மனித நேயமிக்க கியூபா நாட்டின் மருத்துவர்கள் சீனா,இத்தாலி,ஜப்பான்,என கொரானா பாதித்த நோயாளிகளுக்கு முழுவீச்சில் சேவை ஆற்றி வருவது.வியப்பாகிறது.
160 நபர்களோடு கொரானா பாதித்த நோயாளிகளின் கப்பலை தன் நாட்டிற்கே கொண்டு சென்று சிகிச்சை அளிக்கும் அளவு துணிச்சல் எப்படி சாத்தியமாகிறது.
பிரமிப்புட்டும் சாகசங்களை செய்து உலகில் முன்னனி நாடாகத் திகழ அவர்கள் செய்த தியாகம் எண்ணி லடங்காதவை, மருத்துவ உலகில் கியூபா ஏன் முன்மாதிரியாக உள்ளது.
கொரானா பாதிப்பால் நடுக்கடலில் தத்தளித்த கப்பலுக்கு ஆதரவு அளித்த கியூபா.
அச்சுறுத்தும் கொரோனாவால், ஒவ்வொரு நாடும் உலக நாடுகளில் இருந்து தங்களை தனிமைபடுத்தி கொண்டே வருகிறது. வைரஸ் தொற்று அறிகுறியுள்ள வெளிநாட்டுப் பயணிகளை தங்கள் நாட்டுக்குள் அனுமதிக்க அனைத்து நாடுகளும் தடை விதித்துள்ளது. சில நாடுகளில், கொரோனா பாதித்த சொந்த நாட்டு மக்களுக்கே அனுமதி மறுக்கப்பட்டு வருகிறது. இந்தச் சூழலில், கியூபா மட்டும் கொரோனா பாதித்த வெளிநாட்டு பயணிகளுக்கு தஞ்சமளித்து வருகிறது.
பிரிட்டனைச் சேர்ந்த எம்.எஸ்.ப்ரீமர் என்ற சொகுசு கப்பல் 682 சுற்றுலாப் பயணிகள், 381 சிப்பந்திகளுடன் கரீபியன் கடலில் சென்று கொண்டிருந்தபோது, அதிலிருந்த 5 பேருக்குக் கொரோனா தொற்றிருப்பது தெரிய வந்தது. இதனால், கப்பலை நிறுத்த பல கரீபியன் நாடுகளிடம் நிர்வாகத்தினர் அனுமதி கோரினர். ஆனால், அனைத்து நாடுகளும் கைவிரித்து விட்டன.
இதனால், நடுக்கடலில், நடுங்கிக்கொண்டிருந்த சொகுசு கப்பலுக்கு, கியூபா அனுமதியளித்தது. இதைத் தொடர்ந்து, கியூபாவின் கட்டுப்பாட்டில் உள்ள பஹமாஸ் தீவு துறைமுகத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, சுற்றுலாப் பயணிகள் சோதனைக்கு பிறகு கியூபாவுக்குள் அனுமதிக்கப்பட்டனர். கொரோனா பாதிப்பு இல்லாதவர்கள், மீண்டும் பிரிட்டனுக்கு விமானம் வழியாக அனுப்பி வைக்கப்பட்டனர். வைரஸ் தாக்கிய பயணிகளுக்கு சிகிச்சையளிக்க கியூபா அரசு முன் வந்துள்ளது.
உலக நாடுகள் அனைத்தும் கொரோனா வைரஸ் பாதித்த மக்களை ஏற்க முன்வராத போது, கியூபா மட்டுமே ஏற்றுக்கொண்டது கியூபாவின் மருத்துவ கட்டமைப்பு அவ்வளவு வலுவானதா என்பதை அறிய வேண்டியுள்ளது.
1959ம் ஆண்டு அமெரிக்காவின் கைப்பாவையாக இருந்த படி ஆட்சியில் கியூபாவின் அதிபரான ஃபிடல் கேஸ்ட்ரோ, மிகச்சிறந்த மருத்துவ கட்டமைப்பை நிறுவ விரும்பினார். மருத்துவ சேவை இல்லாத பகுதிகளில் மருத்துவ சேவை வழங்குவது கேஸ்ட்ரோவின் கனவாக இருந்தது.
கேஸ்ட்ரோவின் இந்த கனவை நனவாக்க, மருத்துவரான, அவரது சக போராளி சேகுவேரா பல திட்டங்களை செயல்படுத்தினார். அதன் ஒருபகுதியாக, கியூபாவில் இருந்த மருத்துவர்கள் இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டனர். ஒரு பிரிவு மருத்துவர்கள் கியூபாவில் தங்கியிருந்து மருத்துவச் சேவையை செய்ய வேண்டும். அதேநேரம் தேவைப்படும் போது, மற்ற நாடுகளில் நிகழும் இயற்கைப் பேரிடர்களின்போது, தன்னார்வத் தொண்டர்களாகச் செயல்பட வேண்டும். இந்த மருத்துவப் பிரிவு, மருத்துவப் புரட்சி படை என்று அழைக்கப்பட்டது.
மருந்துகளின் விலை குறைப்பு, இலவச மருத்துவ சேவை, மருத்துவ கல்வியை பரவலாக்கியது என பல திட்டங்களை முன்னெடுத்தார் ஃபிடல் கேஸ்ட்ரோ. இதனால், மற்ற நாடுகளை விட மருத்துவ சேவையை விசாலமான சிந்தனைகொண்டு கியூபா அரசால் செயல்பட முடிகிறது. அதன் வெளிப்பாடே, கொரோனா பாதித்த வெளிநாட்டு பயணிகளுக்கு சிகிச்சை அளிக்க கியூபா முன் வந்தது.
முதலாளித்துவத்தை ஏற்றுக்கொண்டுள்ள பல வல்லரசு நாடுகள், கொரோனாவை தாக்குப்பிடிக்க முடியாமல் தவித்து கொண்டிருக்கின்றன. இந்த சூழலில், கம்யூனிச ஆட்சி நடந்து வரும் கியூபாவில், இதுவரை கொரோனாவால் 4 பேர் மட்டுமே பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், கொரோனாவால் பாதிக்கப்பட்ட வெளிநாட்டுப் பயணிகளுக்கு மருத்துவ சேவை வழங்கவும் முன்வந்துள்ளது.
"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன், வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்; நான் விரும்பிய காளி தருவாள்". - மஹாகவி பாரதியார் சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை எடுத்தனர் அது வெட்டி எடுத்த அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“ நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன் கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...
கருத்துகள்