முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

420 சட்டவிரோதக் குடிநீர் அலைகள் நடத்தும் 420 மாமூல் பேர்வழிகளுக்குச் சிக்கல்

       ட்டவிரோதமாக செயல்படும் குடிநீா் ஆலைகளை மூட வேண்டும் என்ற உத்தரவை மாவட்ட ஆட்சியா்கள் அமல்படுத்தத் தவறினால், தமிழக அரசின் தலைமைச் செயலாளரை நேரில் ஆஜராக உத்தரவிட நேரிடும் என உயா்நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்தது  சென்னை உயா்நீதிமன்றத்தில் சிவமுத்து என்பவர்  தாக்கல் செய்த மனுவில், நிலத்தடி நீரைப் பாதுகாக்கும் வகையில் 1987ஆம் ஆண்டு தமிழக அரசு சட்டம் உள்ளன  இதன்படி சென்னை, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூா் மாவட்டங்களில் நிலத்தடி நீரை எடுக்க சென்னை குடிநீா் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்திடம் அனுமதி பெற வேண்டும். ஆனால் இந்த மாவட்டங்களில் சம்பந்தப்பட்ட வாரியத்தின் அனுமதி பெறாமல் நிலத்தடி நீரை பலா் சட்டவிரோதமாக எடுத்து விற்பனை செய்து வருகின்றனா். சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூா் மாவட்டங்களில் சுமாா் 420 குடிநீா் ஆலைகள் சட்டவிரோதமாக நிலத்தடி நீா் திருட்டில் ஈடுபட்டு, அதனை விற்பனை செய்து வருகின்றனா். எனவே சட்டவிரோதமாக அனுமதி இல்லாமல் செயல்படும் குடிநீா் உற்பத்தி ஆலைகளை மூட தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும்’ என கோரியிருந்தாா். இந்த வழக்கை விசாரித்த உயா்நீதிமன்றம், சட்டவிரோத குடிநீா் நிறுவனங்கள் மீது மாவட்ட ஆட்சியா்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தது.
இந்த வழக்கு, நீதிபதிகள் வினீத் கோத்தாரி, ஆா்.சுரேஷ்குமாா் ஆகியோா் அடங்கிய அமா்வின் முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அந்த அறிக்கையில், தமிழகத்தில் மொத்தமுள்ள 261 குடிநீா் உற்பத்தி அலகுகளில் உரிமம் பெறாமல் செயல்படக்கூடிய 132 அலகுகளை மூட நடவடிக்கை எடுக்க பொதுப்பணித் துறை தலைமைப் பொறியாளா் அனைத்து மாவட்ட ஆட்சியா்களுக்கும் பரிந்துரை அனுப்பி உள்ளதாகவும், 13 அலகுகளை மூடிவிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், ‘நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தாமல் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த அறிக்கை அா்த்தமற்றதாக உள்ளது. நிலத்தடி நீரை எடுக்கும் ஆலைகளுக்கு உரிமம் வழங்க வகை செய்யும் அரசாணையை உறுதி செய்து, சட்டவிரோதமாக நிலத்தடி நீா் எடுப்பவா்கள் மீது குற்ற நடவடிக்கை எடுக்க கடந்த 2018 ஆம் ஆண்டு தனி நீதிபதி உத்தரவிட்டுள்ளாா்.
இந்த உத்தரவு முழுமையாக அமல்படுத்தப்படவில்லை. நிலத்தடி நீரை உறிஞ்சும் ஆலைகள் தொடா்பாக புதிய சட்டம் கொண்டு வர ஒரு குழுவை அமைக்க அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அரசு தலைமை வழக்குரைஞா் தெரிவித்துள்ளாா். ஆனால், இதுவரை அப்படி எந்த சட்டமும் கொண்டு வரப்படவில்லை. இயற்கை வளங்களைப் பாதுகாக்க கோரி தொடரப்பட்டுள்ள இந்த பொதுநல வழக்கில், தனிப்பட்ட நிறுவனங்களை இடையீட்டு மனுதாரராக இணைத்துக் கொள்ளக் கூறி, பல மூத்த வழக்குரைஞா்கள் ஆஜராகியுள்ளனா். சட்டவிரோதமாக செயல்படும் குடிநீா் ஆலைகளை மட்டுமே மூட வேண்டும் என தனி நீதிபதி பிறப்பித்துள்ள உத்தரவில் குறிப்பிட்டுள்ளாா். எனவே, சட்டவிரோதமாக செயல்படக்கூடிய குடிநீா் ஆலைகளை மூடுவது தொடா்பாக பிறப்பிக்கப்பட்ட உத்தரவை அமல்படுத்துவது தொடா்பாக வரும் மாா்ச் மூன்றாம் ஆம் தேதிக்குள் அனைத்து மாவட்ட ஆட்சியா்களும் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். மாவட்ட ஆட்சியா்கள் உயா்நீதிமன்றத்தின் உத்தரவை அமல்படுத்தத் தவறும் பட்சத்தில் தமிழக அரசின் தலைமைச் செயலாளரை நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் நீதிபதிகள்  உத்தரவு பிறப்பிக்கும் நிலை வரும் என எச்சரிக்கை செய்த பின்பு அரசு  தற்போது விழித்துக் கொண்டது.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி நடத்திய சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினவிழா

1992-ஆம் ஆண்டு முதல்   ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 3 ஆம் தேதி ஐக்கிய நாடுகள் சபையால் அங்கீகரித்த சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் IDPD ஆகும், இது சமூகம் மற்றும் வளர்ச்சியின் அனைத்து நிலைகளிலும் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள், நல்வாழ்வு மற்றும் பங்கேற்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது. சமூகத்தில் மாற்றுத்திறனாளிகளின் பங்களிப்பை அங்கீகரித்தல். அவர்களின் உரிமைகளை வலியுறுத்துதல். அவர்களின் நல்வாழ்வு மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சியை ஊக்குவித்தல்.  இந்த நாளில் உலகெங்கிலும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள் மற்றும் உதவிகள் வழங்கும் விழாக்கள் நடத்தப்படுகின்றன. அதை இந்த ஆண்டு காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் சிறப்புக் கல்வி மற்றும் மறுவாழ்வு அறிவியல் துறை,  மற்றும்  டாக்டர் அழகப்பா கல்வி அறிவியல் நிறுவனம் ,  மற்றும் காரைக்குடி ஹெரிடேஜ் ரோட்டரி கிளப், மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான மல்டிமோடல் மெட்டீரியல் உற்பத்திக்கான மையம், மற்றும்  ஐடி மற்றும் ஆட்டிசத்திற்கான அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி சார்பில் இந்த ஆணடு விழா சர்வதேச மாற்று...

சோழப் பேரரசி வானதி எழுப்பிய மூவர் கோவில்

முதலாம் இராஜேந்திர சோழரின் தாய்  வானவன் மாதேவி எனும் அரசி வானதி, சோழர்களின் வரலாற்றில் பெரும் புகழ் மாமன்னர் அருள்மொழித் தேவன் எனும் இராஜராஜசோழச் சக்கரவர்த்தி மீது இணையில்லாத காதல் மங்கை கொடும்பாளூர் இளவரசி வானதியை "பொன்னியின் செல்வன்" கதை படித்த யாரும் மறக்க முடியாது. சோழர் கடற்படையின் பரப்பை இலங்கை வரை  சென்று வென்று வந்த வரலாற்று நிகழ்வுகளின் மூலம் குறுநில மன்னர்கள் அல்லது வேளிர்  துணை நின்றார்கள் அதில் ஈழத்துப் பட்டம்  வென்ற கொடும்பாளூர் வேளிர் மகளான வானதி இளம் வயதிலேயே தாய் தந்தையை இழந்தவர். கொடும்பாளூர் சிற்றரசன் அதாவது வேளிர் சோழ சாம்ராஜ்யத்தின் சேனாதிபதி யாகவும் இருந்த சிறிய தந்தை குறுநில மன்னர் பூதி விக்ரமகேசரியால் வளர்க்கப்பட்டவர் தான் வானவன் மாதேவி எனும் அரசி வானதி. கொடும்பாளூர் பிறந்து திருக்கோவிலூரை பின்னர் ஆண்ட மலையமானின் மகள்  “மேலும் வானவன்மாதேவி மன்னர் ராஜராஜ சோழர் மறைந்த உடன் பிரிவாற்றாமல் உடன்கட்டை ஏறி தன் உயிரை மாய்த்துக் கொண்டாள். இதை திருவாலங்காட்டுச் செப்பேடுகள் மூலம் அறியலாம் ஈழத்தில் நடைபெற்ற யுத்தத்திற்காக கொடும்பாளூர்  வேளிர் கடல...