ஊடகச் செய்திப் பணியாளர் ரங்கராஜ் பாண்டே கடந்தாண்டு தான் பணியாற்றிய ஒரு தொலைக்காட்சியிலிருந்து வெளியேறி புதிதாக ‘சாணக்யா’ என்ற செய்தி இணையதள நிறுவனத்தைத் தொடங்கி.
அதந் முதலாம் ஆண்டு நிறைவு விழாவிற்கு ஏற்பாடு செய்தார் தமிழக அரசியல் வரலாற்றில் முதல் முறையாக அரசியல் தலைவர்களுக்கு ‘சாணக்யா விருது’ வழங்கப்போவதாக அறிவித்திருந்தார்.
அந்த விருதை பா.ஜ.க மூத்த தலைவர் இல.கணேசன், காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தன் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு ஆகியோருக்கு வழங்குவதாக அறிவித்திருந்தார். இந்த மூன்று தலைவர்களுமே வெவ்வெறு கருத்தியலைக் கொண்டுள்ளவர்கள். அவர்கள் மூன்று பேருக்கும் விருது அளிப்பது பெரும் சர்ச்சையானது. இந்நிலையில் இந்த விருதை தோழர் நல்லகண்ணு புறக்கணிப்பதாக தகவல்கள் வெளியானது
சுதந்திரப் போராட்டக் காலத்தின்போதும், இந்தியா விடுதலை பெற்ற பிறகும் பல்வேறு போராட்டங்களையும், தற்போது இந்தியாவை ஆட்சி செய்யும் பா.ஜ.க அரசின் போக்கையும் எதிர்த்து, தமிழகத்தை ஆளும் ஆ.தி.மு.க அரசை எதிர்த்து 94 வயதான கம்யூனிஸ்ட் கட்சியின் நல்லகண்ணு போராடி வருகிறார்.இடது சாரிக் கொள்கை கொண்ட அவருக்கு வலதுசாரிக் கருத்தியலுடைய ரங்கராஜ் பாண்டே விருது அளிக்க அறிவித்திருந்தது ஜனநாயக அமைப்பினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ரங்கராஜ் பாண்டே தொடர்சியாக பா.ஜ.கவின் திட்டங்களுக்கு ஆதரவாக, இந்துத்வாக் கருத்தியலைக் கொண்டு செயல்படுவதால் இந்த விருதை தோழர் நல்லகண்ணு புறக்கணிக்கவேண்டும் என கோரிக்கையும் வைத்தனர்.
இந்நிலையில் நிகழ்ச்சி இன்று நடைபெறும் நிலையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் மகேந்திரன் தோழர் நல்லகண்ணு, ரங்கராஜ் பாண்டே வழங்கும் விருதைப் பெறமாட்டார் எனத் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக மகேந்திரன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “என்பது ஆண்டுகளாக இலட்சிய உறுதியோடு வாழும் அய்யா நல்லகண்ணு அவர்கள், கொள்கை உறுதியோடு வாழும் இன்றைய தலைமுறையின் வழிகாட்டி.
நண்பர் ரங்கராஜ் பாண்டே அறிவித்துள்ள விருதினை அவர் ஏற்க மாட்டார். அதில் கலந்து கொள்ளமாட்டார். கொள்கையில் சமரசம் இல்லை” எனக் குறிப்பிட்டுள்ளார். நல்லகண்ணுவின் இந்த முடிவை ஜனநாயக அமைப்பில் விவாதமாகியுள்ளது. நந்தர்கள் சந்திரகுப்தனை கொல்லப் பார்க்கிறார்கள் என்று தெரிந்து சாணக்யர் பாதுகாத்தார்.சரியான நேரத்தில் மக்களிடம் சென்றால்தான் எடுபடும் என்று அறிவுரை சொன்னார்.மக்களை துணையாகவும்,பாதுகாப்பாகவும் அழைத்தார்..அந்த சரியான நேரத்தில் மக்கள் முன் கொண்டு சென்றார் சந்திரகுப்தனை.அது வெற்றியடைந்தது.எனவே,அரசியலில் காலம்,நேரம் ரொம்ப முக்கியம்.அதே போல அலையும் மிக முக்கியம்.அப்படிப்பட்ட ஒரு அலைக்கு புள்ளி வைத்துள்ளேன்.இப்போது மக்களிடையே அது மெளனப் புரட்சியாக சுழல் எடுத்துள்ளது.தேர்தல் நெருங்க நெருங்க அது சுனாமியாக உருவெடுக்கும்.அதை யாராலும் தடுக்க முடியாது..
- ரஜினி ( சாணக்யா விழாவில்) பேசியது கடைசியில் ஒரு கேள்வி யார் தற்போதய சாணக்கியன் யார் சந்திரகுப்தர் விடை தான் இல்லை.
"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன், வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்; நான் விரும்பிய காளி தருவாள்". - மஹாகவி பாரதியார் சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை எடுத்தனர் அது வெட்டி எடுத்த அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“ நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன் கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...
கருத்துகள்