முகக்கவசம் தயாரிக்கும் இயந்திர விற்பனை நிறுவனத்திற்கு போலீஸ் தொல்லை தடுத்து நிறுத்திய. ஆட்சியர் . டிஐஜி மிரட்டினாரா? கம்பெனிக்குள் காவல் காத்த ஆய்வாளர். ஆட்சியர் தலையிட்டு தீர்வு. கோயமுத்தூர் மாநகர் சிங்காநல்லூர் பகுதியில், மகாலிங்கம் ஸ்ரீ சாஸ்தா இன்ஜினீயரிங் நிறுவனம் நடத்தி வருகிறார்.அதில் முகக் கவசங்களைத் தயாரிக்கும் இயந்திரங்கள் உற்பத்தி செய்து, விற்பனையாகிறது. தற்போது கொரானா வைரஸ் காரணமாக முகக் கவசங்களின் தேவை அதிகரித்துள்ளதால், தயாரிக்கும் இயந்திரங்களின் தேவையும் அதிகரித்துள்ளது.இந்த நிலையில், கோவை மாவட்ட ஆட்சியர் ராஜாமணியிடம் சாஸ்தா இன்ஜினீயரிங் நிறுவனம் சார்பில் புகார் மனு ஒன்று கொடுக்கப்பட்டது
அந்த மனுவில், முகக் கவசத்தை உற்பத்தி செய்யும் இயந்திரம் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு வந்தது, இறக்குமதியால் ஏற்படும் விலை உயர்வு காரணமாக, விற்பனை யாகவில்லை. இதனால் இயந்திரங்களை உள்நாட்டில் தயாரிப்பதில் எங்களது நிறுவனம் முக்கியப் பங்கு வகிப்பதால் நாடு முழுவதுமிருந்து ஆர்டர்கள் குவிந்தன. அதில் கியூ அண்ட் கியூ நிறுவனத்தினரும் இயந்திரம் வேண்டி அணுகினர். சென்னையைச் சேர்ந்த டி.ஐ.ஜி சுதாகர் மற்றும் உள்ளூர் காவல்துறை அதிகாரிகள் சிலரது பெயர்களைச் சொல்லி மிரட்டி மற்ற வாடிக்கையாளர்களுக்கு வழங்குவதற்கு முன்பாகவே ஒரு இயந்திரத்தை எங்களிடம் பெற்றார். தொடர்ந்து மற்ற வாடிக்கையாளர்களுக்கு இயந்திரத்தை வழங்கக் கூடாது என்றும் தங்களுக்கு மட்டுமே வழங்க வேண்டும் என்றும் டி.ஐ.ஜி உள்ளிட்ட காவல் துறை அதிகாரிகள் மூலம் எங்களை மிரட்டுகின்றனர். இதனால், எங்களிடம் ஆர்டர் செய்தவர்களுக்கு உரிய நேரத்தில் இயந்திரங்கள் வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
எங்களால் வரிசை எண் படியே இயந்திரங்கள் வழங்க முடியும். எனவே, தொடர்ந்து இயந்திரத்தை உற்பத்தி செய்து வாடிக்கையாளர்களுக்குக் கொடுக்கவும், இந்த மிரட்டல்களைத் தடுக்கவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்' என குறிப்பிட்டிருந்தனர்.முக்கியமாக, சிங்காநல்லூர் காவல்நிலைய இன்ஸ்பெக்டர் முனீஸ்வரன் சாஸ்தா இன்ஜினீயரிங் நிறுவனத்துக்குள்ளேயே இருந்து வேறு யாருக்கும் விற்பனை செய்யவிடாமல் காவல் இருப்பதாக அவர்கள் குற்றம் சாட்டியிருந்தனர். இதையடுத்து, கோவை மாநகர போலீஸ் கமிஷனர் மற்றும் துணை கமிஷனர் ஆகியோரை தொடர்புகொண்ட மாவட்ட
ஆட்சியர் ராசாமணி
``சாஸ்தா நிறுவனத்தை விட்டு உடனடியாக முனீஸ்வரன் வெளியேற வேண்டும்” என்று கண்டித்துள்ளார். இதையடுத்து, அங்கிருந்து வெளியேறிய முனீஸ்வரன், `அங்கு இருதரப்பினருக்கும் இடையே பிரச்னை என்ற தகவலால் தான் சென்றேன். மற்றபடி எனக்கும் இதற்கும் சம்பந்தமில்லை” என்று கூறியுள்ளார்.
புகார் தெரிவித்தவுடன் உடனே நடவடிக்கை எடுத்த மாவட்ட ஆட்சியருக்கு தொழில் புரிவோர் மத்தியில் பாராட்டுக் குவிகிறது.
"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன், வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்; நான் விரும்பிய காளி தருவாள்". - மஹாகவி பாரதியார் சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை எடுத்தனர் அது வெட்டி எடுத்த அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“ நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன் கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...
கருத்துகள்