முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஏழை, எளியவர்களே அரசின் இலக்கு ரூ.1.7 லட்சம் கோடிக்கு பேக்கேஜ். நிதியமைச்சர்

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு
ஏழை, எளியவர்களே அரசின் இலக்கு..ரூ.1.7 லட்சம் கோடிக்கு பேக்கேஜ்.  கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்த நிலையில், இன்று மதியம்  மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்.  செய்தியாளர் சந்திப்பின்போது ஏழைகளுக்கான பொருளாதார பேக்கேஜ் தொடர்பான அறிவிப்பை வெளியிடுவதாக அறிவித்தார்.
அதன்படி ரூ.1.7 லட்சம் கோடி மதிப்பிலான நிதியுதவி பேக்கேஜை நிர்மலா சீதாராமன் அறிவித்தார்.
கொரோனா வைரஸ் பிரச்சினை காரணமாக நாடு முழுவதும் லாக்டவுன் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் கூலி தொழிலாளர்கள் ஏழை எளியவர்கள் பணிக்குச் செல்ல முடியாமல் சாப்பாட்டுக்கு கஷ்டப்படும் நிலை உருவாகியுள்ளது. இவர்களுக்கு உதவி செய்யும் வகையில் 1.7 லட்சம் கோடி மதிப்பிலான நிவாரண உதவிகளை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று அறிவித்தார். அவரது அறிவிப்பு விபரம் :
மருத்துவப் பணியாளர்கள் அனைவருக்கும் தலா 50 லட்சம் மதிப்பிலான மருத்துவ காப்பீடு வழங்கப்படும். ஆஷா பணியாளர்கள், பாரா மெடிக்கல் நர்சுகள் போன்றோர் பலன் பெறுவார்கள்.
நாட்டின் எட்டு கோடி ஏழைகளுக்கு தற்போது வழங்கப்படுவதை விட அதிகமாக ஐந்து கிலோ அரிசி அல்லது கோதுமை அத்துடன் ஒரு கிலோ பருப்பு வழங்கப்படும். அடுத்த மூன்று மாதங்களுக்கும்.
பிரதமர் கிசான் திட்டத்தின் கீழ் வருடத்திற்கு 6000 ரூபாய் நிதி உதவி பெறக்கூடிய விவசாயிகளுக்கு ஏப்ரல் முதல் வாரத்தில் 2000 ரூபாய் வங்கி கணக்கில் வழங்கப்படும்.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் ஒருநாள் கூலி 182 ரூபாய் என்பது 202 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்
முதியோர், கணவனை இழந்தோர் போன்றோருக்கு வழங்கப்படும் உதவி தொகை, அடுத்த மூன்று மாதங்களில் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும்.
ஜன் தன் மகளிர் வங்கி கணக்கு பயனாளிகளுக்கு அடுத்த மூன்று மாதங்களுக்கு கூடுதலாக 500 ரூபாய் வழங்கப்படும்.
20.5 கோடி பெண்கள் இதனால் பலன் பெறுவார்கள்
வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ளோருக்கான உஜ்வாலா யோஜனா திட்டத்தின் கீழ் அடுத்த மூன்று மாதங்களுக்கு சமையல் எரிவாயு இலவசமாக வழங்கப்படும். 8.3 கோடி மக்கள் இதனால் பலன் பெறுவார்கள்.
முன்பு 10 லட்சம் வரையிலான பிணை இல்லா கடன் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு வழங்கப்பட்டது, அது 20 லட்சம் ரூபாயாக உயர்த்தப்படும் ஏழுகோடி மக்களுக்கு இதனால் பலன் கிடைக்கும்.
அதிகபட்சம் 100 பணியாளர்களை வேலைக்கு வைத்துள்ள மற்றும் அதில் 90 சதவீதம் ஊழியர்கள் 15 ஆயிரம் ரூபாய்க்கும் குறைவாக ஊதியம் பெறக்கூடிய நிறுவனங்களில் உரிமையாளர்கள் மற்றும் தொழிலாளிகள் ஆகிய இருவருக்குமான பிஎஃப் தொகையை அரசே செலுத்திவிடும்.
அதாவது, 24 சதவீத பிஎஃப் தொகையை அடுத்த, மூன்று மாதங்களுக்கு அரசு செலுத்திவிடும். 4.8 கோடி தொழிலாளர்களுக்கு இதனால் பலன் கிடைக்கும்.ஒரு சுகாதாரப் பணியாளருக்கு மூன்று மாதங்களுக்கு மருத்துவ காப்பீட்டுத் தொகையாக ரூ .50 லட்சம் காப்பீடு இருக்கும்.
பிரதான் மந்திரி கரீப் கல்யாண் ஆன் யோஜ்னா (அடுத்த 3 மாதங்களுக்கு) -80cr ஏழை பிபிஎல் மூடப்பட்டிருக்கும், ஏற்கனவே ஒரு நபருக்கு 5 கிலோ அரிசி / கோதுமை எது ஒதுக்கப்பட்டதோடு, கூடுதலாக 5 கிலோ இலவசம். கூடுதல் 1 கிலோ  (பிராந்திய விருப்பத்திற்கு ஏற்ப) வழங்கப்படும்.
8.69 கோடி விவசாயிகளுக்கு பயனளிப்பதற்காக தற்போதுள்ள பிரதமர் கிஷன் யோஜனாவின் கீழ் ஏப்ரல் முதல் வாரத்தில் விவசாயிகளுக்கு முன் சுமை ரூ .2,000
MNREGA ஊதியம் ரூ .182 லிருந்து ரூ .202 ஆக உயர்ந்துள்ளது. ஐ.ஏ.க்கள் ஒரு சிறப்பு நடவடிக்கை, மளிகை மற்றும் அத்தியாவசிய பொருட்கள் கடைகளை டெல்லியில் 24 ×7 இயக்க அனுமதிக்க வேண்டும்
20 கோடி ஜன தன் பெண்கள் கணக்கு வைத்திருப்பவர்கள்- அடுத்த மூன்று மாதங்களுக்கு மாதத்திற்கு ரூ .500 முன்னாள் கிராஷியா தொகை.
பெண்களுக்கு உஜ்வாலா திட்ட நன்மை மூன்று  மாதங்களுக்கு இலவச சிலிண்டர்கள், வயதானவர்கள் விதவைகள், திவ்யாங், ஓய்வூதியம் பெறுவோர் மூன்று  மாதங்களுக்கு மேல் டிபிடி மூலம் இரண்டு தவணைகளில் ஒரு முறை கூடுதல் ரூ .1000 பெற வேண்டும்.
அடுத்த மூன்று மாதங்களுக்கு முதலாளி மற்றும் பணியாளர் ஆகிய இருவருக்கும் EPFO ​​பங்களிப்பை அரசு செலுத்தும். இது 24% பங்களிப்பு (12% + 12%). இது 100 ஊழியர்களைக் கொண்ட நிறுவனங்களுக்கானது, அவர்களில் 90% குறைவாக சம்பாதிக்கிறார்கள், பின்னர் ரூ .15000 / - என நிதியமைச்சர் தகவல்.
கட்டுமான தொழிலாளர்கள் நல நிதி மாநில அரசால் செலவிடப்படும் வேண்டும். 31 ஆயிரம் கோடி ரூபாய் செலவிடப்படலாம். இதனால், 3.5 கோடி தொழிலாளர்கள் பலன் பெறுவார்கள்.
கொரோனா பாதிப்பை சமாளிக்க.. ஏழைகளுக்கு அரிசி, பருப்பு இலவசம்.என  மத்திய நிதியமைச்சர்  நிர்மலா சீதாராமன் அறிவிப்பு.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி நடத்திய சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினவிழா

1992-ஆம் ஆண்டு முதல்   ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 3 ஆம் தேதி ஐக்கிய நாடுகள் சபையால் அங்கீகரித்த சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் IDPD ஆகும், இது சமூகம் மற்றும் வளர்ச்சியின் அனைத்து நிலைகளிலும் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள், நல்வாழ்வு மற்றும் பங்கேற்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது. சமூகத்தில் மாற்றுத்திறனாளிகளின் பங்களிப்பை அங்கீகரித்தல். அவர்களின் உரிமைகளை வலியுறுத்துதல். அவர்களின் நல்வாழ்வு மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சியை ஊக்குவித்தல்.  இந்த நாளில் உலகெங்கிலும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள் மற்றும் உதவிகள் வழங்கும் விழாக்கள் நடத்தப்படுகின்றன. அதை இந்த ஆண்டு காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் சிறப்புக் கல்வி மற்றும் மறுவாழ்வு அறிவியல் துறை,  மற்றும்  டாக்டர் அழகப்பா கல்வி அறிவியல் நிறுவனம் ,  மற்றும் காரைக்குடி ஹெரிடேஜ் ரோட்டரி கிளப், மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான மல்டிமோடல் மெட்டீரியல் உற்பத்திக்கான மையம், மற்றும்  ஐடி மற்றும் ஆட்டிசத்திற்கான அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி சார்பில் இந்த ஆணடு விழா சர்வதேச மாற்று...

சோழப் பேரரசி வானதி எழுப்பிய மூவர் கோவில்

முதலாம் இராஜேந்திர சோழரின் தாய்  வானவன் மாதேவி எனும் அரசி வானதி, சோழர்களின் வரலாற்றில் பெரும் புகழ் மாமன்னர் அருள்மொழித் தேவன் எனும் இராஜராஜசோழச் சக்கரவர்த்தி மீது இணையில்லாத காதல் மங்கை கொடும்பாளூர் இளவரசி வானதியை "பொன்னியின் செல்வன்" கதை படித்த யாரும் மறக்க முடியாது. சோழர் கடற்படையின் பரப்பை இலங்கை வரை  சென்று வென்று வந்த வரலாற்று நிகழ்வுகளின் மூலம் குறுநில மன்னர்கள் அல்லது வேளிர்  துணை நின்றார்கள் அதில் ஈழத்துப் பட்டம்  வென்ற கொடும்பாளூர் வேளிர் மகளான வானதி இளம் வயதிலேயே தாய் தந்தையை இழந்தவர். கொடும்பாளூர் சிற்றரசன் அதாவது வேளிர் சோழ சாம்ராஜ்யத்தின் சேனாதிபதி யாகவும் இருந்த சிறிய தந்தை குறுநில மன்னர் பூதி விக்ரமகேசரியால் வளர்க்கப்பட்டவர் தான் வானவன் மாதேவி எனும் அரசி வானதி. கொடும்பாளூர் பிறந்து திருக்கோவிலூரை பின்னர் ஆண்ட மலையமானின் மகள்  “மேலும் வானவன்மாதேவி மன்னர் ராஜராஜ சோழர் மறைந்த உடன் பிரிவாற்றாமல் உடன்கட்டை ஏறி தன் உயிரை மாய்த்துக் கொண்டாள். இதை திருவாலங்காட்டுச் செப்பேடுகள் மூலம் அறியலாம் ஈழத்தில் நடைபெற்ற யுத்தத்திற்காக கொடும்பாளூர்  வேளிர் கடல...