பிலிப்பைன்ஸில் இந்திய மருத்துவ மாணவர்களை மீட்க உதவி கேட்டு இளைஞர் காணொளி. இந்தியா திரும்ப இருந்த 200 மாணவர்களின் விமான டிக்கெட்டுகள் ரத்து செய்யப்பட்டிருக்கின்றன.
மார்ச் 20ஆம் தேதிக்குள் நாட்டை விட்டு வெளியேற பிலிப்பைன்ஸ் அரசு கெடு விதித்துள்ளது.
இது தொடர்பாக நடவடிக்கை எடுத்துவருவதாக இந்தியத் தூதரகம் பதிலளித்துள்ளது.
பிலிப்பைன்ஸ் நாட்டில் நூற்றுக்கணக்கான இந்திய மாணவர்கள் நாடு திரும்ப வழி இல்லாமல் தவித்துக்கொண்டிருக்கிறார்கள்.
உலகம் முழுவதும் 160க்கும் மேற்பட்ட நாடுகளுக்குப் பரவியுள்ளது சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸால் உலகம் முழுவதும் பத்தாயிரம் பேர் பலியாகியுள்ளனர். இரண்டு லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தியாவிலும் இந்த வைரஸினால் ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர். 147 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. வைரஸ் பரவுவதைத் தடுக்கும் நடவடிக்கையாக ஆப்கானிஸ்தான், பிலிப்பைன்ஸ் மற்றும் மலேசியாவிலிருந்து இந்தியாவுக்கு வருவதற்கு இந்திய அரசு செவ்வாய்க்கிழமை தடை விதித்திருக்கிறது. உடனடியாக இந்தத் தடை அமலுக்கு வந்திருக்கிறது.
இதனால் பிலிப்பைன்ஸ் நாட்டில் உள்ள இந்தியாவைச் சேர்ந்த மாணவர்கள் ஏராளமானோர் அங்கிருந்து நாடு திரும்புவதில் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது. அங்குள்ள இந்திய மாணவர் அகில் பாலா நாயர் வெளியிட்டுள்ள வீடியோ தகவலில், சுமார் 200 இந்திய மாணவர்கள் இன்னும் சில நாட்களில் இந்தியா செல்ல விமான டிக்கெட் பதிவு செய்திருந்தோம். இந்திய அரசின் புதிய அறிவிப்பால் அனைத்து டிக்கெட்டுகளும் ரத்து செய்யப்பட்டிருக்கின்றன என்கிறார்.
பெரும்பாலானவர்கள் மார்ச் 17ஆம் தேதி டிக்கெட் பதிவு செய்திருந்தனர். மற்றவர்கள் 19, 20 தேதிகளில் பதிந்திருந்தனர் எனவும் அவர் கூறியுள்ளார்.
இந்திய அரசு கூடிய விரைவில் தனி விமானத்தை அனுப்பி தங்களை அழைத்துச் செல்லவேண்டும் என இந்திய மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
செவ்வாய்க்கிழமை சுமார் 100 பேர் இந்தியா செல்லும் விமானத்தில் பயணிக்க மணிலா விமான நிலையத்திற்குத் தயாராக வந்திருந்தனர். ஆனால், அனைவருடைய பயணச்சீட்டுகளும் ரத்தாகிவிட்டன என அங்குள்ள மாணவர்கள் மூலம் தெரியவந்துள்ளது.
இந்தியா விதித்த நிபந்தனையால் விமான நிலைய அதிகாரிகள் அவர்களை நுழையவே அனுமதிக்கவில்லை எனவும் புகார் கூறுகின்றனர்.
பிலிப்பைன்ஸ் நாட்டில் 193 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை உயிரிழப்பு ஏற்பட்டதாகத் தகவல் இல்லை. ஆனால், 7 பேர் சிகிச்சைக்குப் பின் குணமடைந்துள்ளனர்.
இச்சூழலில் அந்நாட்டு அரசு வைரஸ் பரவுவதைத் தடுக்கும் நடவடிக்கைகளில் ஒன்றாக, வெளிநாட்டினர் 72 மணிநேரத்தில் நாட்டை விட்டு வெளியேறலாம் எனவும் அதற்குப் பின் நாடு முழுவதும் பயணத்தடை அமலுக்கு வரும் என்றும் அறிவித்திருக்கிறது.
இந்தக் காலக்கெடு மார்ச் 16ஆம் தேதி தொடங்கிவிட்டது. மார்ச் 20ஆம் தேதிக்குப் பின் யாரும் பிலிப்பைன்ஸிலிருந்து வெளியே செல்ல முடியாத நிலை ஏற்படும்.
இதுதவிர விசா புதுப்பிப்புக்கு விண்ணப்பித்த இந்திய மாணவர்கள் பலர் நாடு திரும்பும் வாய்ப்பே இல்லாத நிலை இருக்கிறது என்கின்றனர்.
அவர்களையும் சேர்த்தால் மணிலாவில் இப்போது கிட்டத்தட்ட 1000 இந்திய மாணவர்கள் இந்தியா செல்லும் விருப்பத்துடன் இருப்பார்கள் என்று கூறுகின்றனர். இந்தச் சூழ்நிலையில் இன்று புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி பகுதியை சேர்ந்த பிலிப்பைன்ஸ் மருத்துவ மாணவர் அனுப்பி காணொளிக்காட்சிச் செய்தி ஒன்று.செய்தியாளர் பொன்னமராவதி கீரவாணி இளையராஜா அனுப்பியுள்ளதில் அந்த மருத்துவ மாணவர் மோனீஸ்கரன்
பொன்னமராவதி மாணவர் பிலிப்பைன்ஸ் நாட்டிலிருந்து இந்தியாவிற்கு வர முயற்சிக்கின்றார்..அவருடன் 400 க்கும் மேற்பட்ட மருத்துவ படிப்பு மாணவர்களின் கோரிக்கை வைத்து அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.என பிலிப்பைன்ஸ் நாட்டில் காத்திருப்பது அப் பகுதி மக்களை கவலைக்கு உள்ளாக்கியுள்ளது.
"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன், வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்; நான் விரும்பிய காளி தருவாள்". - மஹாகவி பாரதியார் சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை எடுத்தனர் அது வெட்டி எடுத்த அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“ நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன் கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...
கருத்துகள்