நாளை மாலை 6 மணிக்கு அனைத்து மாவட்ட எல்லைகளையும் மூட தமிழக அரசு உத்தரவு.அத்தியாவசிய தேவைகளை தவிர வேறு எதற்கும் வெளியே வரக்கூடாது - முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி.நாளை மாலை 6 மணி முதல் வருகின்ற 31-ஆம் தேதி வரை தடை உத்தரவு - முதல்வர் பழனிசாமி.தமிழகம் முழுவதும் மார்ச் 24 மாலை 6 மணி முதல் மார்ச் 31 வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், அனைத்து மாவட்ட எல்லைகளையும் மூட உத்தரவிட்டு ள்ளார்.இந்தியாவில் கொரோனா முன்னெச்சரிக்கை காரணமாக பிறப்பித்துள்ள உத்தரவில் பொதுவெளியில் மக்கள் நடமாட்டம் அதிகரித்ததை அடுத்து தமிழகத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள காலத்தில் தமிழகத்தில் அனைத்து மாவட்ட எல்லைகளும் மூடப்படும்.
அத்தியாவசிய பணிகளை மேற்கொள்பவர்களுக்கு 144 தடை உத்தரவு இல்லை. அத்தியாவசிய பொருட்களான மருந்து, காய்கறி, பால், மளிகை தவிர மற்ற அனைத்துக் கடைகளையும் மூடப்படும். வீடுகள் தவிர விடுதிகளில்.தங்கியிருப்பவர்களுக்கு உணவளிக்கும் உணவகங்கள் திறக்கலாம்.அம்மா உணவகங்கள் செயல்படும். தனியார் நிறுவனங்கள் பணியாளர்களை வீட்டிலிருந்தே பணியாற்ற அனுமதிக்க வேண்டும். தடை உத்தரவு நாட்களில் வேலைக்கு வராத நாட்களில் சம்பளம் பிடித்தம் செய்யக்கூடாது. இந்த தடை நாட்களில் பொதுப்போக்குவரத்து, தனியார் போக்குவரத்து, ஆட்டோ, டாக்ஸி இயங்காது. கட்டுப்பாடுகள் தொடர்பான விரிவான அறிக்கைகள் இன்று மாலை அறிவிக்கப்படும். இவ்வாறு முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
புதுச்சேரியில் இன்று இரவு 9 மணி முதல் 31ம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்படுவதாக புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி அறிவித்துள்ளார். மேலும், தடை காலத்தில், உணவகங்களில் பார்சலுக்கு மட்டுமே அனுமதி என்றும், ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனங்களுக்கு தடையும் விதித்து உத்தர விட்டுள்ளார்.
"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன், வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்; நான் விரும்பிய காளி தருவாள்". - மஹாகவி பாரதியார் சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை எடுத்தனர் அது வெட்டி எடுத்த அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“ நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன் கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...
கருத்துகள்