண்டமானது.
மூன்றடுக்குகளாக சுமார் நான்காயிரம் சதுர அடி பரப்புள்ள  விமானத்தில் கூட்ட அரங்கு, படுக்கையறை, சமையல் அறை, ரகசியப் பாதுகாப்பு அறை, விருந்தினர்களுக்கான பகுதி, விளையாட்டு அரங்கு என சிறிய அதிபர் மாளிகையே இருக்கும். தொலைபேசி, கணினி, இணையம் என தகவல் தொடர்பு வசதிகளும் இதில் உண்டு.
அமெரிக்காவில் ஏதாவது நெருக்கடி ஏற்பட்டால், அதிபர் விமானத்தில் பறந்து கொண்டிருந்தால்கூட இந்த வசதிகள் மூலம் உடனடியாக ஆலோசனைகளையும் கட்டளைகளையும் வழங்க முடியும். ஒருமுறை எரிபொருள் நிரப்பினால், சுமார் 10 ஆயிரம் கிலோ மீட்டர் வரை பறக்கும் அளவுக்கு திறன் கொண்டது இந்த விமானம். தேவைப்பட்டால், வானத்திலேயே எரிபொருள் நிரப்பிக் கொள்ளவும் முடியும். பொழுதுபோக்குக்காக கூடைப்பந்து போன்ற விளையாட்டுகளை ஆடவும்  விமானத்தில் வசதி உள்ளது. அதிபரின் பாதுகாப்புக்காக அவருக்கான பிரத்யேக பாதுகாவலர்கள் நவீன ஆயுதங்களுடன் உடன் இருப்பார்கள்.
அமெரிக்கா மீது யாரும் தாக்குதல் நடத்தும் நிலையில், இந்த விமானம் அதிபர் கட்டளை அளிக்கும் மினி Mobile Command Center ஆகவே மாறிவிடும்.அப்படி விமானம் மூலம் இந்தியா வந்தடைந்தார்  அமெரிக்க அதிபர் டிரம்ப் இரண்டு நாள் பயணமாக இந்தியாவில், 36 மணி நேரம் செலவிடுகிறார் டிரம்ப், டிரம்பின் பயண விபரம்:
காலை, 11:40 மணி: டிரம்ப், மனைவி மெலனியா, ஆமதாபாத் விமான நிலையம் வருகை. பிரதமர் மோடி வரவேற்கிறார்.
பகல், 12:15 மணி: காந்தியின் சபர்மதி ஆசிரமம் செல்கின்றனர். காந்திக்கு டிரம்ப் அஞ்சலி செலுத்துகிறார்.
1:05 மணி: கடந்தாண்டு அமெரிக்காவில் நடந்த, 'ஹவுடி மோடி' நிகழ்ச்சி போல, குஜராத் அரசு சார்பில் உலகின் பெரிய ஆமதாபாத் கிரிக்கெட் மைதானத்தில், 'நமஸ்தே டிரம்ப்' நிகழ்ச்சி நடக்கிறது.
3:30 மணி: தாஜ்மஹாலை காண டிரம்ப் - மெலனியா, ஆக்ரா செல்கின்றனர்.
இரவு, 7:30 மணி : டில்லி ஐ.டி.சி., மயூரா ஹோட்டலில் தங்குகின்றனர்.
காலை, 10:00 மணி: டில்லி ராஷ்டிரபதி பவனில், டிரம்புக்கு வரவேற்பு.
10:30 மணி: ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில், டிரம்ப் அஞ்சலி செலுத்துகிறார்   ,11:00 மணி: டில்லியில் உள்ள ஐதராபாத் ஹவுசில், பாதுகாப்பு, வர்த்தகம், பயங்கரவாத தடுப்பு உட்பட பல துறைகளில், இந்திய - அமெரிக்க உறவு குறித்து, பிரதமர் மோடி - அதிபர் டிரம்ப் பேச்சுவார்த்தை நடத்துகின்றனர்.
பகல், 12:40 மணி : ஒப்பந்தங்கள் பரிமாற்றம், செய்தி வெளியீடு.
இரவு, 7:30 மணி: இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை சந்திக்கிறார் டிரம்ப்.
இரவு, 10:00 மணி: டில்லி விமான நிலையத்தில் இருந்து அமெரிக்கா புறப்படுகிறார் டிரம்ப்.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி நடத்திய சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினவிழா

1992-ஆம் ஆண்டு முதல்   ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 3 ஆம் தேதி ஐக்கிய நாடுகள் சபையால் அங்கீகரித்த சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் IDPD ஆகும், இது சமூகம் மற்றும் வளர்ச்சியின் அனைத்து நிலைகளிலும் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள், நல்வாழ்வு மற்றும் பங்கேற்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது. சமூகத்தில் மாற்றுத்திறனாளிகளின் பங்களிப்பை அங்கீகரித்தல். அவர்களின் உரிமைகளை வலியுறுத்துதல். அவர்களின் நல்வாழ்வு மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சியை ஊக்குவித்தல்.  இந்த நாளில் உலகெங்கிலும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள் மற்றும் உதவிகள் வழங்கும் விழாக்கள் நடத்தப்படுகின்றன. அதை இந்த ஆண்டு காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் சிறப்புக் கல்வி மற்றும் மறுவாழ்வு அறிவியல் துறை,  மற்றும்  டாக்டர் அழகப்பா கல்வி அறிவியல் நிறுவனம் ,  மற்றும் காரைக்குடி ஹெரிடேஜ் ரோட்டரி கிளப், மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான மல்டிமோடல் மெட்டீரியல் உற்பத்திக்கான மையம், மற்றும்  ஐடி மற்றும் ஆட்டிசத்திற்கான அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி சார்பில் இந்த ஆணடு விழா சர்வதேச மாற்று...

சோழப் பேரரசி வானதி எழுப்பிய மூவர் கோவில்

முதலாம் இராஜேந்திர சோழரின் தாய்  வானவன் மாதேவி எனும் அரசி வானதி, சோழர்களின் வரலாற்றில் பெரும் புகழ் மாமன்னர் அருள்மொழித் தேவன் எனும் இராஜராஜசோழச் சக்கரவர்த்தி மீது இணையில்லாத காதல் மங்கை கொடும்பாளூர் இளவரசி வானதியை "பொன்னியின் செல்வன்" கதை படித்த யாரும் மறக்க முடியாது. சோழர் கடற்படையின் பரப்பை இலங்கை வரை  சென்று வென்று வந்த வரலாற்று நிகழ்வுகளின் மூலம் குறுநில மன்னர்கள் அல்லது வேளிர்  துணை நின்றார்கள் அதில் ஈழத்துப் பட்டம்  வென்ற கொடும்பாளூர் வேளிர் மகளான வானதி இளம் வயதிலேயே தாய் தந்தையை இழந்தவர். கொடும்பாளூர் சிற்றரசன் அதாவது வேளிர் சோழ சாம்ராஜ்யத்தின் சேனாதிபதி யாகவும் இருந்த சிறிய தந்தை குறுநில மன்னர் பூதி விக்ரமகேசரியால் வளர்க்கப்பட்டவர் தான் வானவன் மாதேவி எனும் அரசி வானதி. கொடும்பாளூர் பிறந்து திருக்கோவிலூரை பின்னர் ஆண்ட மலையமானின் மகள்  “மேலும் வானவன்மாதேவி மன்னர் ராஜராஜ சோழர் மறைந்த உடன் பிரிவாற்றாமல் உடன்கட்டை ஏறி தன் உயிரை மாய்த்துக் கொண்டாள். இதை திருவாலங்காட்டுச் செப்பேடுகள் மூலம் அறியலாம் ஈழத்தில் நடைபெற்ற யுத்தத்திற்காக கொடும்பாளூர்  வேளிர் கடல...