முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

அருள்மிகு முத்துமாரியம்மன் ஆலய பூச்சொரிதல் விழா ஏற்பாடுகள் கோலாகலம்

ண்டு தேரும் நடக்கும் பங்குனிப் பொங்கல் விழாவானது  இந்தாண்டு மார்ச் மாதம் 15 ம் தேதி பூச்சொரிதல் விழாவும், 16 ம் தேதி அக்கினிக் காவடியும் அருள்மிகு கொன்னையூர்  மாரியம்மன் ஆலயத்தில் நடைபெறுகிறது அதற்கான சிறப்பான ஏற்பாடுகள் இப்போதிருந்தே செய்யப்பட்டு வருகிறது அருள்மிகு மாரியம்மன் வரலாறு பற்றிய ஆராய்ச்சியில் மா என்பது மழை. மழை தரும் தெய்வம் மாரியம்மன். இருபதெட்டு ஆகமங்களில் தலையாயது ‘ காரணாகமம் ‘ இந்நூலில்  367 -  ஆம் பக்கத்தில்  95 -   வது படலத்தில்  30  ஸ்லோகங்களை கொண்ட ‘ மகாம பிரதிஷ்டா படலம் ‘ மாரியம்மனின் வரலாற்றினைக் கூறுகிறது.
அறிய தவமிருந்து இறைவனிடம் பல வரங்களையும், மகா பலத்தையும் பெற்ற மாரா சூரன் ஆணவமும் , அகங்காரமும் கொண்டு மூவுலகங்களையும் துன்பப்படுத்தினான். அனைவரும் லோக மாதாவான பராசக்தியிடம் முறையிட்டனர். தேவியும் திருவுளமிரங்கி  காத்தருளுவதாக உறுதி பூண்டு, கோபாவேசத்தோடு மாரசுரனின் இரு கால்களையும் பிடித்து மேலே தூக்கி அவனது தலையை பூமியில் அழுத்தி மாரசுரன் பெற்ற வரத்தின் படி மாய்த்தார். தேவர்களும், தானவர்களும் பூ மாறி பொழிந்து நன்றி பெருக்காற்றினர். அன்று முதல் ‘ மாரசுரனை மாய்த்தமையால் மாரியம்மன் ‘  எனும் பெயர் வழங்கலாயிற்று.
மாரியம்மன் நான்கு திருக்கரங்கள் பாசம், டமருகம், கத்தி, கபாலம், எனக் கொண்டு மூன்று திருக்கண்களையும் அக்னிக் கொழுந்து மேல் நோக்கி சுடர் விட்டுப் பிரகாசிக்கும் கிரீடத்தையும், சிவந்த திருமேனியையும், சகல ஆபரணங்களையும் , நீல நிற ஆடையையும் அணிந்து , வலது காலை மடக்கி, இடது காலைத் தொங்க விட்டு சுகாசனத்தில் வீற்றிருக்கிறாள்.
அதிக துன்பத்தைத் தரக்கூடிய சுரம், பிளேக், கண்புரை, பீடை, நீற்குமுளி போன்ற கொப்புளங்கள், அம்மை நோய் முதலான பிணிகளைப் போக்குபவள். வெப்பத்தால் வரும் நோய்களுக்கு குணம் தந்து குளுமை தருபவள் ஆதலாலும், இவளது அருள் நோக்கம் பெற்ற தீர்த்தம் மருந்தாக, மந்திரமாக நோய்களைத் தணிப்பதாலும் ‘ சீதளதேவி ‘ என்றும் அழைக்கப்படுகிறாள்.
மந்திரங்களை ஜபித்து வழங்கப்படும் பொருட்களில், அட்சதை, குங்குமம், திருநீறு, எலுமிச்சம் பழம் இவைகளை காட்டிலும் தண்ணீரில் மிகவும் எளிதாக ஜபம் பற்றிக் கொள்கிறது. இந்த மந்திரம் சீதளாதேவிக்குரியது. அதனாலேயேதான் மாரியம்மன் தீர்த்தர்த்திற்கு அவ்வளவு விசேடம். தன்னை நினைந்து வேண்டுவோருக்கு உடனே அருள் சுரப்பவல் மாரியம்மன். மக்களை நோய்களினின்றும் காக்கும் தெய்வமாகவும், ஊர்க்காவல் தெய்வமாகவும், ஸ்ரீ முத்து மாரியம்மன், கருமாரியம்மன், மகாமாரியம்மன், குடலுருவி மாரியம்மன், எல்லைமாரியாம்மன், கோட்டை மாரியம்மன், பிளேக் மாரியம்மன், பாடைகட்டி மாரியம்மன், கண்ணாத்தாள், கண்ணபுரத்தாள், தண்டு மாரியம்மன் என்றும் பலப் பெயர்களில்  வணங்கப்படுகிறாள். 
ஸ்ரீ முத்துமாரியம்மன் எனும் பெயரில் வணங்கப்பட்டு வரும் மா மகமாயி குடி கொண்ட திருத்தலங்களில் பலவற்றில் கொன்னையூர் ஸ்ரீ முத்து மாரியம்மன் திருத்தலம் “பெரும் புகழும் மகிமையும் உடையதாகும்.”அம்பிகையே ஈஸ்வரியே எம்மை
ஆள வந்து கோயில் கொண்ட குங்குமக்காரி
ஓங்காரியே வேப்பிலைக்காரி ஒரு
உடுக்கையிலே பகை விரட்டும் முத்துமாரி 


வேலையிலே மனசு வச்சோம் முத்துமாரி – இப்போ
வெற்றிக் கொடி நாட்டுகிறோம் முத்துமாரி என்ற பாடல் கவிஞர் பூவை செங்குட்டுவன் எழுதியது எங்கு ஒலித்தாலும் நம் நினைவுகளில் வந்துவிடும் அம்மன் ஆலயம் பொன்னமராவதி யில் இருந்து புதுக்கோட்டை செல்லும் சாலையில் ஆறு கி மீ தொலைவில் உள்ளது அனைவரும் சென்று வழிபாடு செய்தால் நலம்


கருத்துகள்