மத்திய சுகாதாரத்துறை புதிதாக வெளியிட்ட ஒரு ஊடக செய்தி அறிக்கை பொதுமக்களின் தகவலுக்காக வழங்கப்படுகிறது .நாளை ஜனதா ஊரடங்கு.. தமிழகத்தில் எது இயங்கும். இயங்காது.என தகவல் தெரிந்து கொள்வது நல்லது கொரானா பரவலை தடுக்க உலகம் முழுவதும் தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் நேற்று முன் தினம் நாட்டு மக்களிடம் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். கொரோனா வைரஸின் தாக்கம் உலக போரில் ஏற்பட்டது போல் இருக்கிறது. வரும் 22ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மக்கள் ஊரடங்கைக் கடைப்பிடிக்க வேண்டும். ஒரு நாள் மட்டும் மக்கள் யாரும் வெளியே வர வேண்டாம் என கேட்டுக் கொண்டுள்ளார். இந்த ஊரடங்கு காலை 7 மணி முதல் இரவு 9 மணிக்கு கடைப்பிடிக்கப்படும்.
மதுக்கடைகள், அனைத்து சிறு, பெரியகடைகள். கோயம்பேடு மார்க்கெட். மெட்ரோ ரயில்கள், பயணிகள் ரயில்கள். ரேஷன் கடைகள். அரசு, தனியார் பேருந்துகள். உள்ளூர் விமானங்கள் . கேன் குடிநீர் கடைகள், உணவகங்கள். லாரிகள், ஆட்டோ கால் டாக்சிகள். வாரச்சந்தைகள்இது இயங்காது
மருத்துவமனைகள்.மருந்துக்கடைகள் . அம்மா உணவகங்கள். ஆம்புலன்ஸ் சேவை. பெட்ரோல் பங்க்குகள். ஆவின் பால் விநியோகம்.இவை இயங்கும் எனற நிலை.தனிமை கண்காணிப்பை மீறினால் 6 மாத சிறை தண்டனைகொரானாவுக் காக தனிமை கண்காணிப்பில் வைக்கப்பட்டிருப்போர் அதை மீறினால், 6 மாத சிறை தண்டனையும், அபராதமும் விதிக்கப்படும் என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கொரானா பாதிப்பிருப்போர் மருத்துவமனையில் தனிவார்டில் சிகிச்சைக்கு அனுமதிக்கப் படுவதுபோல, அவர்களின் உறவினர்கள், கொரோனோ அறிகுறி, கொரோனா பாதித்த நாடுகளில் இருந்து வருவோர் ஆகியோர் வீடுகளில் தனிமை கண்காணிப்பில் வைக்கப்பட்டு வருகின்றனர்.இதன்படி துபாயில் இருந்து மதுரை வந்த 2 குழந்தைகள் உட்பட 155 பயணி களுக்கு விமான நிலையத்தில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.அதில் அவர்களில் எவருக்கும் அறிகுறிகள் இல்லை எனத் தெரியவந்தது. இருந்தாலும் குறிப்பிட்ட நாட்கள் வரை வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டு இருக்க அவர்கள் அறிவுறுத்த ப்பட்டனர்.எந்த தேதி வரை அவர்கள் தனிமையில் இருக்க வேண்டும் என்பதை குறிப்பிடும் வகையில் அழியாத மையைக் கொண்டு அவர்களின் கைகளில் முத்திரையிடப்பட்டது. மக்கள் கூடும் இடங்களுக்கு செல்வது அரசு பேருந்துகளில் பயணிப்பது உள்ளிட்டவற்றை தவிர்க்க அவர்கள் அறிவுறுத்தப்பட்டனர்.
இதுபோல தனிமையில் கண்காணிப்பில் வைக்கப்பட்ட போதிலும், அதிலிருந்து சிலர் தப்பிச் சென்று வெளியே நடமாடுவது கண்டுபிடிக்கப்பட்டு வரும் சம்பவங்களும் நடைபெறுகிறது. இதனால் கொரோனோ பரவும் அபாயம் இருப்பதை கருத்தில் கொண்டு, கண்காணிப்பை மீறுவோருக்கு 6 மாத சிறை தண்டனையும், அபராதமும் விதிக்கப்படும் என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.தொற்று நோய் சட்டம், பேரிடர் மேலாண்மை சட்டத்தின்கீழ், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் அதிகாரங்கள், மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அளித்திருப்பதாகவும் மத்திய சுகாதார அமைச்சக மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித் துள்ளார்.மத்திய அரசின் அறிவுரைகள், வழிகாட்டுதல்களை மக்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டும் எனவும், தனிமை கண்காணிப்பு, சமூக விலகல் ஆகியவை மூலம்தான் கொரோனாவை கட்டுப்படுத்த முடியும் எனவும் மத்திய சுகாதார அமைச்சக மூத்த அதிகாரி குறிப்பிட்டுள்ளார்
"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன், வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்; நான் விரும்பிய காளி தருவாள்". - மஹாகவி பாரதியார் சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை எடுத்தனர் அது வெட்டி எடுத்த அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“ நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன் கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...
கருத்துகள்