புதுக்கோட்டை மாவட்டம் பெருமாநாடு அரசு நடு நிலைப்பள்ளி. உயர் நிலைப் பள்ளியாக உயர்த்தப்பட்ட திலிருந்து 5 வருடமும் பள்ளிக்கு 100 சதவிகித தேர்ச்சியைப் பெற்றுக்கொடுக்கும் மாணவர்கள் விளையாட்டிலும் சிறந்துள்ளனர். பல வருடங்களாகவே 100 க்கும் குறைவான மாணவர்களின் எண்ணிக்கை தற்போது இருமடங்காகியுள்ளது.அதற்கு பள்ளித் தலைமையாசிரியர் மட்டுமே முக்கியக் காரணம் என கை காட்டுகின்றனர் சக ஆசிரியர்கள். ஒவ்வொரு வருடமும் பத்தாம் வகுப்பில் முதல் மதிப்பெண்ணைப் பெறும் மாணவருக்குத் தன் சொந்தச் செலவில் நான்கு கிராம் தங்க மோதிரத்தைப் பரிசளிக்கிறார். பள்ளியின் வளர்ச்சிக்காகவும் மாணவர்களை ஊக்குவிக்கவும் தன் சொந்தச் செலவில் பல நற்பணி செய்து வரும் தலைமையாசிரியர் மாரிமுத்து, தனித்துவமானவர்.இதுபற்றி அவர் நடுநிலைப்பள்ளி, உயர்நிலைப்பள்ளியாக உயர்த்தப்பட்ட போது நான் தலைமையாசிரியராகப் போனேன். அப்போது, 84 மாணவர்கள் மட்டும்தான், மாணவர்கள் சேர்க்கையை அதிகரிக்க வேண்டிய முக்கியப் பொறுப்பு வந்திருச்சு. சேர்க்கை அதிகரிக்கப் பள்ளியில் சில மாற்றங்களைக் கொண்டு வந்தேன். ஏப்ரல் முதல் நாளே, ஆசிரியர்களைக் கூட்டிக்கொண்டு கிராமத்துக்குப் போயிடுவோம்.
அரசுப்பள்ளியில் கொண்டுவரப்பட்டுள்ள நல்ல திட்டங்களைக் கூறி அட்மிஷன் போடுவோம். 84 ஆக இருந்த மாணவர் எண்ணிக்கை இன்று 194 ஆக உயர்த்தி இருக்கோம். 84-
க்கு அப்புறம் போட்ட அட்மிஷன் எல்லாம் மாணவர் அவரவர் வீட்டிலேயே வைத்துப் போடப்பட்டது தான்.மாணவர் சேர்க்கை அதிகரிக்க என்னோட முயற்சி மட்டுமல்ல ஆசிரியர்கள் முயற்சியும் முக்கியக் காரணம். நான் ஒரு கல் உடைக்கும் தொழிலாளியின் மகன். என்னை ஒரு ஆசிரியர் தான் படிக்க வச்சாங்க. என்னால, பல மாணவர்கள் படிக்கணும்ங்கிறதுதான் என்னோட நோக்கம்.
அதனாலதான் என்னோட 25 சதவிகித ஊதியத்தை மாணவர்களுக்காகச் செலவிடத் திட்டமிட்டேன். மாணவர்களிடம் ஒரு ஆரோக்கியமான போட்டி உருவாகவும் உற்சாகப்படுத்தவும் தான் முதல் மதிப்பெண் எடுக்கும் மாணவர்களுக்கு அரை சவரன் தங்க மோதிரம் வழங்குவதாக அறிவித்தேன். அடுத்த வருஷமே இந்தத் திட்டத்துக்கு நல்ல ரெஸ்பான்ஸ்.கடந்த வருஷம் 2 பேர் முதல் மதிப்பெண் எடுத்தாங்க.
இரண்டு பேருக்கும் அரை பவுன் மோதிரம் கொடுத்தேன். 5 பேரு முதல் மதிப்பெண் எடுத்தாலும் மோதிரம் கொடுப்பேன். அதோடு, பள்ளிக்குச் சொந்தச் செலவில் என்னால முடிஞ்ச தேவைகளைச் செய்வதற்கு ஆசிரியர்களும் அதிகாரிகளும் ஒத்துழைப்பு கொடுக்கின்றனர். கிராம மக்களும் இப்போது பள்ளிக்கு உதவ முன்வந்திருக்காங்க. ஆசிரியரக்ள், மாணவர்கள் ஒன்று சேர்ந்து பள்ளி வளர்ச்சிக்கு உதவினால், மாவட்டத்தின் முன்மாதிரிப்பள்ளியாக மாற்றிடலாம்" என்கிறார்.ஆசிரியப் பணி ஒரு அறப்பணி அதற்கு அற்பணிப்புடன் வாழும் மாரிமுத்து சிறந்த உதாரணம்
"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன், வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்; நான் விரும்பிய காளி தருவாள்". - மஹாகவி பாரதியார் சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை எடுத்தனர் அது வெட்டி எடுத்த அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“ நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன் கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...
கருத்துகள்