''அம்மா.உங்களைப் போன்ற கோடிக்கணக்கான தாய்மார்களின் ஆசீர்வாதத்துடன், மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ ஊழியர்கள், போலீசார், பாதுகாப்புப் பணியாளர்கள், தோட்டக்காரர்கள் மற்றும் கொரோனா வைரஸை எதிர்த்துப் போராடும் ஊடகத் தொழிலாளர்கள் போன்ற எண்ணற்ற மக்கள் பெரிதும் ஈர்க்கப்பட்டுள்ளனர். மேலும் பணியாற்ற ஆதரவு கிடைத்தது''
.என ஒருபக்கம் பிரதமர் கைதட்டியவர்களுக்கு ஒரு டுவிட்டர் பதிவிட்ட நிலையில்.மருத்துவ பணியாளர் ஒருவர் பதிவும் வைரலாகியுள்ளது.தனக்கு கைகளை யாரும் தட்ட வேண்டாம் என டாக்டர் ஒருவர் தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளார். மணீஷா பங்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில் இந்தியர்களே மோடி- பாஜக சொல்வதை யாரும் கேட்க வேண்டாம். எனவே எனக்காக யாரும் கை தட்ட வேண்டும். நான் ஒரு மருத்துவர். எனக்கு உங்கள் கைதட்டல்கள் தேவையில்லை என தெரிவித்துள்ளார்.மேலும் கைதட்டல்களுக்கு பதிலாக பேரிடர் நிவாரண நிதிகளையும் மற்ற உதவிகளையும் விரைந்து அளிக்குமாறு மோடி தலைமையிலான பாஜக அரசிற்கு கோரிக்கை வையுங்கள் என கேட்டுக் கொண்டுள்ளார். பிரதமர் ஒருவர் மருத்துவத் துறை உள்ளிட்டோரின் சேவைகளை பாராட்டி மரியாதை செலுத்துமாறு கேட்டுக் கொண்ட நிலையில் மருத்துவர் ஒருவர் இப்படி கூறியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.ஊரடங்கை அமைதியாகக் கடைப்பிடித்த மக்கள்கைதட்டி ஆரவாரம் செய்வதை சிலர் பெரிதாக எடுத்துக்கொள்ளாத காரணம் பல கைதட்டல் செய்தவர்கள் எண்ணிக்கை குறைவுதான் அதுவும் மார்வாடி நபர்கள் வட இந்தியர்கள்,மற்றும் உயர்ஜாதி இந்துக்களில் மேல்தட்டு மக்கள் தான் என்பது தமிழகத்தில் நிதர்சன உண்மை.ஏன் இந்த நிலை கைதட்டிய அப்பார்ட்மென்ட் வாசிகள் யாரும் அரசாங்க மறுத்துவமணைக்கு மருத்துக்கோ, மழைக்கோ ஒதுங்காதவர்கள் .மேலும் அரசு பணியில் குப்பையெடுக்கும் நபர்களுக்கு தொடர்பில்லாமல் வாழும் நபர்கள்.இலஞ்சம் கொடுத்து தங்கள் காரியங்களை வேறு பணியாளர் மூலம் சாதிக்கும் நபர்கள்,அடித்தட்டு மக்களின் வாழ்வாதரமோ வாழ்வியலுடன் நேரடியாகச் சம்பந்தமில்லாதவர்கள்.கைதட்டிய நபர்களில் நடுத்தரக் குடும்பத்து முதியவர்கள்,விவசாயிகள்,தொழிலாளர்கள்,மாணவர்கள்,இல்லை என்பது உண்மை ரஜினிகாந்த் என்ற நடிகர் வீட்டில் மணியடித்ததோ,மற்றவர்கள் கைதட்டியதோ ஏதோ ஒரு கட்டாயத்திற்காக என்ற உணர்வைப் பலரும் உணர்ந்த நிலை நேற்று நிகழ்வு.மொத்தத்தில் ஊரடங்கு வெற்றி பெற்று நம்மைப் போல வேறுபலர் கைதட்டுவதில் ஆர்வமில்லாத நிலை.கண்டோம்.காரணம் பல.
"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன், வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்; நான் விரும்பிய காளி தருவாள்". - மஹாகவி பாரதியார் சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை எடுத்தனர் அது வெட்டி எடுத்த அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“ நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன் கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...
கருத்துகள்