இளவரசர் சார்லஸ் ஒருபக்கம், ஒட்டுமொத்த அரச குடும்பமே மறுபக்கம் இது கொரானா செய்த வேலை. எல்லா நாடுகளில் அதிகாரம் செய்த அந்த நாட்டையும் நாட்டின் அரசர்கள் வரை கொரானா ஆதிக்கம் செய்கிறது. உலகின் ஏழாவது பணக்கார நாடு என்று பெருமைகொநண்டதும்.
ஐரோப்பிய ஒன்றியத்தில் மிக முக்கியமான நாடும், ஒரு காலத்தில் “சூரியன் அஸ்தமிக்காத நாடு” என்று இந்தியா உள்ளிட்ட பல காலனி ஆதிக்க நாடுகளைத் தனதாதிக்கத்தின் கீழ் சுரண்டிக் கொழுத்த நாடுமான இங்கிலாந்து இன்று கொராணா மாத்திரமல்ல பல பொருளாதார நெருக்கடிகளில் சிக்கியிருக்கிறது. அது கடந்து வந்த காலங்களில் சிறப்பான காலம் மன்னர் முதலாம் சார்லஸ் காலம் தான். சார்லஸ் ஸ்காட்லாந்தின் ஆறாம் ஜேம்ஸ் மன்னரின் இரண்டாவது மகன். இங்கிலாந்தின் ஆட்சியை 1603 இல் பெற்றதை அடுத்து சார்லஸ் இங்கிலாந்துக்கு இடம் பெயர்ந்தார். 1612 ல் ஜேம்சு மன்னரின் மூத்த மகன் இளவரசர் ஹென்றி பிரெட்ரிக் இறந்துவிட சார்ல்ஸ் இங்கிலாந்து, ஐயர்லாந்து, ஸ்காட்லாந்து இராஜ்ய முடி இளவரசராக அறிவிக்கப்பட்டு. 1623 இல் சார்ல்சிற்கு ஸ்பானிய ஆப்சுபூர் இளவரசியுடன் திருமணம் தோல்வியில் முடிந்து.பின் இரண்டாண்டில் பிரான்சின் ஹென்றியெட்டா மரியாவுடன் திருமணம்.
தந்தைக்குப் பின் முதலாம் சார்லஸ் 1625 ல்அரசனாக முடிசூடினார். சார்லசு மன்னரின் சிறப்புரிமை அதிகாரத்தைக் கட்டுப்படுத்த இங்கிலாந்து நாடாளுமன்றம் முனைந்ததை அடுத்து சார்லசிற்கும், நாடாளுமன்றத்திற்கும் இடையில் மோதல் வெடித்தது. அரசர்களின் தெய்வீக உரிமையில் நம்பிக்கை கொண்டிருந்த சார்லஸ், தனது மனசாட்சியின் படி ஆட்சி முடியும் என நினைத்தார். அரசரின் பல கொள்கைகளை நாடாளு மன்றத்தினர் எதிர்த்தனர், குறிப்பாக நாடாளுமன்ற அனுமதி இன்றி வரி வசூலித்தல், மற்றும் ஒரு கொடுமையான, கேட்பாரற்ற அரசரின் நடவடிக்கைகள் அவருக்கு எதிராகத் திரும்பின. உரோமன் கத்தோலிக்கப் பெண்ணை மணந்தமை, மற்றும் அவரது கத்தோலிக்கம் சார்பான கொள்கைகள் கரஞ்சீர்திருத்தச் சமயவாதிகள் (பியூரித்தான்கள்), மற்றும் கால்வினீஸ்து சீர்திருத்தவாதிகள் அவர் மீது அவநம்பிக்கை கொள்ள வைத்தன. ரிச்சார்டு மொன்டேகு, வில்லியம் லோட் போன்ற உயர் திருச்சபைத் தலைவர்களை அவர் ஆதரித்தாலும், முப்பதான்டுப் போரில் சீர்திருத்தவாதிகளின் சக்திகளுக்கு உதவத் தவறினார்.ஸ்காட்லாந்து திருச்சபையினர் ஆங்கிலிக்க நடைமுறைகளைப் பின்பற்ற சார்ல்ஸ் கட்டாயப்படுத்தியமை ஆயர்களின் போருக்கு வழிவகுத்தது. இவை அனைத்தும், ஆங்கிலேய, ஸ்காட்லாந்து நாடாளுமன்றங்களை வலுப்படுத்தவும், மற்றும் அவரது சொந்த வீழ்ச்சிக்குமே உதவியது.
1642 முதல், இங்கிலாந்து உள்நாட்டுப் போரின் போது சார்ல்ஸ் ஆங்கிலேய, ஸ்காட்லாந்து நாடாளுமன்றங்களின் இராணுவத்தினருடன் போரில் ஈடுபட்டார். இப்போரில் 1645 ஆம் ஆண்டில் தோல்வியடைந்ததை அடுத்து, சார்ல்ஸ் ஸ்காட்லாந்துப் படையினரிடம் சரணடைந்தார். அவர்கள் அவரை இங்கிலாந்து நாடாளுமன்றத்திடம் ஒப்படைத்தனர். கடத்தியவர்களின் அரசியல் சட்ட முடியாட்சிக் கோரிக்கைக்கு சார்ல்ஸ் இணங்க மறுத்தார். 1647 நவம்பரில் சிறையில் இருந்து தப்பி வெளியேறினாலும், வைட்டுத் தீவில் மீண்டும் பிடிபட்டார். 1648 இறுதியில் ஆலிவர் கிராம்வெல்லின் புதிய முன்மாதிரியான இராணுவம் இங்கிலாந்தைத் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது. சார்ல்ஸ் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு, தேசத்துரோகக் குற்றம் சாட்டப்பட்டு 1649 ஜனவரி 30 ல் கோடரியால் தலை துண்டிக்கப்பட்டார் . இங்கிலாந்தில் முடியாட்சி அகற்றப்பட்டு, பொது இங்கிலாந்து என்ற புதிய குடியரசாக அறிவிக்கப்பட்டது. ஆனாலும், 1660 இல் முடியாட்சி மீண்டும் கொண்டு வரப்பட்டு முதலாம் சார்லசுவின் மகன் இரண்டாம் சார்லஸ் அரசரானார். ஆனால் தற்போது உள்ள இளவரசர் பலதலை முறைகள் கடந்த அரச குடும்பத்தவர்.இங்கிலாந்து இளவரசர் சார்லஸுக்கு கொரோனா!
இங்கிலாந்து இளவரசர் சார்லஸுக்கு நடத்தப்பட்ட மருத்துவப் பரிசோதனையில் அவருக்கு கொரோனா வைரஸுக்கு சாதகமாக பாசிட்டிவ் என பரிசோதனையில் தெரிய வந்துள்ளது. இதனை கிளாரன்ஸ் ஹவுஸ் அறிவித்தது. 71 வயதான இளவரசர்
சார்ல்ஸ் மற்றும் கமிலா இருவரும் இப்போது பால்மோரலில் சுய தனிமைப்படுத்தலில் உள்ளனர். பக்கிங்ஹாம் அரண்மனை இது குறித்து குறிப்பிட்ட போது, மார்ச் 12 அன்று ராணி தனது மகனைப் பார்த்ததாகக் கூறினார், ஆனால் அவரும் ‘நல்ல ஆரோக்கியத்துடன் இருக்கிறார்’. என்று குறிப்பிட்டது.
மேலும், ராணி ‘அவரது உடல் நலன் தொடர்பாக பொருத்தமான அனைத்து ஆலோசனைகளையும் பின்பற்றுகிறார்’ என்று அரண்மனை செய்திகள் குறிப்பிடுகின்றன. கிளாரன்ஸ் ஹவுஸ் அறிக்கையில், அரசாங்க மருத்துவ ஆலோசனைகளுக்கு இணங்க, இளவரசரும் டச்சஸும் இப்போது ஸ்காட்லாந்தில் வீட்டில் தனிமைப்படுத்தப்படுகிறார்கள். ‘சோதனைகள் அபெர்டீன்ஷையரில் NHS ஆல் மேற்கொள்ளப் பட்டன.
இளவரசர் அண்மையில் தனது பொது வாழ்க்கையில், அதிக ஈடுபாடு காட்டினார். பலரை சந்தித்தார். எனவே எவரிடமிருந்து வைரஸ் பரவலாகியது எனக் கண்டுபிடிக்க முடியாது. இளவரசரின் கடைசிப் பொது நிகழ்ச்சி மார்ச் 12 அன்று நடந்தது. ஆனால் கடந்த சில நாட்களாக அவரும் வொர்க் ஃப்ரம் ஹோம் முறையில் இருக்கிறார்.
ஹைக்ரோவ் மற்றும் டச்சி நபர்களுடன் அவர் பல தனிப்பட்ட சந்திப்புகளை நடத்தியதாக பத்திரிகை செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. அவர்கள் அனைவருக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
சமீபத்திய சுகாதார மற்றும் சமூக பாதுகாப்புத் துறையின் புள்ளிவிவரங்களின்படி, இங்கிலாந்தில் இப்போது 8,000 க்கும் மேற்பட்ட கொரோனா வைரஸ் கேஸ்கள் உள்ளன – இருப்பினும் உண்மையான எண்ணிக்கையிலான கேஸ்கள் மிக அதிகமாக இருக்கலாம். அவர்களில் 422 பேர் உயிரிழந்துள்ளனர். இங்கிலாந்து இப்போது சோதனையான காலகட்டத்தில். லண்டன் நகரில் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கும் கொரோனா வைரஸ் உறுதியானதை அடுத்து அவரது மூத்த ஆலோசகர் தலைத்தெறிக்க ஓடும் வீடியோ வைரலாகி வருகிறது.
"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன், வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்; நான் விரும்பிய காளி தருவாள்". - மஹாகவி பாரதியார் சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை எடுத்தனர் அது வெட்டி எடுத்த அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“ நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன் கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...
கருத்துகள்