தனிமைப்படுத்தப்பட்டாரா கமலஹாசன் நோட்டீஸ் ஒட்டப் பட்டதால் சர்ச்சை .சென்னைையில் :கொரானா வைரசில் இருந்து எங்களை காக்க தனிமைப்படுத்தி கொண்டோம் என மக்கள் நீதி மையம் கட்சித் தலைமை அலுவலகம் அதன்் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் வீட்டில் நோட்டீஸ் ஒட்டப்பட்டதால் சர்ச்சை எழுந்தது. இதனையடுத்து, அந்த நோட்டீசை அகற்றிய சென்னை மாநகராட்சி, இந்த விவகாரத்தில் தவறு நடந்து விட்டதாக தெரிவித்துள்ளது.ஆனால் வெளிநாட்டிலிருந்து வருகை தந்த நடிகை கௌதமி தடிமல்லா கடவுச்சீட்டு உள்ள முகவரி ஆள்வார் பேட்டையில் உள்ள கமலஹாசனின் பழைய வீடு தான்.அதில் ஏற்கனவே ஒருமுறை வாக்காளர் அடையாள அட்டை தொடர்பான பிரச்சினை ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது நிகழ்ந்த நிகழ்ச்சியில் அடையாள அட்டை கௌதமிக்கு உண்டு.என நிரூபனமாகியது.அது போலவே கடவுச்சீட்டும்.அதே முகவரியில்.
கொரானா தடுப்பு நடவடிக்கையாக வெளிநாட்டில் இருந்து சமீபத்தில், வெளிநாடு திரும்பியவர்களின் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களின் வீட்டில் எச்சரிக்கை நோட்டீஸ் ஒட்டப்படுகிறது.
இந்நிலையில், சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள நடிகரும், மக்கள் நீதி மையம் கட்சி தலைவருமான கமல் வீட்டிலும் கொரோனா நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது. அந்த நோட்டீசில், கொரோனாவில் இருந்து எங்களையும் சென்னையையும் காக்க நாங்கள் வீட்டிற்குள் தனிமைபடுத்தி கொண்டுள்ளோம் என்ற வாசகத்துடன் 10.3.2020 முதல் 06.04.2020 வரை தனிமைப்படுத்தி கொள்வதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
முகவரியில் கமல் பெயர் மற்றும் வீட்டு முகவரி இடம்பெற்றிருந்தது. ஆனால், எத்தனை பேர் தனிமைபடுத்தப்பட்டுள்ளனர் என்ற விவரம் குறிப்பிடப்படவில்லை. இது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கமலுக்கு தெரியாமலேயே அவரது வீட்டில் நோட்டீஸ் ஒட்டப்பட்டதாக மக்கள் நீதி மையம் கட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து அந்த நோட்டீஸ் அகற்றப்பட்டது.
இது தொடர்பாக விளக்கமளித்த சென்னை மாநகராட்சி அதிகாரிகள் கமல் வீட்டில் வேலை செய்தவர்கள் யாரோ வெளிநாடு சென்ற வந்ததால் நோட்டீஸ் ஒட்டப்பட்டது. பாஸ்போர்ட் முகவரியை கொண்டு கமல்ஹாசனின் பழைய முகவரியில் நோட்டீஸ் ஒட்டியுள்ளனர். கமல் அங்கு வசிக்கவில்லை என தெரிந்ததும் கொரோனா நோட்டீஸ் அகற்றப்பட்டது. இவ்வாறு அந்த அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சென்னை மாநகராட்சி கமிஷனர் பிரகாஷ் கூறுகையில், கமல் வீட்டில் சிறிய தவறு நடந்துவிட்டது. இனிமேல், இதுபோன்ற நடக்காமல் பார்த்துக் கொள்ளப்படும் என தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக கமல் வெளியிட்ட அறிக்கை: உங்கள் அனைவரின் அன்புக்கும், அக்கறைக்கும் மனமார்ந்த நன்றிகள். எனது வீட்டின் வெளியே ஒட்டப்பட்டிருந்த நோட்டீசை வைத்து நான் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகின. ஆனால் அந்த முகவரியில் கடந்த சில ஆண்டுகளாக நான் இல்லையென்பதும், அவ்விடத்தில் மக்கள் நீதி மய்யத்தின் அலுவலகம் செயல்பட்டு வந்ததும் உங்களில் பலர் அறிந்ததே. எனவே நான் தனிமைப்படுத்தப்பட்டதாக வரும் செய்திகள் உண்மையல்ல என்பதையும், வருமுன் தடுக்கும் நடவடிக்கையாக நான் கடந்த 2 வாரங்களாக தனிமைப்படுத்துதலை மேற்கொண்டுள்ளேன். அனைவரும் அவ்வாறே செய்யவும் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.2018 ஆம் ஆண்டில், கமல்ஹாசனும் கௌதமியும் 13 ஆண்டுகளாக திருமணம் செய்து கொள்ளலாம் உறவிலிருந்து பின் விவாகரத்து வாங்காமல் பிரிந்தனர். கௌதமி தனது வலைப்பதிவில், இணக்கத் தன்மை பிரச்சினைகள் காரணமாக நடிகர் கமலஹாசனை விட்டு விலகியதாகவும், அதற்குப் பின்னால் ஸ்ருதிஹாசன் இல்லை என்றும் எழுதினார்.
கமல்ஹாசன் தெளிவுபடுத்திய பின்னர், சென்னை கார்ப்பரேஷன் அதிகாரிகள் அவரது வீட்டின் முன் ஒட்டியிருந்த வீட்டு 2018 ஆம் ஆண்டில், கமல்ஹாசனும் கௌதமியும் 13 ஆண்டுகளாக திருமணம் செய்து கொள்ளலாம் உறவிலிருந்து பின் விவாகரத்து வாங்காமல் பிரிந்தனர். கௌதமி தனது வலைப்பதிவில், இணக்கத் தன்மை பிரச்சினைகள் காரணமாக நடிகர் கமலஹாசனை விட்டு விலகியதாகவும், அதற்குப் பின்னால் ஸ்ருதிஹாசன் இல்லை என்றும் எழுதினார்.
கமல்ஹாசன் தெளிவுபடுத்திய பின்னர், சென்னை கார்ப்பரேஷன் அதிகாரிகள் அவரது வீட்டின் முன் ஒட்டியிருந்த வீட்டில் தனிமைப்படுத்தப்பட்ட ஸ்டிக்கரை அகற்றினர்.தனிமைப்படுத்தப்பட்ட ஸ்டிக்கரை அகற்றினர்.தற்போது சென்சார் வாரிய உறுப்பினராக உள்ளார் கௌதமி
"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன், வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்; நான் விரும்பிய காளி தருவாள்". - மஹாகவி பாரதியார் சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை எடுத்தனர் அது வெட்டி எடுத்த அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“ நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன் கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...
கருத்துகள்