பாலாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டும் பணிகள் தீவிரம்.
காஞ்சிபுரம் மாவட்டம் வாயலூர் கிராமத்தில், பாலாற்றின் குறுக்கேபாலாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டும் பணிகள் தீவிரம்.
காஞ்சிபுரம் மாவட்டம் வாயலூர் கிராமத்தில், பாலாற்றின் குறுக்கே கட்டப்பட்டு வரும் தடுப்பணையின் கட்டுமானப் பணிகள் அடுத்த மாத இறுதிக்குள் நிறைவடையும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டம் நந்திதுர்கத்தில் உருவாகும் பாலாறு ஆந்திரா வழியாக தமிழ்நாட்டுக்குள் நுழைந்து காஞ்சிபுரம் மாவட்டம் வாயலூர் அருகே வங்கக் கடலில் கலக்கிறது.
வேலூர் மாவட்டம் திருமலைச்சேரி கிராமத்தில் 1858ஆம் ஆண்டு அணை கட்டப்பட்ட பின்னர், வேறு எந்த இடத்திலும் தடுப்பணை கட்டப்படவில்லை பாலாற்றில் தொடர் மணல் கொள்ளையால் நிலத்தடி நீர்மட்டமும் குறைந்துவிட
விவசாயிகளின் தொடர் போராட்டங்களைத் தொடர்ந்து, கட 2017ம் ஆண்டில் பாலாற்றில் 252 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஏழு தடுப்பணைகள் அமைக்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது.
முதற்கட்டமாக ஈசூர், வாயலூர் கிராமங்களில் தடுப்பணையும், நிலத்தடி நீர் செறிவூட்டல் தடுப்பும் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இந்த தடுப்பணைகளில் சேமிக்கப்படும் நீரால் பதினான்கு கிராமங்களைச் சேர்ந்த நான்காயிரத்து 230 ஏக்கர் நிலங்கள் பாசன வசதிபெறும். பாலாற்றில் தடுப்பணை கட்ட இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையம் 33 கோடி ரூபாய் வழங்க முன்வந்துள்ளது.
இதனால், வாயலூரில் தேக்கப்படும் தண்ணீர் வீட்டு உபயோகத்திற்கு பயன்படுவதுடன், அணுசக்தி நிலையமும் பயன்படுத்திக் கொள்ளும் என்று கூறப்படுகிறது
இதுதவிர இந்தக் குடிநீரை வாயலூரில் இருந்து திருப்போரூருக்கும், பின்னர் அங்கிருந்து சென்னைக்கும் கொண்டுசெல்லும் திட்டமும் உள்ளது.
தடுப்பணை நிலத்திற்கு மேலும், நிலத்திற்கு கீழும் என இரு பிரிவுகளாக கட்டப்படுவதால் கடல் நீர் உட்புகாமலும், வெள்ள நீர் கடலுக்குப் போகாமலும் தடுக்கமுடியும். புதிய தொழில்நுட்பத்தில் தடுப்பணை கட்டப்படுவதாக பொதுப்பணித்துறையினர் தெரிவித்துள்ளனர்.
தடுப்பணை கட்டும் பணிகள் கடந்த மார்ச் மாதம் தொடங்கிய நிலையில், மூன்றே மாதங்களில் பெரும்பாலான பணிகள் முடிந்துவிட்டதாகவும், அடுத்த மாத இறுதிக்குள் முழுமையாக நிறைவடைந்து விடும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
பாலாற்றில் கட்டப்படும் தடுப்பணையால் குடிநீர் பிரச்சனை தீருவதுடன், விளைநிலங்களுக்கு போதிய நீரும் கிடைக்கும் என்பதால் அப்பகுதி மக்கள் இத்திட்டத்தை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். கட்டப்பட்டு வரும் தடுப்பணையின் கட்டுமானப் பணிகள் அடுத்த மாத இறுதிக்குள் நிறைவடையும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டம் நந்திதுர்கத்தில் உருவாகும் பாலாறு ஆந்திரா வழியாக தமிழ்நாட்டுக்குள் நுழைந்து காஞ்சிபுரம் மாவட்டம் வாயலூர் அருகே வங்கக் கடலில் கலக்கிறது.
வேலூர் மாவட்டம் திருமலைச்சேரி கிராமத்தில் 1858ஆம் ஆண்டு அணை கட்டப்பட்ட பின்னர், வேறு எந்த இடத்திலும் தடுப்பணை கட்டப்படவில்லை பாலாற்றில் தொடர் மணல் கொள்ளையால் நிலத்தடி நீர்மட்டமும் குறைந்துவிட
விவசாயிகளின் தொடர் போராட்டங்களைத் தொடர்ந்து, கட 2017ம் ஆண்டில் பாலாற்றில் 252 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஏழு தடுப்பணைகள் அமைக்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது.
முதற்கட்டமாக ஈசூர், வாயலூர் கிராமங்களில் தடுப்பணையும், நிலத்தடி நீர் செறிவூட்டல் தடுப்பும் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இந்த தடுப்பணைகளில் சேமிக்கப்படும் நீரால் பதினான்கு கிராமங்களைச் சேர்ந்த நான்காயிரத்து 230 ஏக்கர் நிலங்கள் பாசன வசதிபெறும். பாலாற்றில் தடுப்பணை கட்ட இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையம் 33 கோடி ரூபாய் வழங்க முன்வந்துள்ளது.
இதனால், வாயலூரில் தேக்கப்படும் தண்ணீர் வீட்டு உபயோகத்திற்கு பயன்படுவதுடன், அணுசக்தி நிலையமும் பயன்படுத்திக் கொள்ளும் என்று கூறப்படுகிறது
இதுதவிர இந்தக் குடிநீரை வாயலூரில் இருந்து திருப்போரூருக்கும், பின்னர் அங்கிருந்து சென்னைக்கும் கொண்டுசெல்லும் திட்டமும் உள்ளது.
தடுப்பணை நிலத்திற்கு மேலும், நிலத்திற்கு கீழும் என இரு பிரிவுகளாக கட்டப்படுவதால் கடல் நீர் உட்புகாமலும், வெள்ள நீர் கடலுக்குப் போகாமலும் தடுக்கமுடியும். புதிய தொழில்நுட்பத்தில் தடுப்பணை கட்டப்படுவதாக பொதுப்பணித்துறையினர் தெரிவித்துள்ளனர்.
தடுப்பணை கட்டும் பணிகள் கடந்த மார்ச் மாதம் தொடங்கிய நிலையில், மூன்றே மாதங்களில் பெரும்பாலான பணிகள் முடிந்துவிட்டதாகவும், அடுத்த மாத இறுதிக்குள் முழுமையாக நிறைவடைந்து விடும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
பாலாற்றில் கட்டப்படும் தடுப்பணையால் குடிநீர் பிரச்சனை தீருவதுடன், விளைநிலங்களுக்கு போதிய நீரும் கிடைக்கும் என்பதால் அப்பகுதி மக்கள் இத்திட்டத்தை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன், வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்; நான் விரும்பிய காளி தருவாள்". - மஹாகவி பாரதியார் சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை எடுத்தனர் அது வெட்டி எடுத்த அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“ நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன் கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...
கருத்துகள்