தமிழகத்தில் கொரானா பாதித்தவர்களின் எண்ணிக்கை 9 தாக அதிகரித்துள்ள து, ஈரோடு மாவட்டத்தில் இரண்டு தாய்லாந்து நாட்டவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். சென்னையில் நான்கு பேர் சிகிச்சையில், காஞ்சிபுரத்தைச் சேர்ந்த ஒருவர் சென்னையில் சிகிச்சை பெற்ற பின் குணமாகி வீடு திரும்பிவிட்டார். நேற்று காலை கோவையில் ஒரு பெண்ணுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. எனினும், ஈரோடு மாவட்டம் என ஏன் மத்திய அரசின் பட்டியலில் வந்தது என்று பலரும் கேள்வி எழுப்பியிருந்தனர்.
விளக்கமளித்த சுகாதாரத்துறை அமைச்சர் விஜய பாஸ்கர், ஈரோடு மாவட்டம் பெருந்துறை மருத்துவமனையில் தாய்லாந்தைச் சேர்ந்த இருவர் கொரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்கள் புதிய நோயாளிகள் இல்லை என்று கூறியுள்ளார். கலிபோர்னியாவில் இருந்து வந்த 65 வயது பெண்ணுக்கு கொரோனா உள்ளது.துபாயில் இருந்து வந்த 43 வயது ஆண் ஆகிய இருவருக்கு கொரோனா தொற்று உள்ளது.
இவர்கள் அனைவரும் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்கள். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.தற்போது சென்னையில் லாக் டவுன் காரணமாக குழப்பம் ஏற்பட்டுள்ளது. லாக் டவுன் செய்யப்பட்டால் அங்கிருந்து செங்கல்பட்டிற்கு வாகனங்களை இயக்க முடியாது. செங்கல்பட்டிற்கு ஆட்டோ, டாக்சிகளை சென்னையில் இருந்து இயக்க முடியாது. இதனால் குழப்பங்கள் ஏற்படும். செங்கல்பட்டு மாவட்டம் சில மாதங்களுக்கு முன்புதான் உருவாக்கப்பட்டது.
செங்கல்பட்டில் தாம்பரம், பல்லாவரம், குரோம்பேட்டை, கீழ்கட்டளை, செயின்ட் தாமஸ் மவுண்ட் , பம்மல், மறைமலைநகர், காட்டாங்குளத்தூர், அச்சரப்பாக்கம் ஆகிய முக்கிய பகுதிகள் உள்ளது. இங்கு பல ஐடி நிறுவனங்கள் பல தொழிற்சாலைகள் உள்ளது. இந்த நிலையில் சென்னையில் லாக் டவுன் அறிவிக்கப்பட்ட நிலையில், செங்கல்பட்டில் லாக் டவுன் அறிவிக்கப்படவில்லை. அங்கு கொரோனா பாதித்தவர்கள் இல்லை என்பதால் லிஸ்டில் இடம்பெறவில்லை.
இதனால் சென்னையில் இருந்து செங்கல்பட்டில் உள்ள பகுதிகளில் பணியாற்றும் மக்கள் எப்படி பயணம் செய்வார்கள் என்று கேள்வி எழுந்துள்ளது. சென்னையில் பெரிய அளவில் குழப்பங்கள் ஏற்பட்டுள்ளது. மத்திய அரசின் அறிவுரையின் பெயரில் இன்று இந்த லாக் டவுனை சென்னையில் அமல்படுத்த வேண்டும். ஆனால் சென்னையில் மட்டும் தமிழக அரசு விரிவான ஆலோசனைக்கு பின்பே லாக் டவுன் குறித்து முடிவு எடுக்கப்படும் என்று கூறுகிறார்கள்.சென்னை, காஞ்சிபுரம், ஈரோடு, நெல்லை, கோவை முடக்கமா? இன்னும் சற்று நேரத்தில் அறிவிப்பு வரலாம் என்றநிலை.
"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன், வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்; நான் விரும்பிய காளி தருவாள்". - மஹாகவி பாரதியார் சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை எடுத்தனர் அது வெட்டி எடுத்த அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“ நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன் கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...
கருத்துகள்