முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

சிப்பிப்பாறை பட்டாசுத் தொழிற்சாலை விபத்து பலிஎண்ணிக்கை உயர்வு

          விருதுநகர் மாவட்டம் 
சாத்தூர் வட்டம் சிப்பிப்பாறை பட்டாசு தொழிற்சாலை வெடி விபத்தில் பெண்கள் உள்பட 8 பேர் பரிதாபமாக பலியானார்கள். மேலும் 9 பேர் படுகாயமடைந்து கோவில்பட்டி அரசு மருத்துவ மனையில்  தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுகிறது. வெள்ளையாபுரத்தைச் சேர்ந்த கணேசனுக்குச் சொந்தமான பட்டாசுக் கம்பெனி சிப்பிப்பாறையில் இயங்கிவந்த. நிலையில் ஐந்துக்கும் மேற்பட்ட அறைகளில் பாஸ்பரஸ் உள்ளிட்ட மருந்துகள்  உள்ளன.
நேற்று காலை  30க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பட்டாசு தயாரிக்கும் பணியில்  இருந்தனர். அவர்கள் அங்கே  அனுமதியின்றி பேன்சி ரக பட்டாசுகள் தயாரித்ததாங் கூறப்படுகிறது. பட்டாக மருந்துகளில் திடீர் உராய்வேற்பட்டு பட்டாசுகள் வெடித்துச் சிதறத் தொடங்கின. இதையடுத்து பணியிலிருந்தவர்கள் அங்குமிங்கும் சிதறி ஓடினர். ஆனால் சற்று நேரத்தில் தீ பரவி ஆலையின் அறைகள் இந்த வெடிவிபத்தில் தரைமட்டமாகின. இச் சம்பவத்தின் போது கட்டிட சிதறல்கள் சுமார் ½ கிலோ மீட்டர் தூரம் வரை பறந்துசென்று விழுந்துள்ளன. தகவல் அறிந்து கோவில்பட்டி, சாத்தூர், சிவகாசியில் இருந்து தீயணைப்பு வாகனங்களில் வந்த வீரர்கள் பட்டாசு ஆலைக்குச் செல்ல சரியான சாலை வசதி யில்லாததால் மீட்பு வாகனங்கள் செல்லச் சிரமப்பட்டன. மீட்பு பணியில் தாமதம் ஏற்பட்டது. தீயணைப்பு வீரர்கள் பல மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். பின்னர் இடிபாடுகளை அகற்றி அதில் சிக்கியவர்களை மீட்கும் பணி நடந்தது. சம்பவத்தில் அந்த ஆலையில் பணியாற்றிய தென்காசி மாவட்டம் திருவேங்கடம் தாலுகா மைப்பாறையை சேர்ந்த பெண்களான ராணி (வயது 42), ஜெயபாரதி (40), பத்திரகாளி (33), தாமரைச்செல்வி (35), தங்கம்மாள் (39), வேலுத்தாய்(43), கொலகட்டா குறிச்சியை சேர்ந்த காளியம்மாள் (63) ஆகியவர்கள் உட்பட 8 நபர்கள் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். விபத்தில் படுகாயம் அடைந்த சுமார் 9 பேரை கோவில்பட்டி அரசு  மருத்துவமணையில் சிகிச்சைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி சங்குபட்டியைச் சேர்ந்த முருகையா (57) பரிதாபமாக உயிரிழந்தார்.
படுகாயம் அடைந்த முக்கூட்டுமலையைச் சேர்ந்த பால்ராஜ் மனைவி பொன்னுத்தாய் (48), சிங்கராஜ் மனைவி முருகலட்சுமி (37), காளிராஜ் மனைவி சுப்பம்மாள் (60), ராமு மனைவி பேச்சியம்மாள் (49), மாரிமுத்து மகன் மாடசாமி (25), ஜெயராம் (57), சித்திரம்பட்டியைச் சேர்ந்த பாலசுப்பிரமணியன் (60), லட்சுமிபுரத்தைச் சேர்ந்த அய்யம்மாள் (60), கழுகுமலையைச் சேர்ந்த சிவராமன் மனைவி சங்கரேசுவரி (63) ஆகிய 9 பேருக்கு கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டது.
இதில் பலத்த தீக்காயம் அடைந்த பொன்னுத்தாய், மாடசாமி ஆகிய 2 பேரையும் மேல் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமணைக்கும், முருகலட்சுமி, பாலசுப்பிரமணியன், பேச்சியம்மாள் ஆகிய 3 பேரையும் பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு மருத்துவமணையிலும் அனுமதித்து தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
பட்டாசு ஆலை தீ விபத்தில் இறந்த மைப்பாறையைச் சேர்ந்த 6 பெண்களும் ஒரே தெருவைச் சேர்ந்தவர்கள் என்றும், அவர்களில் பெரும்பாலானவர்கள் உறவினர்களாகும் 
தீ விபத்தில் பலியான முருகையாவுக்கு செல்லத்தாய் என்ற மனைவியும், சிவசுப்பிரமணியன் (28) என்ற மகனும், சசிரேகா (22), காளசுவரி (20) ஆகிய 2 மகள்களும் உள்ளனர்.
பலியானவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமணைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இந்தத் தகவல் அறிந்ததும் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் கண்ணன், தென்மண்டல காவல்துறை ஐ.ஜி. சண்முகராஜேசுவரன், சாத்தூர் துணை காவல்துறை  கண்காணிப்பாளர்  ராமகிருஷ்ணன் மற்றும் அதிகாரிகளுடன்  விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து மீட்பு பணி நடந்து வருகிறது.
சம்பவம் தொடர்பாக  குத்தகைதாரர்கள் நான்கு பேர் மீது வழக்குப்பதிவு செய்யவும், பட்டாசு ஆலை உரிமையாளரை கைது செய்யவும்  நடவடிக்கை மேற்கொண்டு உள்ளனர். இந்த வெடி விபத்து தொடர்பாக ஏழாயிரம் பண்ணை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தச் சம்பவம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி நடத்திய சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினவிழா

1992-ஆம் ஆண்டு முதல்   ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 3 ஆம் தேதி ஐக்கிய நாடுகள் சபையால் அங்கீகரித்த சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் IDPD ஆகும், இது சமூகம் மற்றும் வளர்ச்சியின் அனைத்து நிலைகளிலும் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள், நல்வாழ்வு மற்றும் பங்கேற்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது. சமூகத்தில் மாற்றுத்திறனாளிகளின் பங்களிப்பை அங்கீகரித்தல். அவர்களின் உரிமைகளை வலியுறுத்துதல். அவர்களின் நல்வாழ்வு மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சியை ஊக்குவித்தல்.  இந்த நாளில் உலகெங்கிலும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள் மற்றும் உதவிகள் வழங்கும் விழாக்கள் நடத்தப்படுகின்றன. அதை இந்த ஆண்டு காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் சிறப்புக் கல்வி மற்றும் மறுவாழ்வு அறிவியல் துறை,  மற்றும்  டாக்டர் அழகப்பா கல்வி அறிவியல் நிறுவனம் ,  மற்றும் காரைக்குடி ஹெரிடேஜ் ரோட்டரி கிளப், மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான மல்டிமோடல் மெட்டீரியல் உற்பத்திக்கான மையம், மற்றும்  ஐடி மற்றும் ஆட்டிசத்திற்கான அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி சார்பில் இந்த ஆணடு விழா சர்வதேச மாற்று...

சோழப் பேரரசி வானதி எழுப்பிய மூவர் கோவில்

முதலாம் இராஜேந்திர சோழரின் தாய்  வானவன் மாதேவி எனும் அரசி வானதி, சோழர்களின் வரலாற்றில் பெரும் புகழ் மாமன்னர் அருள்மொழித் தேவன் எனும் இராஜராஜசோழச் சக்கரவர்த்தி மீது இணையில்லாத காதல் மங்கை கொடும்பாளூர் இளவரசி வானதியை "பொன்னியின் செல்வன்" கதை படித்த யாரும் மறக்க முடியாது. சோழர் கடற்படையின் பரப்பை இலங்கை வரை  சென்று வென்று வந்த வரலாற்று நிகழ்வுகளின் மூலம் குறுநில மன்னர்கள் அல்லது வேளிர்  துணை நின்றார்கள் அதில் ஈழத்துப் பட்டம்  வென்ற கொடும்பாளூர் வேளிர் மகளான வானதி இளம் வயதிலேயே தாய் தந்தையை இழந்தவர். கொடும்பாளூர் சிற்றரசன் அதாவது வேளிர் சோழ சாம்ராஜ்யத்தின் சேனாதிபதி யாகவும் இருந்த சிறிய தந்தை குறுநில மன்னர் பூதி விக்ரமகேசரியால் வளர்க்கப்பட்டவர் தான் வானவன் மாதேவி எனும் அரசி வானதி. கொடும்பாளூர் பிறந்து திருக்கோவிலூரை பின்னர் ஆண்ட மலையமானின் மகள்  “மேலும் வானவன்மாதேவி மன்னர் ராஜராஜ சோழர் மறைந்த உடன் பிரிவாற்றாமல் உடன்கட்டை ஏறி தன் உயிரை மாய்த்துக் கொண்டாள். இதை திருவாலங்காட்டுச் செப்பேடுகள் மூலம் அறியலாம் ஈழத்தில் நடைபெற்ற யுத்தத்திற்காக கொடும்பாளூர்  வேளிர் கடல...