முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பூனைகளைச் சோதனை செய்தார்கள் யானைகள் தப்பியது தற்போது தான் பிடிபடுகிறது

        நீட் தேர்வுகளில் முறைகேடு செய்த நபருக்கு ஹிந்தி தெரியாதவர் ஹிந்தியில் தேர்வு எழுதியுள்ளார் எப்படி மருத்துவப்  படிப்பில் சேர நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது.  தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து  எழுதி, மருத்துவக்கல்லூரியில் சேர்ந்தவர்கள் குறித்த தகவல் தமிழகக் காவல்துறைக்குக் கிடைத்தது. அப்படி  மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்த தேனி அரசு மருத்துவக் கல்லூரி மாணவர் வெங்கடேசன் மகன் உதித்சூர்யா  பாலாஜி மருத்துவக் கல்லூரி மாணவர் டேவிட் மகன்  ராகுல், , சவிதா மருத்துவக் கல்லூரி மாணவி மைனாவதி மகள் பிரியங்கா, தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி மாணவர் முகம்மது ஷபி மகன் இர்ஃபான், எஸ்.ஆர்.எம் மருத்துவக் கல்லூரி மாணவர் சரவணன் மகன் பிரவீன்,  என பத்துப்பேர் கைது செய்யப்பட்டனர்.நீட் தேர்வு  ஆள்மாறாட்டம் தொடர்பாக சிபிசிஐடி போலீஸ் டிஜிபி ஜாபர்சேட் உத்தரவின் படி ஐஜி சங்கர் மேற்பார்வையில் சிபிசிஐடி போலீஸார் ஆள்மாறாட்டம் செய்தவர்கள் குறித்து விரிவான விசாரணை நடத்திவருகிறார்கள். 2019-2020 ஆம் கல்வி ஆண்டு போல 2018-2019 வது கல்வி ஆண்டிலும் நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் நடந்தது குறித்து சிபிசிஐடி போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்து. அதன்படி விசாரணை செய்த போலீஸாருக்குத்  தமிழக மருத்துவக்கல்லூரிகளில் இரண்டாமாண்டு படித்துவரும் பத்து மாணவர்கள் மீது சந்தேகம் வரவே அவர்கள் குறித்து விசாரணை நடத்த சிபிசிஐடி போலீஸார் முடிவு செய்தனர்.
போலீஸாரின் வளையத்திலிருப்பவர்கள் குறித்த விவரங்கள், புகைப்படங்கள் ஆகியவற்றை தமிழகத்தில் உள்ள மருத்துவக்கல்லூரிகளின் நிர்வாகத்திற்கு அனுப்பி அதுதொடர்பாக அந்தந்த கல்லூரியின் முதல்வர்கள் விசாரணை நடத்தி 2018-2019ஆம் கல்வி ஆண்டில் நடந்த நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து சென்னை மருத்துவக்கல்லூரியில் சேர்ந்ததாக கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரைச் சேர்ந்த  இரண்டாம் ஆண்டு மாணவன்  தனுஷ்குமார் மீது சென்னை மருத்துவக்கல்லூரி இயக்குநரகத்திலிருந்து சென்னை பூக்கடை காவல் நிலையத்தில் புகாரளிக்கப்பட்தன் பேரில் பூக்கடை போலீஸார் முதற்கட்ட விசாரணையை நடத்தி பின் வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது.  2018-2019 ஆம் கல்வியாண்டில் ஆள்மாறாட்டம் செய்தது தொடர்பாக சிபிசிஐடி போலீஸார் மேலும் ஒரு வழக்கைப்பதிவு செய்து புகாரளிக்கப்பட்டதும் சென்னை மருத்துவக்கல்லூரி மாணவன் தனுஷ்குமார், குடும்பத்தினரோடு தலைமறைவாகிவிட்டார். தனுஷ்குமார் குறித்து சிபிசிஐடி போலீஸார் விசாரித்தபோது அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகின.இதுகுறித்து சிபிசிஐடி போலீஸார் கூறுகையில், விசாரணையில் தனுஷ்குமார், பீகாரில் ஹிந்தி மொழியில் நீட் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றுள்ளார். பின்னர் நடந்த கவுன்சலிங்கில் சென்னை மருத்துவக்கல்லூரியை அவர் தேர்வு செய்துள்ளார்.
பீகாரில் தேர்வு எழுதியதாக தனுஷ்குமார் தாக்கல் செய்த ஆவணங்கள் குறித்து விசாரித்தபோதுதான் ஆள்மாறாட்டம் நடந்த தகவல் தெரியவந்தது. தனுஷ்குமார் என்ற பெயரில் வடமாநிலத்தைச் சேர்ந்த ஒருவர் தேர்வு எழுதியிருப்பதைக் கண்டறிந்தோம். தனுஷ்குமார், நீட் தேர்வை ஹிந்தியில் எழுதியதாக மருத்துவக் கல்லூரியில் சேருவதற்காகக் கொடுத்த ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
உண்மையில் தனுஷ்குமாருக்கு இந்தி தெரியாது. அதனால் அவர் சிக்கினாரஸ தனுஷ்குமார் அப்பா தேவேந்திரன் தொழிலதிபராதலால் பல லட்சம்  கொடுத்து நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்துள்ளனர். இதையடுத்து, சென்னை மருத்துவக்கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்துவந்த மாணவன் தனுஷ்குமார், அவரின் தந்தை தேவேந்திரன் ஆகியோரைப் பிடித்துள்ளோம். தனுஷ்குமாருக்காக பீகாரில் தேர்வு எழுதியவர் யாரென்று விசாரணை நடக்கிறது சாதாரண அப்பாவிப் பிள்ளைகளை சோதனை என்ற பெயரில் கெடுபிடிகள் செய்து மன உளைச்சல் தந்த தேர்வு அலுவலர் பூனைகளை சோதனை செய்து பெரிய யானைகள் தப்பிய கதை இப்போது வெளிவரும் நிலை 


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

அமலாக்கத்துறை தற்காலிகமாக முடக்கிய நியோ மேக்ஸின் சில சொத்துகள்

தமிழ்நாட்டில் பல மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமானோர் பல்லாயிரம் கோடிகள் பணத்தை முதலீடு செய்தனர். அதில் அரசுப்பணியில் பல்வேறு துறைகளில் இருந்து கொண்டு வருமான வரி செலுத்தாமல் முறைகேடு செய்து தவறான வழியில் லஞ்சமாக வாங்கிய இரகசியப் பணத்தையுடைய நபர்கள் செய்த முதலீட்டு கருப்புப் பணமும் அதில் அடங்கும், மேலும் அவர்கள் நிலை என்பது திருடனுக்குத் தேள் கொட்டிய நிலை போல புகார் கொடுத்து மேலும் மாட்டிக் கொள்ள அவர்கள் விரும்பவில்லை, அது ஒரு பெரிய பட்டியல் நீள்கிறது அதுவும் ED நன்கு அறியும். ஆகவே அவர்கள் தங்களை தங்கள் தற்காலிக செல்வாக்கைப் பயன்படுத்தி திரைமறைவில் மேற்கண்ட ஜாமீனில் வெளிவந்த குற்றவாளிகள் மூலம் பேரமும்,  கட்டப்பஞ்சாயத்தும் நடத்தி இரகசிய வழியாக பணம் அல்லது அவர்கள் வேறு பினாமி மூலம் வாங்கிய நிலையில் அதை பொருளாதாரக் குற்றப்பிரிவு இதுவரை புலனாய்வு செய்து கைப்பற்றாமல் உள்ள இரகசியமான ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் மூலம் பணத்தை திரும்ப பெறுவதற்கு அந்த இலஞ்ச ஊழல் கருப்புப்பண முதலைகள் ஒரு பக்கம் இரகசிய வழியாக முயலும் நிலையில் அதை பொருளாதார குற்றப்பிரிவு கண்டும் காணாமல் தான் இதுவரை செயல்பட்ட நிலைய...