முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பிலிப்பைன்ஸ் நாட்டில் இந்திய மருத்துவ மாணவர்கள் தவிப்பு மாணவர் மோனீஸ்கரன் தகவல்

        பிலிப்பைன்ஸில் இந்திய மருத்துவ  மாணவர்களை மீட்க உதவி கேட்டு இளைஞர் காணொளி.  இந்தியா திரும்ப இருந்த 200  மாணவர்களின் விமான டிக்கெட்டுகள் ரத்து செய்யப்பட்டிருக்கின்றன.
மார்ச் 20ஆம் தேதிக்குள் நாட்டை விட்டு வெளியேற பிலிப்பைன்ஸ் அரசு கெடு விதித்துள்ளது.
இது தொடர்பாக நடவடிக்கை எடுத்துவருவதாக இந்தியத் தூதரகம் பதிலளித்துள்ளது.
பிலிப்பைன்ஸ் நாட்டில் நூற்றுக்கணக்கான இந்திய மாணவர்கள் நாடு திரும்ப வழி இல்லாமல் தவித்துக்கொண்டிருக்கிறார்கள்.
உலகம் முழுவதும் 160க்கும் மேற்பட்ட நாடுகளுக்குப் பரவியுள்ளது  சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸால் உலகம் முழுவதும் பத்தாயிரம் பேர் பலியாகியுள்ளனர். இரண்டு  லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள்  பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தியாவிலும் இந்த வைரஸினால் ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர். 147 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. வைரஸ் பரவுவதைத் தடுக்கும் நடவடிக்கையாக ஆப்கானிஸ்தான், பிலிப்பைன்ஸ் மற்றும் மலேசியாவிலிருந்து இந்தியாவுக்கு வருவதற்கு இந்திய அரசு செவ்வாய்க்கிழமை தடை விதித்திருக்கிறது. உடனடியாக இந்தத் தடை அமலுக்கு வந்திருக்கிறது.
இதனால் பிலிப்பைன்ஸ் நாட்டில் உள்ள இந்தியாவைச் சேர்ந்த மாணவர்கள் ஏராளமானோர் அங்கிருந்து நாடு திரும்புவதில் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது. அங்குள்ள இந்திய மாணவர் அகில் பாலா நாயர் வெளியிட்டுள்ள வீடியோ தகவலில், சுமார் 200 இந்திய மாணவர்கள் இன்னும் சில நாட்களில் இந்தியா செல்ல விமான டிக்கெட் பதிவு செய்திருந்தோம். இந்திய அரசின் புதிய அறிவிப்பால் அனைத்து டிக்கெட்டுகளும் ரத்து செய்யப்பட்டிருக்கின்றன என்கிறார்.
பெரும்பாலானவர்கள் மார்ச் 17ஆம் தேதி டிக்கெட் பதிவு செய்திருந்தனர். மற்றவர்கள் 19, 20 தேதிகளில் பதிந்திருந்தனர் எனவும் அவர் கூறியுள்ளார்.
இந்திய அரசு கூடிய விரைவில் தனி விமானத்தை அனுப்பி தங்களை அழைத்துச் செல்லவேண்டும் என இந்திய மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
செவ்வாய்க்கிழமை சுமார் 100 பேர் இந்தியா செல்லும் விமானத்தில் பயணிக்க மணிலா விமான நிலையத்திற்குத் தயாராக வந்திருந்தனர். ஆனால், அனைவருடைய பயணச்சீட்டுகளும் ரத்தாகிவிட்டன என அங்குள்ள மாணவர்கள் மூலம் தெரியவந்துள்ளது.
இந்தியா விதித்த நிபந்தனையால் விமான நிலைய அதிகாரிகள் அவர்களை நுழையவே அனுமதிக்கவில்லை எனவும் புகார் கூறுகின்றனர்.
பிலிப்பைன்ஸ் நாட்டில் 193 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை உயிரிழப்பு ஏற்பட்டதாகத் தகவல் இல்லை. ஆனால், 7 பேர் சிகிச்சைக்குப் பின் குணமடைந்துள்ளனர்.
இச்சூழலில் அந்நாட்டு அரசு வைரஸ் பரவுவதைத் தடுக்கும் நடவடிக்கைகளில் ஒன்றாக, வெளிநாட்டினர் 72 மணிநேரத்தில் நாட்டை விட்டு வெளியேறலாம் எனவும் அதற்குப் பின் நாடு முழுவதும் பயணத்தடை அமலுக்கு வரும் என்றும் அறிவித்திருக்கிறது.
இந்தக் காலக்கெடு மார்ச் 16ஆம் தேதி தொடங்கிவிட்டது. மார்ச் 20ஆம் தேதிக்குப் பின் யாரும் பிலிப்பைன்ஸிலிருந்து வெளியே செல்ல முடியாத நிலை ஏற்படும்.
இதுதவிர விசா புதுப்பிப்புக்கு விண்ணப்பித்த இந்திய மாணவர்கள் பலர் நாடு திரும்பும் வாய்ப்பே இல்லாத நிலை இருக்கிறது என்கின்றனர்.
அவர்களையும் சேர்த்தால் மணிலாவில் இப்போது கிட்டத்தட்ட 1000 இந்திய மாணவர்கள் இந்தியா செல்லும் விருப்பத்துடன் இருப்பார்கள் என்று கூறுகின்றனர். இந்தச் சூழ்நிலையில் இன்று புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி பகுதியை சேர்ந்த பிலிப்பைன்ஸ் மருத்துவ மாணவர் அனுப்பி காணொளிக்காட்சிச் செய்தி ஒன்று.செய்தியாளர் பொன்னமராவதி கீரவாணி இளையராஜா அனுப்பியுள்ளதில் அந்த மருத்துவ மாணவர் மோனீஸ்கரன் 
பொன்னமராவதி மாணவர் பிலிப்பைன்ஸ் நாட்டிலிருந்து இந்தியாவிற்கு வர முயற்சிக்கின்றார்..அவருடன் 400 க்கும் மேற்பட்ட  மருத்துவ படிப்பு மாணவர்களின் கோரிக்கை வைத்து அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.என பிலிப்பைன்ஸ் நாட்டில் காத்திருப்பது அப் பகுதி மக்களை கவலைக்கு உள்ளாக்கியுள்ளது.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி நடத்திய சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினவிழா

1992-ஆம் ஆண்டு முதல்   ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 3 ஆம் தேதி ஐக்கிய நாடுகள் சபையால் அங்கீகரித்த சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் IDPD ஆகும், இது சமூகம் மற்றும் வளர்ச்சியின் அனைத்து நிலைகளிலும் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள், நல்வாழ்வு மற்றும் பங்கேற்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது. சமூகத்தில் மாற்றுத்திறனாளிகளின் பங்களிப்பை அங்கீகரித்தல். அவர்களின் உரிமைகளை வலியுறுத்துதல். அவர்களின் நல்வாழ்வு மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சியை ஊக்குவித்தல்.  இந்த நாளில் உலகெங்கிலும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள் மற்றும் உதவிகள் வழங்கும் விழாக்கள் நடத்தப்படுகின்றன. அதை இந்த ஆண்டு காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் சிறப்புக் கல்வி மற்றும் மறுவாழ்வு அறிவியல் துறை,  மற்றும்  டாக்டர் அழகப்பா கல்வி அறிவியல் நிறுவனம் ,  மற்றும் காரைக்குடி ஹெரிடேஜ் ரோட்டரி கிளப், மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான மல்டிமோடல் மெட்டீரியல் உற்பத்திக்கான மையம், மற்றும்  ஐடி மற்றும் ஆட்டிசத்திற்கான அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி சார்பில் இந்த ஆணடு விழா சர்வதேச மாற்று...

சோழப் பேரரசி வானதி எழுப்பிய மூவர் கோவில்

முதலாம் இராஜேந்திர சோழரின் தாய்  வானவன் மாதேவி எனும் அரசி வானதி, சோழர்களின் வரலாற்றில் பெரும் புகழ் மாமன்னர் அருள்மொழித் தேவன் எனும் இராஜராஜசோழச் சக்கரவர்த்தி மீது இணையில்லாத காதல் மங்கை கொடும்பாளூர் இளவரசி வானதியை "பொன்னியின் செல்வன்" கதை படித்த யாரும் மறக்க முடியாது. சோழர் கடற்படையின் பரப்பை இலங்கை வரை  சென்று வென்று வந்த வரலாற்று நிகழ்வுகளின் மூலம் குறுநில மன்னர்கள் அல்லது வேளிர்  துணை நின்றார்கள் அதில் ஈழத்துப் பட்டம்  வென்ற கொடும்பாளூர் வேளிர் மகளான வானதி இளம் வயதிலேயே தாய் தந்தையை இழந்தவர். கொடும்பாளூர் சிற்றரசன் அதாவது வேளிர் சோழ சாம்ராஜ்யத்தின் சேனாதிபதி யாகவும் இருந்த சிறிய தந்தை குறுநில மன்னர் பூதி விக்ரமகேசரியால் வளர்க்கப்பட்டவர் தான் வானவன் மாதேவி எனும் அரசி வானதி. கொடும்பாளூர் பிறந்து திருக்கோவிலூரை பின்னர் ஆண்ட மலையமானின் மகள்  “மேலும் வானவன்மாதேவி மன்னர் ராஜராஜ சோழர் மறைந்த உடன் பிரிவாற்றாமல் உடன்கட்டை ஏறி தன் உயிரை மாய்த்துக் கொண்டாள். இதை திருவாலங்காட்டுச் செப்பேடுகள் மூலம் அறியலாம் ஈழத்தில் நடைபெற்ற யுத்தத்திற்காக கொடும்பாளூர்  வேளிர் கடல...