விருதுநகர் மாவட்டம்
சாத்தூர் வட்டம் சிப்பிப்பாறை பட்டாசு தொழிற்சாலை வெடி விபத்தில் பெண்கள் உள்பட 8 பேர் பரிதாபமாக பலியானார்கள். மேலும் 9 பேர் படுகாயமடைந்து கோவில்பட்டி அரசு மருத்துவ மனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுகிறது. வெள்ளையாபுரத்தைச் சேர்ந்த கணேசனுக்குச் சொந்தமான பட்டாசுக் கம்பெனி சிப்பிப்பாறையில் இயங்கிவந்த. நிலையில் ஐந்துக்கும் மேற்பட்ட அறைகளில் பாஸ்பரஸ் உள்ளிட்ட மருந்துகள் உள்ளன.
நேற்று காலை 30க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பட்டாசு தயாரிக்கும் பணியில் இருந்தனர். அவர்கள் அங்கே அனுமதியின்றி பேன்சி ரக பட்டாசுகள் தயாரித்ததாங் கூறப்படுகிறது. பட்டாக மருந்துகளில் திடீர் உராய்வேற்பட்டு பட்டாசுகள் வெடித்துச் சிதறத் தொடங்கின. இதையடுத்து பணியிலிருந்தவர்கள் அங்குமிங்கும் சிதறி ஓடினர். ஆனால் சற்று நேரத்தில் தீ பரவி ஆலையின் அறைகள் இந்த வெடிவிபத்தில் தரைமட்டமாகின. இச் சம்பவத்தின் போது கட்டிட சிதறல்கள் சுமார் ½ கிலோ மீட்டர் தூரம் வரை பறந்துசென்று விழுந்துள்ளன. தகவல் அறிந்து கோவில்பட்டி, சாத்தூர், சிவகாசியில் இருந்து தீயணைப்பு வாகனங்களில் வந்த வீரர்கள் பட்டாசு ஆலைக்குச் செல்ல சரியான சாலை வசதி யில்லாததால் மீட்பு வாகனங்கள் செல்லச் சிரமப்பட்டன. மீட்பு பணியில் தாமதம் ஏற்பட்டது. தீயணைப்பு வீரர்கள் பல மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். பின்னர் இடிபாடுகளை அகற்றி அதில் சிக்கியவர்களை மீட்கும் பணி நடந்தது. சம்பவத்தில் அந்த ஆலையில் பணியாற்றிய தென்காசி மாவட்டம் திருவேங்கடம் தாலுகா மைப்பாறையை சேர்ந்த பெண்களான ராணி (வயது 42), ஜெயபாரதி (40), பத்திரகாளி (33), தாமரைச்செல்வி (35), தங்கம்மாள் (39), வேலுத்தாய்(43), கொலகட்டா குறிச்சியை சேர்ந்த காளியம்மாள் (63) ஆகியவர்கள் உட்பட 8 நபர்கள் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். விபத்தில் படுகாயம் அடைந்த சுமார் 9 பேரை கோவில்பட்டி அரசு மருத்துவமணையில் சிகிச்சைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி சங்குபட்டியைச் சேர்ந்த முருகையா (57) பரிதாபமாக உயிரிழந்தார்.
படுகாயம் அடைந்த முக்கூட்டுமலையைச் சேர்ந்த பால்ராஜ் மனைவி பொன்னுத்தாய் (48), சிங்கராஜ் மனைவி முருகலட்சுமி (37), காளிராஜ் மனைவி சுப்பம்மாள் (60), ராமு மனைவி பேச்சியம்மாள் (49), மாரிமுத்து மகன் மாடசாமி (25), ஜெயராம் (57), சித்திரம்பட்டியைச் சேர்ந்த பாலசுப்பிரமணியன் (60), லட்சுமிபுரத்தைச் சேர்ந்த அய்யம்மாள் (60), கழுகுமலையைச் சேர்ந்த சிவராமன் மனைவி சங்கரேசுவரி (63) ஆகிய 9 பேருக்கு கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டது.
இதில் பலத்த தீக்காயம் அடைந்த பொன்னுத்தாய், மாடசாமி ஆகிய 2 பேரையும் மேல் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமணைக்கும், முருகலட்சுமி, பாலசுப்பிரமணியன், பேச்சியம்மாள் ஆகிய 3 பேரையும் பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு மருத்துவமணையிலும் அனுமதித்து தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
பட்டாசு ஆலை தீ விபத்தில் இறந்த மைப்பாறையைச் சேர்ந்த 6 பெண்களும் ஒரே தெருவைச் சேர்ந்தவர்கள் என்றும், அவர்களில் பெரும்பாலானவர்கள் உறவினர்களாகும்
தீ விபத்தில் பலியான முருகையாவுக்கு செல்லத்தாய் என்ற மனைவியும், சிவசுப்பிரமணியன் (28) என்ற மகனும், சசிரேகா (22), காளசுவரி (20) ஆகிய 2 மகள்களும் உள்ளனர்.
பலியானவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமணைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இந்தத் தகவல் அறிந்ததும் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் கண்ணன், தென்மண்டல காவல்துறை ஐ.ஜி. சண்முகராஜேசுவரன், சாத்தூர் துணை காவல்துறை கண்காணிப்பாளர் ராமகிருஷ்ணன் மற்றும் அதிகாரிகளுடன் விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து மீட்பு பணி நடந்து வருகிறது.
சம்பவம் தொடர்பாக குத்தகைதாரர்கள் நான்கு பேர் மீது வழக்குப்பதிவு செய்யவும், பட்டாசு ஆலை உரிமையாளரை கைது செய்யவும் நடவடிக்கை மேற்கொண்டு உள்ளனர். இந்த வெடி விபத்து தொடர்பாக ஏழாயிரம் பண்ணை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தச் சம்பவம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன், வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்; நான் விரும்பிய காளி தருவாள்". - மஹாகவி பாரதியார் சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை எடுத்தனர் அது வெட்டி எடுத்த அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“ நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன் கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...
கருத்துகள்