எஸ் வங்கியைத் தொடர்ந்து சிக்கலில் லட்சுமி விலாஸ் வங்கி RBI உதவியை நாடியதால் கலக் கத்தில் வாடிக்கையாளர்கள்!
வாராக்கடன் அதிகரித்ததால் தனியார் வங்கியான ‘யெஸ் வங்கி’ கடுமையான நிதிச் சிக்கலில் தவித்தது. இந்நிலையில் ‘யெஸ் வங்கியை ரிசர்வ் வங்கி கட்டுப்பாட்டில் கொண்டுவந்து அறிவித்தது.அதை அடுத்து தற்போது வெளியான தகவலின் படி, லட்சுமி விலாஸ் வங்கியை அதாவது LVB மற்றொரு தனியார் வங்கியுடன் இணைக்க மத்திய அரசு முயற்சி செய்வதாகத் தகவல்
குறிப்பாக லட்சுமி விலாஸ் வங்கியை இனைத்துக்கொள்ள கோட்டாக் மஹிந்திரா வங்கி, டில்டன் பார்க் ஆகிய இரண்டு தனியார் வங்கிகளும் கைய கப்படுத்த முயற்சித்து வருகிறதாம் ரிசர்வ் வங்கியால் கைப்பற்றப் படுவதற்கு முன்னர் யெஸ் வங்கியில் முதலீடு செய்ய களத்தில் இருந்த முதலீட் டாளர்களின் பட்டியலில் டில்டன் பார்க் இருந்ததும் குறிப்பிடத் தக்கது.இந்நிலையில் வங்கித் துறையைக் கண்காணிக்கும் ஆய்வாளர் ஒருவர், சர்வதேச முதலீட்டாளர்களிடமிருந்து நிதி திரட்ட அதிக காலம் எடுத்துக் கொள்ளும். அதற்கு ஏற்கனவே இருக்கும் ஒரு வங்கி சிக்கலில் இருக்கும் வங்கியை எடுத்துக் கொள்வது எளிதானது. சர்வதேச முதலீட்டாளர் வர வாய்ப்பில்லை எனத் தெரிவித்துள்ளார்.இதனி டையே, லட்சுமி விலாஸ் வங்கி வெளிநாட்டு முதலீட்டாளர்களிடம் 49 லிருந்து 60 சதம் பங்குகளை விற்பனை செய்வதன் மூலம் 1,800 லிருந்து 2,200 கோடி ரூபாய் வரை திரட்ட முடியும் என உதவி செய்யு மாறு இந்திய ரிசர்வ் வங்கியையும் அணுகியுள்ளது. வெளிநாட்டு முதலீட்டாளர்கள் அரசு அல்லது ரிசர்வ் வங்கியின் முன் ஒப்புதல் இல்லாமல் தனியார் வங்கியின் கீழ் 49 சதம் வரை முதலீடு செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள்.49 சதம் அதிகமாக முதலீடு செய்ய அரசின் முன் அனுமதி தேவை. நீண்டகால முதலீட்டாளர்களுக்கு லாக்-இன் காலம் என்ற கட்டுப்பாடு உள்ள தால் அதிலிருந்து விலக்கு உள்ளிட்டவைக்கு உதவுமாறு லட்சுமி விலாஸ் வங்கி ரிசர்வ் வங்கியை அனுகியதாகக் கூறப்படுகிறது.லட்சுமி விலாஸ் வங்கியின் இந்தக் கோரிக்கையை அடுத்து அந்த வங்கியின் வாடிக்கையாளர்கள் அச்ச மடைந்துள்ளனர். தங்களின் முதலீடுகளையும் திரும்பப் பெற முயற்சிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன், வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்; நான் விரும்பிய காளி தருவாள்". - மஹாகவி பாரதியார் சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை எடுத்தனர் அது வெட்டி எடுத்த அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“ நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன் கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...
கருத்துகள்