சட்டத்தை உருவாக்கி விட்டு அதில் மக்களை அடக்கக் கூடாது. நடிகர் விஜய் பரபரப்பான பேச்சு.
மக்களுக்கு எது தேவையோ அதைதான் சட்டமாக்கனுமே தவிர, சட்டத்தை உருவாக்கிவிட்டு அதில் மக்களை அடக்கக் கூடாது என்று நடிகர் விஜய் கூறியுள்ளார்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன் நடிப்பில் உருவான படம் மாஸ்டர். விஜய் மாமா சேவியர் பிரிட்டோ தயாரிப்பில் அனிருத் இசையில் பிரமாண்டமாக உருவாகியிருக்கும் திரைப்படத்தை ஏப்ரல் 9 ஆம் தேதி வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. கொரோனா வைரஸ் தொற்று பரவுதல் தடுக்கப்பட இன்னும் கால அவகாசம் தேவைப்படுமானால் தமிழகத்தில் அனைத்து திரையரங்குகளும் மூடப்படும் வாய்ப்புள்ளது. எனவே மாஸ்டர் திரைப்படம் அறிவித்தபடி ஏப்ரல் 9 ஆம் தேதி திரைக்கு வருமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதுகுறித்து ஆலோசனை நடத்த படக்குழு திட்டமிட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. நடிகர் விஜய் சேதுபதி பேசிய போது மதம் தேவையில்ல; கடவுளை தூர வைக்கிறேன்’ என்றார் மாஸ்டர் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் காட்சிகள் இது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்திருக்கும் ‘ மாஸ்டர்’ படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை லீலா பேலஸ் ஹோட்டலில் மாலை 6.30 மணிக்கு தொடங்கிய நிகழ்ச்சியில் ரசிகர்கள் கலந்து கொள்ள அனுமதி இல்லாததால் நிகழ்ச்சியை லைவாக ஒரு தனியார் தொலைக்காட்சி ஒளிபரப்பு செய்தது.
மாஸ்டர் படத்தில் நடித்துக் கொண்டிருந்தபோது விஜய் வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடத்தியது. விஜய் பிகில் மற்றும் மாஸ்டர் படத்திற்கு வாங்கிய சம்பள விபரத்தை வருமான வரித்துறை வெளியிட்டது. இந்தச் சூழ்நிலையில், விஜய்யின் பேச்சு குறித்து அதிக எதிர்பார்ப்பு எழுந்தது.
"எல்லா புகழும் ஒருவன் ஒருவனுக்கே. நீ நதிபோல ஓடிக் கொண்டிரு" என்ற பாடல் என் படத்தில் உள்ளது. அதில், வரும் நதியில் சிலர் விளக்கு வைத்து வணங்குவார்கள். சிலர் பூப் போட்டு வரவேற்பார்கள். சிலர் கல் எறிவார்கள். ஆனால், நதி மட்டும் போய்க் கொண்டே இருக்கும். அது போல தான் நாமும் இருக்க வேண்டும்" என்றார் விஜய்
என்னுடைய மாமாவும், இந்தப் படத்தின் தயாரிப்பாளருமான பிரிட்டோ என்னுடைய ஆரம்ப கால படங்களில் மிகவும் சப்போர்ட்டிவாக இருந்தார்.
படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ஒரு சர்பிரைஸ் தான். அவரது மாநகரம் படம் பார்த்து மிகவும் ஆச்சர்யப்பட்டேன். அவர் கைகளில் சீன் பேப்பரே இருக்காது. இதனால் நான் மிகவும் மன உளைச்சலுக்கு ஆளானேன். பிறகு, அவரை கூப்பிட்டு இனி எல்லோர் கையிலும் சீன் பேப்பர் இருக்க வேண்டும் என்று சொல்லிய பிறகு தான் மாறினார்.
ரசிகர்களைப் பார்த்து உற்சாகமான விஜய் சாந்தனுவையும், அனிருத்தையும் அழைத்து நடனமாடினார். பின்னர் பேசுகையில், "என் நெஞ்சில் குடியிருக்கும் நண்பா, நண்பிகளுக்கு வணக்கம். சிம்ரன் ஜீக்கு முதலில் மிகப்பெரிய நன்றி. மாஸ்டர் ஆடியோ லான்ச்சில் ரசிகர்கள் கலந்து கொள்ளாமல் போனதில் எனக்கு தான் மிகப்பெரிய வருத்தம். அரை மனசோடு தான் இதுக்கு நான் ஒத்துக்கிட்டேன். கத்திக்கு அப்புறம் நானும், அனிருத்தும் சேர்ந்து பண்ணி இருக்கோம்.
இன்று தவிர்க்க முடியாத இடத்தில் சினிமா உலகில் இருப்பவர் விஜய் சேதுபதி.
மாஸ்டர் படத்தில் விஜய் சேதுபதி ஏன் நடித்தார் என்று அவரிடமே கேட்டேன். அதற்கு அவர், 'உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும் சார்" என்று சொல்லி ஒட்டுமொத்தமாக என்னை ஆஃப் செய்துவிட்டார். அவர் பெயரில் மட்டும் எனக்கு இடம் கொடுக்கவில்லை. அவர் மனதிலும் எனக்கு இடம் கொடுத்துவிட்டார்.இசை வெளியீட்டு விழாவிற்கு நண்பர் அஜித் போல் உடை அணிய வேண்டும் என்று நினைத்தேன் என்று விஜய் தெரிவித்தார்
மதம் தேவையில்லாதது என விஜய் சேதுபதி பேசினார்
"சாமியை எந்த கூட்டத்துனாலயும் காப்பாத்த முடியாது. சாமி அவர் தன்னைத் தானே காப்பாற்றிக் கொள்வார். மதத்தின் பெயரால் யார் உங்களை நெருங்கினாலும் தள்ளி வையுங்கள். மதம் தேவை இல்லாதது. அவர்கள் மதத்தைப் பற்றி உங்களிடம் உயர்வாக பேசினார்கள், உங்கள் மதத்தைப் பற்றி பேசாமல், அன்பை பற்றி மனிதத்தை பற்றி பேசுங்கள்" என்று பேசி அதகளம் செய்துவிட்டார்.
விஜய் சேதுபதி பேசுகையில், "விஜய்க்கு close up ஷாட் வையுங்கள், அவர் வெட்கப்பட்டால் மிக அழகாக இருப்பார். இப்படத்தின் தயாரிப்பாளர் பிரிட்டோ சார் அதிக நேரம் பேசினார் என்று உங்களுக்கு தோன்றி இருக்கலாம். ஆனால், அவரிடம் அவ்வளவு அறிவு இருக்கிறது. அதனால் தான் அதிக நேரம் பேசினார்" என்று சொல்லி விஜய் சேதுபதி ஒரு அரைமணி நேரம் பேசினார். மாஸ்டர்
படத்தின் தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோ பேசுகையில், "நான் இந்த அளவுக்கு வளர்ந்ததுக்கு முக்கிய காரணம் இயேசு சபை. அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள். விஜய் அவர்கள் தன்னை சுற்றி இருப்பவர்களையும் சேர்த்து வளர்த்து விட வேண்டும் என்ற உயரிய எண்ணம் படைத்தவர். இசையமைப்பாளர் அனிருத்துக்கு உடல் முழுவதும் டேலன்ட் மட்டுமே இருக்கிறது.
இன்று நிறைய பேர் நாம் சொல்வதை கேட்கவே மாட்டார்கள். ஆனால், விஜய் சேதுபதி நிறைய கேட்பார். He is a good listener. அவருக்கு இருக்கும் அறிவுக்கு காரணம், அவர் மற்றவர்கள் பேசுவதை கூர்ந்து கவனிப்பதால் தான்.
இந்த படம் போன வேகமே தெரியவில்லை. இவ்வளவு சீக்கிரத்தில் இந்த படத்தை முடித்த ரகசியம் இயக்குனர் லோகேஷ் கனகராஜுக்கு தெரியும்.
"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன், வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்; நான் விரும்பிய காளி தருவாள்". - மஹாகவி பாரதியார் சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை எடுத்தனர் அது வெட்டி எடுத்த அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“ நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன் கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...
கருத்துகள்