அறுபது வயதில் தோழியை திருமணம் செய்த காங்கிரஸ் பொதுச்செயலாளர் முகுல் வாஸ்னிக்.அறுபது வயதான காங்கிரஸ் தேசிய பொதுச்செயலாளர் முகுல் வாஸ்னிக்,MP தனது நெடுநாள் தோழியான அறுபது வயது ரவீனா குரானாவை திருமணம் செய்துள்ளார்.டெல்லியில் உள்ள ஐந்து நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்ற இவர்களது திருமணத்தில் இராஜஸ்தான் மாநில முதலமைச்சர் அசோக் கெலாட்,காங்கிரஸ் தேசிய பொருளாளர் அகமது படேல் உள்ளிட்ட முக்கிய பிரபலங்கள் கலந்துகொண்டனர்.காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பலர் மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்துவருகின்றனர்.மத்திய முன்னாள் அமைச்சரான முகுல் வாஸ்னிக்,இராகுல் காந்திக்கு பிறகு காங்கிரஸ் கட்சியின் அடுத்த தேசிய தலைவராக தேர்வாக வாய்ப்புள்ள நபர்களுள் ஒருவராக கருதப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் 8 வது மக்களவை 1984-1989 லும், 1991-1996 ஆம் ஆண்டில்10 வது மக்களவை மற்றும் 1998-1999 ஆம் ஆண்டில் 12 வது மக்களவையிலும் மகாராஷ்டிரா புல்தானாவை பிரதிநிதியாகவும் 1984 ல் அவரது 25 வயதில் இளைய நாடாளுமன்ற உறுப்பினரானார். அவர் மாறி மாறி வென்று தோற்றார். புல்தானாவிலிருந்து - 1984 இல் வென்று 1989 ல் இழந்து, 1991 இல் வென்று மற்றும் 1996 இல் இழந்து, 1998 இல் வென்று மற்றும் 1999 இல் தோற்று. பின் 2009 இல் ராம்டெக்கிலிருந்து வென்று2014 இல் இழந்து.
1984-1986 காலப்பகுதியில் இந்திய தேசிய மாணவர் ஒன்றியத்தின் தேசியத் தலைவராக காங்கிரஸில் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
பின் 1988-1990 ல் இந்திய இளைஞர் காங்கிரஸின் தலைவராக தேர்வானார். மகாராஷ்டிராவைச் சேர்ந்த மூத்த காங்கிரஸ் தலைவரும், மூன்று முறை எம்.பி.யாக இருந்த பால்கிருஷ்ணா ராம்சந்திர வாஸ்னிக் என்பவரின் மகன் ஆவார். காங்கிரஸ் வாரிசு அரசியல் பிரதிநிதிகளில் இவரும் ஒருவர் ஆவார்.
"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன், வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்; நான் விரும்பிய காளி தருவாள்". - மஹாகவி பாரதியார் சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை எடுத்தனர் அது வெட்டி எடுத்த அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“ நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன் கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...
கருத்துகள்