சு.மணிகண்டன்,மாவட்ட ச் செய்தியாளர்,நாகப்பட்டினம் நாகைமாவட்டத்தில் கஜா புயல் பாதித்த பகுதிகளில் மண்ணின் தரம் மாறியதால் சுமார் 500 ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த நிலக்கடலை சாகுபடி முளைக்காமல் வீணானதுதாக விவசாயிகள் வேதனை.இங்கு பரவலாக நிலக்கடலை பயரிடப்படுகிறது. 90 நாள்களில் குறுகிய காலத்தில் பயன்தரக்கூடிய பணப்பயிர் என்பதாலும், கால்நடைகளுக்கு நிலக் கடலைச் செடி சிறந்த தீவனமாக உள்ளதாலும் நிலக்கடலையைப் பயிர் செய்வதில் விவசாயிகள் ஆர்வம் செலுத்தி வருகின்றனர். கஜா புயல் சீற்றத்தால் பெரும் பாதிப்புக்குள்ளான நாகை மாவட்டப் பகுதிகளில் உள்ள கடலோர கிராமங்களில் கடல் நீர் உள்புகுந்ததால், மண்ணின் தரம் மாறுபட்டுள்ளது. இதனால், புயலுக்குப் பின்னர் கடலோர கிராமங்களில் விவசாயப் பணிகள் சரியாக நடைபெறவில்லை எனவும், கடல் நீர் உள்புகுந்ததால் நிலத்தில் நச்சுத் தன்மையும் அதிகமாகியுள்ளது. இதனால் சி7 (C7) என்ற ரகம் நிலக்கடலை முலைக்காமல் போய் உள்ளதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். 60 நாட்கள் ஆன நிலையிலும் உயரமாக செடிகள் வளர்ந்து கடலை இல்லாமல் வெறும் செடியாக இருப்பதாக கஜா புயல் பாதித்த புதுப்பள்ளி,கண்டியன்காடு, வேட்டைக்காரனிருப்பு, , விழுந்தமாவடி உள்ளிட்ட பகுதிகளில் 500 ஏக்கர் பரப்பளவிற்கு மேல் பயிரிடப்பட்டிருந்த நிலக்கடலை களுக்கு மகசூல் இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறும் விவசாயிகள், விவசாயத்துக்கு ஏற்ற வகையில் நிலத்தைப் பக்குவப்படுத்துவதில் சிரமம் நீடித்து வருவதாகவும் வேதனை தெரிவிக்கின்றனர். மேலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு தமிழக அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் விவசாயிகள் கோரிக்கை வைக்கின்றனர்.
"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன், வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்; நான் விரும்பிய காளி தருவாள்". - மஹாகவி பாரதியார் சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை எடுத்தனர் அது வெட்டி எடுத்த அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“ நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன் கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...
கருத்துகள்