முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

மஹாபாரதப் பிரம்மாஸ்திரமும் தற்போதய கொரானா பாதிப்பின் தற்காப்பும்

பாண்டவர்களுக்கும் கௌரவர்களுக்கும் குரு, துரோணாச்சாரியாருக்கும் கிரிபிக்கும் மகன்  தான் அஸ்வத்தாமா,பிறப்பிலேயே நெற்றியில் ஒரு ரத்தினக்கல் பதிக்கப்பட்டிருந்ததால் சக்திக்கெல்லாம் இந்த கல்லே காரணமாகும். வில்வித்தையும், போர்க்கலையும் கற்று  மிகச்சிறந்த போர் வீரரானாகவே வளர்ந்தார்.
மகாபாரதப் போரில் கௌரவர்களின் பக்கமிருந்து, அவருடைய தந்தையுடன் சேர்ந்து அஸ்வத்தாமா  சண்டையிட்டார். தன் மகனை உயிராக நினைத்தார் துரோணாச்சாரியார். அதனால் போரின் போது அஸ்வத்தாமா இறந்து விட்டார் என்ற வதந்தியைக் கேள்விப்பட்ட துரோணாச்சாரியார், தன் கைகளைத் துறந்து தியானத்தில் ஈடுபட்டார். அப்போது திரிஷ்டட்யூம்னரால் கொல்லப்பட்டார்.அனைத்துக்கும் தீர்வுண்டு மகாபாரதத்தில்.
பாரதப் போரில் அஸ்வத்தாமா தந்தை துரோணாச்சாரியார் கொல்லப்பட்டபோது அதிகக் கோபமடைந்து மிகப் பயங்கரமான ஆயுதம் "நாராயண அஸ்திரத்தை' அல்லது பிரம்மாஸ்திரத்தை பாண்டவர்களின் சேனை மீது தொடுத்தார். யாராலும் பதிலடி கொடுக்க முடியவில்லை. இந்த ஆயுதம் மக்களை கொல்வதற்கும், கையில் ஆயுதங்களை வைத்திருப் பவர்களை உடனே அழிப்பதற்கும், எதிரில் போர்புரிபவர்களை அழிக்கவும் முடியும். பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் பாண்டவர் சேனைக்கு ஒரு உத்தரவைப் பிறப்பித்தார். 'தங்கள் ஆயுதங்களை விட்டுவிட்டு அமைதியாக சில காலம்  கைகளை மடித்து வைத்திருக்கக் கட்டளையிட்டார். அந்தப் போரின் கருத்தைக்கூட உங்கள் மனதில் கொண்டு வர வேண்டாம், அது அவர்களையும் அழிக்கிறது.
அஸ்திரத்தின் நேரம் காலாவதியாகும்போது, நாராயண அஸ்த்திரம் மொத்தமாக  அமைதி யாகிரது.இந்த வழியில், பாண்டவ சேனை பாதுகாக்கப்பட்டது. கொரானா அந்த அஸ்திரம் போல வேலை செய்வதால் இந்த அத்தியாயத்தை நியாயப்படுத்த இந்தக் கருத்து பதிவிடவில்லை ஒரு உதாரணமாக எல்லா இடங்களிலும் போர்கள் வெற்றி பெறாது. இயற்கையின் கோபத்தைத் தவிர்ப்பதற்கு, நாம் எல்லா வேலைகளையும் சிறிது நேரம் விட்டுவிட்டு, அமைதியாக கைகளை மடித்து, நல்ல மனதை மனதில் வைத்து ஒரே இடத்தில் இருக்க வேண்டும். அப்போதுதான் நாம் அதன் அழிவைத் தடுத்து பழைய நிலையைத் தக்கவைக்க முடியும். தனிமையில் இருக்கலாம் என்பதே இதன் கருத்து. கொரானா அதன் காலத்தை (14 நாட்கள்) முடிப்பதன் மூலம் குளிர்ச்சியடையும்.பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் தீர்வு கூறியபடி. இப்போது பலர் அரசின் உத்தரவை ஏற்பவர்கள் எல்லாம் வாதம் செய்யாமல் இருக்க ஒருசிலபேர் விதிகள் மீறுவது அத்தியாவசி யமான செயலாக பார்க்கக் காரணம் சில இயக்கம் இப்பொழுதும் நடக்கிறது அது மருத்துவம்,பால்,காய்கறிகள், என அதற்கு ஜனங்கள் வருவது இயல்பு தேவை இல்லாதவன் தெருவில் வரமாட்டான் அரசு அவன் அத்யாவசியமான தேவைகள் நிறைவேற்றும் முன்பாகவே அறிவித்த ஊரடங்கு என்பதால் இந்த நிலை. எல்லாம் மாறும் அல்லது அப்படியே பழகி விடும் சீனா ஏவிய  கொரானா எனும் கொடிய கொள்ளை நோய் அஸ்திரம் அமைதியாகும் வரை நாமும் அமைதியாவோம். ஒரு கடைக் காரர்   தனது கடையில் "ஏய் கொரோனா, நாங்கள் அரசாங்கத்தின் ஊரடங்கு உத்தரவு காரணமாகத்தான் கடையை மூடியுள்ளோமே தவிர உனக்கு  பயந்து என்று தவறாக எண்ணிவிடாதே" என்று கொரோனாவை ஒருபக்கம் எச்சரிக்கிறார். மற்றொரு கடையுள்ள இடத்தில் மனிதர்கள் போல இடைவெளி விட்டு வரிசையில் நிற்பதற்கு நாய்களுக்கும் பயிற்சியளித்துள்ள நிலை, காரணம் மரணத்தின் மீது மக்களின் பயம். அதற்கான மந்திரத்தை நடிகர்  ஏஸ். வி. சேகர் வெளியிட்டே விட்டார்.நடிகர் வடிவேலு நடித்த  ஒரு படத்தின் வசனம் போல 'ஒருநாள் சும்மாயிருந்து பார் அப்போது புரியும் சும்மா இருப்பது அவ்வளவு சுலபமில்லை' என.அதனால் சும்மா இருப்பதால் தங்களுக்கு பொழுதுபோக்காக தொலைபேசியில் வரும் கருத்து, விமர்சனம் செய்யும் எந்த செய்திகளையும் பகிர வேண்டாம் இது தற்போது அவசியமற்றது. அரசிற்கு முழுமையாக ஒத்துழைப்போம்  தவறான தகவல்கள் மற்றும் மருத்துவ ஆலோசனைகள் Forward செய்யாதீர்கள்.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி நடத்திய சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினவிழா

1992-ஆம் ஆண்டு முதல்   ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 3 ஆம் தேதி ஐக்கிய நாடுகள் சபையால் அங்கீகரித்த சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் IDPD ஆகும், இது சமூகம் மற்றும் வளர்ச்சியின் அனைத்து நிலைகளிலும் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள், நல்வாழ்வு மற்றும் பங்கேற்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது. சமூகத்தில் மாற்றுத்திறனாளிகளின் பங்களிப்பை அங்கீகரித்தல். அவர்களின் உரிமைகளை வலியுறுத்துதல். அவர்களின் நல்வாழ்வு மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சியை ஊக்குவித்தல்.  இந்த நாளில் உலகெங்கிலும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள் மற்றும் உதவிகள் வழங்கும் விழாக்கள் நடத்தப்படுகின்றன. அதை இந்த ஆண்டு காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் சிறப்புக் கல்வி மற்றும் மறுவாழ்வு அறிவியல் துறை,  மற்றும்  டாக்டர் அழகப்பா கல்வி அறிவியல் நிறுவனம் ,  மற்றும் காரைக்குடி ஹெரிடேஜ் ரோட்டரி கிளப், மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான மல்டிமோடல் மெட்டீரியல் உற்பத்திக்கான மையம், மற்றும்  ஐடி மற்றும் ஆட்டிசத்திற்கான அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி சார்பில் இந்த ஆணடு விழா சர்வதேச மாற்று...

சோழப் பேரரசி வானதி எழுப்பிய மூவர் கோவில்

முதலாம் இராஜேந்திர சோழரின் தாய்  வானவன் மாதேவி எனும் அரசி வானதி, சோழர்களின் வரலாற்றில் பெரும் புகழ் மாமன்னர் அருள்மொழித் தேவன் எனும் இராஜராஜசோழச் சக்கரவர்த்தி மீது இணையில்லாத காதல் மங்கை கொடும்பாளூர் இளவரசி வானதியை "பொன்னியின் செல்வன்" கதை படித்த யாரும் மறக்க முடியாது. சோழர் கடற்படையின் பரப்பை இலங்கை வரை  சென்று வென்று வந்த வரலாற்று நிகழ்வுகளின் மூலம் குறுநில மன்னர்கள் அல்லது வேளிர்  துணை நின்றார்கள் அதில் ஈழத்துப் பட்டம்  வென்ற கொடும்பாளூர் வேளிர் மகளான வானதி இளம் வயதிலேயே தாய் தந்தையை இழந்தவர். கொடும்பாளூர் சிற்றரசன் அதாவது வேளிர் சோழ சாம்ராஜ்யத்தின் சேனாதிபதி யாகவும் இருந்த சிறிய தந்தை குறுநில மன்னர் பூதி விக்ரமகேசரியால் வளர்க்கப்பட்டவர் தான் வானவன் மாதேவி எனும் அரசி வானதி. கொடும்பாளூர் பிறந்து திருக்கோவிலூரை பின்னர் ஆண்ட மலையமானின் மகள்  “மேலும் வானவன்மாதேவி மன்னர் ராஜராஜ சோழர் மறைந்த உடன் பிரிவாற்றாமல் உடன்கட்டை ஏறி தன் உயிரை மாய்த்துக் கொண்டாள். இதை திருவாலங்காட்டுச் செப்பேடுகள் மூலம் அறியலாம் ஈழத்தில் நடைபெற்ற யுத்தத்திற்காக கொடும்பாளூர்  வேளிர் கடல...