முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

அருள்மிகு முத்துமாரியம்மன் ஆலய பூச்சொரிதல் விழா ஏற்பாடுகள் கோலாகலம்

ண்டு தேரும் நடக்கும் பங்குனிப் பொங்கல் விழாவானது  இந்தாண்டு மார்ச் மாதம் 15 ம் தேதி பூச்சொரிதல் விழாவும், 16 ம் தேதி அக்கினிக் காவடியும் அருள்மிகு கொன்னையூர்  மாரியம்மன் ஆலயத்தில் நடைபெறுகிறது அதற்கான சிறப்பான ஏற்பாடுகள் இப்போதிருந்தே செய்யப்பட்டு வருகிறது அருள்மிகு மாரியம்மன் வரலாறு பற்றிய ஆராய்ச்சியில் மா என்பது மழை. மழை தரும் தெய்வம் மாரியம்மன். இருபதெட்டு ஆகமங்களில் தலையாயது ‘ காரணாகமம் ‘ இந்நூலில்  367 -  ஆம் பக்கத்தில்  95 -   வது படலத்தில்  30  ஸ்லோகங்களை கொண்ட ‘ மகாம பிரதிஷ்டா படலம் ‘ மாரியம்மனின் வரலாற்றினைக் கூறுகிறது.
அறிய தவமிருந்து இறைவனிடம் பல வரங்களையும், மகா பலத்தையும் பெற்ற மாரா சூரன் ஆணவமும் , அகங்காரமும் கொண்டு மூவுலகங்களையும் துன்பப்படுத்தினான். அனைவரும் லோக மாதாவான பராசக்தியிடம் முறையிட்டனர். தேவியும் திருவுளமிரங்கி  காத்தருளுவதாக உறுதி பூண்டு, கோபாவேசத்தோடு மாரசுரனின் இரு கால்களையும் பிடித்து மேலே தூக்கி அவனது தலையை பூமியில் அழுத்தி மாரசுரன் பெற்ற வரத்தின் படி மாய்த்தார். தேவர்களும், தானவர்களும் பூ மாறி பொழிந்து நன்றி பெருக்காற்றினர். அன்று முதல் ‘ மாரசுரனை மாய்த்தமையால் மாரியம்மன் ‘  எனும் பெயர் வழங்கலாயிற்று.
மாரியம்மன் நான்கு திருக்கரங்கள் பாசம், டமருகம், கத்தி, கபாலம், எனக் கொண்டு மூன்று திருக்கண்களையும் அக்னிக் கொழுந்து மேல் நோக்கி சுடர் விட்டுப் பிரகாசிக்கும் கிரீடத்தையும், சிவந்த திருமேனியையும், சகல ஆபரணங்களையும் , நீல நிற ஆடையையும் அணிந்து , வலது காலை மடக்கி, இடது காலைத் தொங்க விட்டு சுகாசனத்தில் வீற்றிருக்கிறாள்.
அதிக துன்பத்தைத் தரக்கூடிய சுரம், பிளேக், கண்புரை, பீடை, நீற்குமுளி போன்ற கொப்புளங்கள், அம்மை நோய் முதலான பிணிகளைப் போக்குபவள். வெப்பத்தால் வரும் நோய்களுக்கு குணம் தந்து குளுமை தருபவள் ஆதலாலும், இவளது அருள் நோக்கம் பெற்ற தீர்த்தம் மருந்தாக, மந்திரமாக நோய்களைத் தணிப்பதாலும் ‘ சீதளதேவி ‘ என்றும் அழைக்கப்படுகிறாள்.
மந்திரங்களை ஜபித்து வழங்கப்படும் பொருட்களில், அட்சதை, குங்குமம், திருநீறு, எலுமிச்சம் பழம் இவைகளை காட்டிலும் தண்ணீரில் மிகவும் எளிதாக ஜபம் பற்றிக் கொள்கிறது. இந்த மந்திரம் சீதளாதேவிக்குரியது. அதனாலேயேதான் மாரியம்மன் தீர்த்தர்த்திற்கு அவ்வளவு விசேடம். தன்னை நினைந்து வேண்டுவோருக்கு உடனே அருள் சுரப்பவல் மாரியம்மன். மக்களை நோய்களினின்றும் காக்கும் தெய்வமாகவும், ஊர்க்காவல் தெய்வமாகவும், ஸ்ரீ முத்து மாரியம்மன், கருமாரியம்மன், மகாமாரியம்மன், குடலுருவி மாரியம்மன், எல்லைமாரியாம்மன், கோட்டை மாரியம்மன், பிளேக் மாரியம்மன், பாடைகட்டி மாரியம்மன், கண்ணாத்தாள், கண்ணபுரத்தாள், தண்டு மாரியம்மன் என்றும் பலப் பெயர்களில்  வணங்கப்படுகிறாள். 
ஸ்ரீ முத்துமாரியம்மன் எனும் பெயரில் வணங்கப்பட்டு வரும் மா மகமாயி குடி கொண்ட திருத்தலங்களில் பலவற்றில் கொன்னையூர் ஸ்ரீ முத்து மாரியம்மன் திருத்தலம் “பெரும் புகழும் மகிமையும் உடையதாகும்.”அம்பிகையே ஈஸ்வரியே எம்மை
ஆள வந்து கோயில் கொண்ட குங்குமக்காரி
ஓங்காரியே வேப்பிலைக்காரி ஒரு
உடுக்கையிலே பகை விரட்டும் முத்துமாரி 


வேலையிலே மனசு வச்சோம் முத்துமாரி – இப்போ
வெற்றிக் கொடி நாட்டுகிறோம் முத்துமாரி என்ற பாடல் கவிஞர் பூவை செங்குட்டுவன் எழுதியது எங்கு ஒலித்தாலும் நம் நினைவுகளில் வந்துவிடும் அம்மன் ஆலயம் பொன்னமராவதி யில் இருந்து புதுக்கோட்டை செல்லும் சாலையில் ஆறு கி மீ தொலைவில் உள்ளது அனைவரும் சென்று வழிபாடு செய்தால் நலம்


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி நடத்திய சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினவிழா

1992-ஆம் ஆண்டு முதல்   ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 3 ஆம் தேதி ஐக்கிய நாடுகள் சபையால் அங்கீகரித்த சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் IDPD ஆகும், இது சமூகம் மற்றும் வளர்ச்சியின் அனைத்து நிலைகளிலும் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள், நல்வாழ்வு மற்றும் பங்கேற்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது. சமூகத்தில் மாற்றுத்திறனாளிகளின் பங்களிப்பை அங்கீகரித்தல். அவர்களின் உரிமைகளை வலியுறுத்துதல். அவர்களின் நல்வாழ்வு மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சியை ஊக்குவித்தல்.  இந்த நாளில் உலகெங்கிலும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள் மற்றும் உதவிகள் வழங்கும் விழாக்கள் நடத்தப்படுகின்றன. அதை இந்த ஆண்டு காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் சிறப்புக் கல்வி மற்றும் மறுவாழ்வு அறிவியல் துறை,  மற்றும்  டாக்டர் அழகப்பா கல்வி அறிவியல் நிறுவனம் ,  மற்றும் காரைக்குடி ஹெரிடேஜ் ரோட்டரி கிளப், மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான மல்டிமோடல் மெட்டீரியல் உற்பத்திக்கான மையம், மற்றும்  ஐடி மற்றும் ஆட்டிசத்திற்கான அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி சார்பில் இந்த ஆணடு விழா சர்வதேச மாற்று...

சோழப் பேரரசி வானதி எழுப்பிய மூவர் கோவில்

முதலாம் இராஜேந்திர சோழரின் தாய்  வானவன் மாதேவி எனும் அரசி வானதி, சோழர்களின் வரலாற்றில் பெரும் புகழ் மாமன்னர் அருள்மொழித் தேவன் எனும் இராஜராஜசோழச் சக்கரவர்த்தி மீது இணையில்லாத காதல் மங்கை கொடும்பாளூர் இளவரசி வானதியை "பொன்னியின் செல்வன்" கதை படித்த யாரும் மறக்க முடியாது. சோழர் கடற்படையின் பரப்பை இலங்கை வரை  சென்று வென்று வந்த வரலாற்று நிகழ்வுகளின் மூலம் குறுநில மன்னர்கள் அல்லது வேளிர்  துணை நின்றார்கள் அதில் ஈழத்துப் பட்டம்  வென்ற கொடும்பாளூர் வேளிர் மகளான வானதி இளம் வயதிலேயே தாய் தந்தையை இழந்தவர். கொடும்பாளூர் சிற்றரசன் அதாவது வேளிர் சோழ சாம்ராஜ்யத்தின் சேனாதிபதி யாகவும் இருந்த சிறிய தந்தை குறுநில மன்னர் பூதி விக்ரமகேசரியால் வளர்க்கப்பட்டவர் தான் வானவன் மாதேவி எனும் அரசி வானதி. கொடும்பாளூர் பிறந்து திருக்கோவிலூரை பின்னர் ஆண்ட மலையமானின் மகள்  “மேலும் வானவன்மாதேவி மன்னர் ராஜராஜ சோழர் மறைந்த உடன் பிரிவாற்றாமல் உடன்கட்டை ஏறி தன் உயிரை மாய்த்துக் கொண்டாள். இதை திருவாலங்காட்டுச் செப்பேடுகள் மூலம் அறியலாம் ஈழத்தில் நடைபெற்ற யுத்தத்திற்காக கொடும்பாளூர்  வேளிர் கடல...